Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART -9

Sunday 4 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART -9
===========================
800) ஐவகை நிலத்திற்கு உரிய விலங்கு?
வ.எண் திணை விலங்கு
1. குறிஞ்சி புலி, கரடி, சிங்கம்
2. முல்லை முயல், மான், புலி
3. மருதம் எருமை, நீர்நாய்
4. நெய்தல் முதலை, சுறா
5. பாலை வலியிழந்த யானை
801) ஐவகை நிலத்திற்கு உரிய பூ?
வ.எண் திணை பூ
1. குறிஞ்சி குறிஞ்சி, காந்தல்
2. முல்லை முல்லை, தோன்றி
3. மருதம் செங்கழுநீர், தாமரை
4. நெய்தல் தாழை, நெய்தல்
5. பாலை குரவம், பாதிரி
802) ஐவகை நிலத்திற்கு உரிய மரம்?
வ.எண் திணை மரம்
1. குறிஞ்சி அகில், வேங்க்கை
2. முல்லை கொன்றை, காயா
3. மருதம் காஞ்சி, மருதம்
4. நெய்தல் புன்னை, ஞாழல்
5. பாலை இலுப்பை, பாலை
803) ஐவகை நிலத்திற்கு உரிய பறவை?
வ.எண் திணை பறவை
1. குறிஞ்சி கிளி, மயில்
2. முல்லை காட்டுக்கோழி, மயில்
3. மருதம் நாரை, நீர்க்கோழி, அன்னம்
4. நெய்தல் கடற்காகம்
5. பாலை புறா, பருந்து
804) ஐவகை நிலத்திற்கு உரிய ஊர்?
வ.எண் திணை ஊர்
1. குறிஞ்சி சிறுகுடி
2. முல்லை பாடி, சேரி
3. மருதம் பேரூர், மூதூர்
4. நெய்தல் பட்டினம், பாக்கம்
5. பாலை குறும்பு
805) ஐவகை நிலத்திற்கு உரிய நீர்?
வ.எண் திணை    நீர்
1. குறிஞ்சி அருவிநீர், சுனைநீர்
2. முல்லை காட்டாறு
3. மருதம் மனைக்கிணறு, பொய்கை
4. நெய்தல் மணற்க்கிணறு, உவர்கழி
5. பாலை வற்றிய சுனை, கிணறு
806) ஐவகை நிலத்திற்கு உரிய பறை?
வ.எண் திணை பறை
1. குறிஞ்சி தொண்டகம்
2. முல்லை ஏறுகோட்பறை
3. மருதம் மணமுழா, நெல்லரிக்கிணை
4. நெய்தல் மீன்கோட்பறை
5. பாலை துடி
807) ஐவகை நிலத்திற்கு உரிய யாழ்?
வ.எண் திணை யாழ்
1. குறிஞ்சி குறிஞ்சி யாழ்
2. முல்லை முல்லை யாழ்
3. மருதம் மருதம் யாழ்
4. நெய்தல் விரளி யாழ்
5. பாலை பாலை யாழ்
808) ஐவகை நிலத்திற்கு உரிய பண்?
வ.எண் திணை பண்
1. குறிஞ்சி குறிஞ்சிப்பண்
2. முல்லை முல்லைப்பண்
3. மருதம் மருதம்ப்பண்
4. நெய்தல் செவ்வழிப்பண்
5. பாலை பஞ்சுரப்பண்
809) ஐவகை நிலத்திற்கு உரிய தொழில்?
வ.எண் திணை தொழில்
1. குறிஞ்சி தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
2. முல்லை ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
3. மருதம் நெல்லரிதல், களை பறித்தல்
4. நெய்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
5. பாலை வழிப்பறி, நிரை கவர்தல்
810) தன்மேல் கொல்லப் பாய்ந்தவரைக்கூட மன்னித்து விட்டுவிடும்படி கூறியவர்?
தந்தை பெரியார்
811) தந்தை பெரியார் பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் கத்தியுடன் அவர் மீது பாய்ந்து கொலை செய்ய திட்டம் நடந்த ஊர்?
விருதுநகர்
812) புலியிருக்கும் இடமறிந்து, அங்கே சென்று புலியைக் கண்டு இறையருள் புரிந்தவர்?
முகம்மது நபி
813) அகமது என்ற திருப்பெயர் பெற்றவர்?
