Search

நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி வேலைநாளாக செயல்படும்

Thursday 13 February 2020

நாளை சனிக்கிழமை (15/02/2020)
பள்ளி வேலை நாளாக செயல்படும் என
கீழ்க்கண்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

1.கன்னியாகுமரி.
2.புதுக்கோட்டை.
3.இராமநாதபுரம்.
4.நாகப்பட்டினம்.
5.வேலூர்.
6.திருப்பூர்




Read More »

Tamil Nadu Elementary, Higher Secondary, School Education Subordinate Service - Amendment to the Special Rules Published

Amendments to the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service .

[ G . O . Ms . No . 204 , School Education ( EE1 ( 1 ) ) , 15th November 2019 , Aippasi 29 , Vikari , Thiruvalluvar Aandu - 2050 . ] No . SRO B - 5 / 2020 . - In exercise of the powers conferred by the proviso to Article 309 of the Constitution of India , the Governor of Tamil Nadu hereby makes the following amendments to the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service ( Section 48A in volume - lll of the Tamil Nadu Services Manual , 2016 ) :

The amendments hereby made shall be deemed to have come into force on the following dates :

   1 . Amendment 1 shall be deemed to have came into force on the 19th June 1989 .

   2 . Amendments 3 ( ii ) and 6 ( ii ) shall be deemed to have come into force on the 27th June 1989 .

   3 . Amendments 3 ( i ) ( b ) and 6 ( i ) ( b ) shall be deemed to have come into force on the 7th June 1999 .

  4. Amendments 2 ( i ) ( a ) , ( b ) , 3 ( ii ) ( a ) , ( b ) and 6 ( ii ) ( a ) and ( b ) shall be deemed to have come into force on the 27th June 2003 .

   5 .Amendments 3 ( i ) ( c ) and ( ii ) ( c ) shall be deemed to have come into force on the 22nd September , 2007 .

   6 . Amendment 6 ( i ) ( a ) shall be deemed to have come into force on the 25th July 2007 .

   7 . Amendments 2 ( i ) , ( ii ) ( c ) , 3 ( i ) ( d ) , ( ii ) ( d ) , 4 ( i ) , 6 ( i ) ( c ) and 6 ( ii ) ( c ) shall be deemed to have come into force on the 25th July 2008 .

   8 . Amendment 6 ( ii ) ( d ) shall be deemed to have come into force on the 15th November , 2011 .

   9 . Amendment 4 ( ii ) shall be deemed to have come into force on the 2nd March , 2017 .

   10 . Amendment 5 shall be deemed to have come into force on the 18th May 2018 .

   11 . Amendment 3 ( i ) ( a ) shall be deemed to have come into force on the 20th May 2019 .

2% PG  ,BT ,20% Art master rule amendment - Download here ( Pdf Full Details ) 
Read More »

School Morning Prayer Activities - 14.02.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.02.20

திருக்குறள்

அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

விளக்கம்:

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

பழமொழி

Trust not to a broken staff .

 மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.

2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

உயர்வான எண்ணங்களும்
விரிவான சிந்தனையும் நேர்மையான செயல்பாடு இருந்தால்  உங்களை யாரும் வீழ்த்த முடியாது.

பொது அறிவு

1.மின் அடுப்பிலுள்ள சூடேற்றும் பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது?

நிக்ரோம்.

2.கத்தரிக்காய் ஊதா நிறத்தில் இருக்கக் காரணமான நிறமி எது?

 ஆன்தோசயனின்.

English words & meanings

 Palynology – study of pollen. மகரந்ததூளியல்.

Pacific - peaceful in character. அமைதி வாய்ந்த பண்புள்ள

ஆரோக்ய வாழ்வு

இளநீர் முகப்பருக்கள் வருவதைத் தடுக்கும் சரும பாதிப்புகளை தடுக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

Some important  abbreviations for students

Rp - Repurposed sensor.

 S - Static

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

நரியை மிஞ்சிய அணில்

குறள் :
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

விளக்கம் :
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

கதை :
ஒரு காட்டில் ஒரு சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது. அதில் ஒரு நரி மிகவும் திறமை வாய்ந்தவன் என்று பட்டம் பெற்றது.

நரிக்கு பெருமையும், கர்வமும் தாங்க முடியாமல் போனது. என்னோடு சண்டை போட்டு ஜெயிப்பவர்கள் யார் என்று எல்லா மிருகங்களையும் வம்புக்கு இழுத்தது. நரியைக் கண்டாலே வெறுப்பாகும் அளவுக்கு எல்லா மிருகங்களும் ஒதுங்க ஆரம்பித்தன.

இந்த நரியின் கொட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிறு அணில் ஆசைப்பட்டது. அது நரியுடன் சண்டையிடுவதற்கு தயார் என்று அறிவித்தது.

ஒரு சின்ன அணில் தன்னை வென்று விட முடியுமா என்று நினைத்த நரி பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டது. கண நேரத்தில் அந்த அணில் நரியின் மீது பாய்ந்து எத்தனை இடங்களில் கடிக்க முடியுமோ கடித்து விட்டு ஓடியது.

