Search

பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு..

Sunday 22 March 2020




மார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் , தேர்வர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

1 . பார்வையில் காணும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகளில் அறிவுறுத்தியவாறு தேர்வர்களின் பாதுகாப்பு நலன் கருதி , ஒவ்வொரு நாளும் தேர்வு துவங்குவதற்கு முன்பு , தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள் மற்றும் தேர்வுப் பணி நடைபெறும் அறைகள் ஆகியவற்றில் உள்ள மேசை , நாற்காலி , இருக்கைகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் . அதன் பின் , இருக்கையில் எழுதப்பட்டிருக்கும் தேர்வெண்கள் ஏதேனும் அழிந்திருந்தால் தேர்வெண்களை மீண்டும் எழுதி தேர்வர்கள் சரியான இருக்கையில் அமர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

2 . தேர்வெழுதுவதற்கு முன்னதாக , தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள பள்ளிக்கல்விதுறை இயக்குநர் அறிவுறுத்தியவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

3 . தேர்வு முடிவுற்ற பின்பும் தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் .

4 . தேர்வர்கள் தங்களுடன் Hand Sanitizers எடுத்து வந்திருந்தால் , அதனை தேர்வறைக்குள் எடுத்துவர அனுமதிக்கலாம் .

5 . சளி , இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் எவரேனும் முகக்கவசம் அணிந்து வந்தால் , முகக்கவசத்துடன் தேர்வெழுத அனுமதிக்கலாம் . 6 . தேர்வறையில் தேர்வர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வைக்கவேண்டும்
Read More »

Breaking News: 31 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து!





கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 31 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Read More »

Flash News: ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று இரவோடு முடிவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும் எனவும், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வேண்டுகோள்.
Read More »

கொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் அனைத்து வங்கிகளின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கே செல்லாதவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் வங்கி, அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை முதல் குறிப்பிட்ட சில பணிகள் மட்டுமே அனைத்து வங்கிக் கிளைகளிலும் நடக்கும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, காசோலைகள் பறிமாற்றம், கணக்கில் அல்லாது வேறு வகையான பணம் செலுத்துதல் மற்றும் அரசு சார்ந்த பரிவர்த்தனை பணிகள் மட்டுமே நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில், வங்கிகளுடன் வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »

கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமல்!

Monday 16 March 2020



கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு இக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க நடவடிக்கை

*வங்கிகளில் அதிகரித்து வரும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாகவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளிலும் நடைபெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்த சில கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. முன்பு கார்டுகளைக் கொண்டு எந்தவிதமான பணப் பரிவர்த்தனைகளையும் எளிதாக மேற்கொள்ளும் வசதி இருந்த நிலையில், இனி அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே

*அதாவது இனி புதிதாக வழங்கப்படும் கிரெடிட், டெபிட் கார்டுகளைக் கொண்டு உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். அதுவும் ஏடிஎம், ஸ்வைப்பிங் மெஷின்களில் மட்டுமே இந்தப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

*சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கும், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும், கார்டுகள் இல்லாத இதர பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்கள் தனியாக அதற்கான வசதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*மொபைல் செயலி மூலமாகவோ, இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ, ஏடிஎம்களிலோ அல்லது வாய்ஸ் ரெஸ்பான்ஸ் வசதியின் மூலமாகவோ இந்தச் சேவைகளை வாடிக்கையாளர்கள் சேர்த்துக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் கார்டுகளை என்ன செய்வது?

*ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஏடிஎம் கார்களுகளுக்கு வாடிக்கையாளர்கள் மேற்கூறிய சேவைகளில் ஏதேனும் ஒன்றை முடக்கலாமா என்பதை தீர்மானிக்க முடியும்.

*மொபைல் வங்கியியல், நிகர வங்கி விருப்பத்தை வரம்பை இயக்குவதற்கும், சேவையை 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படுத்தவும் முடக்கவும் ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.

*கார்டுகளின் நிலையில் வாடிக்கையாளர் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், வங்கி வாடிக்கையாளரை SMS / மின்னஞ்சல் மூலம் எச்சரித்து வங்கிகள் தகவல்களை அனுப்பும்.

*எந்தவொரு பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படாத கார்டுகளில், சர்வதேசப் பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், கார்டுகள் இல்லாத பரிவர்த்தனைகள் தானாகவே ரத்து செய்யப்பட்டுவிடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

*இதன் மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More »

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
Read More »

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்:

கொரேனோ தொற்றுநோய்க்கான  விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை

16.3.2020 முதல் 31.3.2020 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்

*நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மற்ற வகுப்புகளை கவனிக்கலாம்

*தேர்வு பணிக்கு தயார் செய்யலாம் வினாத்தாள் தயாரிக்கலாம்

*விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் வகுப்பை கவனிக்கலாம்

*31.3 2020 க்குள் சென்சஸ் கணக்கெடுத்து கொடுக்கலாம்

*அடுத்த ஆண்டு பள்ளி வயது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் சந்திப்பு இயக்கம் மேற்கொள்ளலாம்

*நாளது தேதிவரை உள்ள CCE பதிவுகளை முடிக்கலாம்

*புதிய பாடப் பகுதிகளுக்கு TLM தயார் செய்யலாம்

*EMIS பதிவுகளை சரிபார்க்கலாம் Online TC சரிபார்த்தல் பணிகளை மேற்கொள்ளலாம்

*மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு சேவைப் பணிகளைச் செய்யலாம்

*திரள்பதிவேடு  பூர்த்தி  செய்யலாம்

*ஆசிரியர்கள் குழுவாக இணைந்து TNTP க்கு தேவையான பாடப் பதிவுகளை மேற்கொள்ளலாம்

*த. ஆ SSA கணக்கு வரவு செலவு பணிகளை முடிக்கலாம் SSA வரவு செலவு பயன்பாட்டு சான்றுகள் மற்றும் ஆடிட் பணிகளை முடிக்கலாம்
Read More »

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு எந்த தேர்வும் நடத்தக்கூடாது - கல்வி அதிகாரி அறிவிப்பு.

அனைத்து வகை பள்ளி களில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையில் , இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விடு முறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது . மேலும் , இந்த காலக்கட்டத்தில் , ஒ ருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக ளுக்கு எந்த தேர்வுக ளும் நடத்தக் கூடாது என்று முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இது , தமிழகத் திலும் பரவாமல் தடுக்கும் வகையில் , பல முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது . இதில் ஒன்றாக , தமி ழகத்தில் அனைத்து வகை பள்ளிகளில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரைக் கும் , இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விடு முறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . இதற்கிடையே , ஒருங் கிணைந்த வேலுார் மாவட் டத்தில் பல தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக்கான தேர்வு களை , வரும் 20ம் தேதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரையில் நடத்துவதற்கு திட்டமிட்டு , கால அட்ட வணையையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது .

