Search

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | நுட்பவியல் கலைச்சொற்கள்

Friday 9 November 2018

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS 
நுட்பவியல் கலைச் சொற்கள் :
1. WhatsApp      -       புலனம்
2. Youtube          -       வலையொளி
3. Instagram       -       படவரி
4. WeChat          -        அளாவி
5. Messenger     -        பற்றியம்
6. Twitter              -         கீச்சகம்
7. Telegram        -         தொலைவரி
8. Skype             -          காயலை
9. Bluetooth       -          ஊடலை
10. WiFi             -          அருகலை 
11. Hotspot        -          பகிரலை
12. Broadband  -         ஆலலை
13. Online           -         இயங்கலை
14. Offline            -        முடக்கலை
15. Thumbdrive   -        விரலி
16. Hard disk       -        வன்தட்டு
17. GPS                -        தடங்காட்டி
18. CCTV             -        மறைகாணி
19. OCR              -         எழுத்துணரி
20. LED              -         ஒளிர்விமுனை 
21. 3D                  -        முத்திரட்சி
22. 2D                 -         இருதிரட்சி
23. Projector       -        ஒளிவீச்சி
24. Printer          -        அச்சுப்பொறி
25. Scanner         -        வருடி
26. Smart phone  -       திறன்பேசி
27. Simcard          -       செறிவட்டை
28. Charger          -        மின்னூக்கி
29. Digital             -         எண்மின்
30. Cyber            -          மின்வெளி
31. Router           -         திசைவி
32. Selfie             -         தம் படம் - சுயஉரு
33. Thumbnail              சிறுபடம்
34. Meme           -         போன்மி
35. Print Screen -          திரைப் பிடிப்பு
36. Inkjet             -           மைவீச்சு
37. Laser            -          சீரொளி
Read More »

TNPSC | TRB | TET | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD | மனித உடல் பற்றிய சில தகவல்கள்

TNPSC | TRB | TET| SCIENCE STUDY MATERIALS | மனித உடல் பற்றிய முக்கிய தகவல்கள்

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,

ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள் 31 நிமிடங்கள்

மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்

தசைகள் 5 நாட்கள்

இதயம் சில நிமிடங்கள்.
Read More »

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்

பத்தாம் வகுப்பு தமிழ் 80 வினாக்கள்.
1. மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாடலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்
2. அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:- பொறாமை
3. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 658
4. இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார் பாரதிதாசன்

5. செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார் மணவை முஸ்தப்பா
6. என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார் கம்பர்
7. மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்
8. குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் பரிதிமாற்கலைஞர்,திராவிட சாஸ்திரி
9. ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார் டென்னிசன்
10. இலக்கண குறிப்பு தருக:- செய்கொல்லன்
11. மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்? 3
12. நின்பன் என்பது என்ன இலக்கணம்? 6-ம் வேற்றுமைத் தொகை
13. நயனம் என்பதன் பொருள் கூறுக கண்கள்
14. அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது? பாரத ரத்னா
15. சட்டம் என்பதன் பொருள் கூறுக:- செம்மை
16. Substantive laws என்பதன் தமிழ் ஆக்கம் தருக உரிமை சட்டங்கள்
17. ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது நன்னூல்
18. விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? நற்றினை
19. பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:- நிறைந்த நிறை+த்(ந்)+த்+அ
20. வாள் என்பதன் பொருள் தருக:- ஒளி
21. சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக M.G.R தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? 1963
22. வைதருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெறிநாலு
23. கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்று கூறும் நூல் எது? மணிவாசகம்
24. தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார் திருநாவுக்கரசர்
25. பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார் திருவள்ளுவர்
26. தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்? 5
27. முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தை
28. தொண்டக பறை எந்த நிலத்துக்கு உரியது? குறிஞ்சி
29. நெய்தலுக்கு உரிய மரம் எது? புன்னை,ஞாழல்
30. உரும் என்பதன் பொருள் யாது? இடி
31. பூதரம் என்பதன் பொருள் கூறுக மலை
32. முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது? 17-ம் நூற்றாண்டு
33. சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு 3
34. அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் என்று கூறியவர் யார் அரிச்சந்திரன்
35. தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணை
36. எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது? நற்றினை,புறநானூறு
37. வாழும்  குடி-இலக்கணகுறிப்பு தருக:- பெயர்ரெச்சம்
38. புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்வர் யார்?வள்ளலார்
39. சின்மய தீபிகை நூலை புதுபித்தவர் யார்?வள்ளலார்
40. ஒரு பைசாத் தமிழின் என்ற இதழ் எந்த நாள் முதல் வெளியிட்டது? 19-06-1907
41. நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு
42. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை? 4
43. ஒலி மரபு→பூனை சீறும்
44. சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? 1991
45. மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்
46.  Ind-வின் முதல் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
47. வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது? குறுந்தொகை
48. இந்திய நூலகத்தின் தந்தை யார்? அரங்கநாதர்
49. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3
50. வினா எத்தனை வகைப்படும்? 6
51. விடை எத்தனை வகைப்படும்? 8
52. தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார? முடியரசன்
53. விழுப்பம் என்பதன் பொருள் யாது? சிறப்பு
54. குறளை நிறப்புக:- பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-வேந்தர்க்கு வேண்டும் பொழுது
55. ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 1812
56. இறுவரை காணின் கிழக்காம் தலை
57.மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல் எது? உரவோர்
58. வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி
59. சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 1824,1890
60. நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12
61. நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்? சாலை இளந்திரையன்
62. ஒலி மரபு:- கோழி கொக்கரிக்கும்
63. வினை மரபு-சுவர் எழுப்பினான்
64. நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது? கூவிளம்
65. குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்? வள்ளலார்
66. உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்
67. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி
68. குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது? பெரிய திருமொழி
69. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105
70. கவிகை என்பதன் பொருள் யாது? குடை
71. நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது? 9-ம் நூற்றாண்டு
72. கலித்தொகையை தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
73. கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது? நெய்தல் கலி
74. கலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன? 150
75. ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்? வினாக்குறி(?)
76. ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்? முக்காற் புள்ளி(ஃ)
77. ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்
78. கான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி
79. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து
80. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது? மணிமேகலை
Read More »

