Search

நேரடியாக தலைமை ஆசிரியர்களை நியமித்தால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் - ஆசிரியர்கள் அச்சம்

Monday 17 February 2020

நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நேரடியாக தேர்வு செய்யவேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

மொத்த தலைமையாசிரியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் இப்படி நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்றும் அவர்களுக்கு துறைவாரியான தேர்வு நடத்தி பணியில் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சொல்கிறது.தங்களது புதிய கல்விக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம் இது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.



இந்த விவகாரம் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது..

தமிழகத்தைப் பொறுத்தவரை 24 ஆயிரத்து 321 ஆரம்பப் பள்ளிகளும் 6,966 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கல்வியை கற்றுத்தரும்பணியில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்..



இந்தநிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக தலைமை ஆசிரியர்கள் என்றால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்…

தமிழக அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணியின் பொதுச் செயலாளரான ஆர் தாஸ் சொல்கிறார், ''முதலாவதாக ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அதிகளவில் இருப்பது கிராமப்புறங்களில் தான். இங்கு படிக்கும் மாணவ மாணவியரை கையாளுவது என்பது மிகவும் கடினமான காரியம் அனுபவம் இல்லா விட்டால் பல்வேறு சிக்கல்களை ஆசிரியர்கள் சந்திக்க நேரிடும்.

உதாரணத்திற்கு. குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் வாழ்வாதாரம் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள் , அவர் களுடைய பொருளாதார சூழல், உறவு முறைகள், மண்ணுக்கே உண்டான பிரச்சனைகள் போன்றவற்றை உணர்ந்து நன்கு புரிந்து வைத்திருந்தால் மட்டுமே மாணவ மாணவியரை வழிநடத்த முடியும், பிரச்சினைகள் எழுந்தாலோ, மாணவ மாணவியர் சரியாக படிக்கவில்லை என்றாலோ, அவற்றை சரிப்படுத்த அவர்களின் பெற்றோர்களிடம் சுமூகமான அணுகுமுறையை கையாளவும் நன்கு அனுபவம் தேவை.. இப்படி செய்ய அங்கு தொடர்ந்து நீண்டகாலம் பணிபுரியும் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.



தேர்வுகள் மூலம் நேரடியாக ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பதவிக்கு வருபவர்களால், கிராமப்புற பள்ளிகளை நிர்வகிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியம்.. உள்ளூர் மக்களின் மனநிலையைப் புரியாமல் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்''

இன்னொரு புறம் இப்படி நேரடியாக பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவி பதவி உயர்வுக்காக கிடைத்திருக்கும் ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. ஒரு கட்டத்திற்கு மேல் பதவி உயர்வு கிடைக்காது என்று தெரிந்துபோனால், ஆசியர்களிடம் பணியில் ஆர்வம் குறைந்துபோய் சோர்ந்தேபோய்விடுவார்கள்.

மொத்தத்தில் கிராமப்புற பள்ளிகளை அழிக்கும்வேலையைத்தான் பார்க்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு என்பதே ஆசிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.

தேர்வுகள் நடத்தி நேரடியாக பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நியமனம் என்ற விஷயத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளப்போகிறது இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்.
Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.20

திருக்குறள்

அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:383

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

விளக்கம்:

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

பழமொழி

All things are  difficult  before they are practiced

 சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

கடமையை உயிராக போற்றும் ஒருவரது கர்மம், துன்பத்தையும் இன்பமாக மாற்றும் வல்லமை உடையது.

          ....சத்ரபதி சிவாஜி

பொது அறிவு

1. சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?

 துரோணாச்சாரியா விருது.

2. மூன்று நிமிடங்கள் மட்டும் மலர்ந்து இருக்கும் மலர் எது ?

பார்லி மலர்.

English words & meanings

 Spermology – study of seeds. விதைகள் குறித்த அறிவியல் படிப்பு.