இந்நிலையில் , தமிழக அரசின் உத்தரவின்படி விடுமுறை அறிவிப்பு குறித்த எந்த தகவலையும் , தனியார் பள்ளிகள் தரப் பில் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை . இதனால் , தனியார் பள் ளிகள் குறிப்பிட்ட தேதி களில் . தேர்வுகள் நடக்குமா , நடக்காதா என்று விவரம் தெரியாமல் பெற்றோர்கள் குழப்பத் தில் ஆழ்ந்துள்ளனர் .

இதுகுறித்து , முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : அரசு , அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் , நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி கள் , தனியார் மெட்ரிக் பள்ளிகள் , சிபிஎஸ்இ , ஐசிஎஸ்இ பள்ளிகள் என்று அனைத்து வகை பள்ளிகளிலும் எல்கேஜி ( ப்ரிகேஜி உட்பட ) முதல் 5ம் வகுப்பு வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 250 பள்ளிக ளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது .

தனியார் பள்ளிகள் தரப் பில் , 1 முதல் 5ம் வகுப் புக்கு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டிருந்தாலும் , தமிழக அரசின் அறிவிப்பின்படி விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தில் எந்த தேர்வினையும் நடத்தக் கூடாது . இதுகுறித்து , தனியார் பள் ளிகளுக்கு சுற்றறிக்கை - அனுப்பப்படும் . இவ்வாறு அவர் தெரிவித்தார் .
Read More »

Flash News : அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.


தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.

அனைத்து அரசு அலுவலங்களும் வழக்கம்போல் செயல்படும்.

_*⭕கொரோனா எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

_*⭕அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு

_*⭕10, +1 ,+2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

_*⭕மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்- முதல்வர் பழனிசாமி

_*⭕கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

_*⭕திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் அமல் - தமிழக அரசு

ALL SCHOOL LEAVE -CM - Corona - Date 16.03.2020 - Download here
Read More »

அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு

Sunday 15 March 2020

முக்கிய அறிவிப்பு.
    அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட Nursury Primary, Matric, CBSE ,ICSE பள்ளிகளில் நாளை 16-03-2020 திங்கள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை LKG ,UKG  முதல் V std வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தொகுத்து DPC MDO -விடம் வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
------------------ 
முதன்மைக் கல்வி அலுவலர் ,
திருச்சிராப்பள்ளி.
Read More »

கொரனோ விடுமுறை -பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் -Dated- 15.03.2020

Read More »

கொரனோ விடுமுறை -ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகைபுரிந்து கல்விப் பணிகள் மேற்கொள்ளுதல், கல்வி கட்டகங்கள் தயாரித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் -CEO செயல்முறைகள்

Read More »

கொரனோ விடுமுறை -ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகைத் தரவேண்டும்-தொடக்கக் கல்வி இயக்குநரகம்

Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.20

  • திருக்குறள்


அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:406

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

விளக்கம்:

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர். ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவர்.

பழமொழி

Youthful impression  last through life.

 இளமையில் கல்வி சிலையில் எழுத்து.

இரண்டொழுக்க பண்புகள்

1. மனிதர்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.  என் சக மனிதனை இகழ்ந்தால் கடவுளை இகழ்வதற்கு சமம்.

2. எனவே அனைவரையும் சரிசமமாக எண்ணி மதித்து நடப்பேன்.

பொன்மொழி

இடர்கள் வருமோ என ஒதுங்காமல் ,வந்தால் சமாளிக்கலாம் என்பதே வெற்றியின் முதல் படி.

______ சிவசங்கரி

பொது அறிவு

1.மிகவும் லேசான உலோகம் எது?

 லித்தியம்

2.நமது கையில் வைத்தாலே உருகும் உலோகம் எது?

 காலியம்

English words & meanings

Quarts - a measure of liquid. 1.14 litres. 1.14 லிட்டருக்கு சமமான திரவ அளவு

Quartz - a type of hard rock, used in making accurate clocks or watches. துல்லியமான கடிகாரங்கள் தயாரிக்க பயன்படும் பாறை.

ஆரோக்ய வாழ்வு

கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்ச்சத்து உள்ளது.

Some important  abbreviations for students

Ac- alternate current

Hwy- highway

நீதிக்கதை

பழமொழி கதைகள்

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

ராயன்பட்டு என்ற சிறிய கிராமத்தில் முரளி, ராமன், குமார், வைத்தி ஆகிய நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். இவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் நான்கு பேரும் சமூக சிந்தனை உடையவர்கள்.

அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவன் குதர்க்கவாதியாகவும், யார் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்து கொண்டு இருப்பான். ஒரு சமயம் அந்த ஊரில் இளம் பெண் ஒருத்தி மரணம் அடைந்து விட்டாள். அதனால் அந்த ஊர் மக்கள் மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்குள் சென்று விடுவார்கள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த நான்கு நண்பர்களும் பேயைப் பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏட்டிக்கு போட்டியாக பேசும் ரமேஷ் அங்கு வந்தான். அவன் பேய் என்பதெல்லாம் பொய், நான் இரவு நேரங்களில் எங்கு வேண்டுமென்றாலும் செல்வேன், என்றான். இதற்கு எவ்வளவு பந்தயம் என்றான். அதற்கு அந்த நால்வரும் பந்தயமெல்லாம் வேண்டாம்  என்றனர்.

இதை ஏற்காத ரமேஷ் உங்களுக்கு தைரியம் இல்லையென்று சொல்லுங்கள். அதனால்தான் பின் வாங்குகிறீர்கள் என்றான். அதற்கு அவர்கள் விபரீதமான பந்தயம் எதுக்குன்னுதான் என்றனர். இப்படிபட்ட விவாதம் பெரியவர்கள் முன்னிலையில் பந்தயமாக முடிந்தது. ஊரே ரெண்டு பட்டது. ஒரு தரப்பினர் பேய் இருக்கு என்றனர், இன்னொரு தரப்பினர் பேய் இல்லை என்றனர். மேலும் சிலர் இரு தரப்பையும் தூண்டிவிட்டு குளிர் காய்ந்தனர்.

ஒரு நாள் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ரமேஷிடம் அமாவாசை அன்று நள்ளிரவில் நீ மட்டும் தன்னந்தனியாக சுடுகாட்டிற்கு சென்று அந்த பெண்ணை புதைத்த இடத்தில் ஊர் மக்கள் கொடுக்கும் ஒரு குச்சியை அங்கு நாட்டி விட்டு வர வேண்டும் என்றனர். அப்படி நீ செய்துவிட்டால். நாங்கள் எல்லோரும் சேர்ந்து உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றனர். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.

