Search

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியீடு!

Monday 3 February 2020


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி ,

1.  விழுப்புரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டம்

2.திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள தென்காசி வருவாய் மாவட்டம்

3. வேலுார் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை வருவாய் மாவட்டம் மற்றும்

4. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்

ஆகிய 5 வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து , அதன் கட்டுப்பாட்டில் கீழ்க்கண்டவாறு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்பட அனுமதிக்குமாறும் , மேற்படி புதியதாக தோற்றுவிக்கப்படும் 5 புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு 92 புதிய பணியிடங்கள் மற்றும் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு அனுமதி வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஆய்வு செய்து , அதனை ஏற்று , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்தார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து அம்முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு கீழ்க்கண்டவாறு தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு ரூ . 4 , 67 , 78 , 784 / - க்கு ( ரூபாய் நான்கு கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து எழுபத்து எட்டாயிரத்து எழுநூற்று எண்பத்து நான்கு மட்டும் ) நிர்வாக ஒப்பளிப்பும் , 2019 - 2020ஆம் ஆண்டிற்கான தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக ரூ . 123 , 98 , 064 / - ( ரூபாய் ஒரு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து தொன்னூற்று எட்டாயிரத்து அறுபத்து நான்கு மட்டும் ) நிதி ஒப்பளிப்பும் வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது .

ஆணை :

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 5 முதன்மை கல்வி அலுவலர் உள்பட 92 புதிய பணியிடங்களை ஏற்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் அலுவலகம் உருவாகவுள்ளது.






Read More »

TNTP வலைதளத்தில் மாதிரி வினாத்தாள்கள்!!

2019 - 2020ஆம் கல்வியாண்டின் புதிய பாடத்திட்டத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பார்வை - 1ன்படி பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதனைத் தொடர்ந்து TNTP வலைதளத்தில் ( tntp . tnschools . gov . in ) மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இம்மாதிரி வினாத்தாளில் தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் கருத்துக்கள் பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகள் அனைத்தையும் சோதித்தறியும் வகையில் 60 மதிப்பெண்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு மூன்று பருவங்களையும் உள்ளடக்கியதாக உள்ளதால் அதற்கேற்ப 5ஆம் வகுப்பு மாணவ / மாணவிகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கிட அனைத்து தொடக்க / நடுநிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read More »

பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைப்பு முக்கிய பாடங்களில் 40% திறனறி கேள்விகள் இடம்பெறும் மெல்ல கற்கும் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாது என தேர்வுத் துறை தகவல்.

தேசிய நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பொதுத்தேர்வு வினாத்தாளில் 40 சதவீதம் வரை திறனறி கேள்விகள் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

*.தமிழக பள்ளிக்கல்வியில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இந்த வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கான செய்முறைமற்றும் திருப்புதல் தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.

*.இதற்கிடையே வழக்கத்துக்கு மாறாக நடப்பாண்டு பொதுத்தேர்வில் திறனறி கேள்விகள் அதிகளவில் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

*.இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே அடுத்த கட்ட உயர் படிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.

*.மேலும், நீட், ஜேஇஇ, சிஏ உட்பட தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவாக இருக்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர்.

*.இதை தவிர்க்கவே பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் பாடங்களுக்கான வினாத்தாள் கட்டமைப்பு (ப்ளூ பிரின்ட்) வழங்கப்படவில்லை.

*.ஆசிரியர்களுக்கு கேள்வித்தாள் வடிவமைப்பு குறித்த புரிதல் கிடைப் பதற்காக மட்டுமே மாதிரி வினாத் தாள் வெளியிடப்பட்டது.

*.அதேநேரம் மாதிரி வினாத்தாள் அடிப்படையில் பொதுத்தேர்வு கேள்வித்தாள் இருக்காது.

*.எந்த பாடத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். இந்தாண்டு கல்லூரி பேராசிரியர்கள் மேற்பார்வையின்கீழ் திறமையான ஆசிரியர்கள் குழுவை கொண்டு பாடவாரியாக வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

*.அதனால் நடப்பாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்கள் சற்று கடின மாகவே இருக்கும். கணிதம், விலங் கியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 40 சதவீதம் வரை திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் இடம்பெறக்கூடும்.

*.அதில் 10 முதல் 20 சதவீதம் வரையான வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அதனால் மாண வர்கள் பாடப்புத்தகங்களை மட்டு மின்றி பாடங்கள் சம்பந்தமாக விரி வாக படிக்க வேண்டியது அவசியம்.

*.மேலும், சென்டம் எடுக்கும் மாண வர்களின் எண்ணிக்கை குறையும்.

