Search

Emis portal Training attended details of the teachers -2019-20 -to make entry in web portal

Saturday 20 June 2020

Read More »

இன்று சர்வதேச யோகா தினம்: மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் யோகா


புதுச்சேரி அரசு சார்பில் வாழ்வியல் முறை மாற்று சுகாதார மையம் இயங்கி வருகிறது. இங்குள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை பெறு வோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அங்குள்ள மருத்துவர் ச.மகேஸ்வரன் கூறி யது: அரசின் இந்த யோகா பயிற்சி மையத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து கொண்டிருந்தனர். கரோனா ஊரடங்கால் தற்போது குறைந்த அளவிலேயே இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்று ஏற் படாமல் தடுப்பதற்கு நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வேண்டும்.

இன்றைய வாழ்க்கை முறை நமக்கு மன அழுத்தத்தை உண்டாக்குவதாகவே உள்ளது.

மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும்.

கரோனா வைரஸ் தொற் றைத் தடுப்பதற்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் யோகப்பயிற்சி சிறந்த முன்தடுப்பு நடவடிக்கை ஆகும். யோகாசனத்துடன் கூடிய மூச்சுப் பயிற்சிகள் மூச்சுக்குழாய் அடைப்பை நீக்கி தசைகளை வலுவாக்குவ தோடு கிருமி வளரும் சூழலை நிச்சயம் குறைக்கும். எனவே இன்றைய காலகட்டத்தில் கரோனா வைரசுக்கு எதிரான ஒரு போராட்ட உத்தியாக அனைவரும் யோகப் பயிற்சியைக் கைக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னெடுப்பால் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி(இன்று) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகி றது. கரோனா பெருந்தொற்று சூழலில், பொது இடங்களில் பலர் ஒன்று சேர முடியாத நிலையில், 'வீட்டில் யோகா- குடும்பத்தாருடன் யோகா' என்பதே இந்த ஆண்டின் கொண் டாட்ட முறையாகி உள்ளது.

நாமும் யோகாவை கற்போம், உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்ளுவோம்
Read More »

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியர்


இந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பு விட்டுப் போகக்கூடாது என்பதற்காக அவர்கள் இருக்கும் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்திவருகிறார் ஒரு ஆசிரியர். தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதி கரம்பை அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக 12 வருஷமாகப் பணியாற்றிக் கொண்டு வருபவர்தான் அந்த வித்தியாசமான ஆசிரியர் தமிழரசன்.இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவயர் பெரும்பாலும் பக்கத்து கிராமங்களைச் சார்ந்தவர்கள் மேலும் விவசாய பின்னனியைக் கொண்ட எளிமையான குழந்தைகள்.இந்த குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதுதான் இங்குள்ள பல பெற்றோர்களின் கனவு காரணம் அந்த பெற்றோர்கள் பெரும்பாலனவர்களுக்கு படிப்பறிவு இல்லை.இந்த நிலையில் கொரோனா காரணமாக நீண்ட காலமாக பள்ளிகள் மூடிக்கிடப்பதால் பிள்ளைகள் படிக்காமல் இருப்பதைக் கண்டு பெரிதும் வேதனைப்பட்டனர் பெற்றோர்களை விட அதிகம் வருத்தப்பட்டவர் ஆசிரியர் தமிழரசன்தான்.குறிப்பாக ஒன்பதாம் வகுப்பில் இருந்து ஆல் பாஸ் காரணமாக பத்தாம் வகுப்பிற்கு வரக்கூடிய மாணவர்களுக்கு இவ்வளவு நாட்களில் கால்வாசிப்பாடம் நடத்தி இருக்கவேண்டும் ஆனால் இன்னும் பாடப்புத்தகத்தை பார்க்காமல் மாணவர்கள் இருக்கின்றனரே இவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவைக்கவேண்டும் என நினைத்தவர் ஒரு முடிவு எடுத்தார்.அதன்படி இவரது டூ வீலரை எடுத்துக் கொண்டு மாணவர்கள் இருக்கும் கிராமத்திற்கு சென்று விடுகிறார் குறிப்பிட்ட இடத்தில் மாணவ மாணவியரை வரவழைத்து அவர்களுக்கு மாஸ்க் கொடுத்து சமூக இடைவெளி கொடுத்து உட்காரவைக்கிறார்.பின்னர் பத்தாம் வகுப்பு பாடத்தை நடத்த ஆரம்பிக்கிறார்.தம் சொந்த செலவில் நோட்டு புத்தகம் மட்டுமின்றி மாஸ்க் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டும் கொடுத்து அவர்களை உற்சாகத்துடன் படிக்கவைக்கிறார்.இது போல பக்கத்து பக்கத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு சென்று இரண்டு மணி நேரம் ஒவ்வொரு கிராமத்திலும் செலவிட்டு மாலை வரை பாடம் நடத்திவிட்டு பின் தன் வீட்டிற்கு திரும்புகிறார்.தங்கள் கண் எதிரே பிள்ளைகள் பாடம் படிப்பதை பார்க்கும் பெற்றோர்களுக்கு பெரிதும் சந்தோஷம் கிராமத்து சூழலில் சிரமமின்றி படிப்பதால் மாணவர்களுக்கும் சந்தோஷம்.கொரோனா மீது பழியைப் போடாமல் கடமையை முடிந்த வரை செய்வதில் ஆசிரியர் தமிழரசனுக்கு சந்தோஷம்.-எல்.முருகராஜ்.
Read More »

