Search

பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மத்தியஅரசு அதிரடி உத்தரவு

Friday 3 July 2020

சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூலை 31ம் தேதிவரை வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் அனுமதி அளித்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அது வரும் 31ம் தேதி இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை எப்போது திறக்க வேண்டும், வகுப்புகள் எப்போது நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் பணிக்கு வர வேண்டும் என்று சில மாநிலங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீதம், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளன. இது ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணிக்கு வந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பில் வற்புறுத்துகின்றனர்.

இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அவசர கடிதத்தை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) தேசிய தேர்வுகள் முகமை (என்இஏ) மற்றும் தன்னாட்சி பெற்ற பிற உயர்கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை மூடப்பட வேண்டும். இருப்பினும் கொரோனா தொற்று சூழல் கருதி, ஆன்லைன் வகுப்புகள், இடைவெளியுடன் கூடிய வகுப்புகளுக்கும் அனுமதிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள், பல்வேறு கல்விச் செயல்பாடுகளுக்கு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
Read More »

வேலைவாய்ப்புச் செய்திகள்!


நிறுவனத்தின் பெயர்: இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard)
இணையதளம்: joinindiancoastguard.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: MT Driver (Ordinary Grade), Fork Lift Operator, Carpenter, MTS (Peon), MTS (Chowkidar), Lascar
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: ITI, 10th
வயது: 18 – 30 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.18,000 -19,900/-
பணியிடம்: கொல்கத்தா, மேற்கு வங்கம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 ஜூலை 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை
******************************************
திருப்பூரில் உடனடி வேலைவாய்ப்பு.
பனியன் கம்பெனிகளில் அனுபவம் உள்ள, அனுபவம் இல்லாத ஆண்கள், பெண்கள் வேலைக்குத்தேவை.
தங்குமிடம், உணவு இலவசம்.
8th
10th
12th
ITI
Degree
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டெய்லர்
கட்டர்
ஹெல்பர்
பிரிண்டிங்
பேக்கிங்
செக்கிங்

போன்ற வேலைகளுக்கு இலவச பயிற்சி அளித்து சிறந்த முறையில் பணியாற்ற உதவி செய்யப்படும்.

Whatsapp or Call
9150490460.
Read More »

நாளை புறநிழல் சந்திர கிரகணம் அறிவியல் கழகம் அறிவிப்பு

நாளை நிகழ உள்ள சந்திர கிரகணத்தை பார்வையிடுவது குறித்து, கலிலியோ அறிவியல் கழகத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.நடப்பாண்டின் அரிய நிகழ்வாக, குறுகிய இடைவெளியில் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. ஜூன் மாதத்தில் சந்திர கிரகணம் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, நாளை, (5ம்தேதி) புறநிழல் சந்திர கிரகணம் நிகழ்கிறது.இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:ஜூன் மாதத்தில் நடந்த நிகழ்வுகளை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பார்வையிட்டனர்.நாளை நிகழ உள்ள சந்திர கிரகணமும் புறநிழல் சந்திர கிரகணமாகவே உள்ளது. ஆனால் இந்த நிகழ்வை இந்தியாவில் பார்க்க முடியாது.இந்நிகழ்வு 5ம் தேதி காலை, 8:38 மணிக்கு நிகழ உள்ளது. காலை, 9:59 மணிக்கு உச்சமடைந்து, 11:21 மணிக்கு முடிகிறது. புறநிழல் சந்திர கிரகணத்தின் போது பூமி மறைக்காமல், பூமியின் நிழல் மட்டும் நிலவின் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணமாக தெரியும்.இந்த கிரகணம் நிகழும் நேரம், இந்தியாவில் பகலாக உள்ளதால் இதனை காண முடியாது. இருப்பினும், இந்நிகழ்வை காண விருப்பமுள்ளவர்கள் 'ஆன்லைனில்' பார்வையிடலாம். இதற்கான விளக்கம் அளிக்க, 87782 01926 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு கூறினார்
Read More »

சத்துணவுக்குப் பதிலாக பள்ளி மாணவா்களுக்கு உலா் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்துணவுக்குப் பதிலாக, அதில் பயன்படுத்தப்படும் உலா் பொருள்கள் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், 42 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறுவா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-

கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சமைத்த சத்துணவு வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சத்துணவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை அப்படியே உலா் பொருள்களாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கலாம் என்று சமூக நலத் துறை ஆணையரகம் அரசுக்கு பரிந்துரை

வழங்கியிருந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, மே மாதத்துக்கான சத்துணவு உலா் பொருள்களை வழங்கவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 71 ஆயிரத்து 316 குழந்தைகளும், உயா் வகுப்பு பயிலும் 18 லட்சத்து 89 ஆயிரத்து 808 குழந்தைகளும் என மொத்தம் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 குழந்தைகள் பயன்பெறுவா். அவா்களுக்கு அரிசி 16 ஆயிரத்து 138 மெட்ரிக் டன்னும், பருப்புகள் 5 ஆயிரத்து 207 மெட்ரிக் டன்னும் வழங்கப்படும்.

நடைமுறைகள் என்ன?: சத்துணவுத் திட்ட உலா் உணவுப் பொருள்களை பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த அட்டவணையை மாவட்ட ஆட்சியா்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் தயாா் செய்ய வேண்டும். இதனை பயனாளிகள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை பள்ளிகளில் ஒட்டி வைக்க வேண்டும். மாணவ-மாணவியா்கள் பயிலும் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியரின் மேற்பாா்வையில் உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.

மாணவ-மாணவிகள் ஏதாவது ஓா் அடையாள அட்டை அல்லது அத்தாட்சியுடன், அவா்களோ அல்லது அவா்களின் பெற்றோா்களோ குறிப்பிட்ட நாள்களில் பைகளுடன் பள்ளிகளுக்குச் சென்று உலா் உணவுப் பொருள்களைப் பெற்றுச் செல்லலாம். சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் உலா் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொண்ட பின்னா் பயனாளிகள் வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் மதுமதி வெளியிட்ட உத்தரவில் தெரவித்துள்ளாா்.
Read More »

டி.வி சேனல் மூலம் பள்ளிப் பாடம் நடத்தக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொலைக்காட்சி சேனல் அல்லது ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சையது காலேஷா என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த கரோனா நோய்த்தொற்று முற்றிலும் நீங்கி மீண்டும் பழைய நிலைக்கு நாடு எப்போது வரும்? என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலை மாற நீண்ட காலம் ஆகலாம். மேலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவா்கள் கல்வி கற்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதே நிலை நீடித்தால், மாணவா்கள் கல்வி கற்கும் திறனை இழந்து விடுவா். ‘ஸ்வயம் பிரபா’ என்ற தொலைக்காட்சி சேனல் மூலம் கல்லூரி மற்றும் உயா் கல்வி மாணவா்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. அதே போன்று பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொலைக்காட்சி சேனல் அல்லது ஆன்லைன் வகுப்புகளை நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் வரும் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்
Read More »

மாற்றுச் சான்றிதழ்கள் பதிவிறக்கம்: தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தல்


அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது தொடா்பாக தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வியின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சாா்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தங்கள் பள்ளியில் கடைசி வகுப்பில் படிக்கும் மாணவா்கள் (5, 8, 10, 12) வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவா்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதற்கான விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை வலைதளத்தில் (எமிஸ்) பதிவு செய்ய தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவா்களின் விவரங்களை வகுப்பாசிரியா்கள் சரிபாா்த்து 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னா் தவறுகளை திருத்தம் செய்ய இயலாது. எனவே, தலைமையாசிரியா்கள் கூடுதல் கவனமுடன்

இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பணிகளையும் முடித்த பின்னா் இறுதியாக மாற்றுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.
Read More »

Head Master's Dairy 2020 - 2021- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே Pdf கோப்பில்

Black Premium Dairy PU Leather Pen Diary, For Daily Notes, Yearly ...

Head Master's Dairy 2020 - 2021- அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே Pdf கோப்பில் 

CLICK HERE TO DOWNLOAD -H.M DAIRY

Read More »

ஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பூசி - ஐசிஎம்ஆர் தகவல்

S22
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிபெறும் பட்சத்தில், வருகிற ஆகஸ்ட் 15 முதல் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
 
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதில், இந்தியாவில் முதல்முறையாக கரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதனை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது.
 