*.அதேநேரம் மெல்ல கற்கும் மாணவர் களின் தேர்ச்சி பாதிக்கப்படாது. அவர்கள் தேர்ச்சி பெறக்கூடிய வகை யிலான வினாக்களுக்கும் கணிசமான பங்களிப்பு தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read More »

TRB புதிய அறிவிப்பு - வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வில் புதிய நடைமுறை!!

Read More »

School Morning Prayer Activities - 04.02.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.02.20

திருக்குறள்

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:371

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

விளக்கம்:

பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

பழமொழி

A little string will tie a little bird

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.

2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.

பொன்மொழி

மனிதனின் இன்பம் அவனது வாழ்க்கையில் நியாயமாக பெற்ற வெற்றி தான் நிர்ணயிக்கிறது.

------- இறையன்பு

பொது அறிவு

பிப்ரவரி 4- இன்று உலக புற்றுநோய் ஒழிப்பு தினம்

1. புற்றுநோயை குணமாக்கப் பயன்படும் மின்காந்த அலைகளின் பெயர் என்ன?

 காமா கதிர்கள் (Gamma rays).

 2. புற்றுநோயை குணமாக்கும் 'பெரில்லியல் ஆல்கஹால்' என்ற அமிலம் அதிகமாக உள்ள பழ வகை எது?

 ஆரஞ்சுப் பழம்.

English words & meanings

Helminthology – study of parasitic worms. ஒட்டுண்ணிகள் குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.

Heliotrophic - movement of plants towards sun. சூரிய ஒளியை நோக்கி அசைவு

ஆரோக்ய வாழ்வு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி யின் அளவை விட கொய்யாப்பழத்தில் 4 மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.

Some important  abbreviations for students

econ. - economy.   

esp. - especially

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

குருவிற்கு நேர்ந்த சோதனை

குறள் :
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

விளக்கம் :
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

கதை :
ஒரு துறவி அவருக்கு ஐந்து சீடர்கள், ஒரு நாள் அவர் அணிந்து இருந்த காவி உடை கிழிந்து விட்டது, அதனை தைக்க வேண்டி ஐந்து சீடர்களிடமும் காசு கொடுத்து ஊசி வாங்கி வரசொன்னார்.

அந்த ஐந்து சீடர்களும் இதுவரை ஊசியை பார்த்தது இல்லை. கடைக்கு சென்றார்கள் ஊசி கேட்டார்கள், அவர்களும் கொடுத்தார்கள். ஆனால் அது ஊசி தான் என்பதை அவர்கள் நம்பவில்லை, நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று வேறு கடைக்கு சென்று விட்டார்கள். அங்கும் அதையே கொடுத்தார்கள்.

இறுதியில் நீங்கள் எல்லாம் எங்களை ஏமாத்த நினைகிறீர்கள் என்று கூற, அந்த கடைக்காரன் இவைகள் முட்டாள் என புரிந்து கொண்டு, சீடர்களே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள், நடந்ததை கூற, சரி அதை எப்படி நீங்கள் ஊசி இல்லை என சொல்கிறீர்கள் என கடைக்காரன் வினவினான்.

ஐவரும் சொன்னார்கள் எங்கள் குரு ஐந்து பேரை அனுப்பி ஒரு ஊசி வாங்கி வர சொன்னார். கண்டிப்பாக அது மிகவும் பெரியதாக தான் இருக்கும் என கூற, அவரும் ஒரு பெரிய பனை மரத்தை காண்பித்து இது தான் ஊசி தூக்கி கொண்டு போங்கள் என் கூறிவிட்டு அதற்குரிய காசுகளை வாங்கிகொண்டார்.

நீதி :
ஒருவரின் வலிமையை அறியாமல் அவரை நம்பி ஒரு செயலை ஒப்படைத்தல் மிகவும் தவறு.

இன்றைய செய்திகள்

04.02.20

◆நீட் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து 36 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் சிறப்புப் பள்ளியின் மதிப்புறு இயக்குநர் எஸ்.எஸ்.ஜவஹர் அழைப்பு விடுத்துள்ளார்.

◆பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அழுத்தம் தந்து அச்சுறுத்தாமல் பெற்றோர் ஆதரவாக இருக்க வேண்டும் என கல்வியாளர்களும், நிபுணர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

◆கடந்த 2019, செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.7.27 லட்சம் கோடியாக இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

◆சீனாவையும் இதனையடுத்து உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தும் கரோனாவைரஸ் பரவி வருவதால் அதற்கு தீர்வுதான் என்ன? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் தாய்லாந்து மருத்துவர்கள் கரோனா சிகிச்சையில் குறிப்பிடத்தகுந்த வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

◆இந்திய ஒருநாள், டி20 அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Today's Headlines

🌸There is going to be a free coaching session for NEET for 36 days. Students can participate in this and get benefited says Respected Director of P. T. Lee Chengalvaraya Naicker Special School Mr. S. S. Jawahar.