நபிமுகம்மது
814) மலைகளில் வாழும் சிங்கத்திற்கு ஒப்பாகியவர்?
நபிமுகம்மது
815) இறைத்தூதர் – என்பவர்?
முகம்மதுநபி
816) சீறாப்புராணத்தை இயற்றியவர்?
உமறுப்புலவர்
817) உமறுப்புலவர் யாருடைய மாணவர்?
எட்டையபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்
818) அப்துல்காதிர் மரைக்காயர் என்பர்?
வள்ளல் சீதக்காதி
819) யாருடைய வேண்டுகோளுக்கினங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார்?
வள்ளல் சீதக்காதி
820) சீறாப்புராணத்தை எழுதி முடிக்கும் முன்னரே வள்ளல் சீதக்காதி இறந்ததமையால், யாருடைய உதவியால் சீராப்புராணத்தை உமறுப்புலவர் எழுதி முடித்தார்?
அபுல்காசிம் என்ற வள்ளல்
821) முதுமொழிமாலை என்ற நூலை எழுதியவர்?
உமறுப்புலவர்
822) முதுமொழிமாலை எத்தனை பாக்களைக் கொண்டது?
எண்பது பாக்கள் = 80 பாக்கள்
823) உமறுப்புலவர் வாழ்ந்த காலம்?
கி.பி.பதினேழாம் நூற்றாண்டு
824) இறைவனின் திருத்தூதர்?
நபிகள் நாயகம்
825) நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல்?
சீறாப்புராணம்
826) சீறா – என்பதன் பொருள்?
வாழ்க்கை
827) புராணம் – என்பதன் பொருள்?
வரலாறு
828) சீறாப்புராணம் எத்தனை பிரிவுகளை கொண்டுள்ள நூல்?
மூன்று பிரிவுகள்:-
1) விலாத்துக் காண்டம்
2) நுபுவ்வத்துக் காண்டம்
3) ஹிஜ்ரத்துக் காண்டம்
829) ஐயாயிரத்து இருபத்தேழு விருத்தப்பாக்களால் ஆன நூல்?
சீறாப்புராணம்
830) புலி வசினித்த படலம் – இடம்பெறும் நூல்?
சீறாப்புராணம்
831) சீறாப்புராணத்தில் புலிவசித்த படலம் இடம்பெறும் காண்டம்?
விலாத்துக் காண்டம்
832) இபான் – என்பது எந்த நாட்டின் இதழ்?
அமெரிக்கா
833) உலகம் உய்ய உற்றவழி கூறும் நூல்?
சத்திய சோதனை
834) காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது படித்த நாடக நூல்?
சிரவண பிதுர்பத்தி
835) தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை: தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு – இது எந்த மொழிப்பாடல்?
குஜராத்தி மொழி
836) இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை காந்தியடிகளுக்குள் விதைத்த பாடல்?
தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை – என்ற குஜராத்தி மொழிப்பாடல்
837) பார்வையற்ற தன் தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் காட்சி அமைந்துள்ள நாடகம்?
சிரவண பிதுர்பத்தி
838) அரிச்சந்திரனை ஒரு பொய் பேசவைக்கவேண்டும் என்பதற்காகவே பல இன்னல்களுக்கு உள்ளாக்கியவர்?
விசுவாமித்திரர்
839) காந்தி, தான் ஒரு சத்தியவானாக இருக்கவேண்டும் என்று உறுதிகொண்ட நாடகம்?
அரிச்சந்திரன்
840) தீயவனை எதிர்க்காதே; அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு என்று கூறும் நூல்?
பைபிள்
841) காந்தியடிகள் எந்த நூலை படித்ததன்மூலம் மனவுறுதியைப் பெற்றார்?
பகவத்கீதை
842) உருசிய அறிஞர்?
தால்சுதாய்
843) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு – என்ற நூலின் ஆசிரியர்?
தால்சுதாய்
844) உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்ற நூலில் தால்சுதாய் எந்த திருக்குறளை மொழிபெயர்த்து எழுதியிருந்தார்?
இன்னா செய்தார்க்கும்
845) காந்தியடிகள் திருக்குறள்மீதும், தமிழ்மீதும் பற்றுகொள்ள காரணம்?
