Search

ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

Thursday 30 May 2019

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) செப்டம் (CEPTAM) எனும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 351 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 351

பணி: டெக்னீசியன்

வயது வரம்பு: 26.06.2019 தேதியின்படி 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: ரூ.100. அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு மற்றும் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2019 முதல் 26.06.2019
Read More »

பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் 992 பயிற்சிப் பணிகள்

தமிழகத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ரயில்பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள 992 பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 992

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. கார்பெண்டர் - 80
2. எலக்ட்ரீசியன் - 200
3. பிட்டர் பிரிவில் - 260
4. மெஷினிஸ்ட் - 80
5. பெயிண்டர் - 80
6. வெல்டர் - 290
7. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02

வயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

 உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2019
Read More »

எஸ்பிஐ வங்கியில் 641 சிறப்பு அதிகாரி வேலை

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது 'ரிலேசன்ஷிப் மேனேஜர்,' மருத்துவ அதிகாரி மற்றும் அனலிஸ்ட் என 641 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Head (Product, Investment & Research) - 01
2. Central Research Team (Fixed Income Research Analyst) - 01
3. Relationship Manager
4. Relationship Manager (e-Wealth)
5. Relationship Manager (NRI)
காலியிடங்கள்: 486

6. Relationship Manager (Team Lead) - 20
7. Customer Relationship Executive - 66
8. Zonal Head Sales (Retail) (Eastern Zone) - 01
9. Central Operation Team Support - 03
10. Risk & Compliance Officer - 01
11. Bank Medical Officer (BMO-II) MMGS-II - 56
12. Manager Analyst MMGS-III - 06
13. Advisor for Fraud Management - 03

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது

ரிலேசன்ஷிப்' அதிகாரி பணிக்கு 23 முதல் 35 வயதிற்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரிலேசன்ஷிப் அதிகாரி உள்பட பல பிரிவு பணியிடங்களுக்கும், எம்.பி.ஏ. மற்றும் முதுகலை முடித்தவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரிசர்ச் ஹெட் பணியிலும், சென்ட்ரல் ரிசர்ச் டீம் பணியிடங்களுக்கும், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிக்கும், சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் அனலிஸ்ட் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20--07%20BMO%20&%20%20Others.pdf மற்றும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20--07%20BMO%20&%20%20Others.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.06.2019
Read More »

ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் வேலை

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதத்தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 1704 சார்ஜ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1704

பணி: Chargeman(Non-Gazetted Group 'B' )
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
www.i-register.org

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கெமிக்கல், மெட்டாலார்ஜி, குளோதிங் டெக்னாலாஜி, லெதர் டெக்னாலாஜி போன்ற பிரிவில் பொது வேதியலை ஒரு பாடமாகக் கொண்டு பி.எஸ்சி பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இன்பர் மேஷன் துறையில் கணின் அறிவியல் பிரிவில் 'ஏ' லெவல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

டெக்னிக்கல் அல்லாத துறையில் பொறியியல், டெக்னிக்கல், அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, திருச்சி, அரவங்காடு(ஊட்டி)

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை RRINCIOAL DIRECTOR, RECRUITMENT FUND OFRB, AMBAJHARI-NAGOUR என்ற பெயரில் செலான் எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.i-register.org என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அந்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் விண்ணப்பக் கட்டண ரசீது மற்றும் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Principal Director, Recruitment Fund Ordnance Factory Board, Ambajhari-Nagpur.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.i-register.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2019
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.06.2019
Read More »

தேசிய உரத்தொழிற்சாலையில் மேலாண்மை பயிற்சி பணி

தேசிய உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 44

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Management Trainee(HR)

காலியிடங்கள்: 19

தகுதி: Personnel Management, Industrial Relations, Human Resource Management, HR போன்ற துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Marketing)

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயத்துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஎஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் முடித்து சந்தையியல், விவசாய சந்தையியல், உலக சந்தையியல், கிராமப்புற மேலாண்மை பாடப்பிரிவில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஎம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2019
Read More »

சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள், நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ் படிப்பு:
PG Diploma Course - Metro Rail Technology and Management

