Search

2019- 2020 ஆண்டு BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்

Friday 19 June 2020

Read More »

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்

பணி : SRF/ResearchAssociate(RA)

தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Botany, B.Pharm,Bachelor Of Veterinary Science [BVSC], M.Sc Molecular Biology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: SRF பணிக்கு மாதம் ரூ. 35000 +எச்ஆர்ஏ, RA பணிக்கு மாதம் ரூ.47000 + எச்ஆர்ஏ

வயதுவரம்பு: 32 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் 5 ஆண்டு சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சுயவிவரத்தை dayashankar1982@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.07.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in அல்லது https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/CSIR_IARI_RA_16062020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More »

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு


வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.2632/இ3/2019 நாள்.19.06.2020

பொருள்: பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுதல் - மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு

சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.005/DSE/PC/2020 நாள்.19.06.2020

பார்வை:

பார்வையில் காணும் இயக்குநர் அவர்களின் கடிதத்திற்கிணங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் (சுயநிதி பிரிவு நீங்கலாக) 20192020 ஆம் கல்வியாண்டில் ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு

விவரங்களை EMIS இணையதளத்தில் 23062020 க்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
Read More »

வருடம் ரூ.22 லட்சம் ஊதியம்! பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இணைப் பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்று குறைந்தது 4 வருடம் பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : இணை பொது மேலாளர்
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையில் மின்சாரவியல், தகவல் தொழில்நுட்பம், எலட்ரானிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் உள்ளிட்ட துறையில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில், வருடத்திற்கு ரூ.22 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். 
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஜூன் 20ம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :Manager (HR/MR,MS&ADSN), Bharat Electronics Ltd., Jalahalli PO, Bangalore 560013
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்
Read More »

மத்திய அரசில் 1564 காலியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு

இந்தியா முழுவதும் மத்திய அரசின் காவல் துறையில் காலியாக உள்ள 1564 Sub Inspector (GD) மற்றும் Sub Inspector (Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமான எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஜூலை 16க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: F. No. 3/2/2020P&P-II

நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)

மொத்த காலியிடங்கள்: 1564

பணிகள்: Sub Inspector (GD), Sub Inspector (Executive)

பணி: SI in Delhi Police (Male) - 91
பணி: SI in Delhi Police (Female) - 78
பணி: SI (GD) in CAPF - 1395

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: CBT, Physical Standard Test (PST), Physical Endurance Test (PET) and Detailed Medical Examination (DME) போன்ற தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்ப முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_17062020.pdf என்ற லிங்கில் சென்று சதெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2020
Read More »

ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி - பி பதவிக்கான பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 59 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எசி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சென்ட்ரல் சில்க் போர்டு
மேலாண்மை : மத்திய அரசு
பணி : விஞ்ஞானி - பி
மொத்த காலிப் பணியிடம் : 59 
கல்வித் தகுதி : M.Sc Botany, M.Sc Agriculture துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். 
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். 
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://csb.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :Member-Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Hosur Road, B.T.M. Layout, Madiwala, Bangalore - 560 068.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :17.07.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.csb.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
Read More »