அந்த நாளும் வந்தது நள்ளிரவில் ரமேஷ் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு ஊர் மக்கள் கொடுத்த குச்சியை கையில் வாங்கிக் கொண்டு தனியாக சென்றான். அவனும் தைரியமாகச் அங்கு சென்று, அவர்கள் சொன்ன இடத்தில் அந்த குச்சியை எடுத்து, அந்த பெண்ணை புதைத்த இடத்தில் வைத்து அடித்தான். அவன் மனம் திக் திக் என அடித்துக் கொண்டது ஏதோ இனம் புரியாத பயம் அவன் மனதில் எழுந்தது.

மனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் ஊர் செல்லத் திரும்பினான். யாரோ அவனை பிடித்திழுப்பது போல் உணர்ந்தான். பயத்தில் ஐயோ என சப்தமிட்டு விழுந்தான். சென்றவனை காணவில்லையே என்று அஞ்சிய மக்கள் தீப்பந்தத்துடன் புறப்பட்டனர். ஆனால் அங்கே சென்று பார்த்தால் ரமேஷ் மயங்கி கிடந்தான். அவன் அடித்திருந்த குச்சியில் போர்வையும் சேர்ந்திருந்ததை அவன் கவனிக்க வில்லை.

மயங்கி விழுந்ததிருந்த ரமேஷை பார்த்த ஊர் மக்கள் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பினர். அந்த சம்பவத்திற்கு பிறகு ரமேஷ் ஏட்டிக்கு போட்டியாக யாரிடமும் பேசுவதும் இல்லை சொல்வதும் இல்லை. அதன் பிறகு அவனும் நல்லவனாகவும் மாறிவிட்டான்.

திங்கள்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்

வருஷம்-ஆண்டு   வாகனம்-ஊர்தி       வாலிபர்-இளைஞர்  விவாகம்-திருமணம்    வீரம்-மறம்

இன்றைய செய்திகள்

16.03.20

◆கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

◆தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் பஞ்சாயத்து உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

◆நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

◆தொடர முடியாத மற்றும் காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

◆லண்டனில் அம்பேத்கர் வசித்த வீடு நினைவகமானது.

◆ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி-யை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

◆சென்னை இருங்காட்டுக்கோட்டையில் எஃப்ஐஏ ஆசிய பசிபிக் பந்தய தொடக்கச் சுற்று மற்றும் தேசிய காா்பந்த சாம்பியன் போட்டிகள் 20 முதல் 22-ஆம் தேதி வரை திட்டமிட்டப்படி நடைபெறும் என மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் தெரிவித்துள்ளது.

Today's Headlines

🌸 To prevent the spread of   coronavirus , Tamil Nadu government has ordered  to close schools, theaters and shopping malls .

 🌸Older people's burial jar was  found out in the Kaliyavur panchayat at Vallanadu near Thoothukudi.  The people of that area have urged archaeologists to search the area for more items.

 🌸The Nagai district has begun the survey of wildlife in the Kodiyakarai Wildlife Sanctuary adjacent to the Vedaranyam.

 🌸Opportunities to renew postal life insurance policies that are expired and outdated are provided.

 🌸Ambedkar's residence in London became a  memorial.

🌸 In the final match of the ISL Football Series, Atletico de Kolkata won the championship for the 3rd time, beating Chennai FC by 3-1.

 🌸The Madras Motot Sports Club said the FIA ​​Asian Pacific Racing Championship first round and the National Football Championships will be held from as per schedule from 20th to 22nd at the Arankadakotte, Chennai.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

Flash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு.

கொரோனா அச்சத்தால் புதுச்சேரியிலும் எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு.
Read More »

ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 15 . 03 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு திரு . க . மீனாட்சி சுந்தரம் , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர் . இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .

1 ) கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற காலவரையற்றப் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது 5068 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின்மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட 17 ( பி ) குற்றக் குறிப்பாணைகள் , 1500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்னும் நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வும் , பணி ஓய்வும் , பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் . இந்த 17பி குற்றக் குறிப்பாணைகளை இரத்து செய்வது மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் மாண்புமிகு முதல்வர் , மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் 16 . 03 . 2020 அன்று மனு அளித்தல்

2 ) 24 . 03 . 2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் , மாண்புமிகு அமைச்சர்கள் ( பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலம் , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ) ஆகியோரைச் சந்தித்தல்

3 ) ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் திரு . இரா . தாஸ் , திரு . மு . அன்பரசு , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது .

4 ) மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 11 . 04 . 2020 அன்று சென்னையில் நடைபெறும் .
Read More »

Flash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published!

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை.

முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.

CM Press Release -Corona  Virus - Date 15.03.2020 - Download here

நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை உண்டு.

ஆசிரியர்களின் நிலை பற்றி விரைவில் சுற்றறிக்கை வரும்
Read More »

அறிவித்தது மத்திய அரசு- கொரொனா பேரிடராக அறிவிப்பு

Saturday 14 March 2020

அறிவித்தது மத்திய அரசு- கொரொனா பேரிடராக அறிவிப்பு


Read More »

Third Term And Annual Exam April 2020 - 6,7,8,9 Std Time Table - CEO Proceedings

விழுப்புரம் மாவட்ட அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 6 , 7 , 8 , 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் கட்டுகளை தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளன்று காலை 08 . 00 மணி முதல் பொறுப்பான ஆசிரியர் / பணியாளரை அனுப்பி ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகிர்வு மையங்களிலிருந்து பெற்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து காலஅட்டவணையைப் பின்பற்றி தேர்வுகள் நடத்திட தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விழுப்புரம் மாவட்ட அனைத்து வட்டாரங்களிலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6 , 7 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் உறைகளையும் பெற்று சம்மந்தப்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக ஒவ்வொரு தேர்வு நாளன்று காலை 08 . 00 மணி முதல் வழங்கிடவும் கால அட்டவணையைப் பின்பற்றி தேர்வுகள் நடத்திடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . தேர்வுகள் இல்லாத நாட்களில் அன்றைய பாடத்திற்கேற்ப மாணவர்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள பாட ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read More »

கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9ஆம் வகுப்புவரை விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


1 . கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனிதர்களை கொன்று குவிக்கிறது . இவ்வைரஸ் இந்தியாவில் பல மாநிலங்களில் மிக விரைவாக பரவி வருகிறது . தமிழகத்திற்கு அருகே உள்ள கேரளா , கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .

2. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனிதர்கள் கூட்டமாக வசித்தால் இத்தொற்றுநோய் மிக விரைவில் பரவுகிறது .

3. பள்ளி என்ற பொது அமைப்பும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக படிக்கக்கூடிய செயல் இந்நோய் பள்ளி மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்காமல் இருப்பதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் விடுமுறை விட்டு மாணவர்களின் உயிரைக் காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

4 . 12 , 11 , 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளைத் தவிர ( 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ) தேர்வுகளை இரத்து செய்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் .

5. அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை வைத்து முழு ஆண்டு தேர்ச்சி வழங்க வேண்டும் ( ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வரை ) .
Read More »

March 3rd Week Lesson Plan for 5th Std

5th Standard  - Lesson Plan

Term 3

March 3rd Week 5th Std Lesson Plan - T/M - Download here
Read More »

கொரனோ முன்னெச்சரிக்கை விடுமுறை ரத்து -LKG,UKG, 1-5 வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் -CEO PROCEEDINGS

Read More »

200 ACTION WORDS COLLECTIONS WITH TAMIL MEANING


எனது வகுப்பு  மாணவர்களுக்காக தயார் செய்துள்ளேன் தங்களுக்கும் பயன்படும் எனில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

Click here to download pdf



*இரா.கோபிநாத்*
*இடைநிலை ஆசிரியர்*
*ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்*
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*
Read More »

எந்தெந்த சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - RTI Reply

Read More »

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!!

Read More »

EMIS இணையதளத்தில் IFHRMS கீழ் பெற்ற ஊதியப் பட்டியலை 16.03.2020க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஜனவரி 2020 ஊதியப் பட்டியல்களில் DDOS உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dus & Deduction பதிவுகள் 11-03-2020 அன்றைய நிலையில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை விவரத்தினை சார்நிலை அலுவலகம் மற்றும் பள்ளிகள் சார்ந்து EMIS இணையதளத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமையாசிரியர்கள் login ID பயன்படுத்தி 16.03.2020க்குள் உள்ளீடு ( Employe Datas Completed in IFHRMS ) செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது
Read More »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Read More »

"4,282 அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்"

"4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்"
"அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்"
"தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்"
பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும்- முதலமைச்சர்
"10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு"

Read More »

அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் உத்தரவு - DSE PROCEEDINGS






Read More »

DGE - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு , புதிய பாடத்திட்டம் / பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்த அறிவுரைகள் :





நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கு , புதிய பாடத்திட்டம் / பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்து இத்துடன் இணைத்து அனுப்பப்படும் அறிவுரைகளை தங்கள் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு , ( தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்து ) வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பொருள் தொடர்பாக தனி கவனம் செலுத்தி முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் கூட்டத்தில் உரிய அறிவுரைகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .








Read More »

மாணவா்கள் கை கழுவ சோப்பு வழங்க வேண்டும்: தலைமையாசிரியா்களுக்கு உத்தரவு

பள்ளி மாணவா்கள் அடிக்கடி சோப்பினை கொண்டு கைகளை சுத்தம் செய்வதை தலைமை ஆசிரியா் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக அவா்களுக்குத் தேவையான சோப்புக் கட்டிகளை பள்ளி சிறப்பு நிதி அல்லது பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் இருந்து தலைமையாசிரியா்கள் வாங்கித் தர வேண்டும். 

அடிக்கடி சோப்பினால் கை கழுவுவதால் மாணவா்கள் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என விளங்கும் வண்ணம் ஆசிரியா்கள் எடுத்துக்கூற வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது மாணவா்கள் சோப்பினால் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 10 மாத மாற்று மொழிப் பணியிடைப் பயிற்சி

மத்திய அரசு நடத்தும் இந்திய மொழியியல் நிறுவனம் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பணியிடைப் பயிற்சியாக 10 மாத மாற்று மொழிப் பயிற்சியை வழங்குகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Click here to download pdf
Read More »

வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல் தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக்கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

* கடன் தொகை ரூ. 25 லட்சம்

* திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)

* வட்டி: 10%

* மாதத் தவணை ரூ. 21,939

இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம்.

 (பார்க்க: அட்டவணை 1)

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி...

(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்!

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதிலாக 216-வது மாதத்திலே முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல்லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.

(பார்க்க : அட்டவணை 2)

(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்!

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக் கடனுக்கு உரிய தவணையை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது, முதல் ஆண்டு தவிர, அடுத்து வரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்சமாகும்.

(பார்க்க : அட்டவணை 3)

(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்!

வீட்டுக் கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159-வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும்.

(பார்க்க : அட்டவணை 4)

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!

அட்டவணைகள் பார்க்க ....
Read More »

Flash News: பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக மழலையர் பள்ளிகள் மற்றும் ஏழு மாவட்டங்களில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.பள்ளிக்கல்வி ஆணையர் பெயரில் வெளியான அறிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும்,  மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை குறித்த  அறிவிப்பை பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுளௌளது.



Thanthi TV link - Watch Now...

Read More »

Flash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Friday 13 March 2020


தமிழகம் முழுவதும் LKG,  UKG வகுப்புகளுக்கும்,  தேனி,கோவை, திருப்பூர்,நீலகிரி,  தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 5ஆம் வகுப்பு வரைக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
Read More »

'வெரிகுட்' விருது! மாணவர் சேர்க்கையை உயர்த்தும்ஆசிரியர்களுக்கு வழங்க திட்டம்!

Thursday 12 March 2020

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாடுபடும் ஆசிரியர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கும் புதிய திட்டத்தை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது.அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.கோடை விடுமுறையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்கள், கற்பித்தல் முறைகள், பள்ளிகளில் உள்ள கற்றல் வசதிகளை எடுத்துக்கூறி, கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால், சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதால், சேர்க்கை தொடர்பான பணிகளில், அவர்களை ஆர்வமுடன் ஈடுபடுத்தும் வகையில், அவர்களுக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதோடு, புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் உள்ளிட்ட அரசின் விருது திட்டங்களிலும், சிறப்பாக செயல்படுவோருக்கு, முன்னுரிமை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், இரண்டே மாணவர்கள் கொண்ட அரசுப்பள்ளிகளில் கூட, 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர, விருது வழங்கும் திட்டம் உதவியது.



அதே போல், கோவை மாவட்டத்திலும் பின்பற்றப்படும்.செப்டம்பர் மாதத்தில், மாணவர் சேர்க்கைக்காக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், அதிக மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை உடைய, வட்டாரத்தில் பணிபுரியும் அலுவலருக்கும், விருது வழங்கப்படும். ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால், அரசுப்பள்ளிகளின் நிலையை மாற்ற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Read More »

பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கின்றனர் - அமைச்சர்

பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது அரசு பள்ளிகளிலேயே தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி சந்திக்கும் திறன் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
Read More »

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!....*
EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Student
|
Students TC details
|
Use edit button to update TC details
|
Save




Save கொடுக்கப்பட்ட பிறகு ஒருமுறை மட்டுமே மீண்டும் எடிட் செய்ய இயலும் ஆகையால் மிக கவனமாக பதிவு செய்யவும்.

பிறகு
Green colour Transfer button ஐ பயன்படுத்தி common pool க்கு அனுப்பிவிடலாம்.

Common pool க்கு அனுப்பிய பிறகு TC pdf - ல் download செய்து கொள்ளலாம்.

தற்சமயம் யாரும் TC download செய்ய வேண்டாம்.