காலியிடங்கள்:
சிவில் - 16
மெக்கானிக்கல் - 1
எலக்ட்ரிக்கல் - 5
எலக்ட்ரானிக்ஸ் - 3

மொத்தம்= 25 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 30.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.06.2019
சான்றிதழ் படிப்பு தொடங்கும் காலம்: ஜூலை - 2019

வயது வரம்பு:
29.05.2019 அன்றுக்குள், அதிகபட்சமாக 28 வயது டையவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.100

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பொறியியல் பட்டப்படிப்பில் சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி அதாவதுகுறைந்தபட்சமாக 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:
1. விண்ணப்பதாரர்கள் கேட் (GATE) தேர்வில் தகுந்த மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.
2. கடைசி வருடம் பொறியியல் பயிலும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://chennaimetrorail.org/ - என்ற இணையதள முகவரியில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
1. கேட் (GATE) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
2. மருத்துவத் தகுதி தேர்வு

சான்றிதழ் படிப்பிற்கான காலம்: ஒரு வருடம்

சலுகைகள்:
1. தேர்வு செய்யப்படுவோர்க்கு, மாத ஊக்கத்தொகையாக ரூ.20,000, நல்கையுடன்கூடிய
கல்விக்கட்டணமும் வழங்கப்படும்.

2. சான்றிதழ் படிப்பில் சேர வருவதற்கான பயணக்கட்டணமும் வழங்கப்படும்.

3. வெற்றிகரமாக சான்றிதழ் படிப்பு முடித்த தேர்வர்கள், குறைந்தபட்சம் 85% அல்லது அதற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியுடன் ரூ.40,000 மாதச் சம்பளமும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-03-2019.pdf - என்ற இணையதள முகவரியில்
சென்று அறிந்து கொள்ளலாம்
Read More »

தென்னக ரயில்வேயில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

 தென்னக ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 142 ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது


இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 142

பணி: இளநிலை பொறியாளர்/பி.வே
காலியிடங்கள்: 84
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.எஸ்சி (சிவில்) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: இளநிலை பொறியாளர்/ டிஎம்ஓ
காலியிடங்கள்: 58
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் கண்ட்ரோல் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 47க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 45க்குள்ளும், பொது பிரிவினர் - 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முகவரி: " The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008."

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.06.2019

Read More »

TET 2019 | TAMIL STUDY MATERIALS | IMPORTANT 25 COLLECTIONS

Wednesday 29 May 2019

TET 2019 | TAMIL STUDY MATERIALS | IMPORTANT 25 COLLECTIONS

1.”மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
4.”தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
6.”கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல மாணவன்” என்பது?
குறிப்புப் பெயரெச்சம்
8. “கடி விடுது”-இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?
விரைவு
9. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?
2008, மே 19
10. உயிர் அளபெடையின் மாத்திரை?
3 மாத்திரை
11. வல்லின உயிர் மெய் நெடில் எழுதுக்கள்?
42
12. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமந்த நூல்?
அபிதான கோசம்
13. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?
5
14. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?
எதுகை
15. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?
அந்தாதி
16. ”கண்ணே மணியே முத்தம் தா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
கவிமணி
17. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
உருவகம்
18. ”நிலா நிலா ஓடி வா”-குழந்தைப் பாடலை இயற்றியவர்?
அழ. வள்ளியப்பா
19. ”பச்சைக் கிளியே வா வா”-குழந்தைப் பாடலின் ஆசிரியர்?
கவிமணி
20. ”பச்சைக் கிளியே வா வா”-இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்?
அடுக்குத் தொடர்
21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்
22. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி
23. ”தாய்மொழி” என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது
24. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது?
தமிழின் பழமை
25. இரண்டாம் வேற்றுமை உருபு?
Read More »

