Search

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த நேரக் கட்டுப்பாடு

Tuesday 14 July 2020

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எந்தெந்த வகுப்புகளுக்கு, எவ்வளவு நேரம் நடத்தலாம் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அதில் எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு நேரம் வகுப்பு நடத்தலாம் என்பது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும்.

1 முதல் 8ம் வகுப்பு வரை அதிகபட்சம் தலா 45 நிமிடம் என்ற அளவில் 2 வகுப்புகளை எடுக்கலாம்.

9 முதல் 12ம் வகுப்பு வரை அதிகபட்சம் தலா 30-45 நிமிடம் என்ற அளவில் 4 வகுப்புகளை எடுக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளை நீக்கக் கூடாது
புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு நேற்று வெளியிட்டது. 

அதில், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த புள்ளி விவரங்களை அனைத்து மாநில, யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் திரட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் அக்குழந்தைகளை பதிவேட்டில் இருந்து நீக்கக் கூடாது. எந்த நேரத்திலும் அவர்கள் மீண்டும் திரும்பி வர வாய்ப்புள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல கிராமப்புறங்களில் புலம்பெயர்ந்து வந்த குழந்தைகளிடம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிக அடையாள ஆவணங்களை கேட்க கூடாது. சில ஆவணங்களுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். டிசி, முன்பு படித்த வகுப்பு சான்றிதழ் போன்றவை கேட்டு நெருக்கடி தர கூடாது,’’ எனவும் கூறப்பட்டுள்ளது.

Read More »

தொலைக்காட்சி வழி கல்வி, பாடப்புத்தகம் வழங்குதல் , கல்வியாண்டின் திட்ட அறிக்கை வல்லுநர் குழு சமர்பித்தல் தொடர்பான முதல்வர் தொடங்கிவைத்த நிகழ்ச்சிகளின் செய்தி அறிக்கை.

Honble Chief Minister launched the TV Channel for students of 10th Standard, handed over free books to 10th and 12th Standard students and received the report of the Expert Group to advise on Academic and Teaching issues arising due to COVID -19

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று ( 14.7.2020 ) தலைமைச் செயலகத்தில் , கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் , 10 – ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் தொடங்கி வைத்தார்கள். மேலும் , 10 – ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்கள். பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் , பொதுத் தேர்வுகள் , கல்வி உதவித் தொகை தேர்வுகள் , நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் , கல்வி தொலைக்காட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26.8.2019 அன்று தொடங்கி வைத்தார்கள்.

இத்தொலைக்காட்சியில் , எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் , படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் , மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள் , பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள் , புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல் , அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் , கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

கோவிட் -19 வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் , வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் , கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.

மாணவ , பள்ளிக் கல்வித் துறையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 – ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி துவக்கி வைத்தார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12 – ஆம் வகுப்பு மாணாக்கர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை ( Video Lessons ) மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi – Tech Labs ) வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை , அவ்வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் , இ.ஆ.ப. , அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் , மாண்புமிகு பள்ளிக் கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு . கே.ஏ. செங்கோட்டையன் , தலைமைச் செயலாளர் திரு . க . சண்முகம் , இ.ஆ.ப. , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு . தீரஜ்குமார் , இ.ஆ.ப. , பள்ளிக் கல்வி ஆணையர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் , இ.ஆ.ப. , பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு :
இயக்குநர் ,
செய்தி மக்கள் தொடர்புத்துறை ,
சென்னை -9
நாள் : 14.7.2020 )

Read More »

10, பிளஸ் 2விற்கு இன்று முதல் பாட புத்தகம்…மடிக்கணினியில் பதிவிறக்கவும் ஏற்பாடு

முதற்கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இன்று முதல் பாட புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் தமிழ்நாடு பாடநுால் கழகத்தால் அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக சி.இ.ஓ.,அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக, பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.கடலுார் மாவட்டத்தில், கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என, நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டத்தில் 1,300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிப் பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளனர்.

இவர்களுக்கு தேவையான புத்தகங்கள் பாட வாரியாக சி.இ.ஓ.,அலுவலகத்தில் இறக்கி வைத்து, வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டன. பின்னர் அங்கிருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பப்பட்டன. முதற்கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இன்று (15ம் தேதி) முதல் புத்தகங்களை வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாட புத்தகங்கள் வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 20 பேருக்கு புத்தகம் வழங்க வேண்டும். பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். கையுறை, முகக் கவசம் அணிய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் மட்டுமின்றி சில பாடங்களின் குறிப்புகளை வீடியோ பதிவாக காணும் வகையில் உயர்ரக கணினி ஆய்வகத்தில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.வீடியோ பதிவான பாட குறிப்புகளை மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று வீடியோ பதிவு பாட குறிப்புகளை பதிவேற்றம் செய்து கொள்ள பென்டிரைவ் அல்லது மடிக்கணினி கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்

Read More »

டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும்போது இணைக்க வேண்டிய கருத்துருக்கள்!

