Search

Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி ? Direct Link Here👇

Wednesday 15 July 2020

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 92.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

உங்கள் 12 ஆம் வகுப்புமுடிவுகள் ஆன்லைனில்எவ்வாறு பார்க்கலாம்

முதலில்  நீங்கள் கீழ்கண்ட லின்ங் ஏதாவது ஒன்றினைகிளிக் செய்யுங்க

http://tnresults.nic.in/

http://dge2.tn.nic.in/
http://tnresults.nic.in/

http://www.dge.tn.gov.in/index.html

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டும் எப்போதும் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழக திடீரென அறிவித்திருந்த நிலையில், தற்போது இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தேர்வு எழுதிய மாணவிகளில் 94.80% பேரும், மாணவர்களில் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 85.94% மாணவர்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.39% தேர்ச்சியுடன் இரண்டாவது இடமும், கோவை 96.39% தேர்ச்சியுடன் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.

எப்போதும் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி சதவீதம்: 
இயற்பியல் – 95.95%
வேதியியல் – 95.82%
உயிரியல் – 96.14%
கணிதம் – 96.31%
தாவரவியல் – 93.95%
விலங்கியல் – 92.97%
கணினி அறிவியல் – 99.51%

தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். 

மேலும் பிளஸ்1 தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகி உள்ளது.

மார்ச், ஜூன் பிளஸ்1 பருவத்தேர்வில் தேர்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில் எழுதிய அரியர்ஸ் தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Read More »

e-learn.tnschools.gov.in Direct Link

Read More »

e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி ? (Video)

www.e-learn.tnschools.gov.in | Tamilnadu School Education Official Website

தற்போது கொரனோ தொற்றின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும், பள்ளிகளும் நமது தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன .. இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் ஆன்லைன் வழியில் இணைய வழிக் கல்வியை கற்பிக்க நமது பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இதற்காக புதிதாக ஒரு இணையதளம் ஒன்றினை தொடங்கியுள்ளது www.e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தை தற்போது தொடங்கி அதில்

ஒன்றாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
இரண்டாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
மூன்றாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
நான்காம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
ஐந்தாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்

ஆறாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
ஏழாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
எட்டாம் வகுப்ப – இங்கே கிளிக் செய்யவும்
ஒன்பதாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
பத்தாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
பதினொன்றாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்
பன்னிரண்டாம் வகுப்பு – இங்கே கிளிக் செய்யவும்

ஆகிய அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பள்ளி சென்று பாடம் படிக்க முடியாத மாணவர்களுக்காக இந்த வசதியை நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

https://e-learn.tnschools.gov.in/welcome

என்ற இணையதளத்தில் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் வீட்டில் இருந்தே கல்வி பயில பள்ளிக்கல்வித்துறை அன்போடு அன்போடு கேட்டுக் கொள்கிறது..

Currently all schools are closed in Tamil Nadu due to the coronavirus. Thus our school education department has decided to teach online education in online. A new website for this purpose has been launched www.e-learn.tnschools.gov.in

First Standard e-learn Online Class
Second Standard e-learn Online Class
Third Standard e-learn Online Class
Fourth Standard e-learn Online Class
Fifth Standard e-learn Online Class
Sixth Standard e-learn Online Class
Seventh Standard e-learn Online Class
Eighth Standard e-learn Online Class
Ninth Standard e-learn Online Class
Tenth Standard e-learn Online Class
Eleventh Standard e-learn Online Class
Class XII Standard e-learn Online Class
For all classes, all subjects are uploaded. In this situation, our Tamil Nadu School Education Department has released this facility for the students who are unable to go to school and study at present.

Students can learn lessons from home at www.e-learn.tnschools.gov.in Using this rare opportunity all students are lovingly asked to study at home.

Steps To Use e-learn.tnschools.gov.in Website :

https://e-learn.tnschools.gov.in/welcome

Read More »

Steps To Use e-learn.tnschools.gov.in Website

Steps To Use e-learn.tnschools.gov.in Website : https://e-learn.tnschools.gov.in/welcome

Step 1 :

Go to Goole And Search www.e-learn.tnschools.gov.in

You Will See The Above Interface Page in it.. then you have to Click “Click Here For Content” Option

www.e-learn.tnschools.gov.in

Step 1 : 

Then You Have To Choose

1.Class
2.Medium 
3. choose Subject

4. And Finally Click Search Button

Step 3 : 

You will See All The Lessons In that Subject. then Click Lesson name, Which You do Want to Study. Video Will Appear On Learning Source Option

https://e-learn.tnschools.gov.in/welcome


Read More »

ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் பாடம் நடத்தும் ஆசிரியை

கேரளாவில் ஒரு பள்ளியில் ஆகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. இது வைரலாகியுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இயலாமல் வீட்டிலிருந்தே தங்கள் லேப்டாப்புகளில் ஆன்லைனில் வகுப்புகள் பயின்று வருகின்றனர்.

ஆனால் வகுப்பறைக்குச் சென்று பயில்வதுபோல ஆன்லைன் கிளாஸ்களில் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் பலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஷ்யாம் வெங்கலூர் என்கிற சமூக அறிவியல் ஆசிரியை கேரளாவின் ஏஇஎம் பள்ளியில் மாணவர்களுக்கு ஆகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் பாடம் நடத்துகிறார். இதனால் இவர் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு போரடிக்காமல் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது என மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவர் நடத்தும் வகுப்புகளில் பூமிப்பந்து பற்றி பாடம் நடத்தினால் பூமியை மூன்று பரிணாமத்தில் திரையில் தோன்றுகிறது. யானையைப் பற்றி பாடம் நடத்தினால் திடீரென திரையில் பெரிய சைஸ் யானையை தோன்றுகிறது. இவ்வாறாக பாடத்தை ஆகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மிகவும் சுவாரசியமாக நடத்துகிறார்.