TET 2019 | TAMIL STUDY MATERIALS | IMPORTANT 25 COLLECTIONS

TET 2019 | TAMIL STUDY MATERIALS | IMPORTANT 25 COLLECTIONS

126. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
அதிவீரராம பாண்டியன்
127. பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்?
தானம்
128. பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ?
குழந்தைகள்
129. அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________?
வளரும்
130. வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்?
இயற்கை
131. தங்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது?
ஏறி
132. சொற்கள் எத்தனை வகைப்படும்?
4
133. காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்?
வினைச் சொல்
134. காலம் எத்தனை வகைப்படும்?
3
135. ”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது?
இறந்த காலம்
136. ”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்?
கவிமணி தேசிக விநாயகம்
137. நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு?
புன்செய்
138. இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம்.
பகல்
139. மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச் செல்லவில்லை.
சிலர்
140. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
141.திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்?
உலகப்பொதுமறை
தெய்வநூல்
முப்பால்
உத்திரவேதம்
பொய்யாமொழி
வள்ளுவப்பயன்
142. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்?
குடிமக்கள் காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
முதல் காப்பியம்
தேசியக் காப்பியம்
முத்தமிழ்க் காப்பியம்
சமுதாயக் காப்பியம்
143. சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
மணநூல்
முக்தி நூல்
144. அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
நெடுந்தொகை
145. பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?
திருத்தொண்டர் புராணம்
146. இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்?
குட்டித் தொல்காப்பியம்
147. வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்?
நறுந்தொகை
148. மூதுரையின் சிறப்புப் பெயர்?
வாக்குண்டாம்
149. மணிமேகலையின் சிறப்புப் பெயர்?
மணிமேகலைத் துறவு
150. நாலடியாரின் சிறப்புப் பெயர்?
வேளாண் வேதம்
Read More »

TET 2019 | TAMIL STUDY MATERIALS | IMPORTANT 25 COLLECTIONS

 TET 2019 | TAMIL STUDY MATERIALS | IMPORTANT 25 COLLECTIONS

151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?
தமிழ் மூவாயிரம்
152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?
அறிவுரைக் கோவை
153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.கலியாண சுந்தரம்
154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
உ.வே.சாமிநாதர்
155. நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
மீனாட்சி சுந்தரனார்
156. பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்?
கதிரேசஞ் செட்டியார்
157. தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்தனார்
158. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
159. பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்?
புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்
160. கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
161.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
வெ. இராமலிங்கம் பிள்ளை
162. குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
அழ. வள்ளியப்பா
163.தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
சேக்கிழார்
164. திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?
திருஞானசம்பந்தர்
165. திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?
வாகீசர், தருமசேனர், அப்பர்
166. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?
அமுது அடியடைந்த அன்பர்
167. தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்?
சுந்தரர்
168. கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்?
கம்பர்
169. ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்?
கவிராட்சஸன்
170. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி
171. திரையிசைத் திலகம் யார்?
மருதகாசி
172. _____அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்?
கிருஷ்ணதேவராயர்
173. தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?
மெகஸ்தனிஸ்
174. ”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?
ஆண்டாள்
175. ”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்?
திருவள்ளுவர்
Read More »

TNTET 2019 | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | IMPORTANT 75 COLLECTIONS

