Search

10,402 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி

Monday 16 May 2022


பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, 10 ஆயிரத்து 402 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசு துறைகளில் காணப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, பின்னடைவுப் பணியிடங்கள், சிறப்பு ஆட் சேர்ப்பு முகாம் வழியே நிரப்பப்படும் என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.அதை செயல்படுத்த, தலைமைச் செயலகத் துறைகளிடம் இருந்து, தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்கள், பழங்குடியினருக்கு 2,229 இடங்கள் என, மொத்தம் 10 ஆயிரத்து 402 இடங்கள் கண்டறியப்பட்டன.


இவற்றை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, இந்த இடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகளை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.


 


Read More »

ஆசிரியர் பணி: ஜூலையில் ரிசல்ட்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஜூலையில் முடிவு வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -- 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை- - 1 பதவிகளுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரியில் கணினி வழி தேர்வு நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடப்பதால், விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் முடிய, ஒரு மாதம் தேவை. அதன்பின், இறுதி விடைக்குறிப்பு வெளியாகும். பின், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் ஜூலை இறுதியில் முடிவு வெளியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read More »

PGTRB - தெரிவுப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை 2022 இறுதியில் வெளியிட முடிவு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு!

2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 கணினி பயிற்றுதர் நிலை | நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notificatien ) No. 01 / 2021 , நாள் 09.09.2421 ன்படி 12. 02 , 2022 முதல் 20. 02. 2022 வரை நடைபெற்ற கணினி வழித் தேர்வுகளுக்கு 09.04.2022 அன்று உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்களின் ஆட்சேபனைகள் 09.04.2022 மாலை 06.00 மணி முதல் 13.04.2022 மாலை 05.30 மணி வரை 29148 ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்முறைத் தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பகுதியாக ( Phared & amer ) பாடவாரியாக மட்டுமே பாடவல்லுநர்கள் அழைக்கப்பட்டு , விடைக்குறிப்பினை மறுஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைய குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும் இப்பணி முடிவுற்றதும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.

அதன் பின் விடைத்தாட்கள் கணினிவழி திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்தபட்சம் 45 நாட்கள் தேவைப்படும் அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசம் தேவை. தெரிவுப்பட்டியல் ஜீலை 2022 இறுதியில் வெளியிட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Screenshot_2022-05-16-17-37-56-09_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f


Read More »
 

Most Reading

Tags

Sidebar One