Search

Breaking : TNPSC - Annual Recruitment Planner 2023

Thursday 15 December 2022

 

2023ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது TNPSC

TNPSC - Annual Recruitment Planner 2023 - Download here

Read More »

Flash news - TNTET 2022 - Paper 1 - Results Published

Wednesday 7 December 2022

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) – Paper-I-2022




Click Here to Download - TNTET 2022 - Paper 1 - Results - Pdf




Read More »

TNPSC - குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

Thursday 10 November 2022

 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21-இல் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்துத் தோ்வானது அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


பின்னர், நிா்வாகக் காரணங்களுக்காக இந்தத் தோ்வானது நவம்பா் 19-ஆம் தேதியன்று நடைபெறும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்தது.


அக்டோபா் 30-ஆம் தேதியன்று தேவா் ஜெயந்தி விழாவையொட்டி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிகிறது. 


இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 


எழுத்துத் தோ்வானது நவம்பா் 19-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது. 

Read More »

TNTET PAPER 1 - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER

Friday 28 October 2022

  

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - தாள் 1 க்கான விடைக் குறிப்பு வெளியீடு.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- I ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) 14.10.2022 முதல் 19.10.2022 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது. 


தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in/ ல் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் ( Session ) தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Question Paper TRB website- ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை ( objection தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும்.


 சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 28.10.2022 பிற்பகல் முதல் 31.10.2022 பிற்பகல் 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் . அங்கீகரிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் ( Standard ) Text Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் ( Guides , Notes ) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது , அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும் , பாட வல்லுநர்களின் இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது.


TNTET PAPER 1 - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER


Click here for Tentative Key


Click here for Objection Tracker


As per Notification No.01/2022 dated 07.03.2022, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) for the year 2022 from 14.10.2022 to 19.10.2022 in both sessions.


              Now, the Board has released the tentative key answers with the master question paper in PDF Format relevant to the session in which the candidates wrote on the exam day. The candidates may submit their objection or representation regarding the published key. Candidates should submit their objection or representation only through online objection tracker, available in the TRB website within the stipulated time i.e., from 28.10.2022 to 31.10.2022 A.N 05:30 pm.


              The candidates are instructed to submit their objection or representation regarding the key against master question paper only. (i.e., Question Number and options). For any objections, candidates should give proof from standard Text Books only. Guides/Notes will not be entertained by TRB. The representation in any other form including e-mail, courier, India-post or application in person will not be entertained. Representations without proper evidence will not be entertained. They will be summarily rejected. For each objection separate OTP will be generated.


              For this, the candidates are instructed to follow the procedure as follows:


              Step 1 – Click the link provided in the website


              Step 2 – Enter the applicant's Registration Number/Enrollment Number in the Registration Number Field


              Step 3 – Select the applicant's Date of Birth.


              Step 4 – Select the Date of the Examination


              Step 5 – Select the Scheduled Batch


              Step 6 – Enter the Captcha which is displayed on the portal screen


              Step 7 – After completing the OT Registration Form, the applicant will click the submit button, and the system will generate OTP to the registered mobile number of the applicant


              Step 8 – After Successful OTP verification, the system will move to the applicant OT landing page


              Step 9 – Read the Instructions and accept the declaration


              Step 10 – To view the Master Question paper – “Click here to view Master Question Paper"


              Step 11 – Raise the objection in the given fields


              Step 12 – Upload the supporting document and Click Save and Submit

Read More »

TNTET Paper 1 Examination 2022 - Schedule

Friday 7 October 2022

 Tamil Nadu Teachers Eligibility Test ( TNTET ) -Paper -1-2022 COMPUTER BASED EXAMINATION - SCHEDULE


Read More »

Breaking : TNTET Paper 1 - Computer Based Examination Admit Card Published

 


COMPUTER BASED EXAMINATION ADMIT CARD

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 14.10.2022 முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.09.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது . கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது . தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 ( District Admit Card.I ) இன்று 07.10.2022 முதலும் தேர்வு மையம் ( இடம் ) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here to download Admit Card


Click here to view Applications Rejected List

Read More »

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!!!