Emis Team
Read More »

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல் அறிவிப்பு


1 . 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்

பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி , 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக ஆண்டு ஒன்றுக்கு ரூ . 1 . 11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும் .
Read More »

School Morning Prayer Activities - 13.03.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.03.20

திருக்குறள்

அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

விளக்கம்:

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

பழமொழி

Do good to those who harm you.

பகைவனையும் நேசித்து பார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.

2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

எண்ணங்களே செயலாகிறது, என்ற சிறந்த கருத்து உடையவர் நல்லதை மட்டுமே எண்ணுவர்.

_____ விவேகானந்தர்

பொது அறிவு

1. பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த சத்தை பெறுவதற்காக பூச்சி உண்கின்றன?

நைட்ரஜன்

2. பச்சையமில்லாத தாவர குடும்பம் எது?

காளான் 🍄

English words & meanings

Pain - an unpleasant feeling due to hurt or wound in the body. வலி

Pane - a piece of glass in a window. ஜன்னலில் போடப்படும் கண்ணாடி பகுதி

ஆரோக்ய வாழ்வு

அஜீரணக் கோளாறுகளால் குடலில் சுவர்கள் புண்ணாகிவிடும் .இதற்கு உலர் திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் அருந்தி வந்தால் குடல் புண்கள் சரியாகிவிடும்.

Some important  abbreviations for students

CAT - Computer adaptive testing

CBT - Computer based teaching

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

சிங்கத்தை ஏமாற்றிய முயல்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்கிருந்த பிராணிகளை தன் உணவுக்காக தொடர்ந்து வேட்டையாடியது. இதனால் காட்டில் உள்ள பிராணிகள் பயத்துடனேயே வாழ்ந்து வந்தன. நாளுக்கு நாள் சிங்கத்தின் தொல்லை அதிகரித்தது. அதனால் எல்லாப் பிராணிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன.

சிங்கத்திடம் சென்று, நீங்கள் சாப்பிடவதற்காக எங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் உங்கள் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். இனிமேல் வேட்டையாடுவதற்கு வெளியில் வரவேண்டிய அவசியம் இல்லை என்றது. அதற்கு சிங்கமும் சரி என்றது.

முயல் செல்ல வேண்டிய முறை வந்தது. நண்பர்களே! எனக்கு சற்று அவகாசம் தாருங்கள். எனது தந்திரத்தால் நீங்களும் சிங்கத்தின் அநியாயத்திலிருந்து தப்ப வழி பிறக்கும். வருங்கால சந்ததிகள் காட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்றது.

பிறகு முயல்; தாமதமாகச் சிங்கம் இருக்கும்; இடத்திற்கு சென்றது. சிங்கம் முயலை நோக்கி அட அறிவு கெட்டவனே ஏன் இவ்வளவு தாமதம்? என்று கேட்டது. முயல், அரசே நான் வரும் வழியில் என்னை இன்னொரு சிங்கம்; தாக்க வந்தது. அதனிடம் இருந்து நான் தப்பித்து வர தாமதமாகி விட்டது என்றது.

என்னைப்போல் ஒருவனா? இந்த காட்டிற்கு நான் மட்டும் தான் ராஜாவாக இருக்க வேண்டும். முதலில் அவனை அழித்தால் தான் நமக்கு தினமும் சரியாக உணவு கிடைக்கும் என்று சிங்கம் நினைத்தது. அதனால் புதிதாக காட்டுக்குள் வந்திருப்பவனை கொல்ல நினைத்து முயலிடம் அவன் இருக்கும் இடத்தைக் காட்டு, முதலில் அவனைக் கொன்றுவிட்டுப் பிறகு உன்னை சாப்பிடுகிறேன் என்றது.

முயல் தந்திரமாக சிங்கத்தை தூரத்தில் தெரியும் கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. இந்த கிணற்றில் தான் அந்த சிங்கம் பதுங்கியிருக்கிறது என்றது. சிங்கம் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தது. அதில் சிங்கத்தின் முகம் தெரிந்தது. அது தன்னுடைய முகம் தான் என்று அறியாத சிங்கம் தன்னுடைய எதிரி என்று நினைத்து அவனை அழிக்க நினைத்து கிணற்றுக்குள் குதித்தது.

சிங்கம் கிணற்றுக்குள் விழுந்த பின் முயல் மற்றப் பிராணிகளை நோக்கி சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து ஓடியது. சிங்கம் இறந்து போனது.

மற்றப் பிராணிகளிடம் சென்று நம்முடைய எதிரி அழிந்து விட்டான் என்று சந்தோசத்தில் கத்திச் சொன்னது. முயலின் இச்செய்தியைக் கேட்ட பிராணிகள் அனைத்தும் ஒன்று கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. காட்டு மிருகங்கள் அனைத்தும் முயலுக்கு மரியாதை செய்தன. அனைத்து மிருகங்களும் நிம்மதியாக வாழ்ந்தன.

நீதி :
கோபத்தில் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது.

இன்றைய செய்திகள்

13.03.20

◆இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு தற்காலிகமாக தேர்ச்சி பெற்ற 368 பள்ளி மாணவ, மாணவிகளின் பட்டியலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

◆தேனி மாவட்டத்தில் காட்டுத் தீயால் வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

◆தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு.

◆இந்தியாவில் சுற்றுலா விசாக்கள் வழங்குவது ஏப்ரல் 15 வரை தற்காலிக நிறுத்தம்: கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு.

◆உலகம் முழுவதும் உள்ள அனைத்து ட்விட்டர் ஊழியர்களும் இனி வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

◆இந்திய ஈட்டி எறிதல் வீரா் சிவபால் சிங் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

◆புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, அமெரிக்க வீராங்கனை ஷாங்கை 21-14, 21-17 என்ற நோ் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

Today's Headlines

🌸For the Young Scientist Program ISRO released 368 students name list on a temporary basis.

🌸 Due to the forest fire in Theni the wild animals are migrating to another place.

🌸 In Tamil Nadu the NPR census has been stopped declared Minister RP Udayakumar.

🌸 The tourist visa issuing is stopped in India till April 15th in order to control the spread of Corona Virus.

🌸  The employees working in the twitter around the world had to work from the home only orderd the organisation.

🌸 Indian Javelin through player Sivapal Singh got selected for the Olympic for the first time.

🌸 In the famous All England Badminton match for women singles Indian Player P. V. Sindhu won the match against the American player Shong in the set of 21-14 & 21- 17.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு தொகுப்பு!


இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை ( 2020 - 21 ) எண் 43 தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

Announcements of School Education Department - 2020-2021 - Tamil Version - Download here
Read More »

5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வந்ததில் தவறில்லை- சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்பொழுது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தான் சரி என்றால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாதது ஏன்? என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உலக அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க பொதுத்தேர்வு அவசியம். வேறு வழியே இல்லாமல் தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தோம் என்று தெரிவித்தார்.
Read More »

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடு!

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடு

முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.

