Search

'வெரிகுட்' விருது! மாணவர் சேர்க்கையை உயர்த்தும்ஆசிரியர்களுக்கு வழங்க திட்டம்!

Thursday 12 March 2020

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாடுபடும் ஆசிரியர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கும் புதிய திட்டத்தை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது.அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.கோடை விடுமுறையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்கள், கற்பித்தல் முறைகள், பள்ளிகளில் உள்ள கற்றல் வசதிகளை எடுத்துக்கூறி, கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால், சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதால், சேர்க்கை தொடர்பான பணிகளில், அவர்களை ஆர்வமுடன் ஈடுபடுத்தும் வகையில், அவர்களுக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதோடு, புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் உள்ளிட்ட அரசின் விருது திட்டங்களிலும், சிறப்பாக செயல்படுவோருக்கு, முன்னுரிமை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், இரண்டே மாணவர்கள் கொண்ட அரசுப்பள்ளிகளில் கூட, 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர, விருது வழங்கும் திட்டம் உதவியது.



அதே போல், கோவை மாவட்டத்திலும் பின்பற்றப்படும்.செப்டம்பர் மாதத்தில், மாணவர் சேர்க்கைக்காக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், அதிக மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை உடைய, வட்டாரத்தில் பணிபுரியும் அலுவலருக்கும், விருது வழங்கப்படும். ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால், அரசுப்பள்ளிகளின் நிலையை மாற்ற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Read More »

பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கின்றனர் - அமைச்சர்

பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது அரசு பள்ளிகளிலேயே தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி சந்திக்கும் திறன் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
Read More »

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி

EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!....*
EMIS ல் TC எடுப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Student
|
Students TC details
|
Use edit button to update TC details
|
Save




Save கொடுக்கப்பட்ட பிறகு ஒருமுறை மட்டுமே மீண்டும் எடிட் செய்ய இயலும் ஆகையால் மிக கவனமாக பதிவு செய்யவும்.

பிறகு
Green colour Transfer button ஐ பயன்படுத்தி common pool க்கு அனுப்பிவிடலாம்.

Common pool க்கு அனுப்பிய பிறகு TC pdf - ல் download செய்து கொள்ளலாம்.

தற்சமயம் யாரும் TC download செய்ய வேண்டாம்.

Emis Team
Read More »

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை - 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல் அறிவிப்பு


1 . 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்

பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி , 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக ஆண்டு ஒன்றுக்கு ரூ . 1 . 11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும் .
Read More »

School Morning Prayer Activities - 13.03.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.03.20

திருக்குறள்

அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

விளக்கம்:

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

பழமொழி

Do good to those who harm you.

பகைவனையும் நேசித்து பார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.

2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

எண்ணங்களே செயலாகிறது, என்ற சிறந்த கருத்து உடையவர் நல்லதை மட்டுமே எண்ணுவர்.

_____ விவேகானந்தர்

பொது அறிவு

1. பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த சத்தை பெறுவதற்காக பூச்சி உண்கின்றன?

நைட்ரஜன்

2. பச்சையமில்லாத தாவர குடும்பம் எது?

காளான் 🍄

English words & meanings

Pain - an unpleasant feeling due to hurt or wound in the body. வலி

Pane - a piece of glass in a window. ஜன்னலில் போடப்படும் கண்ணாடி பகுதி

ஆரோக்ய வாழ்வு

அஜீரணக் கோளாறுகளால் குடலில் சுவர்கள் புண்ணாகிவிடும் .இதற்கு உலர் திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் அருந்தி வந்தால் குடல் புண்கள் சரியாகிவிடும்.

Some important  abbreviations for students

CAT - Computer adaptive testing

CBT - Computer based teaching

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

சிங்கத்தை ஏமாற்றிய முயல்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்கிருந்த பிராணிகளை தன் உணவுக்காக தொடர்ந்து வேட்டையாடியது. இதனால் காட்டில் உள்ள பிராணிகள் பயத்துடனேயே வாழ்ந்து வந்தன. நாளுக்கு நாள் சிங்கத்தின் தொல்லை அதிகரித்தது. அதனால் எல்லாப் பிராணிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தன.

சிங்கத்திடம் சென்று, நீங்கள் சாப்பிடவதற்காக எங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் உங்கள் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். இனிமேல் வேட்டையாடுவதற்கு வெளியில் வரவேண்டிய அவசியம் இல்லை என்றது. அதற்கு சிங்கமும் சரி என்றது.