நிரந்தரப்பணி ஆசிரியர்கள் தேவை!

Read More »

இன்று சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பார்க்கும் தமிழக மாவட்டத்தில் ஆரம்பம் மற்றும் முடியும் நேரம் அறியும் அட்டவணை


இந்தியாவில்  சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 9:15 மணிக்கு தொடங்கி மாலை 3.04 மணிக்கு முடிவடையும். இந்த முழுச் சூரிய கிரகணத்தின்போது, சந்திரன் சூரியனை 98.8 சதவீதம் வரை மறைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் கிரகணம் நாளை காலை சுமார் 10.15 மணிக்குத் தொடங்குகிறது. நண்பகல் சுமார் 11.45 -12.00 மணிஅளவில் கிரகணம் உச்சத்தை அடைகிறது. பிற்பகல் சுமார் 1.30 - 1.45 மணியளவில் கிரகணம் முடிவடைகிறது!     

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 10.15 முதல் அற்புதமான காட்சியாகக் காணலாம். அது வழக்கமான ’நெக்லஸ் வடிவில்” தெரியும்!

தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் கிரகணம் தெரியும் நேரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது!
Read More »

உங்கள் ஊரில் இன்று சூரிய கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை விடியோ பார்க்கலாம்..DIRECT LINK.


கீழ்க்கண்ட இணையதளத்தில் உங்கள் ஊரின் பெயரைத் தேர்வு செய்து பார்த்தால் உங்கள் ஊரில் கிரகணம் எப்போது துவங்கி எப்போது முடியும் என்பது போன்ற விவரங்களையும், கிரகணம் துவங்குவது முதல் முடியும் வரையிலான விடியோவையும் காணலாம்!

Live Stream Annular Solar Eclipse - Direct Link...
Read More »

தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை கவனிப்பது 'அவசியம்!'


ஊரடங்கால் மூடப்பட்ட தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பெரும் அல்லல்படும் நிலைமை உருவாகி உள்ளது. எனவே, அவர்களின் நலனை காக்கும் வகையில், பள்ளிகளின் தன்மைக்கேற்ப, கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வசூலிக்கும் திட்டத்தை, அமல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், நாடு முழுவதும் உள்ள, பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படா விட்டாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தினமும் பள்ளிகளின் நிர்வாக வேலை தரப்படுகிறது.தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறு, 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க வேண்டிய அவசியம், பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசு தடை

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், போதிய வருவாய் மற்றும் நிதி கையிருப்பு இல்லாததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.இதை கருத்தில் கொண்டு, மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதற்கு, அரசு அனுமதிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் கோரிக்கைவிடுத்து உள்ளன.ஆனால், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க, பள்ளிகளுக்கு அரசு தடை விதித்துள்ளதால், கட்டணம் வசூலிக்க முடியவில்லை.அதனால், ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.தற்போது, பெரிய நிறுவனங்களே, பொருளாதார நெருக்கடியால், ஊழியர்களுக்கு, 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துள்ளன.அப்படி இருக்கும் போது, கட்டணம் வசூலிக்காமல் எப்படி, தனியார் பள்ளிகளால் சம்பளம் வழங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களிடம், குறிப்பிட்ட சதவீத அளவுக்கு கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்ற, கோரிக்கைஎழுந்துள்ளது.