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) டி.ஜி. பல்ராம் பார்கவா, பாரத் பயோடெக் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் முதன்மை ஆய்வாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அதில், ஜூலை 7 ஆம் தேதி முதல் தொடங்கும் சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தடுப்பூசியை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தத் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், BBV152 என்பது இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும். அரசின் மிக உயரிய அளவில் கண்காணிக்கப்படும் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாகும். இது ஐசிஎம்ஆர்-தேசிய வைராலஜி நிறுவனத்தால் தனிமைப்படுத்தப்பட்ட SARS-CoV-2 லிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை விரைந்து கண்காணிக்க 12 மருத்துவ நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
Read More »

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணிபுரிகிறார். இவரது பெயர் 2019 ஆண்டுக்கான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை என்று கூறி பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி வேதநாயகி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இவரைப்போல் பெண் அரசு ஊழியர்களும் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம் பிரிவு 12-ல் விடுமுறை பதவி உயர்வுக்கு தடையாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதை பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன் பிறகும் மனுதாரர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது என்றார். இதையடுத்து நீதிபதிகள், பணிக்காலத்தில் தான் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Read More »

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட் டுப்படுத்தும் விதமாக , வரும் 31 ம் தேதி வரை 6 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே , கடந்த மே 18 ம் தேதி முதல் , 50 சதவீத பணியாளர்களு டன் பள்ளி கல்வித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் , தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா , பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :
Read More »

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ நேற்று பேசினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்கப்பட்ட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு மக்கள் முயல்வதில் நியாயம் இல்லை. அரசாங்க வேலை வேண்டுமென நினைத்தால் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்.


ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைப்பை மேம்படுத்த இதுபோன்ற கறாரான நடவடிக்கைகள் அவசியம். இருப்பினும் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே இந்தத் திட்டத்தைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர்களுக்குக் 
கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு இதர பணிகள் ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் கற்பித்தல் பணியில் ஆசிரியர்களால் திறம்பட ஈடுபட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வியைப் போதிக்க முடியும்.


அரசுப் பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசாங்கம் செலவழித்து வருகிறது. ஆனாலும் சாரைசாரையாகத் தனியார் பள்ளிகளை நோக்கியே மக்கள் படையெடுக்கிறார்கள். இந்நிலையை மாற்றி அதிக எண்ணிக்கையிலான பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்."

இவ்வாறு அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்தார்.
Read More »

NEET Exam - வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெறும்.

செப். 13ல் நீட் தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு:

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து இன்றைக்குள் (ஜூலை 3) பரிந்துரைகளை வழங்க தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில், நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Read More »

கணிதத்தை இனிப்பாக்கும் கணிதப் பெட்டகம் ( Math Miss Kit)


வடவள்ளியில் உள்ள, 'கணிதம் இனிக்கும்' ஆய்வு மையத்தில், மாணவர்கள் கணிதத்தை எளிதாக கற்க உதவும், 'கணித பெட்டகம்' அறிமுகப்படுத்தப்பட்டது.

வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமாதாணு,80. சிறுவயதிலிருந்தே கணிதத்தின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டிருப்பவர். ஓய்வு பெற்ற பின்னர், தனது 35 ஆண்டுகால அனுபவங்களை வீணாக்காமல், 'கணிதம் இனிக்கும்' எனும் பெயரில் ஆய்வு மையம் துவங்கி, கணிதம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

பல சிக்கலான கணிதங்களுக்கு, சமன்பாடு இல்லாமலே, எளிய உபகரணங்கள் வாயிலாக, சில வினாடிகளில் தீர்வு காணும் திறன் படைத்தவர். இவரது திறனை பாராட்டி, பல்வேறு மாநிலங்கள், நாட்டு அமைப்புகள் அழைத்து, கவுரவப்படுத்தியுள்ளன.மனிதநேய பேரவை எனும் அமைப்பை உருவாக்கி, சமூக சேவைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த முதல் தேதி, தனது 81வது பிறந்த நாளையொட்டி, மாணவர்கள் எளிதில் கணிதத்தை கற்க உதவும் வகையில், 'கணித பெட்டகம்' ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடவள்ளியில் உள்ள கணிதம் இனிக்கும் ஆய்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த பெட்டகத்தை அவர் வெளியிட்டார்.
இது குறித்து ஆசிரியர் உமாதாணு கூறியதாவது:

