Search

ஆசிரியர்கள் மீது 17 B ன் படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்களின் விவரம் கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

Friday 28 February 2020





Read More »

17(b) பெற்ற ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை - Proceedings

17(b) பெற்ற ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆணை - Proceedings




Read More »

பள்ளிகளில் EMIS பதிவேற்ற நடைமுறையால் கம்ப்யூட்டர் மையங்களில் காத்துக் கிடக்கும் தலைமையாசிரியர்கள்

Read More »

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி!


ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு மாவட்ட கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய கோருதல் - சார்பு


மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காண் இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவம் புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு இணைப்பில் உள்ள மாவட்ட கருத்தாளர்களுக்கு 02 . 03 . 2020 ஒரு நாள் மட்டும் முன்திட்டமிடல் கூட்டம் ( Pre Planning Meeting ) தருமபுரி நகராட்சி நடுநிலைப் பள்ளி ( உருது ) , கோட்டையில் நடைபெற இருப்பதால் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
Read More »

அரசு பள்ளிகளில் 72 ஆயிரம் மின்னணு பலகைகள் அமைக்க நடவடிக்கை!!

Thursday 27 February 2020

Read More »

"தொடக்க நிலை மாணவர்களுக்கான தமிழ் மொழி வாசித்தல் திறன் மேம்பாடு" குறித்து கட்டுரை எழுத ஆசிரியர்களுக்கு அழைப்பு

Read More »

Wearing of Photo Identity Cards compulsorily by all Government Servants - Instructions Published!

Sub : Ref : Public Services - Wearing of Photo Identity Cards compulsorily by all Government Servants - Instructions - reiterated - Regarding .

1 . Government Order { Ms ) . No . 336 , Personnel and Administrative Reforms ( Per - A ] Department , Dated 26 . 03 . 1986 .

2 . Government Order ( Ms ) . No . 363 , Personnel and Administrative Reforms ( A ) Department , Dated 01 . 12 . 2004 .

3 . Government Letter No . 3975 / A / 2005 - 1 , Personnel and Administrative Reformis ( A ) Department , Dated 22 . 02 . 2005 .

4 . Government Letter No . 47690 ! A2 / 2013 - 1 , Personnel and Administrative Reforms ( A ) Department , Dated 20 . 12 . 2013 ,

5 . Government Letter No . 28939 / A2 / 2017 - 1 , Personnel and Administrative Reforms { A ) Department , Dated 05 . 09 . 2017 .

6 . Order of the High Court of Madras in W . P . No . 15640 of 2018 , Dated 16 . 07 . 2018 ,

7 . Letter No . 20948 / A2 / 2018 - 1 , Personnel and Administrative Reforms ( A ) Departinent , Dated 23 . 08 . 2018
Read More »

SPD - UDISE data and uploading of the same on the UDISE portal shall be completed by 27.02.2020

It is informed that as a part of the implementation of the UDISE + 2019 - 20 , the school wise data have to be updated and validated for all schools in the districts.

The provision for updation and validation of the UDISE + data have been included in EMIS Portal . The UDISE + Data Capture Format for the year 2019 - 20 has been shared with districts in order to share the same with schools concerned . The same has also been made available in the EMIS Portal . For the effective implementation of UDISE + at all levels , the following instructions are issued to the Chief Educational Officers .

1 . All recognized schools should be covered under UDISE + without any commission or omission .

2 . All School HMs , should be instructed to fill in all data as per UDISE + data capture format applicable to schools and to upload the same on the UDISE + module in EMIS Portal .

3 . The cluster coordinators concerned ( BRTE ) should check and verify the UDISE + data filed in by the schools of all Management , which have been attached to the cluster concerned and they are responsible for the validity of the data furnished by the schools in their jurisdiction .

4 . The Block Educational officers ( BEO ) & Block UDISE Coordinator should check and verify the data authenticated by all the BRTES in their blocks and certify the same .

5 . The District Educational officers should check and verify the data authenticated by the BEOs , and certify the same for the blocks in their jurisdiction .

6 . The Chief Educational officer has to authenticate the data by furnishing the certificate to the SPO .

7 . Since the District UDISE Coordinators and the programmers already having sufficient experience in UDISE Implementation work , they shall ensure proper coordination and implementation process of UDISE .

8 . The updating of UDISE data and uploading of the same on the UDISE portal shall be completed by 27 . 02 . 2020 .

9 . The necessary certificates for the authentication for the officers / BRTEs will be made available on EMIS portal .

Hence all CEOs are requested to take immediate steps to implement UDISE Plus data uploading and validation of data within the time frame fixed.

Read More »

BEO பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க இயக்குநர் உத்தரவு!

வட்டாரக்கல்வி அலுவலராக பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களில் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் , 31.12.2011 தேதியில் தகுதிபெற்றவர்கள் மற்றும் தற்காலிக பணிஉரிமைவிடல் செய்தவர்கள் உட்பட எவரேனும் விடுபட்டிருப்பின் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது . எனவே , இதில் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Read More »

U DISE- FILLED MODEL COPY

Wednesday 26 February 2020

School grand 25000/50000 பதிவிடும்போது *school Grant under samagra siksha என்பதில் பதிவிடவும்.
ஒவ்வொரு பகுதியாக சேவ் செய்யவும் *Data's saved successfully* என வலது பக்க மூலையில் வந்தால் அந்தப் பக்கம் நல்ல முறையில் சேமிக்கப்பட்டது எனப் பொருள் .
அதில் *விவரங்கள் மீண்டும் திரும்பி காட்டாது* .
ஆனால் உங்களுடைய பள்ளிக்கான விவரங்களை பதிவு செய்யப்பட்டு விடும். எனவே மீண்டும் ஒரு முறை பார்க்க முடியவில்லை என்ற காரணத்திற்காக *அந்த விவரங்கள் பதிவாகவில்லை என நினைக்க வேண்டாம்*
ஒரு முறை பதிவு செய்யும் பொழுது வலது பக்க மூலையில் Data saved என வந்தால் போதும்.
ஒரு சில பகுதிகள் *This field is required* என வந்தால் அந்த பகுதியை *save செய்ய இயலாது*. அது சரி ஆகும்வரை மற்ற பகுதிகளை பதிவேற்றம் செய்யவும்.



