Search

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு |இந்தியா-2 (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - அ)

Tuesday 19 July 2022

1. இந்தியாவில் முதல் இரும்பு தொழிற்சாலை உருவாகிய நகரம் எது?
அ) ரூர்கேலா. ஆ) ஜாம்ஷெட்பூர்
இ) பிலாய். ஈ) தன்பாத்

2. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள பானிபட் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)ஹரியானா ஈ) பீகார்

3. தமிழகத்தின் மீன்பிடித்தொழில் நகரமான நாகப்பட்டிணம் எந்தக் கடல் பகுதியில் அமைந்துள்ளது?
அ) வங்காள விரிகுடா
ஆ) மன்னார் வளைகுடா
இ) இந்து மகா சமுத்திரம்
ஈ) கட்ச் வளைகுடா

4. சாஞ்சி தூபி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ) குஜராத் ஈ) பீகார்

5. மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய வணிகசந்தை நகரம் எது?
அ) போபால். ஆ) உஜ்ஜயினி
இ) இந்தூர். ஈ)ஓங்காரேஸ்வரம்

6. கஜூராஹோ கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)பீகார். ஈ) மத்திய பிரதேசம்

7. தென்னிந்தியாவின் தலைவாசல் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை ஆ) பெங்களூரு
இ )ஹைதராபாத் ஈ) தூத்துக்குடி

8. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தளங்களுள் ஒன்றான உஜ்ஜயினி நகரம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ)ஹரியானா ஈ) பீகார்

9. தெற்காசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) மும்பை ஆ) புனே
இ)சென்னை ஈ) பெங்களூரு

10. கன்ஹா தேசியப் பூங்கா எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மத்திய பிரதேசம் ஈ) பீகார்

11. தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகர் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை ஆ) பெங்களூரு
இ) ஹைதராபாத் ஈ) திருப்பதி

12. குணோ வனவிலங்குகள் சரணாலயம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மத்திய பிரதேசம் ஈ) பீகார்

13. தென்னிந்தியாவின் நெசவுத்தொழில் தலைநகரான (மான்செஸ்டர்) எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

அ) தாமிரபரணி ஆ) பவானி
இ) நொய்யல் ஈ) காவிரி

14. செம்பு மற்றும் வைர உற்பத்தியில் முதன்மையாக உள்ள இந்திய மாநிலம் எது?
அ) பஞ்சாப் ஆ)மத்திய பிரதேசம்
இ)ஹரியானா ஈ) பீகார்

15. நீராறு அணை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) நீலகிரி ஆ) தஞ்சாவூர்
இ) மதுரை ஈ) கோயம்புத்தூர்

16. சர்ஜு ஆற்றின் துணை ஆறான கோமதி எந்த இந்திய மாநிலத்தில் பாய்கிறது?
அ) உத்தராகண்ட் ஆ) குஜராத்
இ)ஹரியானா ஈ) பீகார்

17. சூரத், பரூச் ஆகிய பன்னாட்டு வணிக நகரங்கள் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளன?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மகாராஷ்டிரா ஈ) பீகார்

18. ஜார்க்கண்ட் என்பதன் பொருள் யாது?
அ) மக்கள் கூட்டம் ஆ) நீர்ப்பகுதி
இ) காடுகள் நிறைந்த நிலப்பரப்பு ஈ) மலைகள் நிறைந்த பகுதி

19. இந்திய அரசின் திட்டக்குழு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள டாங் மாவட்டம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) பீகார்
இ)ஹரியானா ஈ) குஜராத்

20. கோனாரக் - சூரிய கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ) ஒடிசா ஈ) பீகார்

Answer :

1. ஆ) ஜாம்ஷெட்பூர் (ஜார்க்கண்ட்)

2. இ. ஹரியானா

3. அ. வங்காள விரிகுடா

4. ஆ. மத்திய பிரதேசம்

5. இ. இந்தூர்

6. ஈ. மத்தியப பிரதேசம்

7. அ. சென்னை

8. ஆ. மத்திய பிரதேசம்

9. இ. சென்னை

10. இ. மத்திய பிரதேசம்

11. அ. சென்னை

12. இ. மத்திய பிரதேசம்

13. இ. நொய்யல் (கோயம்புத்தூர்)

14. ஆ. மத்திய பிரதேசம்

15. ஈ. கோயம்புத்தூர் (பரம்பிக்குளம் ஆழியாறு பாசனதிட்டம்)

16. அ. உத்தராகண்ட்

17. ஆ. குஜராத்

18. இ. காடுகளைக்கொண்ட நிலப்பரப்பு

19. ஈ. குஜராத்

20. இ. ஒடிசா


Read More »

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு- Part 2 இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

16. சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த முதல் இந்தியர் யார்?