Saccharin - a very sweet chemical substance that can be used instead of sugar.

சர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய மிக இனிப்பான வேதியியற் பொருள் வகை.

ஆரோக்ய வாழ்வு

பேரீச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.

Some important  abbreviations for students

VR - Virtual reality

BW - Body weight

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

நன்றி மறவா நண்பர்கள்

குறள் :
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

விளக்கம் :
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

கதை :
ராமுவும், சோமுவும் ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது.

அப்பொழுது தண்ணீர் குடிப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது ராமு, சோமுவை அடித்துவிட்டான். சோமு அழுது கொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான்.


தொடர்ந்து அதே வழியில் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ராமு தவறி விழப்போனான். அப்பொழுது சோமு தனது உயிரையும் பொருட்படுத்தாது ராமுவை காப்பாற்றினான்.

அதைப் பார்த்த சோமு அருகில் இருந்த ஒரு பாறையில் என் நண்பண் என்னைக் காப்பாற்றினான் என்று செதுக்கி வைத்தான்.

நீதி :
ஒருவர் செய்த நன்றியை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளவும்.

இன்றைய செய்திகள்

18.02.20

◆வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனியாகத் தேர்வுகள் நடக்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

◆சர்வதேச தாய்மொழி தினத்தை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

◆பொதுத்தேர்வுகளை முன்னிட்டு ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


◆பருவநிலை மாறுபாட்டால் 2070-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தாவர, விலங்கினம் அழிவைச் சந்திக்கும் என்று தேசிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

◆இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ நிா்வாகம் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.

◆அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 8-ஆவது சுற்று முடிவில் 5.5 புள்ளிகளுடன் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்தாா்.

Today's Headlines

🌸 The Zipmar administration has announced that there will be no separate exams.The admission will be conducted only through NEET Examination in the up coming academic year.

 🌸UGC has ordered to celebrate International Mother Tongue Day in colleges and universities in a grand manner

🌸 West Bengal Pollution Control Board has announced the ban of loudspeakers due to public examination

 🌸 Researchers from the National Academy of Sciences have expressed concern that by 2070, one third of the world's flora and fauna will be destroyed by climate change.

 🌸 BCCI organisation allocates Rs 2 crore to Indian Cricket Association

🌸 Goneroo Hampi from India tops the list with 5.5 points at the end of the 8th round of the US Cannes Cup Chess Tournament
Read More »

தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கணக்கெடுப்பு.!!

அனைத்து மாவட்டங்களிலும், தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகளை கணக்கெடுத்து, அவற்றை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


தி.மு.க., - பிச்சாண்டி:

நடுநிலை பள்ளியை, உயர்நிலை பள்ளியாகவும், உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாகவும் நிறைய இடங்களில், தரம் உயர்த்த வேண்டி உள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஒரே ஆண்டில், ௧௦௦ பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. என் தொகுதியில், பள்ளியை தரம் உயர்த்த, பணம் செலுத்தி, பல ஆண்டுகளாகியும், தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. பல கிராமங்களில், பஸ் வசதி இல்லை. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். பஸ் வசதி இல்லாத கிராமங்களில் உள்ள, பள்ளிகளை தரம் உயர்த்தினால், மாணவர்கள் பஸ்சை தேட வேண்டியதில்லை. எனவே, பள்ளிகளை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், கூடுதல் மாண வர்கள் உள்ள பள்ளிகளில், தரம் உயர்த்தப்பட வேண்டியதை கண்டறிந்து, அவற்றை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில்,ஒரே ஆண்டில், 225 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தி.மு.க., - தங்கம் தென்னரசு:
உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த, 1 லட்சம் ரூபாய்; மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, 2 லட்சம் ரூபாய் நிதி கேட்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசு திட்டங்களில், பள்ளியை தரம் உயர்த்த, நிதி ஒதுக்கும் போது, மக்களை நிதி செலுத்தும்படி கூறுவது தேவையற்றது. எனவே, பள்ளியை தரம் உயர்த்த, மக்களிடம் பணம் வசூலித்து, நிதி செலுத்த வேண்டும் என்ற, நிபந்தனையை தளர்த்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்:
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, இந்த நிபந்தனை தளர்த்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும், நிபந்தனையை தளர்த்துவது குறித்து, முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
Read More »

பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு.

