Search

மாணவர்களுக்கான வகுத்தல் பயிற்சிதாள்கள்

Thursday 5 March 2020

DAILY  MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION
DIVISION  WORKSHEET  WITH ANSWER KEY

வகுத்தல் பயிற்சிதாள்கள் DIVISIONS WORKSHEETS INTRODUCED

2 DIGIT NUMBERS
4 DIGIT NUMBERS ADDITION SUBTRACTION  DIVISION INTRODUCED

Click here to download pdf

இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
Read More »

தினம் ஒரு புத்தகம் -அன்பாசிரியர் (50 ஆசிரியர்களின் வகுப்பறை நிகழ்வுகள்)


இந்து தமிழ் திசை கடந்த வாரம் ஞாயிறன்று கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிட்ட நூல் இது. நூலாசிரியர் ரமணி பிரபா தேவி .

இன்றைக்கு ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு முன்பு ,ஆன்லைன் இந்துவில் ஒரு புதிய முயற்சியாக நிருபர்  ரமணிப் பிரபா அவர்களின் பணியாக உருவானது தான்  " அன்பாசிரியர் "தொடர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த எதிர்மறைக் கண்ணோட்டம் இருந்த காலகட்டத்தில்  2015 களில் நேர்மறையாக நம்பிக்கை அளிக்கக் கூடிய செயலை முன்னெடுத்த இந்து தமிழ் திசையின் பணிதான் அன்பாசிரியர் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் என்ற ஒற்றை சொல்லில் பல எதிர்பார்ப்புகளையும்  மனதுள் வைத்து இயங்குவது அடிப்படையில் மனித இயல்பு. அப்படி ஆசிரியர்களது மனதிலும் ஏக்கங்கள் இருந்த காலங்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. அதற்குரிய பணிகளை அவர்கள் செய்திருப்பதும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் அங்கு 50 ஆசிரியர்களது பணிகளை அங்கீகரித்து இப்புத்தகம்வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வகுப்பறையும் அன்பான ஆசிரியர்களால் தான் நிரம்பி இருக்கும். அந்த அன்பு ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படும். சிலரால் பாடப் பொருள் அறிவாக செறிவாக குழந்தைகளுக்கு வழங்கப்படும். சில ஆசிரியர்கள் அன்பான அணுகுமுறை , சிலரோ தன் அன்பின் வெளிப்பாட்டை மாணவர்களைத் திட்டுவதன் மூலம் கூட வெளிப்படுத்திடுவர். சிலர் ஆசிரியராக தனது பொறுப்புகளையும் கடமைகளையும் செய்து விட்டு நிம்மதியாக குழந்தைகளுடன் இயங்குவர் . சிலர் தன் கைக் காசைப் போட்டும் சிலர் அடுத்தவரிடம் பொருள் பெற்றும் தன் பள்ளிக் குழந்தைகளுக்கு எதையாவது செய்து கொண்டு இருப்பர்.
இணையப் பயன்பாடு  பெருகிவிட்ட இந்நாட்களில் பலர் தங்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்திக்  கொண்டுள்ளனர். பல்லாயிரம் ஆசிரியர்கள் அது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் எப்போதும் தங்கள் அன்பை தன்னைச் சுற்றியுள்ள  குழந்தைகளிடம்  வெளிப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். என்ன ... அதன் அளவில் கூடக் குறைய இருக்கலாம் , அவ்வளவு தான்.

அப்படியான ஆசிரியர்களில் தங்கள் கண்ணுக்கெட்டிய , காதுகளுக்கெட்டிய மிகச் சிறிய எண்ணிக்கையிலான 50 ஆசிரியர்களைத் தான் இந்து தமிழில் பணியாற்றி  வரும் ரமணிப் பிரபா நிருபர் அவர்கள் இந்துவின்  இணையப் பக்கத்தில் தொடராக எழுதினார்.
இவர்கள் அனைவரையும் அன்பாசிரியர்களின் முன்னோடிகள் என நினைவுப் பரிசை விருதாக அளித்து கெளரவப் படுத்தினார் தற்போதைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் .

இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பள்ளிப் பருவமும் மனதுக்கு நெருக்கமான ஆசிரியர்களும் நிச்சயம் நினைவில் வருவர் என்பது உறுதி.