TET 2019  |TAMIL STUDY MATERIALS | IMPORTANT 75 COLLECTIONS
226. “கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஒளவையார்
227. ”கரி” எனும் சொல் உணர்த்துவது?
யானை
228. மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8
229. சிங்கத்தின் இளமைப் பெயர்?
குருளை
230. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்?
கனியன் பூங்குன்றனார்
231. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?
தொல்காப்பியம்
232. ”தழல்” எனும் சொல்லின் பொருள்?
நெருப்பு
233. “ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?
புதிய ஆத்திச்சூடி
234. “திணை” எனும் சொல்லின் பொருள்?
ஒழுக்கம்
235. கவிமணி எழுதிய நூல்கள்?
மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி
236. ”தணித்தல்” என்பதன் பொருள் என்ன?
குறைத்தல்
237. முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?
அனிச்சம்
238. பத்துப்பாட்டு நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?
நெடுநல்வாடை
239. ”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?
அகநானூறு
240. ”சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்?
மணிமேகலை
241. தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
242. குமரகுருபரர் இயற்றிய நூல்?
நீதி விளக்கம்
243. பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
10
244. ”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?
சேக்கிழார்
245. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
ஜி.யூ.போப்
246. ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
குறிஞ்சிப் பாட்டு
247. நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி?
முச்சீர்
248. வெண்பாவின் வகைப்பாடு?
6
249. புறத்தினை வகைப்பாடு?
12
250. மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
251. ”நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்?
வினைத் தொகை
252. ”பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்?
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
253. ”நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
“மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்
254. ”ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்?
இரவீந்தரநாத் தாகூர்
255. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்?
மகாகவி பாரதியார்
256. திருவருட்பாவை இயற்றியவர்?
இராமலிங்க அடிகளார்
257. ”திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?
இராமலிங்க அடிகளார்
258. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
கடலூர் மாவட்டம் மருதூர்
259. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமையா-சின்னம்மையார்
260. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
261. மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும் நிறுவியவர்?
இராமலிங்க அடிகளார்
262. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்?
இராமலிங்க அடிகளார்
263. ”ஆர்வலர்”– பொருள் தருக?
அன்புடையவர்
264. “என்பு”– பொருள் தருக?
எலும்பு (உடல், பொருள், ஆவி)
265. ”வழக்கு”– பொருள் தருக?
வாழ்க்கை நெறி
266. ”ஈனும்”– பொருள் தருக?
தரும்
267. “ஆர்வம்”- பொருள் தருக?
விருப்பம்
268. “நண்பு”- பொருள் தருக?
நட்பு
269. “வையகம்”- பொருள் தருக?
உலகம்
270. ”மறம்”- பொருள் தருக?
வீரம்
271. ”என்பிலது”- பொருள் தருக?
எலும்பில்லாதது (புழு)
272. ”வற்றல் மரம்”- பொருள் தருக?
வாடிய மரம்
273. ”புறத்துறுப்பு”- பொருள் தருக?
உடல் உறுப்புகள்
274. திருக்குறளை இயற்றியவர்?
திருவள்ளுவர்
275. திருவள்ளுவர் வாழ்ந்த காலம்?
கி.மு.31
276. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்?
செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார்
277. திருக்குறளின் பெரும் பிரிவுகள்?
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
278. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133
279. திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
10
280. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
1330
281. திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? தவறா?
சரி
282. திருக்குறளின் வேறு பெயர்கள்?
முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை
283. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை?
கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு
284. தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்?
உ.வே.சாமிநாதய்யர்
285. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்?
உ.வே.சாமிநாதய்யர்
286. தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்?
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி
287. குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன?
99

288. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று?
குறிஞ்சிப் பாட்டு
289. குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்?
கபிலர்
290. தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்?
கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக் காப்பகம்-சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர்
291. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்?
திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
292. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்?
வேங்கடரத்தினம்
293. தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்?
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
294. தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்?
சாமிநாதன்
295. உ.வே.சா.வின் விரிவாக்கம்?
உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்
296. உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்?
ஆனந்த விகடன்
297. உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
என் சரிதம்
298. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்?
எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4;
299. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?
2006
300. தமிழின் முதல் எழுத்து எது?
Read More »

TET - 2019 |TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | IMPORTANT 100 COLLECTIONS

