Search

Tnpsc பொதுஅறிவு வினாக்கள்

Monday 24 September 2018

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 4-ம் தேதி

2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்

3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்

4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்

5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்

6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்

7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்

8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்

9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்

10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை

11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்

12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்

13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்

14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை

15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை

16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு

17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்

18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

19.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்

20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971

21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது

22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்

23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்

24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்

25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா

26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்

27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்

28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்

29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949

30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20

31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்

32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்

33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்

34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949

35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை

36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்

37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்

38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்

39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்

40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்

41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா

42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்

43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா

44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்

45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916

47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்

48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857

49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்

50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை


















No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One