இன்னா செய்தார்க்கும் என்ற குறள்
846) அன்பு, உண்மை, உறுதி, இன்னா செய்யாமை ஆகிய உயர் பண்புகள் ஆகியவை இளம்பருவத்திலேயே எவருக்கு இயல்பாய் அமைந்தன?
காந்தியடிகள்
847) மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது, அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகவும் பிறருக்கு துன்பம் தராததாகவும் இருக்கவேண்டும் – என்றவர்?
காந்தியடிகள்
848) வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது – என்றவர்?
காந்தியடிகள்
849) மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த சான்றோர்?
காந்தியடிகள்
850) கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றவர்?
காந்தியடிகள்
851) பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதியவர்?
காந்தியடிகள்
852) காந்தியடிகள் எங்கு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டார்?
தமிழ்நாட்டுக்கு வந்தபோது
853) எப்போதிலிருந்து காந்தியடிகள் மேலாடை அணிவதை நிறுத்திக்கொண்டார்?
தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதை கண்டபோதிலிருந்து
854) காந்தியடிகள் அரையாடையுடன் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டபோது அப்போதைய இங்கிலாந்தின் முதன்மையமைச்சர்?
சர்ச்சில்
855) காந்தியடிகளை அரைநிர்வாணப் பக்கிரி என்று ஏளனம் செய்தவர்?
சர்ச்சில்
856) மனிதனின், பெருமையை மனிதனுக்கு உணர்த்தி, எளியவர்களிடம் மறைந்திருக்கும் அருமையை உணர்த்தி அவர்களை வரலாற்று நாயகர்களாக மாற்றியவர்?
காந்தியடிகள்
857) என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும், மனிதாபிமானமும் ஒன்றுதான் என்று கூறியவர்?
காந்தியடிகள்
858) நான் ஒரு தேசபக்தன், அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்குமேல் மனிதாபிமானியாக இருப்பதும்தான் – என்று கூறியவர்?
காந்தியடிகள்
859) நான் மொழியால் குஜராத்தியன்; நாட்டால் இந்தியன்; உலக நிலையில் உலகன்; ஆனால், மனிதனாக இருத்தல் வேண்டும்; மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ணவேண்டும் – என்று விழைந்தவர்?
காந்தியடிகள்
860) உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதாராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும் – என்றவர்?
காந்தியடிகள்
861) தென்ஆப்ரிக்காவில் காந்தியடிகளை சிறையில் அடைக்க காரணம்?
அங்கு இந்தியர்க்கு எதிரான கருப்புச்சட்டங்களை கொளுத்தியதால்
862) தென்ஆப்ரிக்காவில் காந்தியடிகளை சிறையில் அடைத்த ஆளுநர்?
ஸ்மட்ஸ்
863) தென் ஆப்ரிக்காவில் காந்தியடிகள் சிறையிலிருந்து வெளிவந்ததும் சிறையில் தாம் தைத்த செருப்பை யாருக்கு பரிசாக வழங்கினார்?
ஆளுநர் ஸ்மட்ஸ்
864) காந்தியடிகள் தென்ஆப்ரிக்காவில் சிறையில் தாம் தைத்த செருப்பை ஸ்மட்ஸ் என்பவர்க்கு பரிசாக வழங்கியதும், பதிலுக்கு ஸ்மட்ஸ் பரிசாக எதனைக் கொடுத்தார்?
விவிலியம் சார்ந்த இரு நூல்கள்
865) காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார், அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே அதை எடுத்துச் சென்று பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன் – என்றவர்?
ஆளுநர் ஸ்மர்ட்ஸ்
866) காந்தியடிகளை சுட்டுக்கொல்லப்பட்ட நாள்?
சனவரித் திங்கள் முப்பதாம் நாள் – 1948
867) இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான் – என்றவர்?
காந்தியடிகள்
868) ஈகத்தின் (தியாகம்) உச்சியில் நின்றவர்?
காந்தியடிகள்
869) தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது – என்றவர்?
காந்தியடிகள்
870) கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பலனில்லை – என்றவர்?
காந்தியடிகள்
871) யாருடைய வாழ்வு முழுவதும் ஈகத்தினினால் மிகுந்து நிறைந்திருந்தது?
காந்தியடிகள்
872) வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களையும் சமூகநீதிக்கான போராளிகளாக ஆக்கியவர்?
காந்தியடிகள்
873) உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகத்தார் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கின்றவர்?
