Search

பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு..

Sunday 22 March 2020




மார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் , தேர்வர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

1 . பார்வையில் காணும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகளில் அறிவுறுத்தியவாறு தேர்வர்களின் பாதுகாப்பு நலன் கருதி , ஒவ்வொரு நாளும் தேர்வு துவங்குவதற்கு முன்பு , தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள் மற்றும் தேர்வுப் பணி நடைபெறும் அறைகள் ஆகியவற்றில் உள்ள மேசை , நாற்காலி , இருக்கைகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் . அதன் பின் , இருக்கையில் எழுதப்பட்டிருக்கும் தேர்வெண்கள் ஏதேனும் அழிந்திருந்தால் தேர்வெண்களை மீண்டும் எழுதி தேர்வர்கள் சரியான இருக்கையில் அமர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

2 . தேர்வெழுதுவதற்கு முன்னதாக , தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள பள்ளிக்கல்விதுறை இயக்குநர் அறிவுறுத்தியவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

3 . தேர்வு முடிவுற்ற பின்பும் தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் .

4 . தேர்வர்கள் தங்களுடன் Hand Sanitizers எடுத்து வந்திருந்தால் , அதனை தேர்வறைக்குள் எடுத்துவர அனுமதிக்கலாம் .

5 . சளி , இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் எவரேனும் முகக்கவசம் அணிந்து வந்தால் , முகக்கவசத்துடன் தேர்வெழுத அனுமதிக்கலாம் . 6 . தேர்வறையில் தேர்வர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வைக்கவேண்டும்
Read More »

Breaking News: 31 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து!





கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 31 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Read More »

Flash News: ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று இரவோடு முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும் எனவும், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வேண்டுகோள்.
Read More »

கொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் அனைத்து வங்கிகளின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கே செல்லாதவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் வங்கி, அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை முதல் குறிப்பிட்ட சில பணிகள் மட்டுமே அனைத்து வங்கிக் கிளைகளிலும் நடக்கும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, காசோலைகள் பறிமாற்றம், கணக்கில் அல்லாது வேறு வகையான பணம் செலுத்துதல் மற்றும் அரசு சார்ந்த பரிவர்த்தனை பணிகள் மட்டுமே நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில், வங்கிகளுடன் வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One