பதிவிடாத பகுதிகள் உங்கள் பள்ளி பெயரில் வெளி வரும் அப்போது ஏதேனும் விடுதல் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
*School visit* தற்போது save ஆகவில்லை என தகவல். *விரைவில் அவை சரி செய்யப்படும்*.
எந்த பகுதி உங்கள் பள்ளிக்கு save ஆகவில்லை என குறித்து வைத்துக்கொண்டு பிற பகுதிகளை பதிவேற்றவும். 
EMIS UPDATE
‘Field required’ error in inspection details fixed. Please refresh once and

try again

For land area, please enter the Data in acres. The data will be converted 

into to sq.ft automatically. You can then save it.

SMC SMDC is visible for all govt and aided schools. It is not shown to private schools. This is not based on school middle school / high school

This issue has now been fixed. Refresh and try again. ( use ctrl+shift+R)
*UDISE+*
EMISல் UDISE PLUS DCF mobile phoneல் ஆங்கிலம் மற்றும் தமிழில் மாற்றி பதிவு செய்வது எப்படி?
UDISE Plus Page link:

1) Download DCF:

2) Basic Info : https://emis.tnschools.gov.in/basic_school_form
3) School Details: https://emis.tnschools.gov.in/school_details



4) Training Details: https://emis.tnschools.gov.in/training-details
5) Committee Details: https://emis.tnschools.gov.in/schoolcommittee



6) Land Details: https://emis.tnschools.gov.in/school-land
7) School Inventory:https://emis.tnschools.gov.in/school-inventory
8) Funds: https://emis.tnschools.gov.in/funds
*மேற்கண்ட Link ஒவ்வொன்றாக Click செய்து Udise+ பணியினை நிறைவு செய்யலாம்.*
*UDISE + சில தகவல்கள்*
Read More »

"மகிழ்ச்சி வகுப்புகள்" மாணவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன


Read More »

DEE proceedings_ தொடக்கக்கல்வி_ அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் (2018-2019, 2019-2020) செலவிடப்பட்ட அறிக்கை கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:21.02.2020








Read More »

பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Read More »

மார்ச் 4 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைக்கியாங்க தைப்பூச உற்சவம் மற்றும் திருக்குடமுழுக்கு விழா , மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி , அருள்மிகு சங்கமேஸ்வரர் அருள்மிகு கோணியம்மன் திருக்கோயில்களில் தேர்திருவிழா நடைபெறுவதையொட்டி 04.03.2020 கோவை மாநகர பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது . இந்தநாளுக்கான பள்ளி வேலை நாளினை பிரிதொரு நாளில் ஈடுகட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Read More »

EMISல் UDISE PLUS DCF mobile phoneல் தமிழில் மாற்றி பதிவு செய்வது எப்படி?


Read More »

LKG, UKG வகுப்புகளுக்கு ரூ 70,000 மதிப்பில் தளவாட சாமான்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வாங்க நிதி ஒதுக்கீடு




Read More »

பதவி உயர்வுக்குத் தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியலை 01.01.2020 அன்றைய நிலவரப்படி தயார்செய்ய இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( Panel List ) 01 . 01 . 2020 அன்றைய நிலவரப்படி பார்வையில் தெரிவித்துள்ள விதிகள் , சட்டம் , அரசாணை மற்றும் கீழ்க்கண்ட விவரங்களின்படி தயார் செய்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

1 ) அவ்வாறு பதவி உயர்வுக்குத் தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியலை கீழ்க்கண்டவாறு எளிய முறையில் , குறியீடு செய்து தயாரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Read More »

பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி மின் விளக்குகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவ , மாண விகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்டமின் விளக்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநி லைப்பள்ளிகள் , தனியார் நர்சரி , மெட்ரிக் பள்ளிக ளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்ப டுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு பல் வேறு கலை நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் , கலாச்சார விழாக்கள் நடத்தப்படு கிறது . அப்போது , நடன போட்டிக்கான மேடைக ளில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள் பயன்ப டுத்து வதால் மாணவ , மாணவிகளுக்கு கண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது . இந்த நிலையில் ,

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : இந்தாண்டிற்கான கல்வி ஆண்டு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிய உள்ளதால் தற்போதே பள்ளிகளில் ஆண்டு விழா தொடங்கி உள்ளது . சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு விழாவில் அதி கபடியான மின் வெளிச் சத்தால் மாணவர்களின் கண்கள் பார்வை பாதிக் கப்பட்டது . இதனால் எதிர்காலத்தில் பள்ளிக ளில் இதுபோன்ற பாதிப் புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது . இதன்படி அரசு மற் றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக் கள் நடைபெறும் போது , அதிக ஒளி கொண்ட அலங்கார மின் விளக்கு கள் பயன்படுத்தக்கூடாது . பரிந்துரைக்கப்பட்ட மின் சாதன அமைப்புகள் மட் டுமே அமைத்திட வேண் டும் . இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .

 இந்த நடைமுறைகளை பின் பற்றாமல் விழா நடத்தி , பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நிர் வாகமுமே முழு பொறுப் பேற்க நேரிடும் . எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் , வட்டா ரக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு கவனத் துடன் விழாக்களை நடத்த வேண்டும் . இவ்வாறு அவர்கள் கூறினர் .
Read More »

பள்ளி பொதுத்தேர்வு பணியில் ஊனமுற்ற , உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு விலக்கு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!



மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடல்நலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ச.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2ம் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு தொடர்ந்து நடக்க உள்ளது, பனிரெண்டு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் உயர்நிலைப் பள்ளி மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு  அறை கண்காணிப்பாளராகவும், பறக்கும்படையிலும், துறை அலுவலர்களாகவும் தலைமையாசிரியர்களை தேர்வு நடத்தும் முதன்மை அலுவலர்களாகவும் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்களை அலுவலக பணிக்கு ஈடுபடுத்துவார்கள்.

அதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு பணிகளில் ஈடுப்படுத்துவார்கள்.

இந்த ஆண்டு ஏமிஸ் ( EMIS )என்ற டேட்டா என்ட்ரி மூலம் அனைத்து வகை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பெயர் பட்டியலை எடுத்து தேர்வு பணிக்கு பயன்படுத்த அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரிபவர்கள் இன்று விடுவிப்பு செய்து தேர்வுப்பணி கூட்டத்திற்கு அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் அந்தந்த பள்ளி இணைய முகவரிக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத 3 மணி 15 நிமிடம் அதாவது 3 மணி நேரம் தேர்வு எழுதவும், 15 நிமிடம் வினாத் தாளை படித்து பார்க்க நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், பணியாளர்கள் காலை 8.00 மணிக்கே தேர்வு மையத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையில், தொடர்ந்து 4 மணி முதல் 5 மணிவரை நின்று பணியாற்ற வேண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் அதாவது புற்றுநோய், இருதய பிரச்சனை காச நோயளிகள் பெருமளவில் அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்கள், கர்ப்பமுற்றவர்கள் நீண்டநேரம் நின்று பணி செய்யமுடியாது.

அவர்களை தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் சா. அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More »

2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் மொத்த பள்ளி வேலை நாட்கள் எத்தனை? CM CELL Reply!


மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது . 2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மொத்த வேலைநாட்கள் 213 என்ற தகவல் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . ப . க . இ . ஓ . மு . எண் 36414 / பிடி1 / இ1 / 2019 நாள் 05 . 08 . 2019 

Read More »

இனி வாட்ஸ்அப் மூலமாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்!

Tuesday 25 February 2020

வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி.ஜெயதேவன், தமிழகத்தில் 2.38 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் 1.36 கோடி பேருக்கு வினியோகம் செய்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணில் இருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சிலிண்டர் வினியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம்.


இதேபோல், இந்தியன் ஆயில் நிறுவன இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் சந்தேகங்கள் குறித்து தெளிவு பெறவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் சிலவற்றை கடைகளில் பயன்படுத்தி விட்டு மீண்டும் கொண்டு வந்து வீடுகளில் வினியோகிக்கப்படுவதால் அவற்றின் எடை குறைவாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை வாங்கும் போது அவற்றின் எடையை பரிசோதித்து தருமாறு சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியரிடம் வலியுறுத்த வேண்டும். சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும், என்று கூறியுள்ளார்

Read More »

JRC பயிற்சி வகுப்பு குறித்த முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

பார்வையில் காணும் கள்ளக்குறிச்சி
ஜே . ஆர் . சி ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட கன்வீனரின் கடிதத்தில் கோரப்பட்டதற்கிணங்க , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஜே . ஆர் . சி . அமைப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் கீழ்க்காணும் விவரப்படி நடைபெற உள்ளது .
Read More »

27.02.2020 அன்று SMC உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்!

2019-20 ஆம் ஆண்டுக்கான SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி.

கடந்த 24.01.2020 அன்று நடைபெற்ற SMC பயிற்சியில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் 27.02.2020 அன்றைய பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.

கலந்துக் கொள்ள வேண்டியவர்கள்: 

1. தலைவர் - 1
2. துணைத்தலைவர். -1
3.பெற்றோர் (வாய்ப்பு மறுக்கப்பட்ட (அ) நலிவடைந்த பிரிவு) - 2
4. பெண் உறுப்பினர் - 1
5. தலைமை ஆ

சிரியர்-1
(மொத்தம் ஒரு பள்ளிக்கு 6 பேர் .)
தேதி: 27.02.2020

இடம்: அந்தந்த குறுவள மையம்.

வருகை பதிவேட்டில் SMC உறுப்பினர்களின் போட்டோ ஒட்டும் காரணத்தால் உறுப்பினர்களின் Stampsizeபோட்டோ எடுத்துவரவும். SMC பயிற்சி அரசு பள்ளி உறுப்பினர்களுக்கு மட்டும்.
Read More »

மார்ச் 3ஆம் நாள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்பு.
Read More »

தொடக்கக் கல்வி -உதவி பெறும் பள்ளிகள் -பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நிர்வாகத்தால் 11.07.1995 முதல் 19.051998 முடிய நியமனம் செய்யப்பட்டவர்களில் சில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள்

Monday 24 February 2020

Read More »

ஆசிரியருக்கான பெருமை இன்னும் குறையவில்லை கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சி

ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழகத்தில் இன்னும் குறையவில்லை என திருப்பூரில் நடந்த ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழா வில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ராம்ராஜ் காட்டன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘அன்பாசிரியர் விருது’ வழங் கும் விழா திருப்பூரில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.



மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்றுவிடாமல், திறமை, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி, பள்ளியையும் மேம்படுத்திவரும் ஆசிரியர்கள் பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல் உள்ளனர். அத்தகைய ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘அன்பாசிரியர்’ என்ற விருதை வழங்குகிறது.
இவ்விருதுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்களின் செயல்பாடுகள் பற்றிய விவரத்தொகுப்பை ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பியிருந்தனர். மூத்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு, விவரத் தொகுப்புகளைப் பரிசீலனை செய்தது. இதையடுத்து தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒருவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 38 பேர் அன்பாசிரியர் விருதுக்கு தேர்வாகினர்.



இவர்களுக்கு விருது வழங்கும் விழா, திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சிபாரிசுக்கு இடமில்லை ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் தலைமை வகித்து பேசும்போது, ‘‘ஆசிரியர் சமூகம் என்பது அன்பு நிறைந்ததுதான். ஆகவேதான் ‘அன்பாசிரியர்’ என்ற பெயரில் விருது வழங்குகிறோம். அன்பாசிரியர் விருதை மனத்தூய்மை, நேர்மையோடு நடுவர்கள் வைத்து, எவ்வித சிபாரிசுக்கும் இடமின்றி தகுதியான ஆசிரியர்களை தேர்வுக் குழு வினர் தேர்வு செய்துள்ளனர்.



வகுப் பறையை கலகலப்பாகவும், மகிழ்ச்சியாக வும் மாற்றியவர்கள்தான் அன்பாசிரியர்கள். இந்த விருதை அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு வழங்குவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமை கொள்கிறது” என்றார். சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர் களுக்கு விருதுகளை வழங்கினர். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்களிடம் அன்போடு பணி செய்தால் மட்டுமே அனைவரது அன் பையும் பெற முடியும் என்பதை, இங்கு விருது பெற்ற ஆசிரியர்கள் நிரூபித்துள்ள னர்.



விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரி யர்களின் சிறப்புகளை பார்த்தபோது வியந்து போனேன். கிராமப் பகுதிகளில் பள்ளிகளை ஆசிரியர்கள் வழிநடத்தி செல்வதை காணும்போது உண்மையில் உளப்பூர்வ மாக ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழ கத்தில் இன்னும் குறையவில்லை என்பதை உணர முடிகிறது. மாற்றுத் திறனாளி ஆசிரியை ஒருவர் செய்துள்ள பணியை பார்க்கும்போது, ஆசிரியர்கள் எல்லோராலும் எல்லாம் செ`ய்ய இயலும். வகுப்பறை கட்ட நிதி விருது பெற்ற ஆசிரியர் ஒருவர், பள்ளி யில் வகுப்பறைகள் தேவை என்றார். விரைவில் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப் படும்.
சிறந்த ஆசிரியர்கள் தங்களது பணி களை செய்ய, இதுபோன்ற குறைபாடுகள் வரக் கூடாது. ஆசிரியர்களுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகே வெளிப் படையாக பணிமாறுதல் நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வாணையத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆசிரியர்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு உறு துணையாக இருப்பேன்.



ஆசிரியர்கள், சமு தாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள். சமூகம் மட்டுமல்ல, நாட்டையும், நாட்டின் பொருளா தாரத்தையும் மேம்படுத்துவதில் ஆசிரியர் களின் பங்களிப்புக்கு இடம் உண்டு.இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசும் போது, “தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளோம். 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களை அழைத்து பாராட்டினோம்.
இன்றைக்கு ‘இந்து தமிழ் திசை’ அன்பாசிரியர் விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இதுபோன்ற நல்ல நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ள ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வாழ்த்துகள்” என்றார். விழாவில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்எல்ஏக்கள் ஏ.நடராஜன், எஸ்.குணசேகரன், கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் முத்துராமன், எஸ்.எம். சில்க்ஸ் உரிமையாளர் மனோகர், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாகி அருண், ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் ராஜ்குமார், வணிகப் பிரிவு தலைவர் சங்கர் சுப்பிரமணி யன், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் எக்ஸ்லான் கி.ராமசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட கல்வி அலு வலர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.



நூல் வெளியீடு ‘இந்து தமிழ் திசை’ யின் இணையதளப் பிரிவு முதுநிலை உதவி ஆசிரியர் க.சே.ரமணி பிரபாதேவி எழுதிய, ‘அன்பாசிரியர்’ புத்தகத்தை, அமைச்சர்கள் வெளியிட்டனர். இதையடுத்து இணையதள தொடரில் எழுதிய முன்னோடி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சங்க இலக்கியத் தமிழ்ப் பாடல்களை நவீன முறையில் இசையமைத்து ஜேம்ஸ் வசந்தன் தன் குழுவினருடன் அரங்கேற்றிய சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை லட்சுமி செராமிக்ஸ், எஸ்.எம். சில்க்ஸ், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி, கல்யாண் ஜூவல்லர்ஸ், நியூஸ் 7ஆகியவை இணைந்து வழங்கின.
Read More »

பொதுத் தேர்வு நேரம் என்ன? மாணவர்களுக்கு விளக்க உத்தரவு

பொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்வு எழுதும் நேரத்தை, இரண்டரை மணி நேரத்தில் இருந்து, மூன்று மணி நேரமாக அதிகரிக்க, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.


