Search

குரூப்-1 டிப்ஸ்: இந்திய பொருளாதாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ

Wednesday 28 September 2022

 TNPSC Exam Preparation: குரூப் 1 பதவிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய பொருளாதாரத்தில் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் இடம் பெறுவது வழக்கம். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலனைடையும் வகையில் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார்மயம்(Disinvestment) தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி), வங்கிப் பணியாளர் தேர்வாணையயம் (ஐபிபிஎஸ்), ரயில்வே வாரியத் தேர்வுகள் (ஆர்ஆர்பி), யுபிஎஸ்சி  போன்ற போட்டித் தேர்வு மாணவர்களுக்கும் இந்த தலைப்பு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

செய்தி:  துணை நிறுவனங்களை மூட பொது துறை நிறுவனத்துக்கு அனுமதி: 

ஒரு பொதுத்துறை நிறுவனம் அதன் கிளை அல்லது பிரிவுகளை மூடுவதற்கோ அல்லது அவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கோ பொதுத்துறை நிறுவனத்தின்  இயக்குநர்கள் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து   மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி மகாரத்னா, நவரத்னா, மற்றும் மினிரத்னா வகையைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு, அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் அல்லது அவற்றைக் கையகப்படுத்திக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும், பங்கு விலக்கல் அல்லது துணை நிறுவனங்களை மூடுவதற்கு தேவையான அதிகாரம் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்:

முன்னதாக, அரசு பொதுத் துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மய கொள்கைக்கு (New Policy for strategic Disinvestment) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

பிபிசிஎல், ஏர் இந்திய,  ஐடிபிஐ வங்கி, இந்திய கப்பல் கழகம், ரயில்வே துறையின் சரக்குப் பெட்டகக் கழகம் (Container Corporation of india), பாதுகாப்பு துறையின் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்,  பவன் ஹான்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஐபிஓ,நீலச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் (NINL) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் நிர்வாக கட்டுப்பாடு மாற்றத்துக்கு  மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஏர் இந்திய நிறுவனம் விற்பனை:  முன்னதாக, கடன் சுமையில் இருந்து வந்த ஏர் இந்திய நிறுவனத்தை மத்திய அரசு விற்றது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாலஸ் நிறுவனத்தி டம் இருந்து ரூ. 2700 கோடியை அரசு பெற்றுக் கொண்டது.   மேலும், ஏர் இந்தியா மற்றும் ஏஐஎக்ஸ்எல்-லின்  மொத்தக் கடனில் கடனில் (61 ஆயிரம் கோடி) ரூ,15,300 கோடி கடன் அளவை டாட்டா நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.

ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏஐஎக்ஸ்எல் -ன் (AIXL ) 100% பங்குகள் மற்றும் ஏஐஎஸ்ஏடிஏஎஸ்-ன் (AISATS) 50% பங்குகள் டாட்டா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எல்ஐசி பங்குகள் விற்பனை (LIC IPO): இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகத்தின் 3.5  பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்தது. இதன் மூலம் தற்போதைய பங்கு வெளியீட்டின் மதிப்பு ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for TNPSC,TRB,TET Daily updates & studymaterials

Read More »

PGTRB தேர்வர்கள் 26.09.2022-க்குள் withheld நீக்கம் செய்ய சான்றிதழ்களை சமர்பிக்க TRB உத்தரவு.

Friday 23 September 2022

PGTRB தேர்வர்கள் 26.09.2022-க்குள் withheld நீக்கம் செய்ய சான்றிதழ்களை சமர்பிக்க TRB உத்தரவு.

2020-2021ஆம் ஆண்டுமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை . 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன. மேலும் இதனைத் தொடர்ந்து 0209.2022 முதல் 04.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி நாடுநர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இனசுழற்சி அடிப்படையிலும் History , Economics , Geography , Mathematics , Physics , Chemistry , Botany , Zoology , Computer Science , Commerce , Physical Education , English , Tamil , Home Science and Political Science ஆகிய பாடங்களுக்கு தற்காலிகத் தெரிவுப் பட்டியல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன . அவ்வாறு வெளியிடப்பட்ட 3016 தேர்வர்களில் சில தெரிவர்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காததால் 319 தெரிவர்கள் withheld ல் வைக்கப்பட்டுள்ளனர். 

அவ்வாறு withheld- ல் வைக்கப்பட்டுள்ள தெரிவர்களுக்கு 17.09.2022 நாளிட்ட பத்திரிகைச் செய்தி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காத சான்றிதழ்களை 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் 248 தெரிவர்கள் உரிய சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பித்துள்ளதால் அவர்களின் withheld நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை சமர்ப்பிக்காத தெரிவர்கள் தங்களது உரிய சான்றிதழ்களை 26.09.2022 - க்குள் சமர்ப்பிக்கும்பட்சத்தில் இத்தெரிவர்களின் withheld நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

withheld List 





Read More »

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 - தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 
 14-10-22 முதல் 20-10-22 வரை நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!!!




Read More »

PGTRB - முதற்கட்டமாக தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு!

