Search

Fully Automatic Income Tax Software (Arunagiri ) for Assessment Year 2020-2021 Download Here

Sunday 2 February 2020

   Arunagiri K Income Tax Software

Read More »

5,8,10,11,12th Public Examination 2020 Time Table in Single Page - Download And Use

Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.02.20

  • திருக்குறள் :
  • ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

பொருள்:

ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

பழமொழி

A good face needs no paints

அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை.

இரண்டொழுக்க பண்புகள்

1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.

2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.

பொன்மொழி

ஆகச்சிறந்த பண்பு என்பது எக்காலத்திலும் பண்பாடு மாறாமல் இருப்பதாகும்.

------- காமராசர்

பொது அறிவு

1.நறுமண பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

 கேரளா

2.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதங்கள்?

22 மாதங்கள்

English words & meanings

Geoponics – study of agriculture. விவசாயம் குறித்த படிப்பு.

Garish - unpleasant decoration.வீண் பகட்டுத் தோற்றம் கொண்ட

ஆரோக்ய வாழ்வு

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, லைகோபீனே மற்றும் தோலிற்கு நன்மைபயக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (ஆன்டிஆக்சிடென்ட் ) அதிக அளவில் காணப்படுகிறது.

Some important  abbreviations for students

div. - division.   

distr. - distributed

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

கோபத்தை மறந்த ராமு

குறள் :
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

விளக்கம் :
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

கதை :
ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.

ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன.

ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன.

அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன்.

நீதி :
எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

மாமிசம்-இறைச்சி             
மிருகம்- விலங்கு                
முகூர்த்தம் - நல்வேளை                          மோசம் - கேடு                    
யந்திரம்- பொறி

இன்றைய செய்திகள்

03.02.20

* கொரோனா தாக்குதலினால் சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை அந்நாடு அறிவித்துள்ளது.

* இனி சிக்னலில் ஹாரன் அடித்தால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியது தான்....மும்பை போலீஸ் அதிரடி.

* ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான 10 ஆண்டு காலத் திட்டம் : தமிழ்நாட்டுக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு வெளியீடு.

* நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 தொடரை வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.

Today's Headlines

🌸Due to Corona Virus attack the e-visa is cancelled for those who coming from China to India.

🌸 As Pakistan is suffering from Locusts which destroyed the crops Pakistan declared emergency.

🌸 If you blow horn in the signal you will have to wait more - Mumbai Police.

🌸 A Project Outline was mapped out for the change in climate of Tamil Nadu - three lakhs crore and 10 years.

🌸 India made a historic victory against New Zealand and won match by 5-0 in the last T20 five sets match.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

அனைத்து தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் Youth & Eco Club ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து SPD ஆணை- Proceedings

Read More »

வீட்டு லோன் போட்டிருக்கீங்களா.?! புதிய வருமான வரி விதிப்பில், அதிரடி மாற்றங்கள்.!

வரி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டிருப்பதாலும், மத்திய அரசு தற்போது வழங்கப்பட்டு வரும் 100க்கும் மேலான வரி விலக்கு அம்சங்களைக் குறைக்க திட்டமிட்டு இருக்கின்றது. அதன்படி 70க்கும் மேலான அம்சங்கள் நீக்கப்படுகின்றது. புது வருமான வரி விதிப்பில் கீழ்கண்ட வரி விலக்கு அம்சங்கள் இருக்காது.

நான்காண்டுகளில் மட்டும் இருமுறை அனுமதிக்கப்படுகின்ற விடுமுறைக்கான பயண படிக்கான வரி விலக்கு நீக்கப்பட இருக்கின்றது.

வாடகைக்கு இருக்கின்ற சம்பளதாரர்கள் யாவரும் மாதாந்திர வாடகைக்கு வரி விலக்கு கோரலாம் என்கின்ற தற்போதைய நடைமுறை நீக்கப்படுகின்றது.

வீட்டுலோனில் வாங்கிய வீட்டில் குடியிருபிப்ரோருக்கு கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு கோரப்பட்டு வந்தது இனி நீக்கப்படுகின்றது.
நிரந்தர கழிவாக இருக்கின்ற ரூ.50 ஆயிரம் நீக்கப்படுகின்றது.

குடும்ப பென்ஷனுக்காக குறைக்கப்படுகின்ற ரூ.15 ஆயிரத்துக்கு இனி வரி விலக்கு கிடையாது.

குழந்தைகளின் கல்விக் கட்டணம், 80சியில் வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் பிரீமியம், மற்றும் முதலீடுகளான இஎல்எஸ்எஸ், பிபிஎஃப் என்பிஎஸ், போன்றவற்றுக்கான வரிவிலக்கும் இனி இருக்காது.

80டியில் வழங்கப்படுகின்ற மருத்துவ காப்பீடுக்கான விலக்கும் கிடையாது.

80டிடிபி, 80டிடி ஆகிய பிரிவுகளின் கீழ் பெறப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிவிலக்கும் ரத்து செய்யப்படுகின்றது.

கல்விக்கடன் வட்டிக்கான வரிவிலக்கும் நீக்கப்படுகின்றது.

80ஜி பிரிவில் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கான வரிவிலக்கும் நீக்கம் செய்யப்படுகிறது. புதிய வருமான வரி நடைமுறையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இந்த வரிவிலக்கு ஏதும் இருக்காது. இந்த வரி விலக்குகளை பெற விரும்புவோர் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி நடைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One