இதையடுத்து, மூன்று மணி நேரமாக, தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.வினாத்தாளை வாசித்து பார்க்க, காலை, 10:00 முதல், 10:10 மணி வரை, 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்களின் விபரங்களை, தேர்வறை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்க, 10:10 முதல், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின், 10:15 முதல், பகல், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதுவதற்கான நேரம் ஒதுக்கப்படும். இந்த தகவலை, அனைத்து மாணவ - மாணவியருக்கும் ஆசிரியர்கள் தெளிவாக விளக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More »

அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடர முன்அனுமதி பெற வேண்டுமா? CM CELL Reply


அரசு பணியில் சேருவதற்கு முன்னர் தொலைதூர வழியில் உயர்கல்வி பயின்றமைக்கு துறை அனுமதி பெற தேவை இல்லை . ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடந்து பயின்று முடிக்க வேண்டும் என்ற நிலையில் தொலைதுர வழியில் கல்வி பயின்று முடிக்க சார்ந்த தலைமை ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும் ( பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( ப . தொ ) செயல்முறைகள் ந . க . எண் 40565 / C5 / இ5 / 2019 நாள் 22 . 08 . 2019 )
Read More »

EMIS இணையத்தில் UDISE PLUS படிவ விவரங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது? எளிய வழிமுறைகளுக்கான வீடியோ இணைப்பு!


அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும் .அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும் .

UDISE PLUS DCF படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவலுக்கும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தகவலுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் கவனத்துடன் பதிவேற்றம் செய்திட வேண்டும்

EMIS UDISE PLUS HOW TO ENTER THE DETAILS IN EMIS WEBSITE STEP BY STEP EXPLANATIONS


# ஒவ்வொரு ஆசிரியர்பயிற்றுநரும் தங்களுக்குகீழ் உள்ள பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட DCF படிவமும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலும் சரியானது என சான்று அளிக்க வேண்டும் .

# வட்டார கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் சரியான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்குரிய சான்றை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்
Read More »

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 25-02-2020 - T.தென்னரசு

 

காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
25-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 39
அதிகாரம் :அறன் வலியுறுத்தல்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
 புறத்த புகழும் இல.
பொருள்:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு.

- எமர்சன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி  
 இன்று குடிக்கத் தண்ணீர் இல்லை , ஆனைமேல்  அம்பாரி   வேணுமாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Planets - கோள்கள்

1. Sun - சூரியன்
2. Mercury - புதன்
3. Venus - வெள்ளி
4. Mars - செவ்வாய்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தமிழ்நாட்டில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் ஊர் எது ?

 சிவகாசி

2. தனுஸ்கோடியையும், மெட்ராஸையும் இணைத்த இரயிலின் பெயர் என்ன?

 போர்ட்மெயில்
✡✡✡✡✡✡✡✡
Daily English
Poly syllabic words
1. acceleration - ac-cel-e-ra-tion
2. administrator - ad-min-is-tra-tor
3. curiosity - cu-ri-os-i-ty
4. electricity - e-lec-tri-ci-ty
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

புறா

🐦 புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறக்கும் பறவையினத்தைச் சேர்ந்த, தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும்.

🐦 இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது. புறாக்கள் உலகெங்கிலும் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாலும், சகாரா பாலைவனம், ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை.

🐦 புறாக்கள் பல்வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கிலோ எடையுடையவை.

🐦 மிகச் சிறிய புறாக்கள் ஜெனஸ் கொலம்பினா இனத்தைச் சார்ந்தவை. ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை.

🐦மன்னர்கள் காலத்தில் கடிதப் போக்குவரத்திற்காக புறாக்களை பழக்கப்படுத்தினர். தற்போது வீட்டில் செல்லப் பறவையாக வளர்க்கப்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
வேலையை ரசித்து செய்

ஒரு தாயும் மகனும் மட்டும் வசித்த வீடு அது. ஏழைக்குடும்பம். வீட்டுத்தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது தாய்க்கும் உடல் நிலை சரியில்லை. மரணத்தருவாயில் இருந்த தாயிடம் அம்மா நீயும் என்னைவிட்டுப் போய்விடாதே. நீயும் போய்விட்டால் நான் அனாதையாக ஆகிவிடுவேனே? என அவளது கையைப் பிடித்து அழுதான் அவளது பதினைந்து வயது மகன்.

தாய் சொன்னாள். மகனே, எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவும் நாகசாகியும் எத்தனை அனாதைகளை உருவாக்கியது தெரியுமா? அவர்களெல்லாம் வாழாமல் போய்விட்டார்களா? ஒன்றை மட்டும் புரிந்துகொள். உன் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தை சொல்வார். அதையே உனக்கு சொல்கிறேன் என்ற தாயிடம் அந்த துயரமான சூழ்நிலையையும் மறந்து அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன்.

மகனே நீ ஒரு கலைஞனாகி விடு பிழைத்துக் கொள்வாய். அதற்காக பெரிய கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்கு கழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால் கூட அதையும் பாக்கியமாக கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல வேறு யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்கவேண்டும். உன் வேலையில் ஒரு தனித்துவம் வெளிப்பட வேண்டும் என்றாள். ஆம் உங்கள் வேலையை ரசித்து செய்யுங்கள். ரசித்து செய்யும் வேலையில் தான் சுகமும் திருப்தியும் இருக்கிறது. 
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.

🔮ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


🔮உத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டது.

🔮வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.

🔮வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று டெல்லி ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.

🔮மலேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை அரசருக்கு அனுப்பியுள்ளார்.

🔮கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவையை வரும் மார்ச் 15ந்தேதி வரை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

🔮இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

🔮தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு.

HEADLINES
🔮India, US to sign chopper deals worth USD 3 billion: Trump at Motera.