Thursday 6 October 2022

அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி - ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!!!




Read More »

கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிக்கை

Wednesday 5 October 2022

IMG_20221004_211838
கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிக்கை

Village Administration Tamil Nadu Village Assistant Service Rules , 1995 - Filling Up of Vacancies Instructions Issued - Reg . Reported.


Read More »

அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.10.2022

அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Applications are invited for the post of Scientific Assistant - Last date to apply: 18.10.2022

இந்திய வானிலை ஆய்வுத் துறையில் அமைச்சகம் சாராத அரசிதழ் அல்லாத (பதிவுறா) குரூப் ‘பி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Scientific Assistant

மொத்த காலியிடங்கள்: 900




தகுதி: இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18.10.2022 தேதியின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 




தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.10.2022

Read More »

தபால் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு... அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 19.10.2022

தபால் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு... அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! - SUPER JOB IN POSTAL DEPARTMENT... DON'T MISS A RARE OPPORTUNITY - Last Date To Apply: 19.10.2022

சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




அறிவிப்பு எண். MSE/B9-4/XI/2022

பணி: Skilled Artisans

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. M.V.Mechanic - 2
2. M.V.Electrician - 1
3. Painter - 1
4. Tyreman - 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.வி.எம் பிரிவுக்கு விண்ணப்பிப்போர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.




கட்டணம் விவரம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணம் ரூ.400. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக(ஐபிஓ) எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 




விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்று செய்து அதனை விரைவு, பதிவு தபாலில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
The Senior Manager(JAG)
Mail Motor Service,
No.37, Greams Road, Chennai - 600 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 19.10.2022
Read More »

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!


ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( Staff Selection Commission ) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது . இந்த ஆண்டு 20,000 - க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read More »

20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் - மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics  ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



மேலும் C  பிரிவு பணிகள் 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL)  தேர்வு மூலம் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும், இப்பொதுப்பணிகள் தவிர Junior Engineer தேர்வு, Stenographer  தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல்    Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது. இப்பாடப் பிரிவுகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே!




எனவே தமிழ்நாடு மாணவர்கள் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுநர்களை கொண்டு, ஒரு நாள் கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை 09.10.2022 அன்று சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.  

அரசு நடத்தும் இப்பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக் கொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி முழுவதுமாக  இணையதளத்திலும், அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

IAS / IPS முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் குறித்து தலைமைச் செயலாளரின் செய்திக் குறிப்பு!

Sunday 2 October 2022

 


தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் , அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு , 28.05.2023 மத்திய நடைபெற அன்று குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் ( ஞாயிற்றுக்கிழமை ) நடத்தும் தேர்வாணையம் பயிற்சியினை அளிக்க உள்ளது . உள்ள சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி , உணவு , தரமான நூலகம் , காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது . இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும் , 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது . 

அதே போன்று , அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன . 2023 - ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு ( UPSC ) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 07 : 10.2022 முதல் 27.10.2022 வரை விண்ண ப்பிக்கலாம் . இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் . மேலும் , விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது . மேலும் , பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் . தகுதியுடைய நபர்கள் 13.11.2022 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.


முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு . தெரிவு செய்யப்படும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர் . 2022 , டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.


Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials


Read More »

குரூப்-1 டிப்ஸ்: இந்திய பொருளாதாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ

Wednesday 28 September 2022

 TNPSC Exam Preparation: குரூப் 1 பதவிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய பொருளாதாரத்தில் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் இடம் பெறுவது வழக்கம். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலனைடையும் வகையில் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார்மயம்(Disinvestment) தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி), வங்கிப் பணியாளர் தேர்வாணையயம் (ஐபிபிஎஸ்), ரயில்வே வாரியத் தேர்வுகள் (ஆர்ஆர்பி), யுபிஎஸ்சி  போன்ற போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் இந்த தலைப்பு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

செய்தி:  துணை நிறுவனங்களை மூட பொது துறை நிறுவனத்துக்கு அனுமதி: 

ஒரு பொதுத்துறை நிறுவனம் அதன் கிளை அல்லது பிரிவுகளை மூடுவதற்கோ அல்லது அவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கோ பொதுத்துறை நிறுவனத்தின்  இயக்குநர்கள் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து   மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி மகாரத்னா, நவரத்னா, மற்றும் மினிரத்னா வகையைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு, அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் அல்லது அவற்றைக் கையகப்படுத்திக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும், பங்கு விலக்கல் அல்லது துணை நிறுவனங்களை மூடுவதற்கு தேவையான அதிகாரம் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்:

முன்னதாக, அரசு பொதுத் துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மய கொள்கைக்கு (New Policy for strategic Disinvestment) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

பிபிசிஎல், ஏர் இந்திய,  ஐடிபிஐ வங்கி, இந்திய கப்பல் கழகம், ரயில்வே துறையின் சரக்குப் பெட்டகக் கழகம் (Container Corporation of india), பாதுகாப்பு துறையின் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்,  பவன் ஹான்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஐபிஓ,நீலச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் (NINL) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் நிர்வாக கட்டுப்பாடு மாற்றத்துக்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஏர் இந்திய நிறுவனம் விற்பனை:  முன்னதாக, கடன் சுமையில் இருந்து வந்த ஏர் இந்திய நிறுவனத்தை மத்திய அரசு விற்றது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாலஸ் நிறுவனத்தி டம் இருந்து ரூ. 2700 கோடியை அரசு பெற்றுக் கொண்டது.   மேலும், ஏர் இந்தியா மற்றும் ஏஐஎக்ஸ்எல்-லின்  மொத்தக் கடனில் கடனில் (61 ஆயிரம் கோடி) ரூ,15,300 கோடி கடன் அளவை டாட்டா நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.

ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏஐஎக்ஸ்எல் -ன் (AIXL ) 100% பங்குகள் மற்றும் ஏஐஎஸ்ஏடிஏஎஸ்-ன் (AISATS) 50% பங்குகள் டாட்டா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எல்ஐசி பங்குகள் விற்பனை (LIC IPO): இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகத்தின் 3.5  பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்தது. இதன் மூலம் தற்போதைய பங்கு வெளியீட்டின் மதிப்பு ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for TNPSC,TRB,TET Daily updates & studymaterials

Read More »

PGTRB தேர்வர்கள் 26.09.2022-க்குள் withheld நீக்கம் செய்ய சான்றிதழ்களை சமர்பிக்க TRB உத்தரவு.

Friday 23 September 2022

PGTRB தேர்வர்கள் 26.09.2022-க்குள் withheld நீக்கம் செய்ய சான்றிதழ்களை சமர்பிக்க TRB உத்தரவு.

2020-2021ஆம் ஆண்டுமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை . 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன. மேலும் இதனைத் தொடர்ந்து 0209.2022 முதல் 04.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி நாடுநர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இனசுழற்சி அடிப்படையிலும் History , Economics , Geography , Mathematics , Physics , Chemistry , Botany , Zoology , Computer Science , Commerce , Physical Education , English , Tamil , Home Science and Political Science ஆகிய பாடங்களுக்கு தற்காலிகத் தெரிவுப் பட்டியல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன . அவ்வாறு வெளியிடப்பட்ட 3016 தேர்வர்களில் சில தெரிவர்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காததால் 319 தெரிவர்கள் withheld ல் வைக்கப்பட்டுள்ளனர். 