Saturday 10 September 2022

 PGTRB - முதற்கட்டமாக வரலாறு, புவியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் (Provisionally Selection List) வெளியீடு!


2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாசி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை I / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.


 25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் பணிநாடுநர்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான தங்களது சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது . பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணிநாடுநர்கள் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு 27.08.2022 அன்று இவ்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்ட 1 2 விகிதாசாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு 02.09.2022 முதல் 04.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 


இதனடிப்படையில் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இனச்சுழற்சி அடிப்படையிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


GEOGRAPY - Provisionally Selection List

HISTOY - Provisionally Selection List

PHYSICS - Provisionally Selection List


Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

TRB - Polytechnic Lecturer - Addition / Deletion in the Provisional Selection List Published

 


ADDITION / DELETION IN THE PROVISIONAL SELECTION LIST - Download here...

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials


Read More »

NEW TRB Website Beta Version - Click Here Direct Link

Friday 9 September 2022

 The Government of Tamilnadu has constituted the Teachers Recruitment Board to conduct various Test for the selection of teachers under different sectors such as Secondary Grade Teachers, BT, PG, Special Teachers, Computer Instructors, Agricultural Instructors and BEOs in the respective Departments of School Education and Elementary Education Department, Adi Dravidar and Tribal Welfare Department, Backward classes, Most Backward classes and Minorities Welfare Department, Social Defence Department, Chennai Corporation and Coimbatore Corporation.


Junior Lecturers, Lecturers and Senior Lecturers in SCERT and in Higher Education Department for the post of Assistant Professors, Lecturers in Government Engineering Colleges and Government Arts and Science Colleges, Government Polytechnic Colleges and in Government Law Colleges respectively.

Following the guidelines of the Right of Children to Free and Compulsory Education Act 2009, the Teachers Recruitment Board took up the responsibility of conducting TNTET (Tamilnadu Teacher Eligibility Test) from 2012 onwards.


Presently, The office of the Teachers Recruitment Board, Tamilnadu (TRB) is located in the premises of the Directorate of Public Information (DPI).


TRB - NEW TRB Website Beta


Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

தமிழகத்தில் இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய விவரங்கள்

 தமிழகத்தில் இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய விவரங்கள்

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST

As per provisions of sub-section (1) of section 23 of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 (RTE Act), the National Council for Teacher Education (NCTE) vide Notifications dated 23rd August 2010, 29th July 2011 and 28th June 2018 laid down the minimum qualifications for a person to be eligible for appointment as a teacher in classes I to VIII.


The Government of Tamil Nadu vide G.O. Ms. No.181. School Education (C2) Department, dated 15.11.2011 appointed the Teachers Recruitment Board as the nodal agency for conducting the Teachers Eligibility Test (TET).


Subsequently Government issued G.O. Ms. No. 149, School Education (TRB) Department. dated 20.07.2018, notifying that TET qualified candidates have to appear for another written competitive examination for the recruitment.


TET Total Passed Candidates List - View here...

Read More »

TET - ஆசிரியர் தகுதி தேர்வு - MINIMUM QUALIFYING MARKS - DETAILS

 

TET - ஆசிரியர் தகுதி தேர்வு - MINIMUM QUALIFYING MARKS - DETAILS


ஆசிரியர் தகுதி தேர்வு - MINIMUM QUALIFYING MARKS- DETAILS

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

TNPSC : குரூப் - 1 தேர்வு நவ.19-க்கு தள்ளிவைப்பு

 TNPSC: குரூப் - 1 தேர்வு நவ.19-க்கு தள்ளிவைப்பு


டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நவ.19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை,நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது.


நடப்பு ஆண்டில் துணை ஆட்சியர் (18), காவல் துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணை பதிவாளர் (13), வணிகவரி உதவி ஆணையர் (25), ஊரகமேம்பாடு உதவி இயக்குநர் (7),மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (3) என குரூப்-1 பதவியில்காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது.


அதில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30-ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


தொடர்ந்து அதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜூலை 21-ல் தொடங்கி ஆக.22-ம் தேதி நிறைவு பெற்றது. அதன் பிறகு, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆக.27முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.


இந்நிலையில், குரூப்-1 தேர்வுதள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுபற்றி டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அக்.30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட குரூப்-1 பணிக்கான முதல்நிலைத்தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர்19-ம் தேதி நடத்தப்பட உள்ளது.கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தளங்களில் அறியலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

Read More »

TN TET PRESS RELEASE - ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Saturday 3 September 2022

 

TN TET PRESS RELEASE - ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி ஒத்திவைப்பு: டிஆர்பி அறிவிப்பு

வரும் 10 ஆ தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்-I-க்கான தேதி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1க்கான தேர்வுகள் மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இதற்கிடையே, நிர்வாக காரணங்களினால், தாள் 1-க்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I-க்கான தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பொதுவாக, தேர்வுக்கு 7 நாள்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்த விவரமும், 3 நாள்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் நிலையில், 7 நாள்களுக்கு முன்பாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Read More »
 

Most Reading

Tags

Sidebar One