🔮Twitterati surprised over Donald Trump not mentioning Mahatma Gandhi in visitors' book.

🔮Sunni Waqf Board to accept alternative land near Ayodhya offered by UP government.

🔮4,000-year-old crafts village unearthed near Varanasi.

🔮New Zealand beats India by 10 wickets in series-opening test.

🔮Poonam Yadav grabs three wickets as India beat Bangladesh by 18 runs in Women's T20 World Cup.

Read More »

கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி!

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5 . 5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ஏப் . 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது .

இதில் 5 . 5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும் . ஆனால் , ஆணையத்திடம் இதுவரை ஒரு ரூபாய்கூட செலுத்தவில்லை . இதன்காரணமாக ஓய்வு பெற் றோருக்கும் , பணியில் இறந் தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப்பலன்கள் கிடைக்கவில்லை . இதனால் ,அதிருப்தி அடைந்த ஊழியர்கள் , ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர் . இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல் படுத்துவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 2016 - ல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது .

இக்குழு இறுதியாக ஐஏஎஸ் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டது . 2018 - ல் இக்குழு அரசிடம் அறிக்கை அளித்தது . ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை . இதனால் , ஓய்வு பெற்ற ஊழியர்கள் , ஆசிரியர் கள் அதிருப்தியில் உள்ளனர் . புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியது : புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர் களிடம் பிடித்த தொகை , அரசின் பங்குத்தொகை என ரூ . 35 ஆயிரம் கோடி அரசிடமே உள்ளது . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களில் ஓய்வு பெற்றோர் , பணியில் இறந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் . இதில் பாதிக்கும் குறைவானவர்களே ஓய்வூதியத் தொகையைப் பெற்றுள்ளனர் .

புதிய ஓய்வூதியத் திட்டப்படி மத்திய அரசு , பிற மாநில அரசுகள் பணிக்கொடை அளிக்கின்றன . ஆனால் , தமிழகத்தில் ஓய்வு பெறுவோருக்கு பணிக்கொடை கொடுப்பதில்லை . மேலும் பிடித்த தொகையில் 60 சதவீத பணத்தை வழங்க வேண்டும் . மீதியுள்ள 40 சதவீதத்தில் ரூ . 1 லட்சத்துக்கு ஆண்டுக்கு ரூ . 6 , 500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் . பணியின்போது இறந்தோரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் . ஆனால் , அதை தரவில்லை . பிற மாநிலங் களில் ஊழியர்களிடம் பிடிக்கும் 10 சதவீத தொகையுடன் , அரசு கள் 14 சதவீத தொகையைச் செலுத்து கின்றன . ஆனால் தமிழக அரசு 10 சதவீதமே செலுத்துகிறது . வல்லுநர் குழு அறிக்கை மீது நட வடிக்கை எடுத்து பழைய ஓய் வூதியத் திட்டத்தையே செயல் படுத்த வேண்டும் , என்று கூறினார் .
Read More »

அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு.

அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும் . 

அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும் . UDISE PLUS DCF படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவலுக்கும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தகவலுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் கவனத்துடன் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . ஒவ்வொரு ஆசிரியர்பயிற்றுநரும் தங்களுக்குகீழ் உள்ள பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட DCF படிவமும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலும் சரியானது என சான்று அளிக்க வேண்டும் . 

வட்டார கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் சரியான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்குரிய சான்றை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் .
Read More »

எங்களையும் காப்பாற்றுங்கள்...அமைச்சருக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்!

கடந்த ஆகஸ்ட் 2010க்குப் பிறகு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி , முறையான ஒப்புதலுடன் தமிழகத்தில் அரசுஉதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணி நியமனம் பெற்று , அவர்களது பணிக்கான தகுதி காண் பருவ ஆண்டுகளையும் கடந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் 1747 ஆசிரியர்களின் பரிதாப நிலையை விவரிக்கிறது இக்கட்டுரை . . . . தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான நோடல் ஏஜென்சி எங்களையும் கா அமைப்பது தொடர்பான தமிழக அரசின் அரசாணை எண் : 181 , நவம்பர் 2011 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைகள் குறித்த அரசாணை எண் . 90 மார்ச் 2012 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன .

ஆனால் தமிழகத்தில் ஜுலை 2012ம் நாள் தான் முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது . அதன் முடிவுகள் ஆகஸ்ட் 2012 ல் வெளியானது . எனவே தமிழகத்தில் ஆகஸ்ட் 2012 வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் யாருமே இல்லாத ஒரு சூழல் , நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய 2013ல் வெளியான அரசு உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 2013ம் நாள் தீர்ப்பு வழங்கியது . அதன் பிறகு உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் பல்வேறு மேல்முறையீடுகள் செய்யப்பட்டன . ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்ற ஆணைகள் மூலமே இந்த 1747 ஆசிரியர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் . இன்று வரை இது தொடர்கிறது .

தற்போது இவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஒரு பெண் ஐ . ஏ . எஸ் . அதிகாரி இயக்குநர்களை முடுக்கி விட்டுள்ளாராம் . இதனால் தங்களது பணிக்கு மீண்டும் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சிக் கிடக்கிறார்கள் ஆசிரியர்கள் .

Read More »

ஏப். 26ல் ஆசிரியர்கள் தொடர்முழக்க போராட்டம்: ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தகவல்

Sunday 23 February 2020

சென்னையில் ஏப்., 26ல் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழக அரசு 5, 8 ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பை திரும்ப பெற்றதை வரவேற்கிறோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி 2018 நவ., 26 ல், மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக 1,500 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.