அவ்வாறு withheld- ல் வைக்கப்பட்டுள்ள தெரிவர்களுக்கு 17.09.2022 நாளிட்ட பத்திரிகைச் செய்தி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காத சான்றிதழ்களை 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் 248 தெரிவர்கள் உரிய சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பித்துள்ளதால் அவர்களின் withheld நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை சமர்ப்பிக்காத தெரிவர்கள் தங்களது உரிய சான்றிதழ்களை 26.09.2022 - க்குள் சமர்ப்பிக்கும்பட்சத்தில் இத்தெரிவர்களின் withheld நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

withheld List 





Read More »

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 - தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 
 14-10-22 முதல் 20-10-22 வரை நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!!




Read More »

PGTRB - முதற்கட்டமாக தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு!

Saturday 10 September 2022

 PGTRB - முதற்கட்டமாக வரலாறு, புவியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு!


2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாசி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை I / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.


 25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் பணிநாடுநர்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான தங்களது சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது . பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணிநாடுநர்கள் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு 27.08.2022 அன்று இவ்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்ட 1 2 விகிதாசாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு 02.09.2022 முதல் 04.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 


இதனடிப்படையில் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இனச்சுழற்சி அடிப்படையிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


GEOGRAPY - Provisionally Selection List

HISTOY - Provisionally Selection List

PHYSICS - Provisionally Selection List


Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

TRB - Polytechnic Lecturer - Addition / Deletion in the Provisional Selection List Published

 


ADDITION / DELETION IN THE PROVISIONAL SELECTION LIST - Download here...

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials


Read More »

NEW TRB Website Beta Version - Click Here Direct Link

Friday 9 September 2022

 The Government of Tamilnadu has constituted the Teachers Recruitment Board to conduct various Test for the selection of teachers under different sectors such as Secondary Grade Teachers, BT, PG, Special Teachers, Computer Instructors, Agricultural Instructors and BEOs in the respective Departments of School Education and Elementary Education Department, Adi Dravidar and Tribal Welfare Department, Backward classes, Most Backward classes and Minorities Welfare Department, Social Defence Department, Chennai Corporation and Coimbatore Corporation.


Junior Lecturers, Lecturers and Senior Lecturers in SCERT and in Higher Education Department for the post of Assistant Professors, Lecturers in Government Engineering Colleges and Government Arts and Science Colleges, Government Polytechnic Colleges and in Government Law Colleges respectively.

Following the guidelines of the Right of Children to Free and Compulsory Education Act 2009, the Teachers Recruitment Board took up the responsibility of conducting TNTET (Tamilnadu Teacher Eligibility Test) from 2012 onwards.


Presently, The office of the Teachers Recruitment Board, Tamilnadu (TRB) is located in the premises of the Directorate of Public Information (DPI).


TRB - NEW TRB Website Beta


Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

தமிழகத்தில் இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய விவரங்கள்

 தமிழகத்தில் இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய விவரங்கள்

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST

As per provisions of sub-section (1) of section 23 of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 (RTE Act), the National Council for Teacher Education (NCTE) vide Notifications dated 23rd August 2010, 29th July 2011 and 28th June 2018 laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher in classes I to VIII.


The Government of Tamil Nadu vide G.O. Ms. No.181. School Education (C2) Department, dated 15.11.2011 appointed the Teachers Recruitment Board as the nodal agency for conducting the Teachers Eligibility Test (TET).


Subsequently Government issued G.O. Ms. No. 149, School Education (TRB) Department. dated 20.07.2018, notifying that TET qualified candidates have to appear for another written competitive examination for the recruitment.


TET Total Passed Candidates List - View here...

Read More »

TET - ஆசிரியர் தகுதி தேர்வு - MINIMUM QUALIFYING MARKS - DETAILS

 

TET - ஆசிரியர் தகுதி தேர்வு - MINIMUM QUALIFYING MARKS - DETAILS


ஆசிரியர் தகுதி தேர்வு - MINIMUM QUALIFYING MARKS- DETAILS

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

TNPSC : குரூப் - 1 தேர்வு நவ.19-க்கு தள்ளிவைப்பு

 TNPSC: குரூப் - 1 தேர்வு நவ.19-க்கு தள்ளிவைப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நவ.19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை,நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது.