Read More »

GO 37 - உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து - Full G.O Tamil Translation

மேம்பாட்டு அதிகரிப்பு - உயர் தகுதி பெறுவதற்கும், துறைசார்ந்த சோதனைகளில் தேர்ச்சி பெறுவதற்கும் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதி - அனைத்து துறைகளிலும் முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்கும் திட்டத்தை வழங்குதல் / ரத்து செய்தல் - உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVANCE INCREMENT GO - Download here

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-IV) துறை
G.O. எண் 37
தேதியிட்ட நாள்: 10.03.2020 ஓட்டம் ஒனுல், லிட்ல் -27, சவ்லவுர் 2051 படி: 1)
2) G.O. (Ms) No.1195, பொதுப்பணித் துறை
G.O. (Ms) No.531, நிதித்துறை, தேதியிட்ட 25.04.1963. தேதியிட்டது.
11.07.1972 G.O. (Ms) No.825, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-1) துறை, தேதியிட்டது. 06.07.1977.
G.O. (Ms) No.1195, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-I) துறை, தேதியிட்டது. 27.10.1978.
G.O. (Ms) No.843, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-II) துறை, தேதியிட்ட 05.09.1983.
G.O. (Ms) எண் 1159, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-II) துறை, தேதியிட்ட 21.11.1984.
G.O. (Ms) எண் 301, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-III) துறை, தேதியிட்ட 26.03.1985.
G.O. (Ms) No.97, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-IV) துறை, தேதியிட்ட 05.07.2010.
(FR-IV) துறை, தேதியிட்டது. 26.10.2010.

G.O. (Ms) எண் 154, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்
10) G.O. (Ms) No.241, நிதி (பிசி) துறை, தேதியிட்டது. 22.07.2013
ஆணை:


1. மேலே படித்த குறிப்பில், அமைச்சர் சேவையில் வர்த்தமானி செய்யப்படாத அரசு ஊழியர்களுக்கு, கணக்கு சோதனைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு ஒரு முன்கூட்டியே அதிகரிப்பு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பிறகு, தமிழ்நாடு இரண்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேலே படித்த அரசு உத்தரவில், முந்தைய பொதுப்பணித் துறை (அதாவது பிரிக்கப்படுவதற்கு முன்பு), உதவி பொறியாளர்கள் / நிர்வாக பொறியாளர்கள் / பிரிவு பொறியாளர்களுக்கு முன்கூட்டியே அதிகரிப்பு வழங்க / வழங்க உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. பொறியியல் பட்டத்தில் பி.ஜி / பி.எச்.டி பெறுவதற்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக பணிகள் துறை. மேலே படித்த மூன்றாவது அரசு உத்தரவில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து முதுநிலை மேலாண்மை அறிவியல் முதுகலை பட்டம் பெறுபவர்களுக்கு இரண்டு முன்கூட்டியே அதிகரிப்புகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது பின்னர் மேலே படித்த நான்காவது அரசு உத்தரவில் MBA வைத்திருப்பவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

2. மேற்கண்ட உத்தரவுகளுக்கு இணங்க, வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வித் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற பல துறைகளும் முன்கூட்டியே அதிகரிப்புக்கு அனுமதி அளித்தன. அந்தந்த பாடங்களில் முதுகலை / பிஎச்டி பட்டங்களைப் பெறுவதற்காக அந்தத் துறைகளின் சில வகை ஊழியர்களுக்கு (இந்த உத்தரவுகள் அந்த உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும், அந்தத் துறைகளில் உள்ள அனைத்து வகை பதவிகளுக்கும் பொருந்தாது).


3. மேலே படித்த ஐந்தாவது அரசு உத்தரவில், வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல், டைரி மேம்பாட்டுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பம் நலன்புரித் துறை, உள்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் திணைக்களம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில
இப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் பட்டம் / முதுகலை / தொழில்முறை பட்டம் பெற்றவர்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டு.

4. மேற்கண்ட மறுஆய்வு உத்தரவுகளின் தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, துணை அதிகாரிகளுக்கான கணக்கு சோதனையை பகுதி-எல் தேர்ச்சி பெறுவதற்கான முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதி உள்ளிட்ட முன்கூட்டியே அதிகரிப்புக்கான திட்டத்தை அரசு மேலும் மதிப்பாய்வு செய்தது:

அ) மேற்கண்ட திட்டத்தை அறிமுகப்படுத்திய காலகட்டத்தில், தகுதி வாய்ந்த நபர்கள் அரசாங்க பதவிகளுக்கு அரிதாகவே அடையாளம் காணப்படுவார்கள். பல தொழில் வல்லுநர்கள் (மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள்) உட்பட தகுதி வாய்ந்த நபர்கள் குழு ஏ மற்றும் பி பதவிகளுக்கான சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் மூலமாகவும், குழு உதவியாளர்கள் / இளைய உதவியாளர்கள் / தட்டச்சு செய்பவர்கள் மூலமாகவும் எழுத்தர் பணிகளைச் செய்ய அரசு சேவையில் நுழைகிறார்கள். ஆனால், தற்போதைய நாட்களில், மிகவும் சி பதிவுகள் போன்றவை

ஆ) கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் ஏராளமாக அதிகரிக்கப்படுகின்றன மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களும் பல மடங்கு அதி

இ) கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் ஏராளமாக அதிகரிக்கப்படுகின்றன மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களும் பல மடங்கு அதிகரிக்கப்படுகிறார்கள்.

ஈ) பல்வேறு ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் சோதனைகள் / தேர்வுகளை நடத்திய பின்னர் அரசு சேவையில் பல்வேறு பதவிகளுக்கு பொருத்தமான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

உ) பதவியின் கடமையை திறம்பட நிறைவேற்றுவதற்காக உயர் பதவி பதவியை நிரப்ப அனைத்து துறைகளிலும் தகுதி வாய்ந்த நபர்கள் உள்ளனர்

ஊ) ஒரு அரசு ஊழியருக்கு உயர் தகுதி கொண்ட உயர் பதவிக்கு பதவி உயர்வு / நியமனம் தேவைப்பட்டால், உயர் பதவிக்கு பதவி உயர்வு நியமனம் பெறுவதற்கு தன்னை / தன்னை தகுதி பெறுவது அரசு ஊழியரின் பொறுப்பாகும்

5. மேற்கூறிய காரணங்களுக்காக, உயர் தகுதி பெறுவதற்கு முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய / விநியோகிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது மற்றும் தீர்ப்புகள் (3) & (4) இன் படி துணை அதிகாரிகளுக்கான பகுதி -1 க்கு கணக்கு சோதனை தேர்ச்சி பெறுகிறது. FR 31-A இன் கீழ் மற்றும் மேலே உள்ள ஐந்தாம் முதல் எட்டாவது வரை அரசு உத்தரவுகளில் வழங்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.