10 & 11th - விடைத்தாட்கள் சமர்ப்பித்தல் சார்ந்தது

விடைத்தாட்கள் சமர்ப்பித்தல் சார்ந்தது :* *1* .TOP Sheets .....ஒவ்வொரு மாணவருக்கும் SSLC *5 பாடங்களுக்* கான காலாண்டு அரையாண்டு விடைத்தாட்களை முறையே அந்தந்த *5 பாட Top Sheet* களுக்கும் கீழே தனித்தனி ஆக வைத்து *இடது புற மேல் மூலையில்* ஸ்டேப்பில் செய்து *ஒரு மாணவருக் கான ஐந்து விடைத்தாட்களையும்* வரிசையாக வைத்து *கீழ்புறம் ரேங்க் கார்டினை* வைத்து நூல் கொண்டு  எல்  வடிவத்தையல் தைக்க வேண்டும். *Top Sheet ல் Part - C* பகுதியில் மதிப்பெண்களை  மூன்று டிஜிட் எண்ணாலும் *Capital* எழுத்தாலும் எழுத வேண்டும். வருகை புரிய வில்லை எனில் *AAA* என *சிவப்பு நிறத்தில்* குறித்தல் வேண்டும்.               *அறிவியல் பாடத்திற்கு* *75 மதிப் பெண்களுக்கு பதிவிடல் வேண்டும்.* 100 க்கு பதிவு செய்தல் கூடாது. அவ்வாறு பதிவு செய்திருபபின் அருகில் 75 க்கும் குறிப்பிட வேண்டும். வகுப்பு ஆசிரியரின் அனைத்துப் பாட *மதிப்பெண்கள் பதிவேடு* , *ரேங்க் கார்டு* மற்றும் *விடைத்தாள்களில் மதிப்பெண்கள்* வேறு பாடு இன்றி இருத்தல் வேண்டும். தேவைப்படின் 5 பாட ஆசிரியர்களின் மதிப்பெண்கள் பதிவேட்டை வைத்துக் கொள்ளல் நன்று.  பின்பு *பாட, வகுப்பு, ஆசிரியர் கையொப்பம்* செய்து விட்டு, *தலைமை ஆசிரியர் சீல் வைத்து கையொப்பம்* செய்தல் வேண்டும். *Top Sheet ல்* வேறு எந்த ஒரு பகுதியையும் நிரப்பக் கூடாது. *Packet எண் முகாமில் வழங்கப்படும்* ......
இவ்வாறாக *25 மாணவர்களுக்கு* விடைத்தார்கள் *5 x 25* வரிசையாக *Nominal Roll* படி அடுக்கி அதை ஒரு *Bundle* ஆக Top sheet க்கு சேதம் ஆகாத வகையில் கட்டிவைத்தல் வேண்டும்.. *மார்ச் | ஜூன் 2020 தேர்வுகள்* என்ற தலைப்பில் ஆன புதிய *Nominal Roll* கண்டிப்பாக கொண்டு வந்து பார்வைக்கு  சமர்ப்பித்தல் வேண்டும்.
      *சரிபார்க்கும் படிவம்* ... ஒவ்வொரு *Bundle க்கும்* *இரண்டு படிவங்கள்* தயார் செய்தல் வேண்டும்.  *65 மாணவர்கள்* எனில்        *01 to 25* ஒரு படிவம்              01 to 25 (26 to 50 அல்ல) மற்றொரு படிவம் .0 to 15 படிவம் என *3 படிவங்கள்*  (மொத்தம் 6 Copies) ஒரு படிவத்தில் விடைத்தாள் இருக்கும் பட்சத்தில் *Blue அல்லது Black* நிறத்தில் *டிக்* செய்யவும். விடைத்தாள் இல்லை எனில் *M.* என்று சிவப்பில் ( *Missing* என்ற பொருள் பட) குறிக்கவும். வருகை புரிய வில்லை எனில் *A* எனவும் நீண்ட நாள் வரவும் இல்லை தேர்வுகள் எழுத வில்லை எனில் *LONG ABSENT* எனவும் *சிவப்பில்* குறிக்கவும். *விடைத்தாள்* அல்லது *ரேங்க் அட்டை* அல்லது *இரண்டும் இல்லை* எனில் *மாணவர் வசம்* உள்ளது. ஒப்படைக்கப்பட்டது என சுருக்க மாக *சிவப்பில்* எழுதவும். ஒவ்வொரு கட்டிற்கான ஒவ்வொரு படிவத்திலும் சம்பந்தப் பட்ட *மூன்று நபர்களின கையொப்பம்* கண்டிப்பாக இடம் பெறல் வேண்டும். இன்னொரு படிவத்தில் ஏதும் நிரப்பாமல் கையில் கொண்டு வருதல் வேண்டும் .......முகாமிற்கு விடைத் தாட்கள் சமர்ப்பிக்க வரும் போது சம்பந்தப்பட்ட பள்ளி *தலைமை ஆசிரியர் அலுவலக முத்திரை யுடன்* கண்டிப்பாக உடன் வருதல் வேண்டும்.
Read More »

அறிவியல் உண்மை - விமானிகள் விமானம் ஓட்டும் போது திசைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?

விமானிகள் விமானம் ஓட்டும் போது திசைகளை அறிய கைகார காம்பாஸ் (கைரோஸ்கோப் ) என்ற கருவி விமானி அறையில் கணிப்பொறியின் இணைந்து உள்ளது. அத்துடன் விமான நிலையத்தில் அனுப்பப்படுகிற ரேடியோ சிக்னல்கள் இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டுபிடிக்க உதவும். மேலும் உயரத்தை அறிவிக்கும் திசைகாட்டி என்னும் தொலைக்காட்சியும் உதவும்.
Read More »

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பள்ளி வழி மாணவர்கள், தனித்தேர்வர்கள் இருதரப்புக்கும் சமநீதி வழங்க கோரிக்கை

பத்தாம் வகுப்பில்
தேர்ச்சி பெற்ற,
பள்ளி வழி மாணவர்கள்,
தனித்தேர்வர்கள்
இருதரப்புக்கும் சமநீதி
வழங்க வேண்டும்.!

