Search

HISTORY OF THE DAY 28.08.2018 | TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday 28 August 2018

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28 




பிறப்புகள்
  1. 1592 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628)
  2. 1749 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1832)
  3. 1855 – நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
  4. 1863 – அய்யன்காளி, இந்திய சாதிய எதிர்ப்பு செயற்பாட்டாளர் (இ. 1914)
  5. 1899 – ஜேம்ஸ் வாங் ஹோவ், சீன அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 1976)
  6. 1928 – எம். ஜி. கே. மேனன், இந்திய இயல்பியலாளர் (இ. 2016)
  7. 1932 – யாகிர் அஹரோனோவ், இசுரேலியக் கல்வியாளர்
  8. 1934 – ஏ. பி. கோமளா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
  9. 1957 – ஈவோ யொசிப்போவிச், குரோவாசியாவின் 3வது அரசுத்தலைவர்
  10. 1957 – ஐ வெய்வே, சீனச் சிற்பி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்
  11. 1959 – சுமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
  12. 1964 – இளவரசு, தென்னிந்திய நடிகர் , ஒளிப்பதிவாளர்
  13. 1965 – ஷானியா ட்வைன், கனடியப் பாடகி
  14. 1969 – ஜேக் பிளாக், அமெரிக்க நடிகர்
  15. 1982 – பிரசன்னா, தமிழகத் திரைப்பட நடிகர்
  16. 1983 – லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாளர்
  17. 1986 – கிலாத் ஷாலித், இசுரேலியப் போர்வீரர், ஊடகவியலாளர்

இறப்புகள்
  1. 430 – ஹிப்போவின் அகஸ்டீன், அல்சீரிய மெய்யியலாளர், புனிதர் (பி. 354)
  2. 632 – பாத்திமா, முகம்மது நபியின் மகள் (பி. 605)
  3. 1891 – ராபர்ட் கால்டுவெல், ஆங்கிலேய மதப்பரப்புனர், மொழியியலாளர் (பி. 1814)
  4. 1973 – முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)
  5. 2012 – சுலாமித் பயர்சுடோன், கனடிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1945)


நிகழ்வுகள்
  1. 475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான்.
  2. 632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது.
  3. 1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர்.
  4. 1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  5. 1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
  6. 1619 – இரண்டாம் பேர்டினண்ட் புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  7. 1640 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசின் இராணுவம் நியூபர்ன் போரில் இசுக்கொட்டியப் படைகளிடம் தோற்றது.
  8. 1648 – இரண்டாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: கொல்செஸ்டர் மீதான 11-கிழமை முற்றுகை நிறைவடைந்தது. அரசுப் படைகள் நாடாளுமன்றப் படைகளிடம் சரணடைந்தன.
  9. 1709 – மணிப்பூர் மன்னராக பாம்கீபா முடிசூடினார்.
  10. 1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
  11. 1810 – கிராண்ட் போர்ட் சமரில் அரச கடற்படைக் கப்பல்கள் பிரான்சிடம் சரணடைந்தன.
  12. 1833 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.
  13. 1844 – பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
  14. 1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
  15. 1849 – ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிசு ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
  16. 1859 – 1859 சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.
  17. 1867 – ஐக்கிய அமெரிக்கா ஆளில்லா மிட்வே தீவுகளைக் கைப்பற்றியது.
  18. 1879 – சூலுக்களின் கடைசி மன்னன் செட்சுவாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
  19. 1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
  20. 1913 – நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
  21. 1914 – முதலாம் உலகப் போர்: அரச கடற்படை செருமானியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.
  22. 1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.
  23. 1916 – முதலாம் உலகப் போர்: செருமனி உருமேனியா மீதும், இத்தாலி செருமனி மீது போரை ஆரம்பித்தன.
  24. 1924 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
  25. 1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  26. 1944 – இரண்டாம் உலகப் போர்: மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.
  27. 1963 – மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
  28. 1964 – ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.
  29. 1968 – சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.
  30. 1988 – செருமனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
  31. 1990 – குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
  32. 1990 – சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.
  33. 1993 – கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.
  34. 1996 – வேல்ஸ் இளவரசர் சார்லசு, இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
  35. 1998 – பாக்கித்தானின் நாடாளுமன்றம் "திருக்குர்ஆன், நபிவழி" ஆகியவை "அதியுயர் சட்டம்" என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.
  36. 1998 – இரண்டாவது காங்கோ போர்: காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.
  37. 2006 – திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  38. 2006 – இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

Read More »

பதினோராம் வகுப்பு பொருளியல் : TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD 2018

இன்றைய தகவல் பதினோராம் வகுப்பு பொருளியல் : 
1. மனித அறிவின் அனைத்து நிலைகளையும் பொருளாதார சிந்தனை மூலம் எளிதாக அறிய முடியும் என்று கூறியவர்- பேராசிரியர் பெல்.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One