சமூக நல ஆணையர் அவர்களின் கடிதத்தின்படி , மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 11.07.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் . 110க்கீழ் 10,024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் . எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்பட்டு , ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து அதன் அறிக்கை .பினைஇவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது .


Read More »

மஹாசிவராத்திரி - 21.02.2020. வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

1) கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் 21 . 02 . 2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று நடைபெறுவதால் 21 . 02 . 2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது .

( 2 ) 21 . 02 . 2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2020 திங்கள் நான்காவது சனிக்கிழமை ( 28 . 03 . 2019 ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில்  v.B



 F f.B.C  அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் .

( 3 ) 21 . 02 . 2020 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு , தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . பிரசாந்த் மு . வடநேரே , இ . ஆ . ப . , அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் 
Read More »

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா?


முன்பெல்லாம் பள்ளிக் கல்வித்துறையின் ஆண்டு பள்ளி வேலைநாள்களுக்கான செயல்திட்டத்தினை அந்தந்த மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தத்தம் மாவட்டத்தில் காணப்படும் விழாக்கள் மற்றும் சிறப்பு நாள்களைக் கவனத்தில் கொண்டு ஒரு கல்வியாண்டிற்குரிய பள்ளி வேலைநாள்கள் குறித்து அறிவிக்கை வெளியிடும் வழக்கம் இருந்து வந்தது.



பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இந்த நடைமுறையினைப் பின்பற்றி, பள்ளியைச் செம்மையுடன் வழிநடத்தி வந்தனர்.
மாவட்ட அளவில் பள்ளிகள் இயங்குவதும் விடுமுறை அளிப்பதும் எந்தவொரு சிக்கலுக்கும் வழிவகுக்காமல் ஒவ்வொரு பள்ளியும் ஆண்டு இறுதியில் மொத்தம் வேலை செய்திருக்க வேண்டிய வேலை நாள்களை நிறைவு செய்து முடித்த கதை இன்று பழங்கதை ஆகிவிட்டது.
மேற்கூறிய நடைமுறையில் ஆசிரியப் பெருமக்கள் விடுமுறை அளிக்கப்பட்ட சனிக்கிழமைகளில் தத்தம் சொந்த அலுவல் வேலைகளை இலகுவாக செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது வங்கி மற்றும் அஞ்சலகம் பணிகள், மின்கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்துதல், பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் நடத்தப்படும் பெற்றோர் சந்திப்புக் கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் முதலான ஏற்கனவே திட்டமிட்டு ஒதுக்கி வைத்த குடும்பத் தலைவர் சார்ந்த பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பர்.