----------------------------------------
பொதுத் தேர்வை ரத்து
செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு எடுத்து முடிவு அனைவரின் வரவேற்பை பெற்றது.

இதற்காக போடப்பட்ட அரசாணை , காலாண்டு, அரையாண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் மற்றும் வருகை பதிவிற்காக 20% மதிப்பெண் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தது.

பொதுத் தேர்விற்கு பள்ளி மூலம் விண்ணப்பித்த( Regular Candidates) மற்றும் தனித் தேர்வராக விண்ணப்பித்த( Private Candidates) என்ற இரண்டு வகை மாணவர்களுக்கும் தேர்வு இரத்து, அனைவரும் தேர்ச்சி என்ற முடிவு பொருந்தும்.
அது தான் சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படை.


 ஆனால், அரசு வருகை பதிவு, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்கினால் தனித் தேர்வருக்கு அது பொருந்தாது. அவர்களை பாகு படுத்தும்.

அது மட்டுமல்லாமல், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர் பொதுவாக  காலாண்டை விட அரையாண்டிலும் அதை விட பொதுத் தேர்தலிலும் சிறப்பாக தன் கற்றல் திறனை வெளிப்படுத்துவர். அப்படி இருக்கும் போது,
 காலாண்டில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது எப்படி நியாயமாகும்.?

   மேலும்,  வருகை பதிவிற்கான மதிப்பெண் அனைவருக்கும் நியாயம் வழங்காது. நியாயமான மருத்துவ காரணங்களுக்காக  வராமல் இருந்த மாணவர்களை
கடுமையாக பாதிக்கும்.

எனவே, சிக்கலை பெரிதாக்காமல், தேர்ச்சி என்ற அறிவிப்போடு மட்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும்.

 பிளஸ் ஒன் பாடப் பிரிவு தேர்ந்தெடுக்க, இட ஒதுக்கீடு, மாணவர் விருப்பம், அதே பள்ளியில் பயின்றவர், பள்ளி அருகில் உள்ள வசிப்பவர் உள்ளிட்ட பல அளவுகோல் கொண்டு தலைமை ஆசிரியர் முடிவு செய்யலாம்.


 பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் சம நீதி  கிடைக்கும் வகையில், அரசாணை எண் 54-ல் உரிய திருத்தம் கோரி கல்வியாளர்கள் பலரும் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கல்வியாளர்களின் இந்த
நியாயமான கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்.

      ம. வி. ராஜதுரை
 மூத்த பத்திரிகையாளர்,
 19.06.2020
Read More »

கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த மனு:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.பேரிடர் காலத்தில், பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் உள்ளன.

தனியார் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு, 2020 ஏப்ரலில் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதில், 2020 - 21ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நிலுவை தொகையை செலுத்தும்படி, மாணவர்களை, பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என, கூறப்பட்டுள்ளது.அரசு இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்தாலும், ஏராளமான பள்ளி, கல்லுாரிகள் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி வற்புறுத்துகின்றன. இந்தாண்டு, மார்ச், 23 முதல், பள்ளி,கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.

கல்வி கட்டணம் வசூலிப்பு தொடர்பாக, பெற்றோர் புகார் அளித்தும், அவற்றை பதிவு செய்யவில்லை.
ஆறு மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, ஊரடங்கு காலத்தில், கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லுாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆறு மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது
Read More »

Tamilnadu New Syllabus Text Books Price List For Class 1 to 12th Standard For 2020-2021

Click Here To Download - Text Books Price List - Pdf

Read More »

அரசு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று வழங்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் கடிதம்



பார்வையில் காணும் கடிதத்தில் நோய் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படும் மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களுக்கு மற்றும் கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகள் செயல்பட நாட்களுக்கு மாணவ-மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவுப்பொருட்கள் செலவுத் தொகை வழங்குதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பெற்றோர்களின் வங்கி கணக்கு சேகரித்தல்

அதன்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சரியான தொகை வழங்குதல் மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான விவரத்தினை இவை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

Read More »

நாடு முழுவதும் 14 வயது வரையிலான குழுந்தைகளுக்கு ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டம், கல்விமுறை தேவை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நாடு முழுவதும் 14 வயது வரையிலான குழுந்தைகளுக்கு ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டம், கல்விமுறை தேவை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்விமுறையும், பொதுப்பாடத்திட்டமும், பாடங்களையும் உருவாக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ கல்விமுறையை இணைத்து நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஒரே நாடு ஒரே கல்வி முறையை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யா சார்பில் அவரின் வழக்கறிஞர் அஸ்வானி குமார் துபே தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

''மத்திய அரசிலும், ஒவ்வொரு மாநில அரசுகளிலும் ஒவ்வொரு வகையான பாடப்பிரிவுகளும், கல்வி முறையும் இருந்து வருகிறது.

