Search

5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

Monday 27 January 2020


சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இந்த உறுதிமொழியினை ஏற்று நாளை ( 28.01.2020)  நடைபெற இருந்த பாமக . தொடர்முழக்கப் போராட்டம் இரத்து  செய்யப்பட்டுள்ளது.
Read More »

School Morning Prayer Activities -28.01.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.01.20

திருக்குறள்

திருக்குறள் : 365

அதிகாரம் : அவாஅறுத்தல்

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பொருள்

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

பழமொழி

Sadness and gladness succeed each other.

அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

இலக்கோடு செல்லும் மக்கள் வெற்றியடைகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எவ்வழியில் செல்கிறோம் என்று தெரியும்.

 ஏர்ல் நைட்டிங்கேல்

பொது அறிவு

1. பர்டோலி சத்தியாகிரகத்தை நடத்தியவர் யார்?

சர்தார் வல்லபாய் பட்டேல்.

 2. தண்டி உப்பு சத்தியாகிரகத்தின் போது காந்தியடிகள் நடந்த தூரம் எவ்வளவு ?

24 நாட்களில் 241 மைல் தூரம்.

English words & meanings

Bionomics – study of organisms interacting in their environments. உயிரினங்களின் வாழ்க்கை சூழல் பற்றிய அறிவியல் ஆய்வு.

Bacteriological - Related to the study of bacteria or microbes. நுண்ம ஆராய்ச்சியைச் சார்ந்த
நுண் உயிரிகளின் ஆராய்ச்சியைச் சார்ந்த

ஆரோக்ய வாழ்வு

சிறுதானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் இவை அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கு எதிராக ஒரு வல்லமைமிக்க பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது.

Some important  abbreviations for students

ITV - Independent Television.

BBC - British Broadcasting Corporation

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

கிளியின் நட்பு

குறள் :
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

விளக்கம் :
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

கதை :
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.

அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.

நீதி :
தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

28.01.20

* கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, சீனாவில் மருத்துவ படிப்புக்கு சென்றுள்ள சென்னை மாணவர்கள் அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

* கோயம்பேடு சந்தையில் இரு வகையான (பெல்லாரி மற்றும் சாம்பார்) வெங்காயம் வரத்து அதிகரிப்பு: சாம்பார் வெங்காயம் விலை ரூ.60 ஆக குறைந்தது.

* சீனாவின் வுஹான் நகரம் உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

* ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்பராஸ் கான் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் விளாசி அணியை முன்னிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

* உலகப் புகழ் பெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் என்பவர் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக பலியாகி உள்ளது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Today's Headlines

🌸Due to corona virus attack, Chennai students who have gone to medical study in China were unable to return.

 🌸Due to the increase in the coming of two types of onion (Bellary and Sambar)  in the koyambedu market, the price of sambar onion declined to Rs.60

🌸 Kerala Chief Minister Pinarayee Vijayan has written a letter to Prime Minister Modi demanding that flights should be sent to places including China's Wuhan city to protect the Indians from the corona virus attack.

 🌸 Sarbaraz Khan, who plays for Mumbai in Ranji Trophy cricket, has taken an unbeaten double century and lead  the team to the front.

 🌸Kobe Bryant, the world famous basketball champion, was tragically killed in a helicopter crash yesterday ,that shocked his fans around the world.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

Observation Mobile App ( TNVN ) - வகுப்பறை நோக்கின் என்ற புதிய மொபைல் ஆப் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி - SPD Proceedings!


வகுப்பறைக் கற்றல் விளைவு அடைவு நிலைகளைக் கண்காணித்தலின் ஒரு பகுதியாக வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை உற்றுநோக்கி கற்றலுக்கு உகந்த வகையில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்திடும் நோக்கிலும் , அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி பள்ளிக் கல்வித் துறையிலுள்ள அனைத்து ஆய்வு அலுவலர்களும் வகுப்பறை நிகழ்வுகளை உற்றுநோக்கும் வகையிலும் Observation Mobile App - தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு , சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் ( Pilot Study ) செயல்படுத்தப்பட்டு வருகிறது .

தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலியின் மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து முன்னேற்றம் அடையச் செய்ய எளிமையாக உள்ளது என்றும் , குறிப்பாக கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த முடிகிறதென்றும் , சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பார்வை மேற்கொண்ட பெரும்பாலான அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும் , இந்த வகுப்பறை நோக்கின் செயலியின் உபயோகமானது , ஆசிரியர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களிடத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாலும் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இச்செயலியின் உபயோகத்தை உடனடியாக கொண்டு செல்ல மாநில திட்ட இயக்ககத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது . எனவே , அனைத்து பார்வை அலுவலர்களும் மேற்கண்ட செயலியை உடனடியாக உபயோகப்படுத்தும் நோக்கில் , அனைத்து அலுவலர்களுக்கும் இந்த வகுப்பறை நோக்கின் செயலி குறித்து பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக , சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைத் தவிர்த்து , மீதமுள்ள 30 மாவட்டங்களில் ஒவ்வொரு வட்டார வள மைய அளவிலிருந்தும் , கணிணி தொழில் நுட்பத்தில் நன்கு கற்று தெரிந்த அனுபவமுள்ள கைபேசியை நன்றாக பயனுள்ள முறையில் கையாளக்கூடிய ஒரு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட Quality ஒருங்கிணைப்பாளர்கள் , EMIS ஒருங்கிணைப்பாளர்களையும் 29 . 01 . 2020 , 30 . 01 . 2020 ஆகிய தேதிகளில் கீழ்க்காணுமாறு அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு நேரிடையாக அழைத்து பயிற்சி அளித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More »

இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

முதல் மனைவி விவகாரத்து பெற்றாலோ, இறந்து விட்டாலோ இரண்டாவது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தருமபுரி மாவட்டம் மொரப்பூா் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராக பணியாற்றியவா் டாக்டா் சின்னசாமி. இவா், தனது முதல் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இருந்த போது, கடந்த 1975-ஆம் ஆண்டு சரோஜினி தேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தாா். சரோஜினி தேவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் சின்னசாமியின் முதல் மனைவி இறந்துவிட, கடந்த 1999-ஆம் ஆண்டு சின்னசாமி ஓய்வு பெற்றாா். சின்னசாமி தனது இரண்டாவது மனைவியை குடும்ப ஓய்வூதிய வாரிசுதாரராக நியமித்து விட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து தனக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, சரோஜினி தேவி உள்ளாட்சி நிதித்துறையிடம் மனு கொடுத்தாா். ஆனால், இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க ஓய்வூதிய விதியில் வழியில்லை எனக் கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிா்த்து சரோஜினி தேவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.




இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஓய்வூதிய விதிகளில் இரண்டாவது மனைவி சட்டப்பூா்வமான மனைவி இல்லை. எனவே, அவா் வாரிசு உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் கடந்த 2009-ஆம் ஆண்டு சின்னசாமி இறக்கும் வரை சரோஜினி தேவி மனைவியாக அவருடன் வாழ்ந்துள்ளாா்.



முதல் மனைவி விவாகரத்து வாங்கி விட்டாலோ, இறந்து விட்டாலோ நீண்ட நாள்கள் கணவருடன் வாழ்க்கை நடத்தும் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்வது சட்டவிரோதம் தான். ஆனால் முதல் மனைவி இறந்த நிலையில் உரிமை கோரும் மனுதாரா் போன்றவா்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி முதல் ஓய்வூதியத்தைக் கணக்கிட்டு 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
Read More »

நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!!

ஆசிரியர் தேவை

 கீழ்க்கண்ட நிரந்தரப் பணியிடத்திற்கு காலமுறை ஊதிய ( Time Scale ) அடிப்படையில் இப்பள்ளியில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகிறது .
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்
( தாவரவியல் ) - 1 பொது சுழற்சி
 ( GT ) M . Sc . , ( Botany ) with B . Ed . ,

விண்ணப்பங்கள் 04 . 02 . 2020க்குள் கீழ்க்கண்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும் . பள்ளிச் செயலாளர் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி ,
ஈரோடு - 638 001 .

Read More »

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் மேலும் தள்ளிப் போகிறதா?

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை.
இதனால் தேர்ச்சி பெற்றோர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். பள்ளிகளில் கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. 

பணிநியமனம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ஜனவரிக்குள் பணிநியமனம் நடைபெறும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது நீதிமன்ற தீர்ப்பால் வேதியியல் பாடத்திற்கான தேர்வுப்பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய பட்டியல் வெளியிடுவதா மேல்முறையீடு செய்வதா என்ற குழப்பம் அதிகாரிகளிடையே நிலவுகிறது. 

மேலும் நிதிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய பணிநியமனத்திற்கு ஒப்புதல் வழங்க நிதித்துறை தயங்குவதாலும் தற்போதைக்கு பணிநியமனம் இல்லை என்று தெரிகிறது.
மே மாதத்திற்குள் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
Read More »

RTI - ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் , அரசுப் பணியில் சேர்ந்த பிறகு , அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மைச் சான்று வாங்க வேண்டுமா?

ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் , அரசுப் பணியில் சேர்ந்த பிறகு , அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மைச் சான்று வாங்க வேண்டியது இல்லை . தேர்வுகள் எழுத சிறுவிடுப்பிற்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம் .
Read More »

5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிக்கை!

# பா . ம . க . தலைவர் ஜி . கே . மணி அறிக்கை

# 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி

# பாமக . தொடர்முழக்கப் போராட்டம் இரத்து !

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ , மாணவியரின் கல்வியை கடுமையாக பாதிக்கும் 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாளை ( 28 . 01 . 2020 ) செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள் . அதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் அவர்கள் மருத்துவர் அய்யா அவர்களை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் . 5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும் , இதுகுறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் அய்யா அவர்களிடம் அமைச்சர் தெரிவித்தார் . அதையேற்று நாளை பா . ம . க . நடத்தவிருக்கும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . அதைக் கேட்ட மருத்துவர் அய்யா அவர்கள் , 5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும் என்றும் , இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறினார் . மேலும் பொதுத்தேர்வை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டார் . அதையேற்ற பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் , 5 மற்றும் 8 - ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் உறுதியளித்தார் . பள்ளிக்கல்வி அமைச்சரின் இந்த வாக்குறுதியை ஏற்று நாளை நடைபெறுவதாக இருந்த தொடர்முழக்கப் போராட்டம் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .
Read More »
 

Most Reading

Tags

Sidebar One