அண்மைக் காலமாகப் பள்ளிகள் அனைத்தும் ஒற்றை அதிகார எல்லைக்குள் இயங்கத்தக்க வகையில் முன்பைவிட ஆண்டு பள்ளி வேலை நாள்கள் 220 விருந்து 210 வேலை நாள்களாகக் குறைக்கப்பட்டு விட்டது. ஆனாலும், பள்ளிகள் அனைத்தும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை நாளாக இயங்கிட அறிவுறுத்துவது என்பது ஏற்புடையதாக அமையாது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வரும் போது ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவித பீதியில் நாளை அதாவது எதிர்வரும் சனிக்கிழமை அன்று பள்ளிக்கு வேலைநாளா? அல்லது விடுமுறையா? என திக்திக் நொடிகளுடன் மாலை இறைவணக்கக் கூட்டம் முடிய அனைவரையும் இருக்க வைப்பது என்பது சகிப்பதற்கில்லை.
சில வேளைகளில் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்ட நடப்பு மாத நாட்காட்டியில் சுட்டப்பட்டிருக்கும் சனி விடுமுறையை மாணவர்களுக்கு அறிவித்த பின்னர் பறந்து வரும் சூடான மின்னஞ்சலில் அறிவிக்கப்பட்டிருக்கும் சனி வேலை நாள் அறிவிப்பை ஆற்றாமையையும் வேதனையையும் மனத்தில் புதைத்துக் கொண்டு மறு அறிவிப்பு செய்வதைப் பார்த்து மாணவர்கள் தம் முக பாவனைகளில் மூலம் வெளிக்காட்டும் சலிப்பையும் எரிச்சலையும் பார்க்க முடியாது. பள்ளிப் பாடத்தில் படித்த துக்ளக் ஆட்சி அவர்களின் நினைவில் நிழலாடும் போலும்!



பல்வேறு தற்செயல் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் காரணமாகக் குறைவு ஏற்பட்ட பள்ளிகள் அவற்றை ஈடுகட்டும் பொருட்டு சனிக்கிழமை அன்று வேலை நாளாகக் கொள்வது என்பது ஏற்புடையது.
போதிய வேலை நாள்களைக் கொண்டோரையும் வேண்டுமென்று பள்ளியை அன்று இயக்கச் செய்வதென்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இதுபோன்ற பழிவாங்கும் ஆசிரியர் விரோத நடைமுறைகளால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. படிப்பு மீது ஒருவித வெறுப்பும் சலிப்பும் உண்டாகி பள்ளி இடைநிற்றலுக்கு இது அடிகோலும் என்பது உண்மை.
எனவே, ஒரு கல்வியாண்டுக்குரிய பள்ளி வேலை நாட்காட்டியை தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் தவறாமல் பின்பற்றி வர தக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். இடையில் தேவையில்லாமல் ஆவி பறக்கும் அறிவிப்புகளை விடுத்து வீண் குழப்பங்கள் ஏற்படுத்த முனையக்கூடாது. அல்லது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த மாவட்ட அளவிலான பள்ளி நாட்காட்டியை உருவாக்கச் செய்து வழிகாட்டுதல் நல்லது.



அதைவிடுத்து வீணாக வெள்ளிக்கிழமை பதட்டத்திற்கு வித்திடுவது என்பது யாருக்கும் நல்லதல்ல. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் திறந்த மனத்துடன் மாணவர் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதையே முதன்மையாகக் கொள்ளுதல் நலம் பயக்கும். வாரத்தின் முதல் நாள் முதற்கொண்டு ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோரிடையே தகுந்த காரணங்கள் இல்லாமல் தொற்றிக்கொள்ளும் வெள்ளிக்கிழமை பீதிக்கு நிரந்தர விடைகொடுப்பது ஒன்றே நல்ல தீர்வாகும்.
Read More »

தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம்!!


நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.

இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.

அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன
Read More »

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு - பணிநிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிக்க கோரிக்கை!

பகுதிநேர ஆசிரியர்களின்
ஊதியஉயர்வு - பணிநிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிப்பு
வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கருணை
மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் மறைந்த தமிழக முதல்வர்
ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்கள்
ரூ.5ஆயிரம்  தொகுப்பூதியத்தில் உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை
தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி பாடங்களை நடத்திட
அனைவருக்கும் கல்வி இயக்க நிதியை பெற்று பள்ளிக்கல்வித்துறை மூலம்
நியமனம் செய்யப்பட்டோம்.

கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2ஆயிரத்து 700 மட்டுமே ஊதியஉயர்வு
வழங்கப்பட்டுள்ளது.இதனால் 9-வது ஆண்டாக பணிபுரியும் எங்களுக்கு தற்போது
தரப்படும் சம்பளம் ரூ.7ஆயிரத்து 700 தினக்கூலியைவிட குறைவானது.
வருடாந்திர சம்பளஉயர்வு 10 சதவீதம் தரப்பட்டிருந்தால் சம்பளம்
ரூ.10ஆயிரம் எப்போதே கிடைத்திருக்கும்.
16549 பேரில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களின் நிதியை தற்போது பணிபுரிந்து
வரும் 12ஆயிரம் பேருக்கு பகிர்ந்து வழங்கினாலே ரூ.11ஆயிரம்வரை
வழங்கமுடியும்.

இதனுடன் 7-வது ஊதியக்குழு 30 சதவீதம் ஊதியஉயர்வை அமுல்செய்தால்
ரூ.15ஆயிரம் வரை அரசு வழங்க வழி இருக்கிறது. எனவே விலைவாசி உயர்வுக்கேற்ப
எங்களுக்கு சம்பள உயர்வை தர அரசு முன்வரவேண்டும்.

9 ஆண்டுகளாக பணிபுரியும் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால் அரசின்
பணபலன்களை பெறமுடியாமலும், போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ
காப்பீடு, பணி ஓய்வு மற்றும் இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின்
குடும்பங்களுக்கு குடும்பநலநிதி எதுவும் கிடைக்காமலும் வாழ்வாதாரத்தை
இழந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில் 10-வது கல்வியாண்டு
தொடங்கவுள்ள நிலையில் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால், மே மாதம் சம்பளம்
இதுவரை 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதால் அனைவருக்கும் ரூ.53ஆயிரம்வரை
இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கான பணிநியமன ஆணையில் மே மாதம்
சம்பளம் கிடையாது என குறிப்பிடாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கை எங்களை
மேலும் பாதிக்கிறது.

வேலைநிறுத்த காலங்களில் அரசின் உத்தரவின்படி ஊதியம் எதுவுமின்றி
முழுநேரமும் பள்ளிகளை திறந்து பாடம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு
அரசு சலுகைகளை செய்ய முன்வரவேண்டும் என எதிர்பார்த்து வருகிறோம்.
நாங்கள் நியமனம் செய்யப்பட்டதோடு 2-வது முறையாக ஆட்சி செய்யும் அதிமுக
அரசின் பட்ஜெட்டில் இதுவரை ஒருமுறைகூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு
சம்பளஉயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்புகள் வெளியிடாதது
எங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது.
ஒன்று எங்களை பணிநிரந்தரம் செய்யுங்கள். இல்லையெனில் ரூ.18ஆயிரம்
குறைந்தபட்ச சம்பளத்தை கொடுங்கள் என்ற இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி
வருகிறோம்.

3 ஆண்டுக்குமேல் பணிபுரிந்த 16ஆயிரம் துப்புரவு பணியாளர்களை சிறப்பு
காலமுறையில் பணியமர்த்தும் அரசு, 9 ஆண்டுகளாக பாடம் நடத்தும் 12ஆயிரம்
பகுதிநேர ஆசிரியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த முன்வரவேண்டும்.
தற்போது எங்களுக்கு ரூ.7ஆயிரத்து 700 சம்பளம்தர அரசு ஆண்டுக்கு
ரூ.100கோடி செலவிடுகிறது. எங்களை இடைநிலை ஆசிரியர்கள் நிலையில்
பணியமர்த்தினால் அரசு மேலும் ரூ.250கோடி நிதிஒதுக்கினோலே போதும்.

எனவே இம்முறையாவது பட்ஜெட்டில் 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட
வலியுறுத்தி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் 9487257203
Read More »

5 & 8 பொதுத்தேர்வு ரத்து, அரசாணை வெளியீடு!!

பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் ( திருத்தம் ) சட்டம் 2019 - மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றி செயல்பட்டுவரும் பள்ளிகளில் 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 - ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துதல் - இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது .

Read More »
 

Most Reading

Tags

Sidebar One