நடப்பு ஆண்டில் துணை ஆட்சியர் (18), காவல் துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணை பதிவாளர் (13), வணிகவரி உதவி ஆணையர் (25), ஊரகமேம்பாடு உதவி இயக்குநர் (7),மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (3) என குரூப்-1 பதவியில்காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது.


அதில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30-ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


தொடர்ந்து அதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜூலை 21-ல் தொடங்கி ஆக.22-ம் தேதி நிறைவு பெற்றது. அதன் பிறகு, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆக.27முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.


இந்நிலையில், குரூப்-1 தேர்வுதள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுபற்றி டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அக்.30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட குரூப்-1 பணிக்கான முதல்நிலைத்தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர்19-ம் தேதி நடத்தப்பட உள்ளது.கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தளங்களில் அறியலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

TN TET PRESS RELEASE - ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Saturday 3 September 2022

 

TN TET PRESS RELEASE - ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி ஒத்திவைப்பு: டிஆர்பி அறிவிப்பு

வரும் 10 ஆ தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்-I-க்கான தேதி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1க்கான தேர்வுகள் மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இதற்கிடையே, நிர்வாக காரணங்களினால், தாள் 1-க்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I-க்கான தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பொதுவாக, தேர்வுக்கு 7 நாள்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்த விவரமும், 3 நாள்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் நிலையில், 7 நாள்களுக்கு முன்பாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Read More »

TET, TNPSC, POLICE TAMIL TEXT BOOK STUDY MATERIALS - 01

Tuesday 30 August 2022

 1.‘நிலவுப்பூ’என்னும்கவிதைத்தொகுப்பின்ஆசிரியர்.

  • சிற்பிபாலசுப்பிரமணியன்
  • தி.சு.நடராசன்
  • ரா..பத்மநாபன்
  • அய்யப்பமாதவன்

2.சிற்பிபாலசுப்பிரமணியத்தின்சாகித்தியஅகாதெமிவிருதுபெற்றநூல்.

  • ஒளிப்பறவை 
  • சூரியநிழல்
  • ஒருகிராமத்துநதி
  • பூஜ்யங்களின்சங்கிலி

3.பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் உரைநடை நூல் அல்ல.

  • இலக்கியச்சிந்தனைகள்
  • மலையாளக்கவிதை
  • அலையும்சுவடும்
  • சூரியநிழல்

4.மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்தவர்.

  • சிற்பிபாலசுப்பிரமணியன்
  • உத்தமசோழன்
  • அய்யப்பமாதவன்
  • வண்ணநிலவவன்

5.பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் கவிதை நூல் அல்ல.

  • ஒளிப்பறவை
  • ஒருகிராமத்துநதி
  • மலையாளக்கவிதை
  • பூஜ்யங்களின்சங்கிலி

6.அகத்திணைபுறத்திணை செய்திகளைப் பாடுபொருள்களாகக் கொண்ட இலக்கியம்.

  • சங்கஇலக்கியங்கள்
  • காப்பியங்கள்
  • சிற்றிலக்கியங்கள்
  • இக்காலஇலக்கியங்கள்

7.காளைகளின்பலஇனங்கள்இருப்பதைக்கூறும்கலித்தொகைப்பகுதி.

  • குறிஞ்சிக்கலி
  • முல்லைக்கலி
  • மருதக்கலி
  • நெய்தற்கலி

8.இலக்கியத்தையும்மொழியையும்ஒருசேரப்பேசுகின்றஇலக்கணநூல்.

  • அகத்தியம்
  • தொல்காப்பியம்
  • முத்துவீரியம்
  • இலக்கணவிளக்கம்

9. …………. என்பது செறிவாக்கப் பட்ட ஒரு வடிவமைப்புஅதுவாக்கிய அமைப்பில்ஒரு சொல்போலவே நடைபெறும்.

