Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART-11

Sunday 4 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS | பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்| PART-11
===========================
1000) வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
  1) சிறந்த சொற்பொழிவாளர்
  2) போதகாசிரியர்
  3) உரையாசிரியர்
  4) சித்த மருத்துவர்
  5) பசிப்பிணி போக்கிய அருளாளர்
  6) பதிப்பாசிரியர்
  7) நூலாசிரியர்
  8) இதழாசிரியர்
  9) இறையன்பர்
10) ஞானாசிரியர்
11) அருளாசிரியர்

1001) வள்ளலார் பதுப்பித்த நூல்கள் எவை?
1) சின்மய தீபிகை
2) ஒழிவிலொடுக்கம்
3) தொண்டை மண்டல சதகம்
1002) வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்கள்?
1) மனுமுறை கண்ட வாசகம்
2) ஜீவகாருண்ய ஒழுக்கம்
1003) ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர்
1004) தென்னிந்தியச் சமூகச் சீர்த்திருத்தத்தின் தந்தை என மக்கள் எல்லோராலும் போற்றப்பட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1005) அயோத்திதாசப் பண்டிதரின் நற்கருத்துகள் பசுமரத்தாணியாய் பதிந்துள்ள மாநிலங்கள் & நாடுகள்?
தமிழகம், மைசூர், ஆந்திரம், திருவிதாங்கூர், பர்மா, மலேஷியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை

1006) அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த இடம்?
சென்னை ஆயிரம் விளக்கு – மக்கிமா நகர்
1007) அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள்?
20.05.1845
1008) அயோத்திதாசப் பண்டிதரின் தந்தையார் பெயர்?
கந்தசாமி
1009) அயோத்திதாசப் பண்டிதரின் பெற்றோர் இட்டபெயர்?
காத்தவராயன்
1010) காத்தவராயன் என்னும் அயோத்திதாசரின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சாய் இறங்கியது எது?
தீண்டாமைக் கொடுமை
1011) காத்தவராயன் யாரிடம் கல்வி கற்றார்?
வீ.அயோத்திதாசப்பண்டிதர்
1012) தம்முடைய குரு எழுதிய பாடலை, உயர் பிரிவைச் சார்ந்த ஒருவர் குற்றம் சாட்ட, அதனைக் கேட்டு கொதித்தெழுந்தவர்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர்
1013) தம் ஆசிரியர் எழுதிய கவிதையை பிற்காலத்தில் தாம் தொடங்கிய இதழில் வெளியிட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1014) ஒரு பைசாத் தமிழன் என்ற இதழை வெளியிட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1015) தம்முடைய ஆசிரியர் பெயரான அயோத்திதாசர் என்பதை தம்பெயராகச் சூட்டிக்கொண்டவர்?
காத்தவராயன்
1016) சமூகச்சீர்த்திருத்தக் கருத்துக்களை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1017) நீலகிரி மலைப்பகுதில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1018) அயோத்திதாசப் பண்டிதர் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துகொண்டு பத்து ஆண்டுகள் எங்கு சென்று வாழ்ந்தார்?
ரங்கூன்
1019) அக்காலத்தில் தேயிலை பறிப்போர், விவசாயக் கூலி வேலை செய்வோர், மரம் அறுப்போர் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1020) இந்து மதக் கருத்துகளை ஆழ்ந்து கற்றவர், புத்தநெறியால் கவரப்பெற்றவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1021) அயோத்திதாசப் பண்டிதரின் மகன்களின் பெயர்கள்?
பட்டாபிராமன், மாதவராமன், சானகிராமன், இராசாராம்
1022) அயோத்திதாசப் பண்டிதர் தம் மகள்களுக்கு விரும்பிச் சூட்டிய பெயர்கள்?
அம்பிகாதேவி, மாயாதேவி (புத்தமதப் பெயர்கள்)
1023) சித்த மருத்துவத்தில் கைதேர்ந்ததால், மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப்பட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1024) எவரையும் சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பது தவறு என்றவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1025) சென்னையில் முக்கியமான ஐந்து இடங்களில் தலித்துகளுக்கு ஆல்காட் (1832-1907) என்பவரால் இலவசப் பள்ளிகளை நிறுவியவர்?