அதன்படி, அரசாங்கம் பின்வரும் வழிமுறைகளை வெளியிடுகிறது:


i. அனைத்து துறைகளிலும் உயர் தகுதி பெறுதல் மற்றும் உயர் தகுதி பெறுவதற்கு முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்க அனைத்து துறைகளும் வழங்கிய அனைத்து உத்தரவுகளும், ஒட்டுமொத்தமாக, ரத்து செய்யப்படும் / உடனடியாக வழங்கப்படும். கொள்கை முடிவாக, முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்கும் திட்டம்

ii. மேலே படித்த ஐந்தாம் முதல் எட்டாவது அரசு உத்தரவுகளில் வழங்கப்பட்ட உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படும்.

ili. துணை அதிகாரிகளுக்கான கணக்கு சோதனையில் தேர்ச்சி பெறுவதற்கான முன்கூட்டியே அதிகரிப்புக்கான அனுமதி - பகுதி 31, விதி 31 (3) & (4) இன் படி FR 31-A இன் கீழ் உடனடியாக அமல்படுத்தப்படும்.

iv. அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உயர் தகுதி பெறுவதற்கான முன்கூட்டியே அதிகரிப்பு எந்தவொரு மீட்டெடுப்பையும் செய்ய வேண்டியதில்லை

செயலகத்தின் அனைத்து துறைகளும் / திணைக்களத் தலைவர்களும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் பதவிகளின் [உயர் மட்டத்திற்கு நுழைவு] சிறப்பு / ஆத் விதி குறித்து இந்த விவகாரத்தில் மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் உயர் தகுதிகளை பரிந்துரைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறையின் சேவைகளை மேம்படுத்துவதற்காக, தேவையான இடங்களில் பதிவுகள்.
vi. இந்த பொது உத்தரவு
அனைத்து துறைத் தலைவர்களும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் / அனைத்து மாவட்ட நீதிபதிகள் / அனைத்து மாவட்ட நீதவான்.
செயலாளர், சட்டப்பேரவை செயலகம், சென்னை-9.
செயலாளர், டி.என்.பி.எஸ்.சி, சென்னல் -03.
கருவூல மற்றும் கணக்கு ஆணையர், சென்னை - 35.
முதன்மை கணக்காளர் நாயகம் (ஏ & இ), சென்னல்-18.
முதன்மை கணக்காளர் நாயகம் (சிவில் தணிக்கை), சென்னை -18.
கணக்காளர் நாயகம் (தணிக்கை- II). சென்னை -18.
குடியுரிமை தணிக்கை அதிகாரி, சென்னை -9.
ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் (வடக்கு). சென்னை-1.
ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் (தெற்கு), சென்னை-35.
ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் (கிழக்கு), சென்னை-5.
ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர், செயலகம், சென்னை-9.

ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர், மதுரை - 625 001.
பதிவாளர் ஜெனரல், மெட்ராஸ் உயர் நீதிமன்றம், சென்னை -104.
பதிவாளர், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், மதுரை.
ஓய்வூதிய ஊதிய அதிகாரி, சென்னை-6.

இதற்கு நகலெடுக்கவும்:

மாண்புமிகு முதலமைச்சரின் செயலாளர், சென்னை -9.
மாண்புமிகு துணை முதலமைச்சருக்கு சென்னை -9 சிறப்பு பி.ஏ.
மாண்புமிகு அமைச்சருக்கு சிறப்பு பி.ஏ. (மீன்வள, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்) சென்னை -9.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரின் முதன்மை தனியார் செயலாளர், சென்னை -9.
அரசு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளரின் முதன்மை தனியார் செயலாளர், சென்னை -9.
அனைத்து அதிகாரிகள் / அனைத்து பிரிவுகளும், பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, சென்னை -9.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (AR-II) துறை, சென்னை -9. (அரசு இணையதளத்தில் பதிவேற்றுவதற்காக) நிதி (CMPC / PC-I / I / 1II) துறை, சென்னை-9. நிதி (பிபிஇ) துறை, சென்னை -9
Read More »

CRC Wise Team Visit List ( 12.03.2020 )

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள குழு ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல் ஒவ்வொரு குருவளமையம் ( CRC ) வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

Krishnagiri - CRC Wise Team Visit List - Download here
Read More »

NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 412 பயிற்சி மையங்களும் தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

2019 - 20 ஆம் கல்வியாண்டில் 03.05.2020 அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 412 பயிற்சி மையங்களில் 24 . 09 . 2019 முதல் 05.01.2020 வரை வார இறுதியில் முதுகலை ஆசிரியர்கள் மூலம் மாணவ / மாணவிகளுக்கு NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பின் , E box எனும் நிறுவனம் இணையவழி மூலமாக 412 பயிற்சி மையங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது . இவ்வகுப்பிற்கான சோதனை முன்னோட்டம் 17 . 03 . 2020 ( செவ்வாய்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது .

எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் மேற்கண்ட சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைப்பு வசதிகளை ( 2 Mbps speed குறையாமல் ) சரிப்பார்த்து கொள்ளுமாறும் , 17 . 03 . 2020 அன்று ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளரை ( Co - ordinator ) தவறாமல் வருகை புரியுமாறும் மற்றும் அச்சோதனை முன்னோட்டத்தின் செயல்பாடு குறித்த விவரங்களை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறும் அனைத்து பயிற்சி மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read More »

கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிட வேண்டும் என்ற  கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த ராஜவேலு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன எனவும் தமிழக அரசு விளக்கமளித்து. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம், ராஜவேலுவின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா பரவாமல் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Read More »

போராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா? பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை

Wednesday 11 March 2020

Read More »

School Morning Prayer Activities -12.03.2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.03.20

திருக்குறள்

அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

விளக்கம்:

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

பழமொழி

After a dinner rest a while.

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள்

1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.

2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும் .

_____ அன்னை தெரசா

பொது அறிவு

மார்ச் 12 - உலக சிறுநீரக தினம்

1.மனித உடலின் தொட்டி என அழைக்கப்படுவது எது ?

 சிறுநீரகம்

2. டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

 வில்ஹெல்ம் கோல்ஃப்

English words & meanings

Oars - a long pole with flat end helps in rowing a boat, துடுப்பு

Ores - rock from which metals can be taken. உலகோங்கள் எடுக்கும் பாறைத் தாது.

ஆரோக்ய வாழ்வு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் .இப்பிரச்சனை தீர உலர்திராட்சையானது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Some important  abbreviations for students

QVGA - Quarter Video Graphics Array

VIT - Vellore Institute of Technology

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

ஒட்டகத்தைக் கொன்ற காகம்

ஒரு மிகச் சிறிய காட்டில் மதோற்கடன் என்ற பெயரை உடைய சிங்கராஜா தனக்கு மந்திரிகளாக நரி, புலி, காகம் ஆகிய மூன்றையும் வைத்துக்கொண்டு அரசாட்சி நடத்தி வந்தார்.

