Search

DAILY HISTORY HISTORY OF THE DAY 08.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Sunday 9 September 2018



நிகழ்வுகள்

70 – டைட்டஸ் தலைமையிலான ரோமப் பேரரசின் படையினர் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1514 – லித்துவேனியா, மற்றும் போலந்துப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன.
1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.
1727 – இங்கிலாந்து, கேம்பிறிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.
1796 – பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1831 – 4ம் வில்லியம் பிரித்தானியாவின் மன்னனாக முடிசூடினான்.
1888 – லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
1900 – டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
1923 – கலிபோர்னியாவில் 7 அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின.
1926 – நாடுகளின் கூட்டமைப்பில் செருமனி சேர்ந்தது.
1930 – ஸ்கொட்ச் நாடா முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.
1934 – நியூ ஜேர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரை ஜேர்மனி முற்றுகையிட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி போரில் சரணடைந்ததை அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: வி2 ராக்கெட் மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் செருமனியினால் தாக்கப்பட்டது.
1945 – சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.
1951 – பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.
1959 – ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்கொக் நகரில் நிறுவப்பட்டது.
1991 – யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.
2006 – ஆப்கானிஸ்தான், காபூலில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.



பிறப்புக்கள்

கி.மு.20/19 – கன்னி மரியா, இயேசு கிறிஸ்துவின் தாய்
1913 – ஆர். மகாதேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (இ. 1957)
1933 – ஆஷா போஸ்லே, இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி



இறப்புகள்

1980 – வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)
1995 – நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (பி. 1918)
2008 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1935)


சிறப்பு நாள்

மசடோனியக் குடியரசு – விடுதலை நாள் (1991)
உலக எழுத்தறிவு நாள்
அன்னை வேளாங்கண்ணி தேர்த்திருவிழா
இயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாள் பிறப்பு

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One