Search

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை - மாவட்ட வாரியாக விவரம் சேகரிப்பு

Tuesday 3 March 2020

தமிழகம் முழுவதும் அரசு மேல் நி லைப்பள்ளிகளில் காலி யாக உள்ள தலைமை ஆசிரியர் , ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் பட்டியலை வழங்கும்படி பள்ளிக்கல் வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளது .


தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை , மேல்நி லைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சலிங் முறை யில் இடமாற்றம் வழங்கப்பட்டது . கடந்த 2019ல் நடத்தப் பட்ட கவுன்சிலிங்குக்கு பின்னர் பள்ளிகளில் ஏற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் வழியாக நிரப்புவதற்கான நடவ டிக்கை தற்போது தொடங் கியுள்ளது .

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப் பன் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதற்கான பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் . ஜூன் 1ம் தேதி நிலவ ரப்படி தலைமை ஆசிரியர் பதவி காலியாக உள்ள பள்ளிகள் , மாவட்டங்கள் , அந்த பள்ளியில் உள்ள மாணவர் , ஆசிரியர் எண் ணிக்கை ஆகிய விவரங்க ளையும் , இந்த பட்டியலில் இணைத்து witndse @ nic . in என்ற மின்னஞ்சல் முகவ ரிக்கு அனுப்பி வைக்க முதன்மை கல்வி அலுவ லர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர் . ஏற்கனவே காலி பணி யிட பட்டியல் தயாரிக் கப்பட்டிருந்தால் தற்போ தைய நிலவரப்படி , அதில் உள்ள விவரங்களை சரி பார்க்கவும் , முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவு றுத்தப்பட்டுள்ளனர் .


இப்பணிகள் முடிந்ததும் , காலி யிடங்களில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமிப்பதா முது நிலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு , தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு நியமிக்கப்ப டுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .


Read More »

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால் பெண் ஊழியர்கள் 3-வது குழந்தைக்கான பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை பெற முடியுமா?உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால் மத்திய அரசு பெண் ஊழியர்கள் 3-வது குழந்தையின் பிரசவத்துக்கான பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதுதொடர்பாக அரக்கோணம் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீராங்கனையாக பணியாற்றும் ஆயிஷாபேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "எனக்கு முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தது. அதற்காக மத்திய அரசு விதிகளின்படி 6 மாதங்கள் பேறுகால விடுப்பும், ஊதியமும் வழங்கப்பட்டது.




இந்நிலையில் 3-வதாக தற்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இரண்டாவது பிரசவத்துக்கான பேறுகால விடுப்புக்கான ஊதிய பலன்களை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே எனக்கு 2-வது பிரசவத்துக்கான பேறுகால ஊதிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என அதில் கோரியிருந்தார்.


இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்திருந்தாலும், 2-வது பிரசவத்துக்கான பேறுகால விடுமுறையும், அந்த விடுமுறைக்கான ஊதிய பலன்களை பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது என கடந்தாண்டு ஜூன் 18-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை இயக்குநரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.


இந்த வழக்கை நேற்று (மார்ச் 2) விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:


"இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்துள்ள தனி நீதிபதி பெண்களுக்கான பேறுகால உரிமை குறித்தும், தமிழக அரசின் பேறுகால விடுமுறை விதிகள் குறித்தும் விளக்கி தீர்ப்பளித்துள்ளார். ஆனால் இந்த வழக்கின் வாதியான ஆயிஷாபேகம் மத்திய அரசு ஊழியர். மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீராங்கனையான அவருக்கு மத்திய சிவில் சர்வீஸ் விதிகள் மட்டுமே பொருந்தும். அந்த விதிகளின்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் 180 நாட்கள் பேறுகால விடுப்பும், அதற்கான ஊதியமும் வழங்க வழிவகை உள்ளது. இரண்டாவது பிரசவத்துக்கு அல்ல.


ஆயிஷா பேகத்துக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது குழந்தைக்கு பேறுகால ஊதிய சலுகைகள் கோர முடியாது. இரட்டைக் குழந்தைகள் என்றாலும் நேர இடைவெளி காரணமாக அக்குழந்தைகள் 2 குழந்தைகளாகவே கருதப்படுவர் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.


ஆனால், ஆயிஷாபேகம் தரப்பில் இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி மத்திய அரசு ஊழியர் 3-வது குழந்தைக்கான பிரசவத்துக்கு பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை கோர முடியாது என்பதால் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.


அதேநேரம், இதுபோன்ற அரிதிலும் அரிதான நேரங்களில் 2-வது பிரசவத்துக்கும் பேறுகால விடுமுறையுடன் நிறுத்திவிடாமல் அதற்கான ஊதியத்தை வழங்குவது தொடர்பாகவும் விதிகளை தளர்த்த மத்திய அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்
Read More »

நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!!

தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு.
 
  
Read More »

கூட்டுறவு சிக்கன நாணய சங்க அமர்வு படி உயர்த்தி வழங்குவதற்கான பதிவாளரின் சுற்றறிக்கை

கூட்டுறவு சிக்கன நாணய சங்க அமர்வு படி உயர்த்தி வழங்குவதற்கான பதிவாளரின் சுற்றறிக்கை








Read More »

பான் ( PAN ) அட்டை எண் ஆதார் ( Aadhaar ) அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா? எவ்வாறு தெரிந்துகொள்வது?

பான் ( PAN ) அட்டை எண் ஆதார் ( Aadhaar ) அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா ? இல்லையா ? என்பதை அறிய....



1.Enter PAN and Aadhaar Number.

2.Click on 'View Link Aadhaar Status'



3.The status of the linking is displayed in the next screen.

Check PAN Card is Linked with Aadhaar Card or not.