நிபந்தனை

'விருப்பம் உள்ள பெற்றோர், கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். மற்றவர்களை கட்டாயப்படுத்தி, எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ, போன் வழியாகவோ, நேரில் பணியாளர்களை அனுப்பியோ வற்புறுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன், இந்த தடையை நீக்கலாம்' என, பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை அரசு கவனிப்பது போல, தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனையும், அரசு கவனித்து கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.

இலவச சேர்க்கைக்கான கட்டணம் கிடைக்குமா?

'கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம், 60 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது.'இந்த தொகையை, அரசு உடனே வழங்கினால், மாணவர்களிடம் கட்டணம் பெறாமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வசதியாக இருக்கும்' என்றும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆறு மாதங்களுக்கு கட்டணம், 'கட்'

கல்வி கட்டணத்தை ஆறு மாதம் ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் தாக்கல் செய்து உள்ள மனு:

கொரோனா பேரிடர் காலத்தில், மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.ஆனால், சில பள்ளிகள் கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்துகின்றன.அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆறு மாதங்களுக்கு, கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையின் போது, தமிழக அரசு உரிய முடிவு எடுத்து, பெற்றோர், மாணவர் நலன் மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, உரிய பதில் அளிக்க வேண்டும்.ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, கட்டணம் வசூலிக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது
Read More »

10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு: செங்கோட்டையன்


''பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், பாட வாரியாக, மதிப்பெண் பதிவு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியை, பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

இதற்காக, அதன் விபரங்களை, அரசு பள்ளிகள், 100 சதவீதமும், தனியார் பள்ளிகள், 75 சதவீதமும் எங்களுக்கு ஒப்படைத்து உள்ளன.பத்தாம் வகுப்பினருக்கு, மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம்.சான்றிதழில் பாட வாரியாக, மதிப்பெண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு முடிவுகளை, ஜூன் 22ல் எங்களிடம் ஒப்படைப்பர். அந்த முடிவுகள், முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் நடைமுறைக்கு வரும்.தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டி, கல்வித்துறை அலுவலர்கள், தங்கள் கருத்துகளை வெளியிடக் கூடாது. நடத்தை விதிகளை மீறி, கல்வித் துறையினர் செயல்படக் கூடாது என, அனைத்து, சி.இ.ஓ.,களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சிலபள்ளிகளில், 'ஆன்லைன்' மூலமாக, தேர்வு நடப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு, எவ்வாறு கல்வி கற்றுத் தரலாம் என்பது குறித்து, துறை ரீதியாக கலந்து பேசி, முடிவு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Read More »

GRAMMAR WORK SHEET.. PRESENT PERFECT TENSE FOR ALL..


GRAMMAR WORK SHEET..
PRESENT PERFECT TENSE
Read More »

NATIONAL AWARDS TO TEACHERS 2020.. INSTRUCTION MANUAL FOR ONLINE SELF-NOMINATION..


 NATIONAL AWARDS TO TEACHERS
2020..
INSTRUCTION MANUAL
FOR ONLINE SELF-NOMINATION..
CLICK HERE TO DOWNLOAD
Read More »

நாளை கங்கண சூரிய கிரகணம்: அப்படினா என்ன தெரியுமா?

அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது.

கங்கண சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு வளையம் போல் வானில் காட்சி தரும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
Read More »

நாளை சூரிய கிரகண நேரத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன?

நாளை நடைபெற உள்ள சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம் இல்லை. இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் நாளை காலை 10.22 மணிக்கு தொடங்கி மதியம் 1.41 மணிக்கு முடிவு பெறும். இதில் நண்பகல் 11.59 மணிக்கு முழுமையான நிலை ஏற்படும். இருப்பினும் தமிழகத்தில் 34 சதவீதம் மட்டுமே சூரிய கிரகண நிகழ்வை காண முடியும்.

நாளை நடைபெறும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு.