இதனால் குழந்தைகள் தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 21ஏ-ல் வழங்கப்பட்டுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி முறையை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.



இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி வழங்க வேண்டுமானால் அதற்கு நாடு முழுவதும் ஒரே சீரான கல்வி முறையைக் கொண்டுவராமல் சாத்தியமாகாது. இதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் முறையான நடவடிக்கைகளை எடுத்து சீரான கல்வி முறையை, பொதுப்பாடங்களை, பாடப்பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும்.

போதுமான அளவு சமூக பொருளாதார சமத்துவத்தையும், நீதியையும் அடைவதற்கு, மேலாண்மை நிர்வாகத்தின் இயங்கும் பள்ளிகளாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளாட்சி, மாநில அரசு, மத்திய சார்பில் இயங்கும் பள்ளியாக இருந்தாலும், அனைத்து ஆரம்பக்கல்வி பாடசாலைகளிலும் பாடப்பிரிவுகளும், பாடத்திட்டங்களும் ஒரே சீராக இருப்பது அவசியம்.

ஒவ்வொரு மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழிக்கு ஏற்ப குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் மொழி வேறுபட்டதாக இருக்காலம். ஆனால், பாடப்பிரிவுகளும், பாடத்திட்டங்களும் 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு ஒரே மாதிரியாகவே இருத்தல் அவசியம்.

ஜிஎஸ்டி கவுன்சில் இருப்பதைப் போன்று, தேசிய கல்விக் கவுன்சில் அல்லது தேசிய கல்வி ஆணையம் ஒன்றை உருவாக்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் ஒவ்வொரு கல்வி வாரியமும் ஒவ்வொரு வகையான பாடப்பிரிவுகளையும், பாடத்திட்டங்களையும் வைத்துள்ளன. சிபிஎஸ்இ அடிப்படையில் நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற கல்வி முறை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை கல்வியில் வழங்க இயலாது.

6 வயது முதல் 14 வயதுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு நிலையான புத்தகத்தை உருவாக்கி, அதில் அடிப்படை உரிமைகள், கடமைகள், வழிகாட்டும் கொள்கைகள், தேசத்தின் இலக்குகள், அரசியலமைபபுச் சட்டத்தின் முகவுரை ஆகியவை இடம்பெறுமாறு அறிமுகப்படுத்த உத்தரவிட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகள் அடிப்படையிலான புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், இலவசம் மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் படித்த குழந்தைகளை, சிபிஎஸ்இ பள்ளிகளிலும், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்ளோடு ஒப்பிடுகையில் அவர்கள் போதுமான அளவு திறன்மிக்கவர்களாக இல்லை.



ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ கல்வி முறையை இணைத்து நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஒரே நாடு ஒரே கல்வி முறையை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்கள், சிபிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி மாணவர்களோடு ஒப்பிடுகையில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இந்த ஏற்றத்தாழ்வைக் கூட முழுமையாக அகற்ற முடியாது. ஆனால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆர்வலர்களுக்காக ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வை மத்திய அரசால் கொண்டுவர முடியுமா?

நாடு முழுவதும் தற்போதுள்ள நிலையில் பொதுவான பாடப்பிரிவுகள், பாடத்திட்டங்கள் கொண்ட மதிப்பு அடிப்படையிலான கல்வி முறை 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு அவசியம்''.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்


இந்தியாவில் வருடாந்திர வளைய நெருப்பு சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி தெரிகிறது. இந்தியாவில் வருடாந்திர சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி காலை 9:15க்கு தொடங்கி மதியம் 3:04 வரை முடிகிறது. அந்த, நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. இந்தியாவில் சூரிய கிரகணம் வட பகுதியின் சில இடங்களின் காலையில் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். வெறும் கண்களால் பார்க்காமல் கண்களை மூடி பார்க்கவேண்டும். இந்தியாவில் மட்டுமில்லாமல் மத்திய ஆபிரிக்க, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவிலும் தெரியக்கூடும். இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் சுமார் 6 மணி நேரம் நீடிக்கும். தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்.சென்னையை பொறுத்தவரை 34% சூரியனுடைய பரப்பை சந்திரன் மறைப்பதை பார்க்க முடியும் என சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்
Read More »

கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும்



கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும்

ஊரடங்கு காலத்துக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதால், அதை ஈடுகட்ட, முழு நேரம் பணிக்கு வர சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவு
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 19 ) மேலும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 19.06.2020 ) இன்று 2,115 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 54,449 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 95

திருவள்ளூர் - 85

மாவட்ட வாரியான பாதிப்பு.( 19.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள :
Read More »

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் :கல்வித்துறை அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துளது. அதே சமயம் வேலை பார்க்காத ஜூன் மாதத்திற்கான நாட்களை பின்னர் ஈடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

In Samagra Shiksha , Tamil Nadu , Part Time Instructors ( PTIs ) are currently working on consolidated pay in the Government Upper Primary , High & Higher Secondary Schools. Due to the Covid - 19 pandemic all the Schools have been closed till further Orders are issued by the State government to re - open the Schools . Hence , the PTIs are not in a position to report for their duty.

In this regard , it is instructed , that the Part Time Instructors be paid the salary for June 2020 to support their livelihood and they have to compensate their non - working days by coming to Schools when they are fully functional and operational as per the Government instructions and Orders after the Covid - 19 pandemic is over.
Read More »

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு.


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனுக்கு மனப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் பங்கேற்றிருந்தார். கே.பி.அன்பழகனுடன் ஜெயகுமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர்
Read More »

மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை.


காலாண்டு,  அரையாண்டு மார்க்குகளில் சில பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார் வெளியான நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

காலாண்டு,  அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
Read More »

தனியார் பள்ளிகள் விடைத்தாள்களில் கரையான் அரிப்பு - மதிப்பெண் பதிவிட முடியாமல் தவிப்பு !

விடைத்தாள்களை கரையான் தின்று விட்டதால், 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு, பள்ளி மதிப்பெண் பதிவேட்டை மட்டும் பயன்படுத்துமாறு, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு, காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை சேகரிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல பள்ளிகளில் விடைத்தாள்கள், மாணவர்கள் வசம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள், பள்ளிகளில் திரும்ப ஒப்படைக்கவில்லை. பல அரசு பள்ளிகளில், விடைத்தாள்களே இல்லை. இதனால், மதிப்பெண் பதிவு செய்யும் பணியில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் சார்பில், அரசு தேர்வு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:தனியார் பள்ளிகளின் மாணவர்கள், பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற, பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு முறை தேர்வு நடக்கும் போதும், அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை தெரிந்து கொள்ள, விடைத்தாள்களை பெற்றோரிடமே கொடுத்து விடுவது வழக்கம்.இந்நிலையில், தற்போது பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்காக, திடீரென விடைத்தாளை கேட்டால், மாணவர்களிடம் பெற முடியாத சூழல் உள்ளது. பல இடங்களில், மாணவர்களிடம் விடைத்தாள்களும் இல்லை.


கட்டாயம் விடைத்தாள் வேண்டுமென்றால், பல பள்ளிகளில், மாணவர்களுக்கு வினாத்தாளை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பி, வீட்டில் இருந்து தேர்வு எழுத வைத்து, அதை, கல்வித் துறையிடம் ஒப்படைக்கும் தவறான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளன.எனவே, பள்ளிகளில் உள்ள தேர்வு மதிப்பெண் பதிவேட்டை வைத்து, மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் செல்வராஜ் அனுப்பிஉள்ள கடிதம்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு தேர்வு நடத்தி, தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை பாதுகாக்க, பெரும்பாலான பள்ளிகளில் போதிய வசதி இல்லை. கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள், கரையான்கள், எலிகள் மற்றும் மழை நீரால் சேதமாகி விட்டன.சில பள்ளிகளில், திருடர்களின் அட்டகாசத்தால், விடைத்தாள்கள் துாக்கி வீசப்பட்டு சிதைக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில், அரைகுறையான விடைத்தாள்களால், மதிப்பெண் பதிவு செய்ய முடியாது. எனவே, பள்ளிகளில் உள்ள மதிப்பெண் பதிவேட்டை பயன்படுத்தி, மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Read More »

Flash News :10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி - தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்

10,  11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு,  அரையாண்டு தேர்வில் எத்தனைமதிப்பெண் பெற்றிருந்தாலும் அரசாணையின்படி அனைவருக்கும்  தேர்ச்சி என தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு. உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவு.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One