பக்கங்கள் : 216
விலை: 200

-பகிர்வு உமா மகேஸ்வரி
Read More »

Census 2021 - 34 Questions Model Sheet

வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள் கேட்கப்பட உள்ளது. அதற்கான மாதிரி படிவமானது A , B தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Census 2021 - 34 Questions Model Sheet - Download here ( Pdf ) 
Read More »

TNTP இணையத்தில் பதிவேற்றம் செய்த சிறந்த பாடலுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழக ஆசிரியர்களுக்கென இயங்கும் இணையதளம் TNTP ( TAMILNADU TEACHERS PLATFORM) ல் ஆசிரியர் திரு காஜா மொகைதீன் அவர்களது பாடலான மூன்றாம் வகுப்பு முதல் பருவத்தின்  "தமிழ் அமுது" என்ற பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு , TNTP தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு , பள்ளிக் கல்வித்  துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற  பாராட்டுச் சான்றிதழ்...

ஆசிரியர் திரு காஜா மொகைதீன் ,
ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம்.
Read More »

ஏப்ரல் மாதம் முதல் 45 நாட்களுக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2020ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு தீவி ரம் காட்டி வருகிறது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வருவாய்த்துறை நிர்வாக ஆணையரும் , அரசு முதன்மை செயலாள ருமான ராதாகிருஷ்ணன் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார் . அதன் படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வீடியோ கான்ப ரன்சிங்கில் திருப்பத்தூர் கலெக்டர் சிவனருள் , ராணிப்பேட்டை கலெக் டர் திவ்யதர்ஷினி , வேலூர் டிஆர்ஓ பார்த்தீபன் ஆகி யோர் கலந்து கொண்ட னர் . இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறிய தாவது : ஏப்ரல் மாதம் முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள் ளது . அதற்கான பணிகளில் அந்தந்த மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது . இந்த பணியில் ஆசிரியர் கள் மற்றும் அரசு ஊழியர் கள் மட்டும் ஈடுபடுத்தப் பட உள்ளனர் . கடந்த முறை போல தொண்டு நிறுவன ஊழி யர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார் கள் .

முழுக்க முழுக்க இந்த அரசு ஊழியர்களால் மட் டுமே நடத்தப்படுகிறது . ஒரு அரசு ஊழியர் தனக்கு வழங்கப்படும் பகுதியில் 45 நாட்களுக்குள் கணக்கெடுத்து முடிக்க வேண்டும் . வீடு , வீடாக சென்று கணக் கெடுக்க வேண்டும் . ஒரே இடத்தில் அமர்ந்து கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர் . இந்த பணிக்கு என தனியாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது . அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டம் வாரியாக பிரித்து வழங் கப்பட்டுள்ளது . பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பட்டியல் தாலுகா வாரி யாக தயாரிக்க உத்தரவி டப்பட்டுள்ளது .

இதற்கான ஆயத்தபணி களை இந்த மாதத்துக்குள் முடித்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் . இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி மோதகாலத்துக்குள் முடிக் கப்படும் . பின்னர் அடுத்த ஆண்டு 2021ம் ஆண்டு மக் கள் தொகை விவரம் வெளி யிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .

Read More »

School Morning Prayer Activities - 06.03.2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.03.20

திருக்குறள்

அதிகாரம்:கல்வி

திருக்குறள்:398

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

விளக்கம்:

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

பழமொழி

Crows are never the whiter for washing themselves.

 உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

இரண்டொழுக்க பண்புகள்

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.

பொன்மொழி

வாய்மை மகத்துவமானது. பொய்யான பரபரப்புகள் என்றாவது ஒருநாள் கலவரத்தில் முடியும்.........திருவள்ளுவர்

பொது அறிவு

1.இந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும் நீர்விழ்ச்சி எது?

 ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி

2.உலகின் பெரிய ரயில் நிலையம் எது?

 கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்,நியூயார்க்

English words & meanings

Jeans - a type of dress made of strong cotton clothe. முரட்டு பருத்தி துணியில் தக்கப் பட்ட ஆடை.

Genes - a unit of information inside a cell which says what a living thing will be like.
உயிரணுவின் மரபுக் கீற்று

ஆரோக்ய வாழ்வு

குளிர் காய்ச்சலுக்கு சீதாப்பழம் நல்ல நிவாரணம் தரும் மருந்தாக அமைகிறது. சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு சேர்த்து எலுமிச்சை சாறில் குழைத்து தலைக்கு தடவினால் முடி உதிர்வு நிற்கும்.