Click to Link
Read More »

School Morning Prayer Activities - 04.03.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.03.20

திருக்குறள்

அதிகாரம்:கல்வி

திருக்குறள்:396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம்:

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

பழமொழி

Justice for the self is not the same to others.

 ஊருக்கு ஒரு நியாயம். தனக்கு ஒரு நியாயம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.

பொன்மொழி

எந்நேரமும் நம் சிந்தையை வெற்றி  அடைய வேண்டும் என்று நிர்ணயித்தால்   இந்த வையம் நம்மை  புகழும் ...

______பரமஹம்சர்

பொது அறிவு

1.மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது?

1968

2.இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?

ஐசக் நியூட்டன்

English words & meanings

• Hair - a thin strand grows on the head and body of the people. உரோமம்

• Hare - a rabbit like animal with longer legs and ears. முயலின் ஒரு வகை.

ஆரோக்ய வாழ்வு

சீதாப்பழத்தில் நியாசின் மற்றும் டயட்ரி நார்ச்சத்துக்கள் உள்ளன .எனவே இவை கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கின்றன.

Some important  abbreviations for students

OLED - Organic light-emitting

IMEI - International Mobile Equipment Identity

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

குளக்கரை மீன்கள்

குளக்கரையின் கரையோரத்தில் கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்று கொக்கிடம் வந்து என்ன கொக்காரே! உமது ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்? என்று கேட்டது. அதற்கு கொக்கு செம்படவன் ஒருவன் வந்து ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவரையும் பிடித்துச் செல்லப் போகிறான் என்றது.

இதனைக்கேட்ட அம்மீன் உடனே உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடம் கழித்து பல மீன்கள் மேலே வந்து கொக்கின் முன்பு துள்ளியது. அனைத்து மீன்களும் கொக்கிடம் வந்து உதவிக்கேட்டன. அதற்கு கொக்கு உங்களை இந்த குளத்திலிருந்து வேறு குளத்திற்கு மாற்றிவிட்டால் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்க முடியும் என்றதும் மீன்களும் சம்மதித்தது.

நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்றிற்கு தானும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. கொக்கிடம் என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுப் போங்கள் என்று கெஞ்சியது. ஒப்புக்கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. தன் உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதனால் கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன் என்றது நண்டு.

ஆஹா! நமக்கு யோகம் அடித்தது என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

நீதி :
பிறர் சொல்லும் யோசனைகள் அனைத்தையும் அப்படியே ஏற்பது நன்றன்று.

இன்றைய செய்திகள்

04.03.20

◆மேட்டூர் - சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு 241 ஏக்கர் பட்டா நிலத்தை ஆர்ஜிதம் செய்ய ரூ.35 கோடி உட்பட ரூ.565 கோடி நிதிக்கான ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

◆ஐரோப்பிய நாடான அர்மேனியாவுக்கு ரூ.290 கோடி மதிப்புள்ள ஸ்வாதி ஆயுதங்களை விற்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் ஆயுத விற்பனையில் ரஷ்யா, போலந்தை இந்தியா முந்தியுள்ளது.

◆இலங்கையில் நாடாளுமன்ற பதவி காலம் நிறைவடைய ஆறு மாதம் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

◆கொல்கத்தாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதிச்சுற்றில் பலம் வாய்ந்த கர்நாடகத்தை பெங்கால் அணி வென்று இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது.

◆கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு பொதுச் செயலா் சைரஸ் போன்சா தெரிவித்துள்ளாா்.

Today's Headlines

🌸The Government of Tamil Nadu has approved a Rs 565 crore fund including Rs 35 crore to acquire 241 acres of paddy land for Mettur - Sarabanka hydropower project for this a government order has been issued.

🌸 India has signed an agreement to sell Swati weapons worth Rs.290 crores to Armenia.  This puts India ahead of Russia and Poland in arms sales.

 🌸Sri Lanka President Gotabhaya Rajapakse has ordered the dissolution of parliament, in spite of the six more months of his tenure to end.

 🌸The Bengal team have entered the final round of the Ranji Trophy semi-final in Kolkata.

🌸  Due to the affect of  coronavirus ,Indian Squash Federation General Secretary Cyrus Bonsa has said that the squash championship for Asian teams which is to be held in Kuala Lumpur, the Malaysian capital, has been postponed .

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

Govt Holidays & Restricted Holidays in Single Page

Read More »

பள்ளிக்கல்வி – டேராடூனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி- ஜனவரி 2021- நடைபெறவுள்ள சேர்க்கைக்கானத் தகுதித் தேர்வு - விளம்பர அறிக்கை வெளியிடுதல் - சார்பு இயக்குநரின் செயல்முறைகள்!


மேற்கண்டவிளம்பர அறிவிப்பினை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பள்ளி அறிவிப்புபலகையில் வைப்பதுடன் ( Notice Board ) , பள்ளி இறைவழிப்பட்டு கூட்டத்திலும் இத்தகவலை அனைத்துமாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு தங்கள் நிர்வாக வரம்பிற்குட்பட்ட அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தக்க அறிவுரைவழங்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள் .

இணைப்பு

விளம்பர அறிவிக்கை ( தமிழ் & ஆங்கிலம்



Read More »

NMMS December-2019 tentative answer key released by DGE

Read More »

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் நாளை ( 04.03.2020 ) வெளியிடப்படுகிறது



மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) , நவம்பர் 2019 தேர்வு முடிவுகள் 04.03.2020 அன்று முற்பகல் 11 . 30 மணியளவில் வெளியிடப்படுகிறது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் " Result ” என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் . NCERT ஒப்புதல் பெறப்பட்டவுடன் ( 2 வாரங்களில் ) தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .
Read More »
 

Most Reading

Tags

Sidebar One