Search

குரூப் தேர்விற்காக தமிழ் அறிஞர் மற்றும் புகழ்பெற்ற நூல்கள்

Saturday 15 September 2018

தமிழ் அறிஞா் - ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன்

·         பிறப்பு – 28.09.1940 , ஊர் – ஈரோடு
·         பெற்றோர் – நடராஜா , வள்ளியம்மாள் .
·         இயற்பெயர் – ஜெகதீசன் , புனைப்பெயர் – விடிவெள்ளி
·         இவர் ஒரு ‘வானம்பாடி’ விஞர் .

சிறந்த தொடர்கள்

·         சதைத்திரண்டு உன் வார்த்தைகளின் வீரம்
கலகலத்து ஓடுகிறது எங்கள் உள்ளங்களில்

சிறப்புப் பெயர்

·         மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர் .

சிறந்த நூல்கள்

·         தோணி வருகிறது , தீவுகள் கரையேறுகின்றன ,  சூரியப்பிறைகள் , நிலவு வரும் நேரம் , ஊமை வெயில் , திரும்பி வந்த தேர்வலம்

·         வணக்கம் வள்ளுவா  - சாகித்திய அகாதமி வென்ற நூல் .

 தமிழ் அறிஞா்கள் - மு.மேத்தா
மு.மேத்தா

·         பிறப்பு – 05.09.1945 , ஊர் – பெரியகுளம் , தேனி மாவட்டம்
·         இயற்பெயர் – முகமது மேத்தா .
·         ‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
·         சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
·         ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்குபுகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
·         இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது .
·         ‘சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
·         தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதினை பெற்றுள்ளார் .

மேற்கோள்கள்

·         இலக்கணம் செங்கோல் யாப்பு – சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்
·         மரங்களில் நான் ஏழை; எனக்கு வைத்த பெயர் வாழை

சிறந்த நூல்கள்

·         கண்ணீர் பூக்கள்ள , ஊர்வலம் , சோழநிலா , மனச்சிறகு , வெளிச்சம் வெளியே இல்லை . ஒருவானம் இரு சிறகு , காத்திருந்த காற்று , திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் , நந்தவன நாற்காலி .

·         ஆகாயத்தில் அடுத்தவீடு – சாகித்திய அகாதமி வென்ற நூல்.


தமிழ் அறிஞா் - கவிக்கோ அப்தூல்ரஹ்மான்
கவிக்கோ அப்தூல்ரஹ்மான்

·         பிறப்பு – 02.11.1937 , ஊர் – மதுரை .
·         ‘தொன்மம்’ என்ற இலக்கிய உத்தியை மிகுதியாக பயன்படுத்தியவர் .
·         வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றியவர் .
·         ‘கவிக்கோ’ எனும் இதழை நடத்தினார் .

பரிசும் பாராட்டும்

·         தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றார் .
·         தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்
·         ‘கவிக்கோ’ என்னும் பட்டம் பெற்றார் ,
·         மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் ; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டார் .

சிறந்த நூல்கள்

·         பால்வீதி , நேயர் விருப்பம் , சுட்டுவிரல் , பித்தன் , சொந்த சிறைகள் , கரைகளே நதியாவதில்லை , விலங்குகள் இல்லாத பகுதி , விதை போல விழுந்தவன் , முத்தமிழின் முகவரி , அவளுக்கு நிலா என்று பெயர் .
·         ஆலாபணை – சாகித்திய அகாதமி வென்ற நூல்.

சிறந்த தொடர்கள்

·         புறத்திணை சுயம்வரம் மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன் குருட்டு தமயந்தி
·         உன் தராசுத்தட்டுகளை கொஞ்சம் கண்திறந்து பார்

இங்கே புறாவின் மாமிசத்தை ஜீவிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள் .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One