முயல் செல்ல வேண்டிய முறை வந்தது. நண்பர்களே! எனக்கு சற்று அவகாசம் தாருங்கள். எனது தந்திரத்தால் நீங்களும் சிங்கத்தின் அநியாயத்திலிருந்து தப்ப வழி பிறக்கும். வருங்கால சந்ததிகள் காட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்றது.

பிறகு முயல்; தாமதமாகச் சிங்கம் இருக்கும்; இடத்திற்கு சென்றது. சிங்கம் முயலை நோக்கி அட அறிவு கெட்டவனே ஏன் இவ்வளவு தாமதம்? என்று கேட்டது. முயல், அரசே நான் வரும் வழியில் என்னை இன்னொரு சிங்கம்; தாக்க வந்தது. அதனிடம் இருந்து நான் தப்பித்து வர தாமதமாகி விட்டது என்றது.

என்னைப்போல் ஒருவனா? இந்த காட்டிற்கு நான் மட்டும் தான் ராஜாவாக இருக்க வேண்டும். முதலில் அவனை அழித்தால் தான் நமக்கு தினமும் சரியாக உணவு கிடைக்கும் என்று சிங்கம் நினைத்தது. அதனால் புதிதாக காட்டுக்குள் வந்திருப்பவனை கொல்ல நினைத்து முயலிடம் அவன் இருக்கும் இடத்தைக் காட்டு, முதலில் அவனைக் கொன்றுவிட்டுப் பிறகு உன்னை சாப்பிடுகிறேன் என்றது.

முயல் தந்திரமாக சிங்கத்தை தூரத்தில் தெரியும் கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. இந்த கிணற்றில் தான் அந்த சிங்கம் பதுங்கியிருக்கிறது என்றது. சிங்கம் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தது. அதில் சிங்கத்தின் முகம் தெரிந்தது. அது தன்னுடைய முகம் தான் என்று அறியாத சிங்கம் தன்னுடைய எதிரி என்று நினைத்து அவனை அழிக்க நினைத்து கிணற்றுக்குள் குதித்தது.

சிங்கம் கிணற்றுக்குள் விழுந்த பின் முயல் மற்றப் பிராணிகளை நோக்கி சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து ஓடியது. சிங்கம் இறந்து போனது.

மற்றப் பிராணிகளிடம் சென்று நம்முடைய எதிரி அழிந்து விட்டான் என்று சந்தோசத்தில் கத்திச் சொன்னது. முயலின் இச்செய்தியைக் கேட்ட பிராணிகள் அனைத்தும் ஒன்று கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. காட்டு மிருகங்கள் அனைத்தும் முயலுக்கு மரியாதை செய்தன. அனைத்து மிருகங்களும் நிம்மதியாக வாழ்ந்தன.

நீதி :
கோபத்தில் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது.

இன்றைய செய்திகள்

13.03.20

◆இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு தற்காலிகமாக தேர்ச்சி பெற்ற 368 பள்ளி மாணவ, மாணவிகளின் பட்டியலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

◆தேனி மாவட்டத்தில் காட்டுத் தீயால் வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

◆தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு.

◆இந்தியாவில் சுற்றுலா விசாக்கள் வழங்குவது ஏப்ரல் 15 வரை தற்காலிக நிறுத்தம்: கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு.

◆உலகம் முழுவதும் உள்ள அனைத்து ட்விட்டர் ஊழியர்களும் இனி வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

◆இந்திய ஈட்டி எறிதல் வீரா் சிவபால் சிங் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.

◆புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, அமெரிக்க வீராங்கனை ஷாங்கை 21-14, 21-17 என்ற நோ் செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

Today's Headlines

🌸For the Young Scientist Program ISRO released 368 students name list on a temporary basis.

🌸 Due to the forest fire in Theni the wild animals are migrating to another place.

🌸 In Tamil Nadu the NPR census has been stopped declared Minister RP Udayakumar.

🌸 The tourist visa issuing is stopped in India till April 15th in order to control the spread of Corona Virus.

🌸  The employees working in the twitter around the world had to work from the home only orderd the organisation.

🌸 Indian Javelin through player Sivapal Singh got selected for the Olympic for the first time.

🌸 In the famous All England Badminton match for women singles Indian Player P. V. Sindhu won the match against the American player Shong in the set of 21-14 & 21- 17.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - முழு தொகுப்பு!


இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை ( 2020 - 21 ) எண் 43 தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

Announcements of School Education Department - 2020-2021 - Tamil Version - Download here
Read More »

5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வந்ததில் தவறில்லை- சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்பொழுது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தான் சரி என்றால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாதது ஏன்? என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உலக அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க பொதுத்தேர்வு அவசியம். வேறு வழியே இல்லாமல் தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தோம் என்று தெரிவித்தார்.
Read More »

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடு!

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியீடு

முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.

Read More »

GO 37 - உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து - Full G.O Tamil Translation

மேம்பாட்டு அதிகரிப்பு - உயர் தகுதி பெறுவதற்கும், துறைசார்ந்த சோதனைகளில் தேர்ச்சி பெறுவதற்கும் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதி - அனைத்து துறைகளிலும் முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்கும் திட்டத்தை வழங்குதல் / ரத்து செய்தல் - உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVANCE INCREMENT GO - Download here

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-IV) துறை
G.O. எண் 37
தேதியிட்ட நாள்: 10.03.2020 ஓட்டம் ஒனுல், லிட்ல் -27, சவ்லவுர் 2051 படி: 1)
2) G.O. (Ms) No.1195, பொதுப்பணித் துறை
G.O. (Ms) No.531, நிதித்துறை, தேதியிட்ட 25.04.1963. தேதியிட்டது.
11.07.1972 G.O. (Ms) No.825, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-1) துறை, தேதியிட்டது. 06.07.1977.
G.O. (Ms) No.1195, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-I) துறை, தேதியிட்டது. 27.10.1978.
G.O. (Ms) No.843, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-II) துறை, தேதியிட்ட 05.09.1983.
G.O. (Ms) எண் 1159, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-II) துறை, தேதியிட்ட 21.11.1984.
G.O. (Ms) எண் 301, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-III) துறை, தேதியிட்ட 26.03.1985.
G.O. (Ms) No.97, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (FR-IV) துறை, தேதியிட்ட 05.07.2010.
(FR-IV) துறை, தேதியிட்டது. 26.10.2010.

G.O. (Ms) எண் 154, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்
10) G.O. (Ms) No.241, நிதி (பிசி) துறை, தேதியிட்டது. 22.07.2013
ஆணை:


1. மேலே படித்த குறிப்பில், அமைச்சர் சேவையில் வர்த்தமானி செய்யப்படாத அரசு ஊழியர்களுக்கு, கணக்கு சோதனைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு ஒரு முன்கூட்டியே அதிகரிப்பு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பிறகு, தமிழ்நாடு இரண்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேலே படித்த அரசு உத்தரவில், முந்தைய பொதுப்பணித் துறை (அதாவது பிரிக்கப்படுவதற்கு முன்பு), உதவி பொறியாளர்கள் / நிர்வாக பொறியாளர்கள் / பிரிவு பொறியாளர்களுக்கு முன்கூட்டியே அதிகரிப்பு வழங்க / வழங்க உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. பொறியியல் பட்டத்தில் பி.ஜி / பி.எச்.டி பெறுவதற்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக பணிகள் துறை. மேலே படித்த மூன்றாவது அரசு உத்தரவில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து முதுநிலை மேலாண்மை அறிவியல் முதுகலை பட்டம் பெறுபவர்களுக்கு இரண்டு முன்கூட்டியே அதிகரிப்புகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது பின்னர் மேலே படித்த நான்காவது அரசு உத்தரவில் MBA வைத்திருப்பவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

2. மேற்கண்ட உத்தரவுகளுக்கு இணங்க, வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வித் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற பல துறைகளும் முன்கூட்டியே அதிகரிப்புக்கு அனுமதி அளித்தன. அந்தந்த பாடங்களில் முதுகலை / பிஎச்டி பட்டங்களைப் பெறுவதற்காக அந்தத் துறைகளின் சில வகை ஊழியர்களுக்கு (இந்த உத்தரவுகள் அந்த உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும், அந்தத் துறைகளில் உள்ள அனைத்து வகை பதவிகளுக்கும் பொருந்தாது).


3. மேலே படித்த ஐந்தாவது அரசு உத்தரவில், வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல், டைரி மேம்பாட்டுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பம் நலன்புரித் துறை, உள்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் திணைக்களம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில
இப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் பட்டம் / முதுகலை / தொழில்முறை பட்டம் பெற்றவர்கள் என்ற உண்மையை கருத்தில் கொண்டு.