அ) வல்லபபாய் படேல்

ஆ) சி. ராஜகோபாலாச்சாரி

இ) மவுன்ட் பேட்டன் பிரபு

ஈ) ராஜேந்திர பிரசாத்

17. ஐ.கே. குஜ்ரால் தனது பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் யார்?

அ) நரசிம்ம ராவ்

ஆ) பிரம்மானந்த ரெட்டி

இ) சீத்தாராம் கேசரி

ஈ) விஜய பாஸ்கர் ரெட்டி

18. இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத வேறு கட்சி சார்ந்து மூன்று முறை பதவி வகித்த பிரதமர் யார்?

அ) வி.பி.சிங்

ஆ) நரேந்திர மோடி

இ) அ.பி.வாஜ்பாய்

ஈ) ஐ.கே.குஜ்ரால்

19. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக செயல்பட்டு பின்னர் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர் யார்?

அ) ஐ.கே.குஜ்ரால்

ஆ) மன்மோகன் சிங்
இ)
வி.பி.சிங்

ஈ) முகமது இதயத்துல்லா

20. இந்தியாவில் சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெற்று பிரதமராக பதவி வகித்தவர் யார்?

அ) மொரார்ஜி தேசாய்

ஆ) தேவ கௌடா

இ) சந்திரசேகர்

ஈ) ஐ.கே.குஜ்ரால்

21. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

அ) பிரதீபா பாட்டில்

ஆ) இந்திரா காந்தி

இ) சோனியா காந்தி

ஈ) கமலா நேரு

22. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பெயர் யாது?

அ) பிரதீபா பாட்டில்
ஆ) இந்திராகாந்தி

இ) சோனியா காந்தி

ஈ) கமலா நேரு

23. அணிசேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர் யார்?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) லால்பகதூர் சாஸ்திரி
இ) இந்திராகாந்தி

ஈ) மொரார்ஜி தேசாய்

24. ஆண்டுதோறும் செம்டம்பர் ஐந்தாம் நாள் யாருடைய நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

இ) ஜாகீர் உசேன்

ஈ) மதன் மோகன் மாளவியா

25. ஆண்டுதோறும் நவம்பர் பதினான்காம் நாள் யாருடைய நினைவாக குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) ராதாகிருஷ்ணன்

இ) ஜாகீர் உசேன்

ஈ) மதன் மோகன் மாளவியா

26. எந்த ஆண்டு ஏவுகணை மனிதன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

அ) 1995
ஆ) 1996

இ) 1997
ஈ) 1998


27. 1963 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்று பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?

அ) ஜாகீர் உசேன்

ஆ) ஜெயில் சிங்

இ) சங்கர் தயாள் சர்மா

ஈ) அ.ப.ஜெ.அப்துல் கலாம்

28. சிறப்பு வாய்ந்த தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் யார்?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) லால்பகதூர் சாஸ்திரி

இ) இந்திரா காந்தி

ஈ) மொரார்ஜி தேசாய்

29. ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதல்வராக இருந்து பின்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?

அ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

ஆ) நீலம் சஞ்சீவி ரெட்டி

இ) வி.வி.கிரி

ஈ) வெங்கையா நாயுடு

30. இந்தியாவில் மைனாரிட்டி அரசுடன் ஐந்தாண்டு பதவிக் காலம் முழுமைக்கும் (அடுத்த பொதுத்தேர்தல் வரை) பிரதமராக இருந்தவர் யார்?