2020 ம் ஆண்டுக்கான டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா 05.09.2020 அன்று ஆசிரியர் தின விழாவாக நடைபெற உள்ளது. எனவே , திண்டுக்கல் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை நலத்துறையின் அனைத்துவகை பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு மாநில நல்லாசிரியர் விருதிற்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. எனவே , விருது பெறத் தகுதியான ஆசிரியர்களை இனம் கண்டு விருது பெறுவதற்காக தகுதியான ஆசிரியர்களின் கருத்துரு 20.07.2020 க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு திண்டுக்கல் மாவட்டம் , அனைத்துவகைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விருது பெறத் தகுதியான ஆசிரியர்களின் கருத்துரு அனுப்பிவைக்கும் பொழுது சம்மந்தப்பட்ட ‘ வட்டாரக்கல்வி அலுவலர் பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வர் கீழ்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1. முகப்பு கடிதத்தில் ஆசிரியரின் வீட்டு முகவரி ( மின்னஞ்சல் குறியீட்டுடன் ) மற்றும் கைப்பேசி எண் குறிப்பிட வேண்டும்.

2. இரண்டு கருத்துரு அனுப்பிடல் வேண்டும்.

3. கருத்துரு சாதாரண புத்தக வடிவில் இருத்தல் வேண்டும்.

4 . இரண்டு கருத்துருக்களுடன் சம்மந்தப்பட்ட ஆசிரியரின் அசல் பணிப்பதிவேடு இணத்தனுப்பிடல் வேண்டும்.

5 . இணைப்பில் கண்டுள்ள படிவம் பூர்த்தி செய்து ( வானவில் அவ்வையார் தமிழ் ப்பான்டில் ( Vanavil Avvaiyar ) ல் Excel format ல் மட்டுமே தட்டச்சு செய்ய வேண்டும் ) rewritable CD ல் copy செய்து கருத்துருவுடன் இணைத்தனுப்ப வேண்டும்.

6. ஆசிரியர் திரு . / திருமதி . / செல்வி . / சகோதரி சகோதரன் . என்பாரின் கல்வி , பணிக்காலத்திற்கான பதிவுகள் சரியாக உள்ளது என்றும் , இவ்வாசிரியர் மீது எவ்விதழான சட்டரீதியான குற்றச்சாட்டுகள் , விசாரணைகஞ் கஈ ஏடத்தைதுவையில் இல்லை ரீதியாகவோ அல்லது வேறு எந்த முறையிலும் குற்றச்சாட்டுகள் ஏதும் எனவும் சார்ந்த ஆசிரியர் முதல் முடிய இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் என்கிற சான்று இணைத்தனுப்ப வேண்டும்.

7. நேர்காணலுக்கு அழைக்கும் பொழுது சம்மந்தப்பட்ட ஆசிரியர் ஆளரிச் சான்று மற்றும் இரண்டு passport size போட்டாவுடன் வருகை புரிந்திட வேண்டும்.

Read More »

சத்துணவு பொருட்களை பெற்றுக் கொள்வது எப்படி..

சத்துணவு பொருட்களை பெற்றுக் கொள்வது எப்படி..சத்துணவு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 42 இலட்சத்து 61 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத காரணத்தால் சத்துணவு திட்டம் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் மாணவர்கள் பலனடைவதற்காக, மே மாதத்திற்கான சத்துணவு உலர்பொருட்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 16 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசியும், 5200 டன் பருப்பும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3.100 கிலோ அரிசி மற்றும் 1.200 கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அதுபோல 6 முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு 4.650 கிலோ அரிசி மற்றும் 1.250 கிலோ பருப்பு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த உலர் உணவு பொருட்களை பெறுவதற்காக சத்துணவு திட்டத்தில் பயனடையும் மாணவர்கள், தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மற்றும் அடையாள அட்டையுடன் தாங்கள் கல்வி பயிலும் பள்ளிக்கு செல்லவேண்டும்.பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு மைய அமைப்பாளர்கள் மூலமாக மாணவர்கள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் முகக்கவசம் அணிந்தபடி, தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சமூக நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Read More »

தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும் தொடங்கிவைத்தார்

Read More »

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 14 ) மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 14.07.2020 ) இன்று 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,47,324 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 450

செங்கல்பட்டு - 264

திருவள்ளூர் - 360

மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4,743 ( 97,310 )

இன்றைய உயிரிழப்பு : 67 ( 2,099 )
Read More »

ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது-1 முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 2 வகுப்புகள் நடத்தலாம்

நாடு முழுவதும் பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்றில் இருந்து காக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

சில பள்ளிகளில், வழக்கமான பள்ளி நேரம் வரை வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதால், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகளை ஏற்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுத்து இன்று வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் விதிமுறைகளில், 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் விதிமுறைகளில்,

எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 45 நிமிடங்கள் என இரண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.