என்ன ஏது என்று புரிவதற்கு முன்பே நரியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது.

நீதி :
மற்றவர்களை இழிவாக நினைத்தால் துன்பம் நம்மையே வந்தடையும்.

இன்றைய செய்திகள்

14.02.20

★கொடைக்கானலில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையாகும் பிளாஸ்டிக் கேன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

★அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் 6 நீரேற்று நிலையங்களுக்கான 48 பம்புகள் புனேயில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

★மகாராஷ்டிர அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ளது.

★பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து வருகிறார், இதில் நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி ரிஷி சுனக்கை அவர் புதிய நிதியமைச்சராக நியமித்துள்ளார்.

★அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 5-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றாா்.

★நெதா்லாந்தில் நடைபெற்றுவரும் ரோட்டா்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா இணை முன்னேறியது.

Today's Headlines

🌸 The plastic cans which is used to sell drinking water and soft drinks are banned in Kodaikanal from April 1st.

🌸 or 6 Hydro Pumping Stations in Athikadavu - Avinasi 48 pumps are being made in Pune.

🌸 In Maharashtra the Uththav Thackeray government is going to fulfil the long standing wish of "only five working days per week".

🌸 Britain Prime Minister Boris Johnson is making changes in his cabinet. It includes the appointment of the Indian- origin politician Rishi Sunak as the new finance minister.

🌸 Koneru Thambi won the 5th round of the Cannes Cup Chess Tournament  in the United States.

🌸 India's Rogan Bopanna advanced to the quarterfinals of the Rotateam Open Tennis Championship in the Netherlands.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

CPS - நாளைய பட்ஜெட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சில சிறப்பு அறிவிப்புகள் வர வாய்ப்பு

CPS news :
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு  பணிக்கொடை வழங்கவும், அரசின் பங்களிப்பு த்தொகை  உயர்த்தி வழங்க அரசு ஆலோசனை. நாளை(14.02.2020) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. 



Read More »

Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்தல்

Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்தல்


Read More »

5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்.

5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள். இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும். இதன்பிறகு தயாரிக்கும் அனைத்து கற்றல் துணைக்கருவிகளும் இதில் தானாக வந்துவிடும். இதற்கு முன் தயாரித்த அனைத்தும் இதில் இருக்கும். எந்த துணைக்கருவி வேண்டுமோ அதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை ஓபன் செய்ய Play store ல் google document or wps office applicationஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விரைவில் பிறவகுப்பு கற்பித்தல் கருவிகளின் தொகுப்பு பதிவிடப்படும். தேடும் நேரம் குறையும். தேவைப்படும் நேரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
குறிப்பு.
அடுத்து தயாரித்து பதிவிடும் கற்றல் கருவிகள் தானாக இதில் வந்துவிடும்.

Click here to download

ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி.
Read More »

ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் - மத்திய அரசு

நாடு முழுவதும் மாணவர்களின் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் உடல் தகுதி தூதர்கள் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் மற்றும் அஸ்வினி குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் இந்த திட்டம் முதன்முதலில் தொடங்கப்படுகிறது.

இதன் நிகழ்ச்சியில் பேசிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், கல்வியின் நோக்கம் மாணவர்களின் அறிவை வளர்ப்பதோடு, அவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவத்துவதாவும் இருக்க வேண்டும் என்றார். பள்ளிக் குழந்தைகளின் வழிக்காட்டிகளாக ஆசிரியர்கள் திகழ்வதாகவும் தற்போது மாணவர்களின் உடல்தகுதி திறன்களை மேம்படுத்தும் தூதர்களாக ஆசிரியர்கள் செயல்படுவார்கள் என்று அவர் கூறினார். முதற்கட்டமாக நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் முன்னோடித் திட்டமாக ஆசிரியர்கள், தூதர்களாக செயல்படும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ள சுகாதாரம் மற்றும் உடல் தகுதி மையங்கள் மூலம் கல்வியோடு சேர்த்து மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் உறுதி செய்யப்படும் என்றார். உடல் திறன் இந்தியா என்ற இயக்கத்தின் மூலம் மத்திய அரசு இந்த திட்டத்தை இணைத்து மேற்கொள்ள  நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அனைவருக்கும் சுகாதார சேவை என்ற அரசின் நோக்கம் இதன் மூலம் முழுமையான அளவில் நிறைவேற்றப்படும் என்றும் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
Read More »

பள்ளிக் கல்வி செயலர் தீரஜ்குமார் தலைமையில் தற்போதுள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

அடுத்த மாதம் துவங்கும், பள்ளி பொதுத் தேர்வுகள், எந்த குளறுபடிகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மார்ச், 2ல், பிளஸ் 2 பொது தேர்வு துவங்க உள்ளது. மார்ச், 4ல், பிளஸ் 1க்கும்; மார்ச், 17ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. பொது தேர்வை நடத்தும் வழிமுறைகள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.



பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி, இயக்குனர்கள் கருப்பசாமி, உஷாராணி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். பள்ளிக் கல்வி துறையில் தற்போதுள்ள பிரச்னைகள், பணி நியமன விவகாரம், வழக்குகளின் நிலை, மத்திய - மாநில அரசு நலத் திட்டங்கள், பொது தேர்வு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து, இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.



இதையடுத்து, முதன்மை செயலர் தீரஜ்குமார், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிர்வாக நடைமுறைகளில், இதுவரை ஏதாவது குளறுபடிகள் இருந்தால், அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், கருத்துருக்கள் தயாரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவது, பாடப் புத்தகங்களை விரைந்து வழங்குவது, பொது தேர்வை பிரச்னையின்றி நடத்துவது குறித்தும், ஆலோசனை வழங்கினார்.



அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில், முறைகேடுகள் நடந்து, அரசு ஊழியர்களும், தேர்வர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், பள்ளிப் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளதால், 'அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்' என, அறிவுறுத்தினார். மேலும், 'எந்தவித முறைகேடுகள் மற்றும் விதிமீறல் புகார்கள் எழுந்து விடாமல், கவனமாக செயல்பட வேண்டும்' எனவும், தீரஜ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
Read More »

பள்ளி பொதுத்தேர்வுக்கு கட்டுப்பாடுகள்!!


பள்ளி பொது தேர்வுகளில் பங்கேற்கும் மாணவியரை , ஆண் ஆசிரியர்கள் சோதிக்க கூடாது . ஆள்மாறாட்டம் செய்பவர்கள் மீது , போலீசில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ' என , கடும் கட்டுப்பாடுகள் அறிவிக் கப்பட்டு உள்ளன . பிளஸ் 2 பொது தேர்வு , மார்ச் , 2ல் துவங்குகிறது . இதையடுத்து , பிளஸ் 1 மற்றும் , 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்க உள்ளன . தேர்வுக் கான விதிமுறைகள் அடங் கிய கையேடு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Read More »

TRB - 24 கடுமையான விதிமுறைகளை தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வகுத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் பணியாளர் தேர்வுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. நாளை முதல் 16ம் தேதி வரை வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்காக 24 கடுமையான விதிமுறைகள் டி.ஆர்.பி. வகுத்துள்ளது. நாளை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் காலியாக இருக்கக்கூடிய வட்டார கல்வி அலுவலர்களுக்கான கணினிவழி தேர்வு நடைபெறவிருக்கிறது. இதற்காக 57 தேர்வு மையங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற கூடிய இந்த தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்திருக்கக்கூடிய டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளையொட்டி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 24 கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

*ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய கடவு சீட்டை வைத்துக்கொண்டு தேர்வறைக்கு வரவேண்டும்.

* வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்ட் ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

* ஹால் டிக்கெட்டில் உள்ள படத்துடன் தேர்வர் முகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

* சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதில் வைத்திருக்க வேண்டும்.

* தேர்வு மையத்திற்குள் நகை அணிந்து செல்ல தடை.

* தேர்வர்கள் வெளியிலிருந்து பேனா, பேப்பர் எடுத்து செல்ல தடை.

* மேஜிக் பேனா மோசடியை தடுக்க தேர்வறையிலேயே பேனா வழங்குகிறது டி.ஆர்.பி.

* வாட்ச், பெல்ட், ஷு, ஹீல்ஸ் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேர்வர்களுக்கு இந்த முறை தேர்வு நடைபெறும் பகுதியானது புதிதாக ஒதுக்கப்படவிருக்கின்றது. தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் எந்த பகுதியில் தேர்வு எழுத போகின்றனர் என்ற தகவல் அவர்களுக்கே கிடைக்கப்பெறும்.

குறிப்பாக இந்த முறை அவர்கள் தேர்வு செய்திருக்கக்கூடிய நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. தூத்துகுடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களளை தேர்வு செய்தவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம்  போன்ற பகுதிகளும், அதேபோல கோயம்புத்தூரை சேர்ந்தவர்களுக்கு கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்திருக்கக்கூடிய இந்த டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் முன்கூட்டியே திட்டமிட்ட அந்த தேர்வு அறை மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. எனவே இந்த முறை டி.ஆர்.பி. நடத்தக்கூடிய இந்த தேர்வில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

நீட் தேர்வில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் நடைபெறவிருக்கும் இந்த தேர்விலும் எந்த முறைகேடும் நடைபெறகூடாது என்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து எந்த காரணத்திற்கொண்டும் தேர்வு மையங்கள் மாற்றப்படாது என்று டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

RTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை!

பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும்  பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை. பிடித்தம் செய்யப்பட்டது என்ற சான்று வைத்தாலே போதும் என்பதற்குரிய ஆர்டிஐ தகவல்.

எம் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும் .

* வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள் , Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை . அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது . தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86 ( a ) - ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர் .

* வருமான வரியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 80CCD ( IB ) ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS , அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது.

என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன்
Mr . உதுமான்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருச்சி மாவட்டம்
9790328342

income tax form-no-need to submit treasury regards rti letter ( pdf )  - Download here...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One