அ) இந்திரா காந்தி

ஆ) மொரார்ஜி தேசாய்

இ) நரசிம்ம ராவ்

ஈ) வி.பி.சிங்

Answer 
16. ஆ. சி.ராஜகோபாலாச்சாரி

17. இ. சீத்தாராம் கேசரி

18. இ. அ.பி.வாஜ்பாய்

19. ஆ. டாக்டர் மன்மோகன் சிங்

20. இ. சந்திரசேகர்

21. ஆ. இந்திராகாந்தி

22. அ. பிரதீபா பாட்டீல்

23. அ. ஜவாஹர்லால் நேரு

24. ஆ. டாக்டர் ராதாகிருஷ்ணன்

25. அ. பண்டித ஜவாஹர்லால் நேரு

26. இ. 1997

27. அ. டாக்டர் ஜாகீர் உசேன்

28. ஆ. லால் பகதூர் சாஸ்திரி

29. ஆ. நீலம் சஞ்சீவி ரெட்டி

30. இ. நரசிம்ம ராவ்

Part 1  : இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்) - Question and Answer 

Read More »

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு | இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

1. இந்தியாவில் முதன்முதலில் தொடர்ந்து இரண்டு முறை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) வெங்கட்ராமன்
ஈ) ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

2. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

3. இந்தியாவில் முதன்முதலாக தனது பிரதமர் பதவியை பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்தவர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) மொரார்ஜி தேசாய்
ஈ) லால் பகதூர் சாஸ்திரி

4. இந்தியாவில் தனது பிரதமர் பதவிக் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கமுடியாமல் போன முதல் பிரதமர் யார்?
அ) ஐ.கே. குஜ்ரால்
ஆ) சந்திரசேகர்
இ) தேவகௌடா
ஈ) சரண்சிங்

5. சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

6. காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களில், தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த முதல் பிரதமர் யார்?
அ) மொரார்ஜி தேசாய்
ஆ) நரசிம்ம ராவ்
இ)அ.பி. வாஜ்பாய்
ஈ) வி.பி. சிங்

7. சுதந்திர இந்தியாவின் முதல் இளம் பிரதமர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) ராஜீவ் காந்தி
ஈ) வி.பி.சிங்

8. அறுதிப் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் 13 நாட்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிரதமர் யார்?
அ) இந்திராகாந்தி
ஆ) சந்திரசேகர்
இ) ஐ.கே.குஜ்ரால்
ஈ) அ.பி.வாஜ்பாய்

9. இந்தியாவில் முதன்முதலில் துணைப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சரண் சிங்
இ) தேவிலால்
ஈ) லால் கிருஷ்ண அத்வானி

10. இந்தியாவில் அரசமைப்பு 352 விதியின்படி 1975 ஆம் வருட நெருக்கடிநிலை பிரகடனத்தின் போது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வெங்கட்ராமன்
ஆ) ஜாகீர் உசேன்
இ) பக்ருதீன் அலி அகமது
ஈ) ஜெயில் சிங்

11. சுதந்திர இந்தியாவில் இருமுறை இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

12. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

13. இந்தியாவில் முதன் முதலில் இருமுறை தொடர்ந்து துணைக் குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வி.வி.கிரி
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

14. உச்ச நீதிமன்ற தலைமை நீதீபதியாகவும், துணைக்குடியரசுத் தலைவராகவும், தற்காலிக குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியவர் யார்?
அ) ஜாகீர் உசேன்
ஆ) ஜாட்டி
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

15. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சி. ராஜகோபாலாச்சாரி
இ) மவுண்ட் பேட்டன் பிரபு
ஈ) ராஜேந்திர பிரசாத்

Answer 

1. அ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்

2. ஆ. R. K. சண்முகம் செட்டியார்

3. இ. மொரார்ஜி தேசாய்

4. ஈ. சரண் சிங்

5. அ. குல்ஜாரிலால் நந்தா

6. இ. அ.பி. வாஜ்பாய்

7. இ. ராஜீவ் காந்தி

8. ஈ. அ.பி. வாஜ்பாய்

9. அ. சர்தார் வல்லபபாய் படேல்

10. இ. பக்ருதீன் அலி அகமது

11. அ. குல்ஜாரிலால் நந்தா

12. அ. சர்தார் வல்லபபாய் படேல்

13. ஆ. சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்

14. ஈ. முகம்மது இதயத்துல்லா

15. இ. மவுண்ட் பேட்டன் பிரபு

*டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு*

*Topic:Unit 9- TamilNadu*

👉🏻Part 1 :Click here to view  

👉🏻Part 2 : Click here to view 


Read More »

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு- பகுதி 2 | Topic : தமிழ்நாடு - part 2

16. தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

அ) தெருக்கூத்து

ஆ) பரத நாட்டியம்

இ) கதகளி

ஈ) கரகாட்டம்

17. களப்பிரர்கள் எந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தை ஆண்டதாக கருதப்படுகிறது?