அதே போல 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தினமும் தலா 45 நிமிடங்கள் என 4 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை நெறிபடுத்தும் வகையில், பள்ளிகளில் எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்ற விதிமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

Read More »

வரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள்; அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்

வரும் கல்வியாண்டில், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, தமிழக அரசின் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை, கல்வித்துறை ஆணையர், இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க சுழற்சிமுறை வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறைப்பு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை தவிர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்த அடுத்த ஒரு சில தினங்களுக்குள் முழுமையான தகவல்கள் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

மாற்றுச் சான்றிதழ் கேட்க வேண்டாம்; பள்ளிகளில் சேர்க்கை வழங்குங்கள்: மத்திய அரசு

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை கேட்க வேண்டாம், பள்ளிகளில் மாணவர்களுக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள், பள்ளியில் சேர முடியாமல் போவதைத் தடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் பகுதிகளில் இருந்து வெளியேறு வெளி மாநிலம் அல்லது வேறு பகுதிகளுக்குச் சென்ற குழந்தைகளின் புள்ளி விவரத்தைச் சேகரிக்குமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதுபோன்ற குழந்தைகளின் பெயரை புலம்பெயர்ந்தவர்கள் அல்லது தற்காலிகமாக கிடைக்கப்பெறாத என்று குறிப்பிட்டு பதிவு செய்யுமாறும் அந்த அறிவுறுத்தல் அறிக்கையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும், தங்களது பள்ளியில் படித்த புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் நிலை குறித்து செல்லிடப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிய வேண்டும் என்றும், அவர்கள் தற்போதிருக்கும் இடத்தைப் பற்றியும் கேட்டறிய வேண்டும். அதுபோல புலம்பெயர்ந்து சென்ற பிள்ளைகளின் பெயர்களை தனியாக புலம்பெயர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு தனியாக ஒரு பதிவேட்டை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் பெயர்கள் பள்ளியின் பதிவேட்டில் இருந்து நீக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், (ஒரு வேளை அவர்கள் மீண்டும் திரும்பி வந்து, பள்ளியில் சேரக் கூடும்) என்றும், பள்ளியில் சேர்க்கைக்காக வரும் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித மாற்றுச் சான்றிதழ் உள்பட சான்றிதழ்கள் இன்றி அனுமதி வழங்குமாறும் மாநில அரசுகள் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றி கொடுக்கும் தகவல்கள் சரியாக இருக்கும் என்று தெரிந்தால், அதன் அடிப்படையாக வைத்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

10 & 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்புகள்..

10 & 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்குதமிழக அரசு வேலைவாய்ப்புகள்..Tamilnadu Ration Shop துறையில் Sales Person & Packer பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக HSC/ SSLC கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம் திருப்பூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் சென்னை) கொடுக்கப்பட்டுள்ளது.தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.நிறுவனம் : TN Ration Shop Recruitmentபணியின் பெயர் : Sales Person & Packer

கல்வித்தகுதி : HSC/ SSLCபணியிடம் : திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம் திருப்பூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் சென்னை.தேர்வு முறை : Interviewகடைசி நாள் : 08.07.2020 – 31.07.2020முழு விவரம் : https://www.tamilanwork.com/2020/06/tn-ration-shop-recruitment-2020.html?amp&utm_campaign=google_jobs_apply&utm_source=google_jobs_apply&utm_medium=organic என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More »

கல்வித்தகுதி: 12th pass – தமிழகத்தில் வேளாண் ஆராய்ச்சி துறையில் நேரடி அரசு வேலை.!!

Indian Agricultural Research Institute (IARI) அதிகாரபூர்வ இணையதளத்தில் Lab cum field Attendants Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12th Pass கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Nilgiris, TN கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Indian Agricultural Research Institute (IARI)

பணியின் பெயர் : Lab cum field Attendants Posts

கல்வித்தகுதி : 12th Pass

பணியிடம் : Nilgiris

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 31/07/2020

முழு விவரம் : https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/IARIRSWellingtonGypsumadv_08072020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து 

Read More »

CBSE – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்வீட்
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் https://t.co/t7xl0bGGSx. இணைய தளத்தில் வெளியாகும்

#cbseresults2020 #CBSEResults

Read More »

‘ஆன்லைனில்’ விண்ணப்பம் ஓய்வூதியருக்கு உத்தரவு

முதியோர் ஓய்வூதிய திட்டம் தொடர்பான கோரிக்கை விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டங்களுக்கான கோரிக்கை விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற ஓய்வூதிய திட்டம், கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய திட்டம்.முதிர்கன்னிகள் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம், இந்திராகாந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அந்தந்த தாலுகாக்களில் உள்ள இ-சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
Read More »

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

டெல்லி: ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 2 வகுப்புகள் நடத்தலாம். 9 முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 4 வகுப்புகள் நடத்தலாம் என கூறியுள்ளது.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One