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| அகநானூறு , புறநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்

#அகநானூறு_பற்றிய_முக்கிய_தகவல்கள்
* அகம்+நான்கு+நூறு = அகநானூறு
* அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது. * இதனை நெடுந்தொகை எனவும் கூறுவார்.
திணை = அகத்திணை
பாவகை = ஆசிரியப்பா
பாடல்கள் = 400
பாடியோர் = 145
அடி எல்லை = 13-31
1-கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)
2-மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)
3-நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)
* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது
* நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
* நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்

#புறநானூறு
* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
* புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
* புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
* இப்பாடல்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச், சிற்பம், கொடை, கல்வி முதலியவற்றை விளக்குகிறது.
* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
* புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் : ஔவையார்
* முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
* 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
* நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
* வேறுபெயர் : புறம்,புறப்பாட்டு,தமிழ்க்கரூவூலம்,தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.
Read More »

TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்

பன்னிரெண்டாம் வகுப்பு
=============================
அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்

=============================
1) நவீன அரசு என்பது – கிரேக்க நகர அரசு
=============================
2) மக்கள் நல அரசு குறித்த சிந்தனை _________ நாட்டில்  முதன்முதலில் வேரூன்றியது.
விடை = இங்கிலாந்து
=============================
3) ஸ்வீடன், டென்மார்க், நார்வே _________ நாடுகளாகும்
விடை = பொது நல அரசு அல்லது மக்கள் நல அரசு
=============================
4) இங்கிலாந்தில் தேசிய சுகாதாரப் பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர் – பிரதமர் ஆட்லி
=============================
5) மிகப்பெரிய அளவிலான சமூக காப்பீட்டு திட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடு – இங்கிலாந்து
=============================
6) நவீன நாடுகளில் முதன் முதலில், திட்டமிட்ட பொருளாதாரத்தை கொண்டிருந்த நாடு – ரஷ்யா
=============================
7) இரண்டாம் உலகப்போரின் போது நல்ல வருவாய் ஈட்டிய நாடு – ரஷ்யா
=============================
8) “குடிமக்களுக்கு பலதரப்பட்ட சமூக சேவை செய்கிற அரசு” – மக்கள் நல அரசு என்று கூறியவர் – T.W.கென்ட்
=============================
9) அதிக அளவில் சமூக சேவைகளும் பாதுகாப்பையும் அளிப்பதே மக்கள் நல அரசாகும் என்றவர் - T.W.கென்ட்
=============================
10) “பற்றாக்குறை, பிணிகள், அறியாமை, ஒழுங்கின்மை, சோம்பல்” ஆகியவை மக்களின் ஐந்து எதிரிகளுடன் போரிட்டு, அழிப்பது மக்கள் நல அரசின் நோக்கம்”  என்று கூறியவர் – பண்டித நேரு
=============================
11) குறைந்தபட்ச வாழ்க்கைத்தரமும், வாய்ப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிப்பது மக்கள் நல அரசாகும் என்று கூறியவர் – ஜி.டி.எச்.கோல்
=============================
12) வேலைவாய்ப்பு, வருவாய், கல்வி, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் வசிக்க வீடு என்பதை வழங்கக்கூடிய அரசாங்கத்தை கொண்ட அமைப்பு மக்கள் நல அரசாகும்  என்று கூறியவர் – அமார்த்தியா குமார் சென்
=============================
13) மக்கள் நல அரசின் பல்வேறு செயல்பாடுகளின் மூன்று இனங்கள்?
1) ஒழுங்குமுறைபடுத்தும் பணிகள்
2) பாதுகாப்பு பணிகள்
3) நலப் பணிகள்
=============================
14) ஏழை நாடுகளுக்கு எட்டாக் கனியாக அமைந்துள்ள அரசமைப்பு – மக்கள் நல அரசு
=============================
Read More »

TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்

பன்னிரெண்டாம் வகுப்பு – அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்
======================================
1) மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
2) இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
3) பல்வேறு அரசியல் அறிஞர்கள் ஆமோதித்துள்ள கூற்று – அரசு ஒரு தேவையான துன்பம்
4) அரசு என்பது “சமூகம் என்ற தோரண வாயிலின் முக்கிய கல்” – என்று கூறியவர் – வாஸ்கி
5) அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என கூறியவர் – பைனர்
6) அரசின் வகைகள் யாவை?
1) நகர அரசு,
2) நிலப்பிரபுத்துவ அரசு,
3) தேசிய அரசு
4) சம உடைமை அரசு
5) மக்கள் நல அரசு
7) நகர அரசு முதன்முதலில் தோன்றிய நாடு எது – கிரேக்கம் (கி.மு. 1000)
8) அரசியல் என்பதை வெறும் தர்க்க, தத்துவார்த்த நிலைகளிலேயே வைக்காமல், வாழ்க்கையோடு இணைத்து அதையே அரசாங்கமாகவும் ஏற்படுத்திய பெருமை பெற்றவர்கள் – கிரேக்கர்கள்
9) கிரேக்க நகர அரசின் அம்சங்கள் :-
1) ஒவ்வொரு நகர அரசும் சுதந்திர அமைப்பாக செயல்பட்டது
2) அளவில் சிறியதாகவும், மக்கள் தொகையில் குறைவான எண்ணிகையில் இருந்தன
10) நகர அரசில் மட்டுமே சமூக, பொருளாதார அறிவியல் சார்ந்த வாழ்க்கை அமைய முடியம் என்ற கருத்தை வலியிறித்தியவர் – அரிஸ்டாட்டில்
11) வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே குடிமகனின் கடமை என்பது வன்மையாக மறுக்கப்பட்ட அரசு – நகர அரசு
12) திருச்சபை, பள்ளி என்கிற அமைப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பாக இருந்த மனித வாழ்க்கையை முழுவதுமாக ஆக்கிரமித்த அரசு – கிரேக்க நகர அரசு
13) சமூகத்தினின்றும் அரசை பிரித்தறிய தவறியதால் அத்தீனிய சுதந்திரம் அடையாளம் காணமுடியாத உடைபட்ட சின்னமாகிவிட்டது என்று கூறிய அறிஞர் – மாக்ஐவர்
14) இந்தியாவில் நிலவிய நிலஉடைமை அமைப்பு – ஜமீந்தாரி முறை
15) நில வருவாய்க்கான வரி வசூலில் விளைச்சலில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டவர்கள் – ஜமீந்தார்கள்
16) வட இந்தியாவில் ஜமீந்தாரி முறையை மாற்றியமைக்கப்படு அறிமுகம் செய்யப்பட்ட வரி வசூல் முறை – மகல்வாரி முறை
17) பன்னாட்டு சட்டம் தோன்றுவதற்கு துணை நின்ற அரசு – இன அரசு
18) குடியாட்சி முறை வற்புறுத்தும் மூன்று முக்கிய கோட்பாடுகள் – சமத்துவம், மக்கள் இறைமை, தேசியம்
19) கி.பி. 1789 – ஆம் ஆண்டு வெளிவந்த “மனித உரிமைகள் பிரகடனத்தில் வற்புறுத்தப்பட்ட கோட்பாடு – சமத்துவம்
20) சமுதாயததில் உள்ள குறைகள் மற்றும் கெடுதல்கள் குறைத்து தீவிர மாற்றங்களை சமதர்ம அரசு ஏற்படுத்தும் என்று கூறியவர் – J.W.கார்னர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One