Some important  abbreviations for students

Joke - Joy of kids Entertainment

VGA - Video Graphics Array

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

ஏழ்மையிலும் நேர்மை

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர், ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள். மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வந்தர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

நீதி :
பொறுமை, நேர்மை இரண்டும் இருந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.

இன்றைய செய்திகள்

06.03.20

◆புதுச்சேரி கடற்கரையோரப் பகுதிகளில் இந்த ஆண்டில் 10,100 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு; வனத்துறையினர் நடவடிக்கை.

◆உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

◆ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: கிருஷ்ணா நதிநீரை கூடுதலாக விடுவிக்க கோரிக்கை.

◆மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

◆இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷிதேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Today's Headlines

🌸This year at the Puducherry sea shore 10,100 Oliver Ridley Turtle's eggs were collected by Forest Department.

🌸In the Higher Education Tamil Nadu leads first all over India says our CM.

🌸 Tamil Nadu ministers met with Andhra CM in regard with the requesition of releasing more of Krishna river water.

🌸 In women's T20 World Cup finals India will meet Australia.

🌸 Former spinner Sunil Joshi is selected as the Chairman for the Indian Cricket Team Selection Committee.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்? ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

ஆதி திராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

* அரசு,  ஆதி திராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்.

* ஆசிரியர்களின் வருகையை பதிவுசெய்ய பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா?

ஆதி திராவிடர் நலத்துறை,  பள்ளிக்கல்வித்துறை பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

கரூர் மகேந்திரன் தொடர்ந்த வழக்கை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
Read More »

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும் ஈடுபடுத்த திட்டம்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2020ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வருவாய்த்துறை நிர்வாக ஆணையரும் , அரசு முதன்மை செயலாளருமான ராதாகிருஷ்ணன் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார் . அதன் படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வீடியோ கான்பரன்சிங்கில் திருப்பத்தூர் கலெக்டர் சிவனருள் , ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி , வேலூர் டிஆர்ஓ பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது :

ஏப்ரல் மாதம் முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . அதற்கான பணிகளில் அந்தந்த மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது . இந்த பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டும் ஈடுபடுத்தப் பட உள்ளனர் . கடந்த முறை போல தொண்டு நிறுவன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார் கள் .

முழுக்க முழுக்க இந்த அரசு ஊழியர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது . ஒரு அரசு ஊழியர் தனக்கு வழங்கப்படும் பகுதியில் 45 நாட்களுக்குள் கணக்கெடுத்து முடிக்க வேண்டும் . வீடு , வீடாக சென்று கணக் கெடுக்க வேண்டும் . ஒரே இடத்தில் அமர்ந்து கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர் . இந்த பணிக்கு என தனியாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது . அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டம் வாரியாக பிரித்து வழங் கப்பட்டுள்ளது . பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பட்டியல் தாலுகா வாரி யாக தயாரிக்க உத்தரவி டப்பட்டுள்ளது .

இதற்கான ஆயத்தபணி களை இந்த மாதத்துக்குள் முடித்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் . இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி மோதகாலத்துக்குள் முடிக் கப்படும் . பின்னர் அடுத்த ஆண்டு 2021ம் ஆண்டு மக் கள் தொகை விவரம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
Read More »

1000 USEFUL VERBS WITH TENSE FORMS IN ENGLISH FOR ALL CLASSES

Read More »

அரசு பணியிலிருந்து உடல் நலம் இயலாமை காரணமாக விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் அரசாணை ( GO NO 10 , DATE : 13.02.2009


1. மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வபெற்ற அசு ஊழியர்கள் ஆண் பெண் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன சலுகைள் அளிக்கப்பட்டுள்ளது.



2 .மருத்துவ இயலாமை காணமாக பாணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 லிருந்து 53 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது .

3 . இந்நிலையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்குக் தடையாணை பிறப்பிக்கப்பட்டு அத்தடையானது அரசாணை ( நிலை ) எண் 6 . பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை , நாள் 21.02.2006ல் விலக்கி கொள்ளப்பட்டு , அரசானை ( நிலை ) எண் 61 , தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை நாள் 19.06.2006ல் இது குறித்து வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது .



4 . உச்சநீதி மன்றத்தீர்ப்பு மற்றும் - பணியாளர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் , அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , அரசாணை ( நிலை ) எண் 42 , தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை , நாள் 12.03.2007 - ல் கருணை அடிப்படையிலான பணிநியமாம் குறித்து சில வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியாடப்பட்டன.



Download Go 10 pdf....
Read More »

SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம்? விளக்கும் ஆசிரியர்!

நமது மாத ஊதியத்தில் மாதந்தோறும் பிடிக்கின்ற வருமானவரி பிடித்தத்திற்கு பதிலாக......... மாத ஊதியத்தை பெறுகின்ற SBI வங்கி கிளைக்கு செல்லாமலேயே SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஒரு ஆண்டிற்கு (12மாதங்கள்) வருட ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம் என்பதையும், RD பிடித்தம் செய்வது எப்படி என்பதையும் விளக்கும் வீடியோ.



By
N.சிவகுமார்,
President,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,
தேனி மாவட்டம்.



























Read More »

தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சி-1500 சொற்கள்


தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்புத்திறன் பயிற்சிக்காகவும், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டகமாகவும், தமிழில் சுமார் 1500 சொற்களுக்கு மிகாமல் தொகுத்துள்ளேன் . தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். தட்டச்சு செய்யும் போது ஏதாவது பிழை ஏற்பட்டிருப்பின் மாற்றிக் கொள்ளவும்.



Click here to download



T.தென்னரசு,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், இரா.கி.பேட்டை ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்
Read More »

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு தனித்தேர்வர்களுக்கானது - அமைச்சர் விளக்கம்

ஏப்ரல் 2020 - ல் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 02 . 04 . 2020 முதல் 09 . 04 . 2020 வரை நடைபெறவுள்ளது . அத்தேர்விற்கு கடந்த ஆண்டில் நிரந்தரமான தேர்வு மையங்கள் அமைக்கக் கோரி தங்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள தேர்வு மையப் பட்டியல் பார்வை - ல் கானும் கடிதத்துடன் இணைத்தனுப்பப்பட்டது .



அத்தேர்வு மையங்களுக்குரிய முதன்மை கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரை நியமனம் செய்து பட்டியலை 13 . 03 . 2020 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதுடன் , தாங்களே அப்பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் , வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் , துறை அலுவலர்களின் கைபேசி எண் மற்றும் தேர்வு மையத்தின் ( Mail ID ) மின்னஞ்சல் முகவரியை பெற்று அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .



தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட விவரத்தினை , தெரிவித்து தேர்வினை சுமூகமாக நடத்திட உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .




Read More »

தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.

மார்ச் 2020 , இடைநிலைக் கல்வி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்விற்கான முகப்புத் தாட்கள் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டது . முகப்புத்தாட்களை முதன்மை விடைத்தாட்களுடன் இணைத்து தைக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.



 தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வெழுதும் அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வெழுதும் அனைத்து பாடங்களுக்கான முகப்புத் தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .





Read More »

மார்ச் 9,10 இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

குமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர்முகம் மது சாகிப் ஒலியுல்லாஹ் ( ராலி ) ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 9ம் தேதி திங்கள்கிழமை ) உள்ளூர்விடு முறைமறும்மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிக்கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துமாநிலஅரசுஅலு வலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது .



மார்ச் 9ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் இரண்டாவது சனிக் கிழமையான மே 9ம் தேதி அன்றுகுமரிமாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்க ளுக்கு வேலைநாளாக இருக்கும் .



மார்ச் 10ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜூன் மாதத்தில் இரண்டா வதுசனிக்கிழமைஜூன் 13ம் தேதி அன்று குமரி மாவட் டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் . மார்ச் 9 , 10 குமரிமாவட் டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப் பட்ட அவசர பணிகளை கவனிக்கும் வகையில்தேவை யான பணியாளர்களை கொண்டு இயங்கும் . அரசு பள்ளிகல்வித்துறைசார்பில் நடைபெற்றுக்கொண்டிருக் கும் அரசுதேர்வுகளுக்கு எவ் வித இடையூறுமின்றி கல்வி நிறுவனங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் .



இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
Read More »

சனிக்கிழமை ( 07.03.2020 ) எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி முழு வேலைநாள்?

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு,

நாளைமறுநாள் (07.03.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய் கிழமை கால அட்டவணையினை பின்பற்றி   வகுப்புகள் நடத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

மற்ற மாவட்டங்கள் விரைவில்...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One