 TET - 2019 |TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD | IMPORTANT 100 COLLECTIONS
301."அ ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?
மனிதன்
302. “அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது?
வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு
303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற
304. நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது?
இன எழுத்துக்கள்
305. “தமக்குரியர்” – பிரித்து எழுதுக?
தமக்கு + உரியர்
306. “அன்பீனும்” – பிரித்து எழுதுக?
அன்பு + ஈனும்
307. ”நிழலருமை” – பிரித்து எழுதுக?
நிழல் + அருமை
308. ”வழக்கென்ப” – பிரித்து எழுதுக?
வழக்கு + என்ப
309. ”புறத்துறுப்பு” – பிரித்து எழுதுக?
புறம் + உறுப்பு
310. ”தரமில்லை” – பிரித்து எழுதுக?
தரம் + இல்லை
311. ”பருப்பு + உணவு” – சேர்த்து எழுதுக?
பருப்புணவு
312. ”கரும்பு + எங்கே” – சேர்த்து எழுதுக?
கரும்பெங்கே
313. “அவன் + அழுதான்” – சேர்த்து எழுதுக?
அவனழுதான்
314. ”அவள் + ஓடினாள்” – சேர்த்து எழுதுக?
அவளோடினாள்
315. ”முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்?
திருவள்ளுவர்
316. நாலடியாரை இயற்றியவர்?
சமண முனிவர்
317. ”நாய்க்கால்” – பொருள் தருக?
நாயின் கால்
318. ”ஈக்கால்” – பொருள் தருக?
ஈயின் கால்
319. ”அணியர்” – பொருள் தருக?
நெருங்கி இருப்பவர்
320. “என்னாம்?” – பொருள் தருக?
என்ன பயன்
321.”சேய்” – பொருள் தருக?
தூரம்
322. ”செய்” – பொருள் தருக?
வயல்
323. மூவலூர் ராமாமிர்தம் பிறந்த ஆண்டு?
1883
324. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
126
325. ”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்?
தாரா பாரதி
326. ”அவல்” – பொருள் தருக?
பள்ளம்
327. ”மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்?
கல்யாண சுந்தரம்
328. மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் – பொருத்தம் இல்லாதது எது?
மூவிடம்
329. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகர வரிசைப்படுத்துக?
ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு
330. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
107
331. ஹிந்தி செம்மொழி இல்லை. சரியா? தவறா?
சரி
332. ”மதுரை” என்ற பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது?
மதிரை
333. ஈச்சந்தட்டை-பிழைத் திருத்தம் செய்க?
ஈச்சந்தட்டு
334. யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்?
வேழம்
335. ”முயற்சி செய்” – எத்தொடர் எனக் கூறுக?
கட்டளைத் தொடர்
336. பாரதிதாசனின் இயற்பெயர்?
கனக சுப்புரத்தினம்
337. ”அகரம் + ஆதி” – சேர்த்தெழுதுக?
அகராதி
338. “பைங்குவளை” – பிரித்தெழுதுக?
பசுமை + குவளை
339. தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்?
தமிழகம்
340. ”கயல்விழி” என்பது?
உவமைத் தொகை
341. மா, பலா, வாழை என்பது?
உம்மைத் தொகை
342. சென்னையில் ______பெயரில் நூலகம் உள்ளது?
தேவநேயப்பாவாணர்
343. “அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர் யார்?
கண்ணதாசன்
344. ”மதிமுகம்” உருவகமாய் மாறும் போது ____________ ஆகும்?
முகமதி
345. ”நெஞ்சாற்றுப்படை” என்று அழைக்கப்படும் பத்துப் பாட்டு நூல் எது?
முல்லைப் பாட்டு
346. குமார சம்பவம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
காளிதாஸ்
347. குமார சம்பவம் என்றால் என்ன?
முருகன் பிறந்த கதை
348. துரியோதனின் தங்கை பெயர்?
துஷாலா
349. இராமாயணத்தில் வரும் பரதனின் தாயார் யார்?
கைகேயி
350. வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?
சமஸ்கிருதம்
351. ”தரணி” என்றால் என்ன?
பூமி
352. 1964-ல் வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?
சிலப்பதிகாரம்
353. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூரியவர்?
நோம் சாம் சுகி
354. தமிழ் மொழியில் எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன?
42
355. பணியும் குணம் கொண்டது?
பெருமை
356. நீதி நெறி விளக்கத்தின் ஆசிரியர்?
குமர குருபரர்
357. உடனிலை மெய் மயக்கம் பயின்று வருவது?
ஒப்பம்
358. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர்
359. உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
126
360. இரண்டாம் வேற்றுமை உருபு?

361. விடை வகைகள்?
8
362. யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்?
அமிர்த சாகரர்
363. நான்கு சீர்கள் கொண்ட அடி?