4. மேற்கண்ட மறுஆய்வு உத்தரவுகளின் தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, துணை அதிகாரிகளுக்கான கணக்கு சோதனையை பகுதி-எல் தேர்ச்சி பெறுவதற்கான முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதி உள்ளிட்ட முன்கூட்டியே அதிகரிப்புக்கான திட்டத்தை அரசு மேலும் மதிப்பாய்வு செய்தது:

அ) மேற்கண்ட திட்டத்தை அறிமுகப்படுத்திய காலகட்டத்தில், தகுதி வாய்ந்த நபர்கள் அரசாங்க பதவிகளுக்கு அரிதாகவே அடையாளம் காணப்படுவார்கள். பல தொழில் வல்லுநர்கள் (மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள்) உட்பட தகுதி வாய்ந்த நபர்கள் குழு ஏ மற்றும் பி பதவிகளுக்கான சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் மூலமாகவும், குழு உதவியாளர்கள் / இளைய உதவியாளர்கள் / தட்டச்சு செய்பவர்கள் மூலமாகவும் எழுத்தர் பணிகளைச் செய்ய அரசு சேவையில் நுழைகிறார்கள். ஆனால், தற்போதைய நாட்களில், மிகவும் சி பதிவுகள் போன்றவை

ஆ) கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் ஏராளமாக அதிகரிக்கப்படுகின்றன மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களும் பல மடங்கு அதி

இ) கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் ஏராளமாக அதிகரிக்கப்படுகின்றன மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களும் பல மடங்கு அதிகரிக்கப்படுகிறார்கள்.

ஈ) பல்வேறு ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் சோதனைகள் / தேர்வுகளை நடத்திய பின்னர் அரசு சேவையில் பல்வேறு பதவிகளுக்கு பொருத்தமான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

உ) பதவியின் கடமையை திறம்பட நிறைவேற்றுவதற்காக உயர் பதவி பதவியை நிரப்ப அனைத்து துறைகளிலும் தகுதி வாய்ந்த நபர்கள் உள்ளனர்

ஊ) ஒரு அரசு ஊழியருக்கு உயர் தகுதி கொண்ட உயர் பதவிக்கு பதவி உயர்வு / நியமனம் தேவைப்பட்டால், உயர் பதவிக்கு பதவி உயர்வு நியமனம் பெறுவதற்கு தன்னை / தன்னை தகுதி பெறுவது அரசு ஊழியரின் பொறுப்பாகும்

5. மேற்கூறிய காரணங்களுக்காக, உயர் தகுதி பெறுவதற்கு முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய / விநியோகிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது மற்றும் தீர்ப்புகள் (3) & (4) இன் படி துணை அதிகாரிகளுக்கான பகுதி -1 க்கு கணக்கு சோதனை தேர்ச்சி பெறுகிறது. FR 31-A இன் கீழ் மற்றும் மேலே உள்ள ஐந்தாம் முதல் எட்டாவது வரை அரசு உத்தரவுகளில் வழங்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.

அதன்படி, அரசாங்கம் பின்வரும் வழிமுறைகளை வெளியிடுகிறது:


i. அனைத்து துறைகளிலும் உயர் தகுதி பெறுதல் மற்றும் உயர் தகுதி பெறுவதற்கு முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்க அனைத்து துறைகளும் வழங்கிய அனைத்து உத்தரவுகளும், ஒட்டுமொத்தமாக, ரத்து செய்யப்படும் / உடனடியாக வழங்கப்படும். கொள்கை முடிவாக, முன்கூட்டியே அதிகரிப்பு அனுமதிக்கும் திட்டம்

ii. மேலே படித்த ஐந்தாம் முதல் எட்டாவது அரசு உத்தரவுகளில் வழங்கப்பட்ட உத்தரவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படும்.

ili. துணை அதிகாரிகளுக்கான கணக்கு சோதனையில் தேர்ச்சி பெறுவதற்கான முன்கூட்டியே அதிகரிப்புக்கான அனுமதி - பகுதி 31, விதி 31 (3) & (4) இன் படி FR 31-A இன் கீழ் உடனடியாக அமல்படுத்தப்படும்.

iv. அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட உயர் தகுதி பெறுவதற்கான முன்கூட்டியே அதிகரிப்பு எந்தவொரு மீட்டெடுப்பையும் செய்ய வேண்டியதில்லை