🌸 The parents should be supportive to the students who are going to write the Public Examination. Students should not be pressurised advices the educationist and specialists.

🌸 According to the statistics on September 30th, 2019 the amount of unpaid loans in banks are Rs. 7.27 lakhs crore informed Central government.

🌸 As there is a  threat of Corona Virus in  China and all over the world and every one is searching for the solution the Thailand doctors declared that they found a remarkable success for the virus.

🌸 Indian player Rohit Sharma who is the vice captain for one day T-20 is not able to play in the 3 sets of one day match and two test matches.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Read More »

5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு 60 மதிப்பெண்களுக்கே நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை முழு விவரம்.

தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ( Continuous and comprehensive Evaluation ) 2012 - 2013 ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . இம்முறையில் வளரறி ( Formative Assessment ) மதிப்பீட்டிற்கு 40 மதிப்பெண்களும் தொகுத்தறி பதிப்பீட்டிற்கு ( Summative Assessment ) 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

வளரறி மதிப்பீடு FA ( a ) + FA ( b ) என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன . இதில் FA ( a ) - ல் ப்ராஜெக்ட் , மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்மந்தப்பட்ட பள்ளிப் பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன . இதேபோல் FA ( b ) - ல் ஒவ்வொரு பாட அலகிலும் சிறு சிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவைகளுக்கு 20 மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட பள்ளிப் பாட ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றன . மேலும் தொகுத்தறி மதிப்பீட்டில் ( Summative Assessment ) பாடப்பகுதியில் உள்ள பாடக்கருத்துக்களில் மாணவர்களின் கற்றல் விளைவுகள் ( Learning outcome ) மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி அளவிலோ , வட்டார அளவிலோ மற்றும் மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன .

 தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்விற்கு வளரறி மதிப்பீட்டின் FA ( a ) மற்றும் FA ( b ) 40 மதிப்பெண்களுக்கு ஏற்கனவே 22.10.2019ல் தொடக்கல்லி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சம்மந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்து வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . மேலும் தொகுத்தறி மதிப்பீட்டில் சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டி உள்ளதாலும் வினாத்தாட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறை ( Fair Assessment ) நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதாலும் தொகுத்தறி மதிப்பீட்டின் 60 மதிப்பெண்களுக்குரிய பகுதிகளுக்கு வினாத்தாட்கள் அரசுத் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக மந்தன முறையில் பள்ளிகளுக்கு வழங்கி தேர்வுகள் நடத்தப்படும் .

விடைத்தாள்கள் அந்த அந்த CRC மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றி கொடுத்து திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும் . இந்நடைமுறையால் மாணவர்கள் மாநிலம் முழுவதும் பாடக்கருத்து மற்றும் கற்றல் விளைவுகளில் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியவும் , நியாயமான மதிப்பீடு ( Fair Assessment ) செய்யவும் , மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும் . மேலும் , 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான தேர்வில் அரசாணை ( நிலை ) எண் . 164 நாள் 13.09.2019 - ன்படி ஆண்டு இறுதித் தேர்வு அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது . எனவே , 5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், 
Read More »

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை!

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி ஏதுவாக தேர்வு என்று தெரிவித்த பள்ளி கல்வி ஆணையர், பொதுத்தேர்வு அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. குழந்தைகளால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாது, பயம் கலந்த சூழல் காரணமாக கற்றல் திறன் பாதிக்கும் என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

ஒவ்வொருவரும் கல்வியறிவு பெற வேண்டியது அவசியம். தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, மனரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »

வரும் புதன்கிழமை ( 05.02.2020) இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

நாகப்பட்டினம்

நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலத்தை ஒட்டி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 5ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிசேகம் நடைபெறுவதையொட்டி வரும் பிப்.5ந்தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்படும் என ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். 5ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 22ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Read More »

ஊதிய குறை தீர்க்கும் குழு - பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பிற்கு பிப்.5-ல் பங்கேற்க அழைப்பு

ஊதிய குறை தீர்க்கும் குழு வருகின்ற 05-02-2020ல்  தமிழ்நாடு அனைத்து
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.செந்தில்குமார் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் ஊதியம் சார்ந்த கோரிக்கைகளை 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்
சார்பில் எடுத்துரைக்க உள்ளனர்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One