கணிதம் மிக கடினமானது என பலர் கருதுகின்றனர். அது தவறு. கணித சூத்திரங்களை அனைவரும் மனப்பாடம் செய்து பயன்படுத்துவதால், அது கடினமாக தோன்றுகிறது.எனவே, கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்யாமல் நினைவில் கொள்வதற்காக, பல கட்ட முயற்சிக்கு பின், இந்த கணித பெட்டகத்தை உருவாக்கி உள்ளேன்.
இந்த பெட்டகத்தில், சூத்திரங்களை நினைவில் கொள்ள உதவும் உபகரணங்கள், உயரங்களையும், தூரங்களையும் கணக்கிட உதவும் கிளீனா மீட்டர், எண் கோட்பாட்டின் பயன்பாடுகள், கணிதத்தை இனிதாக கற்க உதவிடும், 'உடனடி உதவிக்கரம்'(Mathmiss Ready Reackoner) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
ஒவ்வொரு பள்ளியிலும் இந்த 'கிட்' பயன்படுத்தி கற்பித்தால், கணிதத்தை எளிதாக மாணவர்கள் கற்றுக்கொள்வர். மாணவர்களின் நலன் கருதி, தமிழக பள்ளிக்கல்வித்துறை இதற்காக நடவடிக்கை எடுக்க முன்வந்தால் மகிழ்ச்சி.இவ்வாறு, ஆசிரியர் உமாதாணு கூறினார்.

இது குறித்த மேலும் விவரங்கள் அறிய, 93604 82003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Read More »

பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்பு - உயர்மட்ட குழு ஆலோசனை!



தமிழகத் தில் கொரோனாவைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்தமார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன. 10 , 11 ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு , மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கொரோனா பாதிப்பினை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து உயர்மட்ட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதில் , கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள் வந்ததும் , பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும்போது , வகுப்பறைக்கு 20 மாணவ - மாணவிகள் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரவைத்து வகுப்புகள் நடத்துவது , மீதமுள்ள மாணவர்களை தனித்தனி குழுவாக பிரித்து , காலை , மதியம் என வகுப்புகள் நடத்தலாமா ? அல்லது மாணவ மாணவிகளுக்கு மூன்று நாள் ஒருமுறை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவைத்து பாடங்கள் நடத்தலாமா ? என்பது போன்ற ஆலோசனை செய்யப் பட்டு வருகிறது . மேலும் , பள்ளிகளில் எவ்வாறு கொரோனா பாதுகாப்பு வழிமுறை களை ஆசிரியர்களும் , மாணவர்களும் கடைபிடிப்பது போன்றவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
Read More »

மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க EMIS வலைதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்ய தலைமையாசிரியர்களுக்கு - CEO உத்தரவு.



அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை ) தலைமையாசிரியர்கள் , தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ( 5,8,10,12 ) மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மா ற் றுச்சான்றிதழ் கொடுப்பதற் கான அனைத்து விவரங்களையும் EMIS வலைதளத்தில் Students Students TC details வழியாக மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

 பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . Save கொடுக்கப்பட்ட பிறகு தவறுகள் இருப்பின் திருத்தம் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கப்படுகிறது . ஆகவே உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பதை தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . மாணவர்களை Common Pool க்கு மாற்றும் பொழுது மாற்றுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்தகவலை அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் முறையாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read More »

EMIS இணையத்தில் +2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

அரசு மற்றும் நிதியுதவி பள் ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் இஎம் ஐ எஸ் சில் பதிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பிளஸ் 2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2011-12ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத் தொகை வழங் கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் பிளஸ் 2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு மாணவர்களின் வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 பேருக்கு ₹ 107 கோடி பள்ளிக்கல்வி துறையால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 3 ) மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 03.07.2020 ) இன்று 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,02,721 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,082   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 287

வேலூர் - 145

செங்கல்பட்டு - 330

திருவள்ளூர் - 172

மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,385

இன்றைய உயிரிழப்பு : 64 ( 1,385 )

Read More »
 

Most Reading

Tags

Sidebar One