  • தொகைமொழி
  • விரிமொழி
  • இயல்புமொழி
  • விகாரமொழி

10. ‘எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு பயனிலை’ என்ற தொடர் அமைப்பிலிருந்து பிறழ்ந்து வரும் தொடர்.

  • மாறுபட்டத்தொடர்
  • மறுதலைத்தொடர்
  • வேறுபட்டத்தொடர்
  • ஒன்றிணைந்ததொடர்

11. ‘தொடரியல்பிறழ்வுநிலை’பெரிதும்காணப்படும்இடம்……..

  • பாடலின்முதல்
  • பாடலின்நடு
  • பாடலின்இறுதி
  • பாடலடி

12.தமிழ்அழகியலைக்கட்டமைப்பதற்கானமுதன்மைஆதாரம்.

  • வாய்மொழிஇலக்கியம்
  • சங்கஇலக்கியம்
  • நீதிஇலக்கியம்
  • காப்பியம்

13.‘தமிழ்அழகியல்’என்னும்நூலின்ஆசிரியர்.

  • தி..நாகராஜன்
  • .சுந்தரமூர்த்தி
  • தி.சு.நடராசன்
  • மு.கிருஷ்ணமூர்த்தி

14.தி.சு.நடராசனின்அல்லாதநூல்எது?

  • கவிதையெனும்மொழி
  • திறனாய்வுக்கலை
  • ஒளிப்பறவை
  • தமிழ்அழகியல்

15. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களிள் குறிப்பிடத் தக்கவர்.

  • ரா..பத்மநாபன்
  • அய்யப்பமாதவன்
  • தி.சு.நடராசன்
  • அன்னிதாமசு

16. இருவேறு பொருள்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறிபின் வேறுபடுத்திக் காட்டுவது.

  • வேற்றுப்பொருள்வைப்பணி
  • பிரிதுமொழிதலணி
  • பொருள்வேற்றுமைஅணி
  • பொருளணி

17. தண்டியலங்காரத்தின் மூல நூல் எது?

  • காவியதர்சம்
  • குவலயானந்தம்
  • மாறனலங்காரம்
  • வீரசோழியம்

18. தண்டியலங்காரம் இயற்றப்பட்டக் காலம் ……… நூற்றாண்டு.

  • எட்டாம்
  • ஒன்பதாம்
  • பத்தாம்
  • பன்னிரண்டாம்

19. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

  • தண்டியலங்காரம்
  • மாறனலங்காரம்
  • முத்துவீரியம்
  • குவலயானந்தம்

(முத்துவீரியம் தவிர்த்து ஏனையவை அணியிலக்கணம் மட்டும் கூறும் இலக்கண நூல்களாகும்.)

20. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

  • மாறனலங்காரம்
  • இலக்கணவிளக்கம்
  • தொன்னூல்விளக்கம்
  • வீரசோழியம்

(மாறனலங்காரம் தவிர்த்து ஏனையவை பிற இலக்கணத்தோடு அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்களாகும்.)

21. எட்டையபுரம்மன்னர்களின்வரலாற்றைக்கூறும்நூல்.

  • பிரபந்ததீபிகை
  • தருமதீபிகை
  • வம்சமணிதீபிகை
  • சிரார்த்ததீபிகை

22. பரலிசுநெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார்.

  • .பொ.சி
  • திரு.வி.
  • ..சி
  • பி.சா.சு

23. ‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலைப் பதிப்பித்தவர்.

  • தி.சு.நடராசன்
  • .முத்துசாமி
  • பரலிசு.நெல்லையப்பர்
  • ரா..பத்மநாபன்

24. எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம்.

  • பேசுவதைப்போலவேஎழுதுதல்
  • எழுதுவதுபோலவேபேசுதல்
  • வட்டாரவழக்கில்பேசுதல்
  • பிறமொழிகலந்துபேசுதல்

25. தனிக்குறிலை அடுத்து வராத ஒற்றுகள் எவை?

  • ல்,ர்
  • ய்,ர்
  • ய்,ழ்
  • ர்,ழ்



Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »
 

Most Reading

Tags

Sidebar One