ஒரு நாள் அந்தக் காட்டு வழியாக வழி தவறி ஓர் ஒட்டகம் வந்தது. காகம் ஒட்டகத்தைப் பார்த்து அதிகாரமாக யார் நீ என்று கேட்டது. ஒட்டகம் பயந்து போய் வழி தவறி இந்த காட்டுக்குள் வந்து விட்டேன் தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று காகத்திடம் கேட்டது.

உடனே காகம் ஒட்டகத்தை சிங்கராஜாவிடம் அழைத்துச் சென்றது. சிங்கராஜா! ஒட்டகத்திடம் இனி நீ இந்த காட்டில் வசிக்கலாம் என்றும், உன்னை என் மந்திரிகளுள் ஒருவராக நான் சேர்த்துக் கொள்கிறேன் என்றும், இனிமேல் உன்னுடைய பெயர் மந்தானகன் என்றும் பெயர் வைத்தது.

ஒரு நாள் சிங்கராஜாவுக்கு உடல் நலம் சரியில்லை. இன்று நீங்கள் நால்வரும் சென்று வேட்டையாடி எனக்கு உணவு கொண்டு வாருங்கள். நான் உண்ட பின்னர் மீதமுள்ள உணவினை நீங்கள் உண்ணுங்கள் என்று கட்டளையிட்டது. நான்கும் ராஜாவுக்கு உணவு தேடி காட்டுக்குள் அலையோ அலை என்று அலைந்தன. ஆனால் ஓர் இரையும் அகப்படவில்லை.

உடனே, காகம் ஒரு திட்டம் போட்டது. இந்த ஒட்டகம் சைவம். நாம் ஏன் இந்த ஒட்டகத்தையே இன்றைய இரையாக வைத்துக் கொள்ளக்கூடாது? என்று யோசித்தது. பின் ஒட்டகத்தை மட்டும் ஒரு வேலை கொடுத்து தனியே அனுப்பி விட்டு காகம், நரியிடமும் புலியிடமும் தன் திட்டத்தைக் கூறியது. ஒட்டகம் திரும்பி வருவதற்குள் காகமும் நரியும் புலியும் சிங்கராஜாவிடம் சென்றன. ராஜா! இன்று இந்தக் காட்டுக்குள் எங்கு தேடியும் எந்த இரையும் கிடைக்கவில்லை என்றது காகம்.

மேலும் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு யாராவது நெய் தேடுவார்களா? என்றது காகம். அந்த வெண்ணெய் வேறு யாருமில்லை நமது புதிய மந்திரியான ஒட்டகம்தான் அது! என்றது காகம். ஆ! அது எப்படி முடியும்? அது என்னுடைய அடைக்கலப் பொருள் என்றது சிங்கம்.

அதற்கு காகம், ராஜா! ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு நபரை இழக்கலாம். ஒரு கிராமத்தைக் காப்பாற்ற அந்தக் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற அந்த நாட்டிலுள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம். ஆதலால், இது தவறில்லை என்று அதே சாஸ்திரங்கள்தான் சொல்லியுள்ளன! என்றது காகம்.
அப்போதும்
சிங்கராஜா ஒட்டகத்தைக் கொல்ல சம்மதிக்கவில்லை. ராஜா அவர்களே! அந்த ஒட்டகமே தங்களிடம் வந்து, என்னைக் கொல்லுங்கள் என்று கூறினால், தாங்கள் அதனைக் கொல்லச் சம்மதிப்பீர்கள் தானே! என்றது காகம்.

ஆமாம் என்றார் சிங்கராஜா. அப்போது, இவர்களைத் தேடி அந்த ஒட்டகம் வந்தது. ஒட்டகம் அருகில் வந்ததும் காகம் தந்திரமாக, ராஜா! இன்று உங்களுக்கு எங்குமே இரை கிடைக்கவில்லை. தாங்கள் இன்று பசியுடன் இருப்பதை என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. ஆதலால், தாங்கள் என்னைக் கொன்று தங்களின் பசியினைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று காகம் கூற
நீ எனக்கு ஒருவாய் உணவாக அல்லவா அமைந்து விடுவாய் என்றது சிங்கராஜா. உடனே, நரி, ராஜா அப்படியானால் தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்று போலிப் பணிவு காட்டியது. மிகவும் சிறியவன். என் பசிக்கு நீ பயனற்றவன் என்று அதையும் மறுத்தது சிங்கராஜா. உடனே புலி, அப்படியானால் ராஜா, தாங்கள் என்னைக் கொல்லலாமே! என்று நடித்தது. நீ பருத்தவனாக இல்லை. ஆதலால், நீயும் என் பசிக்கு ஏற்றவனில்லை என்றது சிங்கராஜா.

மூவரும் ராஜாவுக்காக போட்டி போட்டுக்கொண்டு தங்கள் உயிரைத் தர முன் வந்ததில் மனம் நெகிழ்ந்து போன ஒட்டகம், ராஜா! இந்தக் காட்டில் நான்தான் உயரமானவன். பருத்தவன். நான் உங்களின் பசிக்கு ஏற்றவன். தாங்கள் தான் இந்தக் காட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். தங்களின் பசியைப் போக்கும் நல்ல காரியத்தை, நான் என் உயிரைக் கொடுத்தாவது செய்வேன். ஆதலால், தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்றது. உடனே நரியும் புலியும் ஒட்டகத்தின்மீது பாய்ந்து அதனைக் கொன்றன.

நீதி :
தீயவர்களின் கைகளில் அகப்பட்டுக் கிடப்பதைக் காட்டிலும் அதனோடு சண்டையிட்டு மடிவதே சிறந்தது

இன்றைய செய்திகள்

12.03.20

◆தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 28 தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுவதுமாக நிறுத்தப்பட உள்ளது. 122 பொறியியல்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைஇடங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

◆மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை விரைந்து வழங்க தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

◆கரோனாவில் இருந்து சிறுவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டு மத்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

◆கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் அச்சுறுத் தலைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப் படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

◆ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் வெற்றிபெற்றது அயா்லாந்து.

◆ஃபிடே மகளிா் செஸ் கிராண்ட்ப்ரீ போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டா் டி. ஹரிகாவை 7-ஆவது சுற்றில் டிரா செய்தாா் கஜகஸ்தானின் ஸன்ஸயா.

Today's Headlines

🌸It has been informed that in 28 private engineering  colleges of Tamilnadu, students' admission are going to be stopped completely and in 122 engineering colleges, number of admission  seats will be reduced to the half in the coming academic year.

🌸100 doctors have been appointed all over Tamilnadu to speed up the process of issuing the national identity card for  the differently abled.

🌸Central Government has released  a comics book with a view of creating awareness among  the children about how  to defend themselves against corona virus.

🌸The World Health Organization warns the corporate companies about the attack of virus in computers due to the impact of the threat of Covid-19.

🌸Ireland wins against Afghanistan in the super over of the third T-20 tournament.

🌸In FIDE women chess grandfree tournament, the game ends in draw between Indian grandmaster T. Harika and Kazhakasthan's chess player Sansaya in the seventh round.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One