உயர்நீதிமன்றம் இதை ரத்து செய்தது. போலீஸ் எப்.ஐ.ஆர்., பேரில் கல்வி துறையால் வழங்கப்பட்ட 17 பி நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான 17 பி நடவடிக்கை, குற்ற நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் 7,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியவில்லை. பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பலன்களை பெற முடியவில்லை.


ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெறக் கோரி உயர் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி ஏப்.,26 சென்னையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம் நடக்கவிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Read More »

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப்.26ல் செய்முறை தேர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி 26ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, 26.02.2020 முதல் 28.02.2020 வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.


மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சியுறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுத அறிவிக்கப்படுகிறார்கள். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள், இந்த அறிவிப்பின் மூலம், அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்வதற்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.


அதே போல் நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 25.02.2020 பிற்பகல் முதல் www.tndge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று ஹால்டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தை அழுத்த வேண்டும்.அப்போது தோன்றும் பக்கத்தில் எஸ்எஸ்எல்சி எக்சாம் மார்ச் 2020 - பிரைவேட் கேன்டிட்டேட்- ஹால்டிக்கெட் பிரின்ட் அவுட் என்ற வாசகத்தை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதியை அளித்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


அறிவியல் பாட செய்முறை தேர்வு குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். மார்ச் 2020 பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை www.tndge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read More »

24.02.2020 இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுதல் மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது உறுதிமொழி எடுக்க கோருதல்

Read More »

MHRD to Visit Tamilnadu schools programme Feb 24 to 26

Read More »

HOW TO PREPARE GPF ADVANCE BILL IN IFHRMS

HOW TO PREPARE GPF ADVANCE BILL IN IFHRMS

Read More »

School Morning Prayer Activities - 24.02.2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.02.20

திருக்குறள்

அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம்:

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

பழமொழி

Love thy neighbours  as thyself

 உன்னைப்போல் பிறரையும் நேசி.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

மனிதன் எப்பொழுதும் தான் வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது இல்லை .ஆனால் அவனது கீழ்தர செயல்கள் தொடங்கிய இடத்திற்கே இட்டுச்செல்கிறது........

                  - சாரதா தேவி்

பொது அறிவு

1.மத்திய கலால் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 பிப்ரவரி 24

2.கலால் வரி என்றால் என்ன?

நம் நாட்டிற்குள் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி மீது விதிக்கப்படும் வரி.

English words & meanings

Zoopathology – study of animal diseases. விலங்குகள் நோய் குறித்த படிப்பு.

 Zebra-Wood - lined wooden pieces, பட்டைக் கோடுகள்  உடைய மரக் கட்டைகள்

ஆரோக்ய வாழ்வு

செவ்வாழையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன .மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பலவித சத்துக்களும் நிறைந்துள்ளன.

Some important  abbreviations for students

OMW -- On my way

OMC --  On my cash

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

முயற்சியே வெற்றியைத் தேடி தரும்

குறள் :
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விளக்கம் :
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

கதை :
ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது.

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

நீதி :
தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும்.

இன்றைய செய்திகள்

22.02.20

◆நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

◆விக்கிப்பீடியா அமைப்பினால் நடத்தப்பட்ட வேங்கை கட்டுரைப் போட்டியில் இந்திய அளவில் 331 பயனர்கள் பங்கேற்று 16 மொழிகளில் 13,490 கட்டுரைகள் எழுதினர். அதில் தமிழ் மொழி 62 பயனர்கள் எழுதிய 2959 கட்டுரைகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

◆நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் இணையவழியில் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று  தில்லியில் நடைபெற்ற சா்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

◆ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமாா் தாஹியா தங்கம் வென்றாா். மேலும் பஜ்ரங் புனியா, கௌரவ் பாலியான், சத்யவிரத் கடியன் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

◆ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் 15.43 மீட்டர் நீளம் தாண்டி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines

🌸For the student Abinaya from Namakkal who is going to the NASA International research centre the government will give 2,00,000 rupees says CM Palanisamy.

🌸 In The Tiger Project Essay Competition from India 331 Participants wrote in 16 languages and wrote 13,490 essays.  In this 62 Tamil language participants took part and wrote 2959 essays and bagged first prize.

🌸 PM  Narendra Modi said in international Judiciary Meet that all courts throughout  India will be united through online and the central government is taking the steps for this.

🌸 In Asian Wrestling Championship India's Ravikumar Thahiya won gold medal. And also Pajrang Puniya, Gourav Paliyaan, Sathyavirath Kadiyan won silver medals.

🌸 In Spain's Madrid City there is inner stadium athletic competition for ladies is going on. In this in triple jump Yulimer Rojas from Venisula jumped 15.43 mts and form a new world record.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம் - SPD PROCEEDINGS

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கட்டடப் பணிகள் - நிலையான பராமரிப்பு விதிமுறைகள்- (Standard Operating Procedures - SOP) - பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம் - அனைத்து பள்ளிகளுக்கு நடவடிக்கைகாக அனுப்பி வைத்திட மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்தல் - நடவடிக்கை - சார்பு

Read More »

அரசு பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சசார விவரம் அனுப்ப உத்தரவு

திருவள்ளூர் , சேலம் உள் பட 19 மாவட்டங்களில் , ஆசிரியர் - மாணவர் விகி தாச்சார , விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது . தமிழக பள்ளிக்கல் வித்துறை சார்பில் , அர சுப்பள்ளி ஆசிரியர்க ளுக்கான இடமாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத் தப்பட்டு வருகிறது . ஒவ் வொரு வருடமும் , அந்த கல்வியாண்டின் ஆகஸ்ட் மாதத்தை அடிப்படை யாக கொண்டு , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு , உபரி ஆசிரியர் மற்றும் தேவை பட்டியல் தயார் செய்யப் படுகிறது



Read More »

IAS, IPS, IRS - UPSC - முதன்மை தேர்விற்கு விண்ணப்பிக்க முழு விபரங்கள்!


