Search

வெளிமாவட்ட ஆசியர்களுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள் என்ன? விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Friday 22 May 2020



School Edu Dir Proceedings ( pdf ) - Download here...


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 27.5.20 அன்று தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்த விவரங்கள் மற்றும் தங்கள் மாவட்டத்தில் உள்ள விடை திருத்தும் மையத்திற்கு தினந்தோறும் வந்து செல்ல போக்குவரத்து வசதி செய்த விவரத்தினையும் பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
Read More »

Tamil word game -சொல்லி அடி தமிழோடு விளையாடு

In our Tamil Word Game we have given the Tamil Game play in category wise they are – Connections – Word finding on image (படம் பார்த்து கண்டுபிடி), Word - Find by Notes & Clues (குறிப்புகள் மூலம் கண்டுபிடி), Word finding within the word (சொல்லுக்குள் சொல்), Word Game (சொல் விளையாட்டு), Find the Different words (வேறுபாடுகளை கண்டுபிடி), Find the Parallel Words (இணைசொற்களை கண்டுபிடி), Find the opposite words (எதிர்சொல்லை கண்டுபிடி), Other Language Words (பிறமொழி சொற்கள்), Arrange (சீர்படுத்து), Puthiruku Pathil (புதிருக்கு பதில்), Thirukkural (திருக்குறள்), Error Correction (பிழைதிருத்து)

1. Connections – Word finding on image (படம் பார்த்து கண்டுபிடி) – It provides the option on playing this Tamil word game level by matching of two images and finding the word combination on matching the image. It simple way we can call as Connections Word Game in Tamil.

2. Word - Find by Notes & Clues (குறிப்புகள் மூலம் கண்டுபிடி) – It provides the option on playing this Tamil word game level by giving the different notes & clues, where people can find the right Tamil Word by given notes & clues to their max level of thinking.

3. Word finding within the word (சொல்லுக்குள் சொல்) – It provides the option on playing this Tamil word game level by given single word name and finding the multiple words with in the given single name word in Tamil. In this Word Game level it makes the people to think of different word combination in Tamil.

4. Word Game (சொல் விளையாட்டு) – It provides the option on playing this Tamil word game level on forming the different words using 9 letters, where user can find the most word combination by using this 9 letters. In this Word Game level it makes the people to think of different word combination in Tamil.

5. Find the Different words (வேறுபாடுகளை கண்டுபிடி) – In this category of tamil word hunt game, you need to find the different word from the given 4 or 6 words.

6. Find the Parallel Words (இணைசொற்களை கண்டுபிடி) – In this category of tamil word hunt game, you need to find the right parallel word for given word, from the given 16 words.

7. Find the opposite words (எதிர்சொல்லை கண்டுபிடி) – In this category of tamil word search game, you need to find the opposite word for given word, from the given 4 options.

8. Other Language Words (பிறமொழி சொற்கள்) – In this category of "tamil word search game", other language words will be given. You need to find the Tamil word for them.

9. Arrange (சீர்படுத்து) – In this category of tamil word search game, shuffled letters of a word will be given. You need to find the arrange the letters in correct order.

10. Riddles (புதிருக்கு பதில்) – In this category of tamil word finder app, riddles will be given. You need to find the right words.

11. Thirukkural (திருக்குறள்) – In this category of tamil word finder app, shuffled words of a thirukural will be given. If you need to arrange thirukkural correctly.

12. Error Correction (பிழைதிருத்து) – In this category words with errors will be given. You need to find the right words.

Padam parthu Kandupidi game is to find word from combination of images. This Tamil Varthai Vilayattu" game is a completely free app, it help to kids, students and adults to learn new tamil words.

Click here to download App
Read More »

10-ம் வகுப்புக்குச் செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்ட்ராய்ட் போன் வழங்கிய சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி சார்பில் 10-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்க ஆன்ட்ராய்ட் போன்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தற்போது 9 ம் வகுப்பு முடித்து, 10 ம் வகுப்பிற்கு செல்ல உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5,000 பேருக்கு, 'ரெட்மி நோட் 5' என்ற ஆன்டிராய்டு மொபைல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 11 ம் வகுப்பு முடித்து, 12 ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கும், அடுத்த வாரம் ஆன்டிராய்டு மொபைல்கள் வழங்கப்பட உள்ளது.