செயலகத்தின் அனைத்து துறைகளும் / திணைக்களத் தலைவர்களும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் பதவிகளின் [உயர் மட்டத்திற்கு நுழைவு] சிறப்பு / ஆத் விதி குறித்து இந்த விவகாரத்தில் மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் உயர் தகுதிகளை பரிந்துரைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறையின் சேவைகளை மேம்படுத்துவதற்காக, தேவையான இடங்களில் பதிவுகள்.
vi. இந்த பொது உத்தரவு
அனைத்து துறைத் தலைவர்களும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் / அனைத்து மாவட்ட நீதிபதிகள் / அனைத்து மாவட்ட நீதவான்.
செயலாளர், சட்டப்பேரவை செயலகம், சென்னை-9.
செயலாளர், டி.என்.பி.எஸ்.சி, சென்னல் -03.
கருவூல மற்றும் கணக்கு ஆணையர், சென்னை - 35.
முதன்மை கணக்காளர் நாயகம் (ஏ & இ), சென்னல்-18.
முதன்மை கணக்காளர் நாயகம் (சிவில் தணிக்கை), சென்னை -18.
கணக்காளர் நாயகம் (தணிக்கை- II). சென்னை -18.
குடியுரிமை தணிக்கை அதிகாரி, சென்னை -9.
ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் (வடக்கு). சென்னை-1.
ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் (தெற்கு), சென்னை-35.
ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் (கிழக்கு), சென்னை-5.
ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர், செயலகம், சென்னை-9.

ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர், மதுரை - 625 001.
பதிவாளர் ஜெனரல், மெட்ராஸ் உயர் நீதிமன்றம், சென்னை -104.
பதிவாளர், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், மதுரை.
ஓய்வூதிய ஊதிய அதிகாரி, சென்னை-6.

இதற்கு நகலெடுக்கவும்:

மாண்புமிகு முதலமைச்சரின் செயலாளர், சென்னை -9.
மாண்புமிகு துணை முதலமைச்சருக்கு சென்னை -9 சிறப்பு பி.ஏ.
மாண்புமிகு அமைச்சருக்கு சிறப்பு பி.ஏ. (மீன்வள, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்) சென்னை -9.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரின் முதன்மை தனியார் செயலாளர், சென்னை -9.
அரசு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளரின் முதன்மை தனியார் செயலாளர், சென்னை -9.
அனைத்து அதிகாரிகள் / அனைத்து பிரிவுகளும், பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, சென்னை -9.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (AR-II) துறை, சென்னை -9. (அரசு இணையதளத்தில் பதிவேற்றுவதற்காக) நிதி (CMPC / PC-I / I / 1II) துறை, சென்னை-9. நிதி (பிபிஇ) துறை, சென்னை -9
Read More »

CRC Wise Team Visit List ( 12.03.2020 )

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள குழு ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல் ஒவ்வொரு குருவளமையம் ( CRC ) வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

Krishnagiri - CRC Wise Team Visit List - Download here
Read More »

NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 412 பயிற்சி மையங்களும் தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

2019 - 20 ஆம் கல்வியாண்டில் 03.05.2020 அன்று நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 412 பயிற்சி மையங்களில் 24 . 09 . 2019 முதல் 05.01.2020 வரை வார இறுதியில் முதுகலை ஆசிரியர்கள் மூலம் மாணவ / மாணவிகளுக்கு NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பின் , E box எனும் நிறுவனம் இணையவழி மூலமாக 412 பயிற்சி மையங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது . இவ்வகுப்பிற்கான சோதனை முன்னோட்டம் 17 . 03 . 2020 ( செவ்வாய்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது .

எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் மேற்கண்ட சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைப்பு வசதிகளை ( 2 Mbps speed குறையாமல் ) சரிப்பார்த்து கொள்ளுமாறும் , 17 . 03 . 2020 அன்று ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளரை ( Co - ordinator ) தவறாமல் வருகை புரியுமாறும் மற்றும் அச்சோதனை முன்னோட்டத்தின் செயல்பாடு குறித்த விவரங்களை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறும் அனைத்து பயிற்சி மையங்களின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read More »

கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

கொரோனா பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிட வேண்டும் என்ற  கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த ராஜவேலு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன எனவும் தமிழக அரசு விளக்கமளித்து. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம், ராஜவேலுவின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா பரவாமல் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One