1. Indian Administrative Service
2. Indian Foreign Service
3. Indian Police Service
4. Indian P&T Accounts & Finance Service, Group 'A'
5. Indian Audit and Accounts Service, Group 'A'
6. Indian Revenue Service (Customs and Central Excise), Group 'A’



7. Indian Defence Accounts Service, Group 'A'
8. Indian Revenue Service (I.T.), Group 'A
9. Indian Ordnance Factories Service, Group 'A' (Assistant Works Manager, Administration)
10. Indian Postal Service, Group 'A'
11. Indian Civil Accounts Service, Group 'A'
12. Indian Railway Traffic Service, Group 'A'
13. Indian Railway Accounts Service, Group A'
14. Indian Railway Personnel Service, Group 'A'
15. Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group 'A'
16. Indian Defence Estates Service, Group 'A'



17. Indian Information Service (Junior Grade), Group 'A’
18. Indian Trade Service, Group `A'
19. Indian Corporate Law Service, Group 'A'
20. Armed Forces Headquarters Civil Service, Group 'B' (Section Officer's Grade).
21. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group `B'
22. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group 'B'
23. Pondicherry Civil Service, Group 'B'
24. Pondicherry Police Service, Group 'B'
இந்திய அரசின் உயர்நிலைப் பணிகளான இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இந்திய அரசின் உயர்நிலைப் பணிகளான இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 (Civil Services (Preliminary) Examination 2020) அறிவிப்பை மத்திய தேர்வாணையக் குழு (Union Public Service Commission) வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இடம்பெற்றிருக்கும் 24 வகையான பணிகளில், தற்போதைய நிலையில் 796 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 24 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



தேர்வுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் குறைந்தது ஒரு இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்களுக்கு 21 வயது ஆகியிருக்க வேண்டும். 1-8-2020 அன்று 32 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் – 5, ஓபிசி – 3 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு உண்டு. பிற வயதுத் தளர்வு குறித்த தகவல்களுக்கும், உடற்தகுதி தகவல்களுக்கும் தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் இத்தேர்வை 6 முறைகளுக்கு மேல் எழுத இயலாது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இந்தக் கட்டுப்பாடு எதுவுமில்லை.



இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் http://upsconline.nic.in எனும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 (Civil Services (Preliminary) Examination, 2020) விண்ணப்பப் படிவத்தை, இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம், பகுதி 1 மற்றும் பகுதி 2 என்று இரு பகுதிகளாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

பகுதி 1 விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100/- செலுத்திவிட்டு, பிறகு பகுதி 2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3-3-2020.



தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஏதாவதொரு சூழலில் விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக்கொள்ள விரும்பினால், 12-3-2020 முதல் 18-3-2020 வரை பெற்றுக்கொள்ள முடியும். திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் தகவல் குறிப்பேட்டில் தனி இணைப்பாகக் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் உட்பட, இந்தியா முழுவதும் 72 நகரங்களில் தேர்வு நடத்தப்பெறும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அனுமதி அட்டையை (E-Admit Card) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து தேர்வு நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.



இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (Civil Services (Preliminary) Examination, 2020) தாள் 1 - கொள்குறி வகைத் தேர்வு (Paper I - Objective Type) – 200 மதிப்பெண்கள், தாள் 2 பொதுக்கல்வித் தேர்வு (Paper II - General Studies) – 200 மதிப்பெண்கள் என்று இரு தாள்களுக்கான தேர்வுகளாக நடைபெறும். இத்தேர்வு ஒவ்வொன்றுக்கும் இரண்டு மணி நேரம் கால அளவாக இருக்கிறது. இத்தேர்வில், தாள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 33% மதிப்பெண் பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.



இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் http://upsconline.nic.in இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் இந்தியக் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 தகவல் குறிப்பேட்டில் தெரிந்துகொள்ளலாம். அல்லது, டெல்லியிலுள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் ‘C’ Gate அமைந்திருக்கும் உதவி மையத்தில் நேரடியாகப் பெறலாம். அல்லது தேர்வாணைய அலுவலகத்தின் அலுவலக வேலை நேரத்தில் 011 - 23385271, 23381125, 23098543 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பெறலாம்.
Read More »

பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Saturday 22 February 2020

பள்ளிகளில் கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி ஏற்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் 75% பெண் ஆசிரியர்களே உள்ளதால் தேர்வெழுதும் மாணவிகள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Read More »

தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை


தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை

Read More »

விவசாயத்திற்காக செயற்கைக்கோள் கண்டுபிடித்து அசத்திய மாணவிகள்

விவசாயத்திற்காக செயற்கைக்கோள் கண்டுபிடித்து அசத்திய மாணவிகள்
Read More »

பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நாள் Post NAS பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நாள் Post NAS பயிற்சி
Read More »

சனிக்கிழமைகளில் புத்தகப்பை வேண்டாம் -முதல்வர் அறிவிப்பு(ராஜஸ்தான்)

Read More »

5th std February 4th Week Lesson Plan All subjects

Click here 5th std February 4th Week Lesson Plan
Read More »

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி




Read More »
 

Most Reading

Tags

Sidebar One