காந்தியடிகள்
874) சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் – என்று கூறியவர்?
காந்தியடிகள்
875) புறத்திணைகள் பன்னிரண்டினை கூறுக.
1. வெட்சி = போருக்கு முன் பகைநாட்டில் உள்ள ஆநிரைகளை கவர்தல்
2. கரந்தை = கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை கரந்தை பூச்சூடி மீட்பது
3. வஞ்சி = மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்றச் செல்வது
4. காஞ்சி = தன்நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போருக்கு செல்வது
5. நொச்சி = பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தன் மதிலை காத்தல்
6. உழிஞை = மாற்றரசன் கோட்டைக்குள் சென்று மதிலை சுற்றி வளைத்தல்
7. தும்பை = பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக போரிடுவது
8. வாகை = வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது
9. பாடாண் = ஆண்மகனது கல்வி, வீரம், செல்வம், கருனை, புகழ் முதலிவற்றை போற்றிப் பாடுவது
10. பொதுவியல் = வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் கூறப்படாதவற்றைக் கூறுவது
11. கைக்கிளை = ஒருதலைக் காமம்
12. பெருந்திணை = பொருந்தாக் காமம்
876) புறப்பொருள் வெண்பாமலையில் உள்ள புறத்திணைகள்?
1. வெட்சி = நிரைகவர்தல்
2. கரந்தை = மீட்டல்
3. வஞ்சி = வட்கார்மேல் செல்வது
4. காஞ்சி = உட்காது எதிரூன்றல்
5. நொச்சி = எயில் காத்தல்
6. உழிஞை = அதுவளைத்தலாகும்
7. தும்பை = அதிரப்பொருவது
8. வாகை = செருவென்றது
877) அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் என்பது?
உலகியல்
878) வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றி கூறுவது?
புறப்பொருள்
879) புறப்பொருள் வெண்பாமலையில் உள்ள புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
பன்னிரண்டு
880) தேசியக் கவிஞர் என்று அனைவராலும் பாரட்டப்பெற்றவர்?
பாரதியார்
881) எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர் – என தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்தியவர்?
பாரதியார்
882) முன்னறி புலவன் என போற்றப்பட்டவர்?
பாரதியார்
883) சாதிவேரை முளையிலேயே கிள்ளி எறிய விரும்பியவர்?
பாரதியார்
884) “பாரதநாடு பார்க்கெல்லாம் திலகம்” – எனப்பாடிய பைந்தமிழ்ப் பாவலன்?
பாரதியார்
885) பாரதியாரின் பெற்றோர்?
சின்னசாமி & இலக்குமி அம்மையார்
886) பாரதியாரின் பிறந்தநாள்?
11.12.1882
887) பாரதியார் மறைந்த நாள்?
11.09.1921
888) பூங்கொடி என்றும் பொய்யாக் குலக்கொடி என்றும் அழைக்கப்படுவது?
வைகை நதி
889) சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது?
காவிரி ஆறு
890) எழுதுதல் திறனில் ஓர் உயர்நிலைத் திறனாக அமைவது?
கவிதை எழுதுதல்
891) காந்தி எனும் திரைப்படத்தில் காந்தியாக நடித்தவர்?
பென் கிங்ஸ்லி
892) A friend in need is a friend indeed - இணையான தமிழ் பழமொழி கூறுக.
உயிர்கொடுப்பான் தோழன்
893) Self help is the best help - இணையான தமிழ் பழமொழி கூறுக.
தன் கையே தனக்கு உதவி
894) Efforts never fail - இணையான தமிழ் பழமொழி கூறுக.
முயற்சி திருவினையாக்கும்
895) Live and let live - இணையான தமிழ் பழமொழி கூறுக.
வாழு, வாழவிடு
896) Think everybody alike – இணையான தமிழ் பழமொழி கூறுக.
உன்னைப்போல் பிறரையும் நேசி
897) ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இச்செய்யுள் இடம்பெறும் நூல்?
கலித்தொகை
898) ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இவ்வரிகளின் பொருள்?
இல்வாழ்வென்பது வருந்தி வந்தோர்க்கு உதவுதல்
899) போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை – இவ்வரிகளின் பொருள்?
பாதுகாப்பு என்பது அன்புடையோரைப் பிரியாமல் வாழ்தல்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One