அ) கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

ஆ) கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இ) கி.பி. 4 ஆம் நூற்றாண்டு

ஈ) கி.பி. 6 ஆம் நூற்றாண்டு


18. யுனெஸ்கோவின் பாரம்பரியக் களமான மாமல்லபுர கடற்கரைக்கோயில் பல்லவர்களால் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?

அ) கி.பி. 8 ஆம் நூற்றாண்டு

ஆ) கி.பி. 9 ஆம் நூற்றாண்டு

இ) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு

ஈ) கி.பி. 11 ஆம் நூற்றாண்டு

19. பல்லவ சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னன் யார்?

அ) நந்தி வர்மன்

ஆ) அபராஜிதன்

இ) மகேந்திரவர்மன்

ஈ) இரண்டாம் நரசிம்ம வர்மன்

20. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் ஆதித்ய சோழனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?

அ) முதலாம் நரசிம்ம வர்மன்

ஆ) அபராஜிதன்

இ) மகேந்திரவர்மன்

ஈ) இரண்டாம் நரசிம்ம வர்மன்

21. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?

அ) 17 - 12 - 2021

ஆ) 11 - 03 - 1970

இ) 14 - 01 - 1969

ஈ) 14 - 03 - 2021

22. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசால் தமிழ் மாநில பாடலாக அறிவிக்கப்பட்ட நாள் எது?


அ) 17 - 12 - 2021

ஆ) 11 - 03 - 1970

இ) 14 - 01 - 1969

ஈ) 14 - 03 - 2021

23. 'நீராரும் கடலுடுத்த' பாடல் எங்கு கடவுள் வாழ்த்தாக பாடப்பட்டு வந்தது?

அ) மதுரை தமிழ்ச் சங்கம்

ஆ) கரந்தை தமிழ்ச் சங்கம்

இ) தருமபுரி ஆதீனம்

ஈ) குன்றக்குடி ஆதீனம்

24. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ணதாசன்

ஈ) பெ. சுந்தரனார்

25. புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் எந்த வருடம் வெளியிடப்பட்டது?

அ) 1891

ஆ) 1903

இ) 1956

ஈ) 1970

26. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் யார்?

அ) கே.வி. மகாதேவன்

ஆ) இளையராஜா

இ) ம.சு. விஸ்வநாதன்

ஈ) ஏ.ஆர். ரகுமான்

27. தமிழ்நாடு அரசு சின்னத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் எது?

அ) உழைப்பே உயர்வு

ஆ) வாய்மையே வெல்லும்

இ) தமிழ் வாழ்க
ஈ) கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

28. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?

அ) வரையாடு

ஆ) புலி

இ) யானை

ஈ) சிங்கம்

29. தமிழக அரசின் நாட்காட்டியாக திருவள்ளுவர் நாட்காட்டி எந்த வருடம் நடைமுறைக்கு வந்தது?

அ) 1969

ஆ) 1972

இ) 1977

ஈ) 1992

30. நாம் பயன்படுத்தும் கிரிகேரியன் நாட்காட்டியுடன் எத்தனை வருடங்களைக் கூட்டினால் திருவள்ளுவர் நாட்காட்டி கிடைக்கும்?

அ) 33

ஆ) 32

இ) 31

ஈ) 30

Answer

16. ஆ. பரத நாட்டியம்

17. இ. கி.பி. நான்காம்

18. அ. கி.பி. எட்டாம்

19. ஆ. அபராஜிதன்

20. ஆ. அபராஜிதன்

21. ஆ. 11 - 03 - 1970

22. அ. 17 - 12 - 2021

23. ஆ. கரந்தை தமிழ்ச்சங்கம்
(1914 முதல்)

24. ஈ. மனோன்மணியம்
பெ. சுந்தரனார்

25. அ. கி.பி. 1891

26. இ. ம.சு. விஸ்வநாதன்

27. ஆ. வாய்மையே வெல்லும்

28. அ. வரையாடு

29. ஆ. 1972

30. இ. 31

Click here to see Tamil Nadu Part 1 Question and Answer 

Read More »
 

Most Reading

Tags

Sidebar One