அயோத்திதாசப் பண்டிதர்

1026) அயோத்திதாசப் பண்டிதரின் ஒருபைசாத் தமிழன் – என்ற இதழின் அன்றைய விலை?
காலனா
1027) அயோத்திதாசப் பண்டிதரின் ஒருபைசாத் தமிழன் – என்ற இதழ் முதன்முதலில் வெளிவந்த நாள்?
19.06.1907
1028) ஒருபைசாத் தமிழன் – என்ற இதழ் வார்ந்தோறும் வெளிவந்த நாள்?
புதன் கிழமை
1029) ஒருபைசாத் தமிழன் – என்ற இதழ் எங்கிருந்து வெளியிடப்பட்டது?
சென்னை இராயப்பேட்டை
1030) உயர்நிலையும் இடைநிலையும் கடைநிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றை செய்திகளாக்கியவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1031) பெளத்த சமயத்தில் ஆழங்கால்பட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1032) எள்செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி – என்று புதியதோர் விளக்கம் தந்தவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1033) நுகர்ப்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாக தீபாவளியைக் கொண்டாடும் நாடு?
சப்பான்
1034) புத்தரது “ஆதிவேதம்” என்ற நூலின் ஆசிரியர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1035) புத்தரது “ஆதிவேதம்” என்ற நூல் எத்தனை காதைகளை கொண்டது?
இருபத்தெட்டுக் காதைகள் = 28 காதைகள்
1036) அயோத்திதாசப் பண்டிதர் புத்தரது “ஆதிவேதம்” என்ற நூல் எழுதுவதற்குச் சான்றாக எந்த நூல்களை துணை நூல்களாகக் கொண்டார்?
1) பெருங்குறவஞ்சி
2) வீரசோழியம்
3) நன்னூள் விளக்கம்
4) நாயனார் திரிகுறம்
5) சித்தர் பாடல்கள்
6) வைராக்கிய சதகம்
7) மச்சமுனிவர் ஞானம்
1037) புத்தரது “ஆதிவேதம்” என்ற நூல் எழுதுவதற்கு எந்த மொழிகளின் துணையுடன் அயோத்திதாசப் பண்டிதர் எழுதினார்?
பாலி மொழி, ஆங்கில மொழி
1038) அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய நூல்களுள் பாராட்டத்தக்க நூல் எது?
இந்திரதேச சரித்திரம்
1039) இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறு நூல்களை வெளியிட்டவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1040) வீரமாமுனிவரைப் போல் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தவர் & திருவாசகத்திற்கும் உரை எழுதியவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1041) உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் – என்று கூரியவர்?
அயோத்திதாசப் பண்டிதர்
1042) அயோத்திதாசப் பண்டிதர் புகழுடம்பு எய்திய நாள்?
05.05.1914
1043) “பா” – நான்கு வகைப்படும் அவை யாவை?
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
1044) வெண்பாவின் வகைகள் எத்தனை? அவை யாவை?
ஆறு வகைப்படும்
1) குறள் வெண்பா 3) இன்னிசை வெண்பா 5) நேரிசைச் சிந்தியல் வெண்பா
2) நேரிசை வெண்பா 4) பஃறொடை வெண்பா 6) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
1045) ஆசிரியப்பாவின் வேறு பெயர்?
அகவற்பா
1046) ஆசிரியப்பா வகைகள் எத்தனை? அவை யாவை?
நான்கு வகைப்படும்
1) நேரிசை ஆசிரியப்பா 3) நிலைமண்டில ஆசிரியப்பா
2) இணைக்குறள் ஆசிரியப்பா 4) அடிமறி ஆசிரியப்பா
1047) அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் – என்னும் திருவருட்பா பாடல் இடம்பெறும் தலைப்பு?
சுத்த சன்மார்க்க வேண்டுகோள் – திருவருட்பா ஆறாம் திருமுறையில்
1048) அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் – இப்பாடலில் அமைந்துள்ள அணி?
இயல்புநவிற்சி அணி
1049) பாடலில் அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றிவருவது?