இவரது இந்த முயற்சிக்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் இதற்கு முழு ஆதரவு அளிக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Read More »

கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை Time Table வெளியீடு

கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடுமுழுவதும் காணலாம். 

1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) – 200
2.SCV – 98
3. TCCL – 200
4. VK DIGITAL – 55
5. AKSHAYA CABLE – 17
6. Youtube – shorturl.at/pJKV0
கல்வி தொலைக்காட்சி  பாடங்கள் ஒளிபரப்புபட்டியலில் 1 & 12 ம் வகுப்பு இடம்பெறவில்லை. 2 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு முடிய  
CLICK HERE TO VIEW &DOWNLOAD IN OFFICIAL DIRECT LINK
CLICK HERE TO VIEW &DOWNLOAD IN PDF FILE
CLICK HERE TO VIEW &DOWNLOAD IN PDF FILE -2

Read More »

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Read More »

PAN Card நம்பரை போட்டாலே Full Details வந்துவிடும் - புது நடைமுறை அமல்

புதுடெல்லி: வங்கி மற்றும் அஞ்சலகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் பணத்தை மொத்தமாக எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறையை மத்திய நேரடி வரிகள் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது. வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. டெபாசிட் மீதான வட்டிகளுக்கும் இது பொருந்தும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கி அல்லது அஞ்சலகங்களில் இருந்து பணத்தை எடுத்தால் 2% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எடுத்தால் 5 சதவீத டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த நடைமுறை கடந்த 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரு நடை முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி வருமான வரி தாக்கல் செய்ய தனி நபர் தனது வங்கி அல்லது அஞ்சல் கணக்கில் இருந்து ஒரு நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்து இருந்தால் 2% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்நிலையில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நடைமுறையை எளிதாக்க புதிய செயல்முறையை மத்திய நேரடி வரிகள் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வரிகள் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் ஒரு நிதியாண்டில் 20 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து இருந்தால் அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மேல் பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு டெபாசிட் பணம் எடுப்பவர்களிடம்  வங்கி மற்றும் அஞ்சலகங்களில் டிடிஎஸ் பிடித்தம் செய்வதை எளிமைப்படுத்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி பணம் எடுப்பவரின் பான் நம்பரை உள்ளீடு செய்தால் போதும். டிடிஎஸ் பிடித்தம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது பற்றி வங்கிகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். பான் எண்ணை உள்ளீடு செய்வதற்கு உடனடியாக தானியங்கி முறையில் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த புதிய நடைமுறையில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேலான சரி பார்ப்புகள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் இருந்து வந்துள்ளன. மைய வங்கி சேவை உள்ள அனைத்து அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் இது மிக எளிமையான செயல்பாடாக இருக்கும். டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் குழப்பம் எதுவும் ஏற்படாது. கருப்புப் பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே நிதி சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்றார்
Read More »

மூன்று நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்



#Breaking || பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், சந்தேங்களை கேட்கவும் அட்டவணை தயாரிப்பு

* மூன்று நாட்களுக்குள் அட்டவணை வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
Read More »

வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் -வருமான வரித் துறை உத்தரவு

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி ரிட்டன் சரிபார்ப்பை வரி செலுத்துவோர் முடிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, வரி செலுத்துவோர் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்த அடுத்த 120 நாட்களுக்குள் அந்த வரித் தாக்கல் விவரங்களை சரிபார்ப்பு (Verification) செய்திருக்க வேண்டும். ஏதேனும் விதிவிலக்கு அல்லது அரசு தரப்பிலிருந்து கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இதில் வரி செலுத்துவோருக்கு அவகாசம் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது, 2015-16 முதல் 2019-20 ஆண்டு வரையிலான காலத்துக்கு வரி ரிட்டன்களை சரிபார்ப்பு செய்வதற்கான காலக் கெடு செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைவதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்னணு வாயிலாக தாக்கல் செய்யப்பட்ட வரி ரிட்டன்கள் அதிகமான அளவில் வரித் துறையிடம் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்த வரி ரிட்டன்களுக்கான ஐடிஆர்-வி படிவங்கள் பெங்களூரு அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். சட்டப்படி இதில் தாமதம் ஏற்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் மட்டுமே கால அவகாசம் உள்ளது. கால அவகாசத்துக்குள் சரிபார்ப்பு செய்யப்படாத ரிட்டன்கள் தாக்கல் நிராகரிக்கப்பட்டுவிடும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, நிதியாண்டுக்கான வரி ரிட்டன்களுக்கான கோரிக்கைப் படிவங்கள் அவர்களின் கையொப்பத்துடன் பெங்களூருவில் உள்ள மத்திய செயல்பாட்டு மையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கு அவை சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது மின்னணு மூலமாக சரிபார்ப்புக்கு அனுப்பப்படுவதாக இருந்தால் வரி செலுத்துவோரின் ஆதார் ஓடிபி, நெட் பேங்கிங், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டவை மூலமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு சரிபார்ப்பு செய்யப்பட்டுவிட்டால் அந்த வரி செலுத்துவோர் தான் வழங்கிய விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்று உறுதியளிக்கப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் வரி செலுத்துவோருக்கு இந்த அறிவிப்பை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு நவம்பர் 30ஆம் தேதிவரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வரி தணிக்கைக்கான காலக்கெடு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Read More »

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு

திங்கள் முதல் ஞாயிறு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு
Read More »
 

Most Reading

Tags

Sidebar One