Search

10-வது தேர்ச்சியா? இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை!

Saturday 16 November 2019

இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சிபெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய கடற்படை (Indian Navy)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மாலுமி

மொத்த காலிப் பணியிடம் : 400

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு : 01.10.2000 முதல் 30.09.2003 வரை பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்குத் தகுதியுடையவர்கள்.

ஊதியம் : ரூ.14,600 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiannavy.gov என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.215
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் (எஸ்சி, எஸ்.டி) விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiannavy.gov என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.

Read More »

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள மூத்த ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் - (TNSDMA)

மேலாண்மை : தமிழக அரசு

பணி :-

  • மூத்த ஆலோசகர்
  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
  • ஆலோசகர்

கல்வித் தகுதி :

மூத்த ஆலோசகர் : M.A Sociology,M.Sc Geography,M.A Social Work,M.Sc Agriculture,Ph.D.,M.Arch Engineering,M.A Disaster Management,M.E

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் :ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஆலோசகர் : M.A Sociology,M.A Social Work,M.Sc Agriculture,Ph.D.,M.Arch Engineering,M.A Disaster Management,M.A Geography,M.E

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnsdma.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் பவடிததினைப் பெறவும் www.tnsdma.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.

Read More »

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை நிர்வாகி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - கிருஷ்ணகிரி

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை நிர்வாகி

மொத்த காலிப் பணியிடம் : 01

ஊதியம் : ரூ. 19,500 முதல் ரூ62,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : வயது வரம்பு குறித்த விபரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி :

General Manager, Krishnagiri District Co-operative Milk Producers' Union Ltd, Kanagamuttlu (Post) Salem Main Road , Krishnagiri.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : வாய்மொழி தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

Read More »

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில், ட்ரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.



பயிற்சி பணிகள்:

1. ட்ரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர் (Fitter)
2. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரீசியன் (Electrician)
3. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் (Electronics Mechanic)
4. ட்ரேடு அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் (Instrument Mechanic)
5. ட்ரேடு அப்ரண்டிஸ் - மெஷினிஸ்ட் (Machinist)
6. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - மெக்கானிக்கல் (Mechanical)
7. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்டேசன் (Instrumentation)
8. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - சிவில் (Civil)
9. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் (Electrical & Electronics )
10. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் (Electrical)
11. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ் (Electronics)
12. ட்ரேடு அப்ரண்டிஸ் - அக்கவுண்டண்ட் (Accountant)



பயிற்சிப் பணியிடங்கள்:

மொத்தம் = 2,085 காலியிடங்கள்

பயிற்சிக் காலம்:

ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி, 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை.

குறிப்பு:

பணியை பொருத்து பயிற்சி காலம் மாறுபடும்.

முக்கிய தேதிகள்:

1. 1,574 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2019
எழுத்து தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 24.11.2019



2. 380 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.11.2019, மாலை 06.00 மணி வரை
எழுத்து தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 08.12.2019

3. 131 காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.11.2019
எழுத்து தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 15.12.2019

வயது வரம்பு:

பொதுப் பிரிவினர்: 18 முதல் 24 வயது வரை
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்: 18 முதல் 29 வயது வரை
ஓபிசி பிரிவினர்: 18 முதல் 27 வயது வரை

கல்வித்தகுதி:

1. ட்ரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (ஃபிட்டர்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரீசியன் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2-வருட ஐடிஐ (எலக்ட்ரீசியன்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.



3. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ்மெக்கானிக் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்கூடிய 2- வருட ஐடிஐ (எலக்ட்ரானிக் மெக்கானிக்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

4. ட்ரேடு அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்புதேர்ச்சியுடன் கூடிய 2- வருட ஐடிஐ (இண்ட்ரூமெண்ட் மெக்கானிக்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

5. ட்ரேடு அப்ரண்டிஸ் - மெஷினிஸ்ட் என்ற பயிற்சிப் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 2-வருட ஐடிஐ (மெஷினிஸ்ட்) என்ற தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

6. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - மெக்கானிக்கல் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

7. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - இண்ஸ்ட்ரூமெண்டேசன் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் இண்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

8. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - சிவில் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் இண்ஸ்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.



9. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

10. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரிக்கல் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

11. டெக்னீசியன் அப்ரண்டிஸ் - எலக்ட்ரானிக்ஸ் என்ற பயிற்சிப் பணிக்கு, 3 வருட டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

12. ட்ரேடு அப்ரண்டிஸ் - அக்கவுண்டண்ட் என்ற பயிற்சிப் பணிக்கு, ஏதாவது ஒரு டிகிரி பட்டப்படிப்பில்பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இந்தப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின், https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_apprsep19.aspx - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற
1. https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/Consolidated_6979.pdf



2. https://www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf

3. https://www.iocl.com/download/Detailed-Advertisement%20-for-Apprentice-Engagement%20-Western-Region_2019-'20-1st-cycle.pdf- போன்ற இணைய முகவரியில் சென்று
தெரிந்து கொள்ளலாம்
Read More »

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.



அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஜான் லூயிஸ்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவன் அருள்
கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா
தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More »

வனக்காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை : வனக்காவலர் பணிக்காக, அக்டோபர், 4ல் நடந்த, ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான, ஆன்லைன் தேர்வுகள், அக்., 4ல் துவங்கி, 6ல் முடிந்தன. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளுடன், 1:3 என்ற அடிப்படையில், அடுத்த நடைமுறைக்கு தகுதியானவர்கள் பட்டியலை, வனத்துறை வெளியிட்டுள்ளது.



இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி சரி பார்த்தல் போன்றவை, கிண்டி தேசிய பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவில் வரும், 24, 25ம் தேதிகளில் நடத்தப்படும். இறுதியாக, 26ல் உடல் திறன் தேர்வு, வண்டலுார் உயிரியல் பூங்கா வளாகத்தில் நடத்தப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது
Read More »
 

Most Reading

Tags

Sidebar One