மாணவர்களை ஆசிரியர்கள் போனில் அழைத்து, ஆன்ட்ராய்டு மொபைல்கள் வழங்கியதை எதிர்பாராத, மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் திழைத்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கின்ற வரை, மாணவர்களுக்கு, 'ஜூம் செயலி' வழியாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.ஏற்கனவே மாணவர்கள் வீடுகளில் அதிக நேரம் செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு செல்போன் வழங்கியிருப்பது மாணவர்களை படிப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து முன்வைக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்துவதற்காக கால மாற்றத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டது என்பது சென்னை மாநகராட்சி தரப்பு விளக்கமாக உள்ளது.
Read More »

பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய 02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற இணையதள வழி கலந்தாய்வு மூலம் கலந்து கொண்டு பதவி உயர்வு , பணிமாறுதல் பெற்றவர் பணியில் சேர்ந்த விவரம் கோரப்பட்டமைக்கு 110 நபர்கள் சார்ந்த விவரங்கள் வரப்பெறாததால் , 110 நபர்களின் பட்டியல் இணைத்து அவர்கள் சார்ந்த விவரங்கள் 28.02.2020 க்குள் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.

மேற்கண்ட 110 நபர்கள் பட்டியல் இணைத்து விவரங்கள் கோரப்பட்டதைத் தொடர்ந்து 05.03.2020 நாளிட்ட செயல்முறைகளில் நினைவூட்டு அனுப்பிய நிலையிலும் நாளது வரை 50 நபர்கள் விவரம் வரப்பெறாததால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

 எனவே , 17.02.2020 நாளிட்ட செயல்முறைகளுடன் அனுப்பப்பட்டுள்ள 110 நபர்களின் பட்டியலினை சரிபார்த்து அதில் கீழ்க்கண்ட வரிசை எண்ணில் உள்ள 50 நபர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார நகல்களுடன் 05.06.2020 க்குள் அனுப்பி வைக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Read More »

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள ஆசிரியர்களின் பட்டியல் CEO வெளியீடு.

கொரோனா வைரஸ் ( Covid - 19 ) தொற்று காரணமாக அரசால் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் , மாண்புமிகு தமிழக முதல்வரின் செய்திக் குறிப்பின்படி மேல்நிலை இரண்டாமாண்டு மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மைய மதிப்பீட்டு முகாமாகச் செயல்படும் முகாம் எண். 17 புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மதிப்பீட்டு மையத்தில் முதன்மைக் தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்களாக ( CE & SO ) பணிபுரிய இணைப்பில் காணுமாறு முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது.

நியமனம் செய்யப்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்களை 27-05-2020 அன்று காலை 9-00 மணி முதல் திண்டுக்கல் , புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைய மதிப்பீட்டு முகாமில் ( முகாம் எண் . 17 ) முகாம் அலுவலரிடம் தங்களது வருகையைப் பதிவு செய்யும் வகையில் பணிவிடுப்பு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாணையை ரத்து செய்யவோ / மாற்றவோ இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கலாகிறது. நியமனம் செய்யப்பெற்ற தலைமை ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டுதல்களின்படி முகக்கவசம் அணிந்து , சமூக இடைவெளியுடன் பணிபுரியுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

DGL - CE,  SO List 2020 - Download here
Read More »

விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து எந்த ஆசிரியர்கள் விலக்கு பெறலாம்? - CEO உத்தரவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு,

COVID 19 வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு அனைத்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் நலன் கருதி மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாட்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அரசு தேர்வுத்துறையின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த ஒரு ஆசிரியரும் விடுபடாமல் 27.05.2020 (27.05.2020 அன்று CE/SO மற்றும் 28.05.2020 அன்று AEs) முதல் நடைபெறவுள்ள விடைத்தாள் திருத்தும் பணிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பொருட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் இருப்பிட வசதிக்கேற்ப, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விடைத்தாள் திருத்தும் மையத்தில் (ஒரு பாடத்திற்கு ஐந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது)  பணியினை மேற்கொள்ள ஏதுவாக ஆசிரியர்களின் விவரங்களை இணைப்பினை Click செய்து நாளை (20.05.2020) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட விவரத்தை அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும்  ( மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மூலமாக   தெரிவித்து  விடைத்தாள் திருத்தும் பணியினை மேற்கொள்ள ஏதுவாக  26.05.2020க்குள் தலைமையிடத்தில்  இருப்பதை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் உறுதிசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

COVID 19 வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகள்/ இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்/தீவிர ஆஸ்துமா நோய் உள்ளவர்கள்  மட்டும் மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் தலைமையாசிரியர்கள் உறுதி செய்துகொண்டு, தலைமையாசிரியர்களின் முழு பொறுப்பில் விலக்களிக்கலாம்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One