எதுகை
1050) பாடலில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவருவது?
மோனை
1051) ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றிவருவது?
கூழை மோனை
1052) மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப்போல் – என்று பாடியவர்?
பாரதிதாசன்
1053) புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – என்று பாடியவர்?
பாரதிதாசன்
1054) இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் இலகுவது புலவர் தரும் சுவடிச் சாலை – பாடியவர்?
பாரதிதாசன்
1055) சீக்கிரம் செல்க நேர்வழியில் – என்று தொடங்கும் கவிதையை பாடியவர்?
சாலை இளந்திரையன்
1056) சீக்கிரம் செல்க நேர்வழியில் – என்ற கவிதை இடம்பெறும் தலைப்பு?
நிற்க நேரமில்லை
1057) இன்றிளைப்பாறுவம் என்றிருந்தால் வழி என்னென்னவாக்குமோ ஓரிரவில் – என்று பாடியவர்?
சாலை இளந்திரையன்
1058) சாலை இளந்திரையனின் பெற்றோர்?
இராமையா & அன்னலட்சுமி
1059) சாலை இளந்திரையன் பிறந்த ஊர்?
சாலைநயினார் பள்ளிவாசல் – நெல்லை மாவட்டம்
1060) தில்லி பல்கலைக்கழகத்தில் சாலை இளந்திரையன் ஆற்றிய பணி?
தமிழ்த்துறை விரிவுரையாளாகித் தமிழ்த்துறைத் தலைவரானார்
1061) சாலை இளந்திரையன் அவர்களால் தோன்ற காரணமாக இருந்த அமைப்புகள்?
1) உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
2) இந்திய பல்கலைக்கழக தமிழ் ஆசிரியர் மன்றம்
3) தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கம்
4) உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
1062) சாலை இளந்திரையன் அவர்கள் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு?
1991
1063) தம் வாழ்நாள் முழுவதும் தமிழின முன்னேற்றத்திற்கான படைப்புகளை வழங்கி எழுச்சியூட்டியவர்?
சாலை இளந்திரையன்
1064) சாலை இளந்திரையன் அவர்கள் வாழ்ந்த காலம்?
06.09.1930 – 04.10.1998
1065) நிறக நேரமில்லை என்ற கவிதை தலைப்பு இடம்பெறும் கவிதைத் தொகுப்பு?
பூத்தது மானுடம்
1066) சாலை இளந்திரையன் அவர்களின் படைப்புகளில் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்ற நூலகள்?
1) புரட்சி முழக்கம்
2) உரை வீச்சு
1067) வினையே ஆடவர்கு உயிர் – எனக் கூறும் நூல்?
குறுந்தொகை
1068) முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை – எனக்கூறும் நூல்?
தொல்காப்பியம்
1069) உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே – என்று பாடியவர்?
திருமூலர்
1070) வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் – என்று பாடியவர்?
கவிஞர் தாராபாரதி
1071) Small rudders guide great ships – இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
1072) You must walk before run - இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
சிந்தித்துச் செயல்படு
1073) Distance lends enchantment to the view - இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
இக்கரைக்கு அக்கரை பச்சை
1074) Measure is a treasure - இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
1075) Make Hay While the Sun Shines - இணையான தமிழ்ப் பழமொழி கூறுக.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
1076) ஒரு நாள் உறங்குவதற்கு ஐந்து மணி நேரத்தை என் உதவியாளர் எனக்கு ஒதுக்கித் தந்தால், அதில் இரண்டு மணி நேரத்தைப் படிப்பதற்குத் திருடுகிறேன் – என்று கூறியவர்?
நேரு
1077) பீலிபெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் – இக்குறளில் பயின்று வரும் அணி?
பிரிதுமொழிதல் அணி
1078) தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி?
சொற்பொருள் பின்வருநிலையணி

1079) ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது?
பொருள் பின்வருநிலையணி
1080) முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது?
சொல்பின்வரு நிலையணி
1081) பழங்கால மக்கள் தனது எண்ணங்களையும் செய்திகளையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்திய பொருட்கள்?