அளவடி
364. ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
முற்று எதுகை
365. ஆசிரியப்பாவின் வேறு பெயர்?
அகவற்பா
366. செந்தமிழ் என்பது?
பண்புத் தொகை
367. மோர்க்குடம் என்பது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
368. வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது?
முதல் வேற்றுமை
369. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
370. சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?
ரா.பி.சேதுப்பிள்ளை
371. தொழிற்பெயர் _________ வகைப்படும்?
3
372. கவிப்பாவிற்குரிய ஓசை?
துள்ளல்
373. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
கவிமணி
374. உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்?
ஒட்டக்கூத்தர்
375. அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?
கண்ணதாசன்
376. தேவாரம் பாடிய மூவர்?
அப்பர், சம்பந்தர், சுந்தரர்
377. பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?
பாரதிதாசன்
378. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது?
யாமம்
379. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
மாலை
380. மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது?
வைகறை
381. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
நண்பகல்
382. ”நரி கத்த, ஆந்தை பாட” – மரபு வழுவை நீக்குக?
நரி ஊளையிட, ஆந்தை அலற
383. மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?
பள்ளு
384. திரிவேணி சங்கமம்?
சிந்து, கங்கை, சரஸ்வதி
385. மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?
ஸ்ரீராகவேந்திரன்
Read More »

TNTET 2019 - COMPLETE STUDY MATERIALS FOR PAPER1 AND PAPER 2

Monday 27 May 2019

Read More »

TNTET 2019 - PAPER - 1 & 2 - NEW SYLLABUS DOWNLOAD PDF

Sunday 26 May 2019

Read More »

TNSET 2018 - Study Materials

Saturday 18 May 2019


TNSET 2018 - Study Materials

TNSET 2018 - Model Exam 2 - Question And Answer - Kaviya Coaching Centre - Click here

TNSET 2018 - Model Exam 1 - Question And Answer - Kaviya Coaching Centre - Click here

TNSET 2018 - English Study Material - Part 2 - Model Question & Answer - Kaviya Coaching Centre - Click here

TNSET 2018 - English Study Material - Part 2 - Figures of Speech - Kaviya Coaching Centre - Click here

TNSET 2018 - English Study Material - Unit IV - Kaviya Coaching Centre - Click here

TNSET 2018 - English Study Material - Mr Vinoth - Click here 
Read More »

TET Model question papers with answers

TET Model question papers with answers below 


































Download Dinamalar TNTET 2017 Model Q&A 14.03.2017


Download Dinamalar TNTET 2017 Model Q&A 15.03.2017


 Download Dinamalar TNTET 2017 Model Q&A 17.03.2017


Download Dinamalar TNTET 2017 Model Q&A 17.03.2017


Download Dinamalar TNTET 2017 Model Q&A 18.03.2017


Download Dinamalar TNTET 2017 Model Q&A 19.03.2017



Download Dinamalar TNTET 2017 Model Q&A 20.03.2017


Download Dinamalar TNTET 2017 Model Q&A 21.03.2017


Download Dinamalar TNTET 2017 Model Q&A 22.03.2017

Employment Service - Tamil Weekly TET Model question papers with answers






Puthiya thalaimurai Kalvi - TNTET 2017 model questions with key answers

covered the following subjects model questions here: Tamil Paper I and Paper II, English Paper I and Paper II, Maths Paper I and Paper II, Science Paper I and Paper II, Social Paper I and Paper II, Environmental Science Paper IMarch 2017 to April 2017 all issues


Puthiya thalaimurai Kalvi - Tamilnadu Teacher's Eligibility Test 2017
Study material

TET - Exam 2017 | Maths Paper I and Paper II Model Questions with answer keys














Puthiya thalaimurai Kalvi - Tamilnadu Teacher's Eligibility Test 2017
Study material
TET - Exam 2017 | Tamil Paper I and Paper II Model Questions with answer keys






Puthiya thalaimurai Kalvi - Tamilnadu Teacher's Eligibility Test 2017
Study material
TET - Exam 2017 | English Paper I and Paper II Model Questions with answer keys




Read More »
 

Most Reading

Tags

Sidebar One