அமாவாசை அன்று சூரிய கிரகணமும், பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம்.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன் மற்றும் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.

சந்திர கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி நட்சத்திரங்கள்: எளிய உபாயம் இதோ!

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் (Lunar Eclipse) உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம்.

சரியான நேர் கோட்டில் வந்தால் (நட்ட நடுவில்) முழு சூரிய கிரகணம் அல்லது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இல்லை என்றால் பகுதி கிரகணம் ஏற்படுகிறது.

கிரகண சூட்சமம்:

பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும்.

உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்க செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது.


கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:

கிரகணத்தின் போது சூரியனிலிருந்து வரும் கதிர்கள் தடுக்கப்படுவதால், வானத்திலிருந்து வரும் தீய கதிர்வீச்சுகள் நம்மை தாக்கும். அதனால் கிரகணத்தின் போது நம்மை காத்துக் கொள்ள சொல்கின்றனர்.

அதனால் நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தீய கதிர்களால் கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்றும், சமைத்த உணவுகள் மூடி வைக்க வேண்டும் என கூறப்பட்டது.

கிரகணத்தின் போது உடலுறவுக் கொள்ளக் கூடாது.

கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது வெளியே வந்தால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் வெளியே வரக்கூடாது என கூறப்படுகிறது.

கிரகணத்தின் போது பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் இடத்தில் சொரிந்து கொண்டால், குழந்தைக்கு அந்த இடத்தில் மச்சம் போன்று கருமை நிறத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெரியோர் கூறுகின்றனர்.

கிரகணத்தை வெறும் கண்ணில் பார்ப்பது தவிர்க்க வேண்டும்.

கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் உணவு அருந்த வேண்டும்.

ஏன் தர்ப்பைப் புல்:

தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் சொன்னனர் நம் முன்னோர்கள்.


கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:

மந்திர சாஸ்திராத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும்
Read More »

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு: 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஆண்டுதோறும் MBBS, MDMS என்ற இரண்டு பிரிவுகளில்  நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் MBBS பிரிவில் 15 சதவீதமும் MDMS என்கின்ற மருத்துவ மேற்படிப்பு பிரிவில் 50% சதவீதமும் , மேலும் சிறப்பு படிப்பு எனும் MCHDM என்ற பிரிவுக்கு 100 சதவீத இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு அனைத்து மாநிலங்களும் அளிப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் அண்மை காலமாக தமிழகத்தில் இதுகுறித்த சர்ச்சைகள் வெடித்தன. இதில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்கான இடங்கள் நிரப்பப் படவில்லை என தகவல் வெளியானது. இதனையடுத்து

இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று திடீர் திருப்பமாக மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Read More »

பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர SPD உத்தரவு.

கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும்.

ஊரடங்கு காலத்துக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதால், அதை ஈடுகட்ட, முழு நேரம் பணிக்கு வர சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவு.

தமிழ்நாட்டின் சமாக்ரிக்ஷாவில், பகுதி நேர பயிற்றுநர்கள் (பி.டி.ஐ.எஸ்) தற்போது அரசு மேல்நிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.  எனவே, பி.டி.ஐ.எஸ் தங்கள் கடமைக்கு அறிக்கை செய்யக்கூடிய நிலையில் இல்லை.  இது சம்பந்தமாக, பகுதிநேர பயிற்றுனர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக 2020 ஜூன் மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் முழுமையாக செயல்பட்டு செயல்படும்போது பள்ளிகளுக்கு வருவதன் மூலம் அவர்கள் வேலை செய்யாத நாட்களை ஈடுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More »

தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை

திருப்பூரில் தனியார் பள்ளி ஒன்று 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கேள்வித்தாளை பள்ளி நிர்வாகம் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளது. வீட்டிலேயே தேர்வு எழுதி, வாட்ஸ்அப் மூலம் விடைத்தாளை பெற்று பள்ளி நிர்வாகம் மதிப்பெண் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் வெளியானதை அடுத்து தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 20 ) மேலும் 2,396 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 20.06.2020 ) இன்று 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 180

திருவள்ளூர் - 131

மதுரை - 90

மாவட்ட வாரியான பாதிப்பு.( 20.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1,045
Read More »
 

Most Reading

Tags

Sidebar One