1) கற்பாறைகள்
2) களிமண் பலகைகள்
3) மரப்பட்டைகள்
4) தோல்கள்
5) துணிகள்
6) பனை ஓலைகள்
1082) பழங்கால தமிழக மக்கள் தனது எண்ணங்களையும் செய்திகளையும் வெளிப்படுத்துவதற்கு பெரும்பாலும்பயன்படுத்திய பொருள்?
பனை ஓலைகள்
1083) பனை ஓலைகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள்?
1) துளசி
2) வேப்பிலை
3) மஞ்சள் நீர்
1084) உலக இலக்கித் துறையில் நடைபெற்ற மாபெரும் புரட்சி?
காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது
1085) ஒரு மனிதன் ஆண்டுக்கு எத்தனை பக்கங்கள் படித்தால், அன்றாட உலக நடப்புகளை அறிந்த மனிதனாக கருதப்படுவான்?
இரண்டாயிரம் பக்கங்கள் = 2000 பக்கங்கள் – யுனெஸ்கோ கூறுகிறது
1086) நூலகத்தின் பல்வேறு பெயர்கள்?
1) புத்தகச்சாலை
2) ஏடகம்
3) சுவடியகம்
4) சுவடிச்சாலை
5) வாசகசாலை
6) படிப்பகம்
7) நூல்நிலையம்
8) பண்டாரம்
1087) முதன்முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்த அரசு?
கிரீஸ் நகர அரசு
1088) நூலகம் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
லைப்ரரி
1089) இலத்தீன் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்கு என்ன பொருள்?
புத்தகம்
1090) ஆரில்லா ஊருக்கு அழகு பாழ் – நூலகமில்லா ஊருக்கு?
அறிவு பாழ்
1091) ஓர் அரசின் தலையாய கடமை?
மக்களை அறிவுடையோராக்குதல்

1092) இந்தியாவிலேயே முதன்முறையாக பொதுநூலகச் சட்டம் இயற்றிய மாநிலம் & ஆண்டு?
தமிழ்நாடு – 1948 ஆம் ஆண்டு
1093) நூலகப் பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திட்ட சட்டம்?
1948 ஆம் ஆண்டு சென்னை பொதுநூலகச் சட்டம்
1094) இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது?
கொல்கத்தா தேசிய நூலகம்
1095) கொல்கத்தா தேசிய நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை?
பத்து இலட்சம் நூல்கள்
1096) பாடநூல்களைக் கொண்டு அறிவை வளர்க்கும் களம்?
பள்ளி
1097) அறிவை வளர்த்துச் செழுமைப் படுத்தும் களம்?
நூலகம்
1098) பள்ளி மாணவர்கள் ஓரிடம், நூலகம் வேறிடம் என்ற நிலையை மாற்ற தொடங்கப்பட்டுள்ள திட்டம்?
புத்தகப்பூங்கொத்து
1099) புத்தகப்பூங்கொத்து எனும் வகுப்பறை நூலகத்திட்டத்தை துவக்கியுள்ள தமிழக அரசின் துறை?
பள்ளிக்கல்வித்துறை
1100) கி.மு.2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
பாபிலோனியாவில் உள்ள நிப்பூர் என்ற ஊரில்
1101) தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான நூலகங்கள் எவை?
  1) சரஸ்வதி மகால் நூலகம் = தஞ்சை = 1820
  2) அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் = சென்னை
  3) கன்னிமாரா நூலகம் = சென்னை = 1869
  4) சென்னைப் பல்கலைக்கழக நூலகம் = சென்னை = 1907
  5) அண்ணாமலை பல்கலைக்கழக நூலகம் = சிதம்பரம் = 1929
  6) டாக்டர்.உ.வே.சா.நூலகம் = சென்னை = 1947
  7) மறைமலை அடிகளார் நூலகம் = சென்னை = 1958
  8) மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம் = மதுரை = 1966
  9) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் = சென்னை = 1970
10) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் = தஞ்சை = 1981
1102) நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்தவர்?
சீர்காழி.சீ.இரா.அரங்கநாதன்
1103) இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுபவர்?
சீர்காழி.சீ.இரா.அரங்கநாதன்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One