Search

குரூப்-2 தேர்வுக்காக அறிவியல் இந்தியாவில் செயல்படும் தடுப்பூசித் திட்டங்கள்

Friday 14 September 2018

அறிவியல் - இந்தியாவில் செயல்படும் தடுப்பூசித் திட்டங்கள் .
1.BCG- காச நோய் தடுப்பூசி.
2.DPT- தொண்டை அடைப்பான், கக்குவான், இருமல், டெட்டானஸ்.
3.MMR- புட்டாலம்மை, மீசல்ஸ், ரூபெல்லா.
4.DT- டிப்தீரியா டெட்டானஸ்.
5.TT- டெட்டானஸ் ,டாக்ஸாய்டு
Read More »

குரூப்-2 தேர்விற்காக அறிவியல் வைட்டமின்கள் அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அறிகுறிகள்

தேர்வுக்காக அறிவியல்- வைட்டமின்கள் ,அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அறிகுறிகள் .
#வைட்டமின் A-நிக் டோலோபியா -மாலைக்கண் .
#வைட்டமின் D-ரிக்கட்ஸ் - எலும்புகளில் கால்சியம் குறைபாடு.
# வைட்டமின் E- மலட்டுத்தன்மை- இனப்பெருக்க செயல்பாட்டுக் குறைவு.
# வைட்டமின் K- இரத்தம் உறையாமை- அதிக ரத்த இழப்பு.
# வைட்டமின் B1- பெரிபெரி- நரம்பு செயல்பாடு குறைவு.
# வைட்டமின் B5- பெலாக்கரா மறதி,தோல் நோய், வயிற்றுப்போக்கு.
# வைட்டமின் B12-பெர்னிஷியஸ் அனிமியா - இரத்த சிவப்பணுச்  சிதைவு.
#வைட்டமின் C- ஸ்கர்வி- ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் விழுதல் .
Read More »

DAILY HISTORY DAILY HISTORY HISTORY OF THE DAY 14.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD


நிகழ்வுகள்


  • 81 – டைட்டசு என்ற தனது சகோதரன் இறந்ததை அடுத்து டொமீசியன் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.
  • 1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.
  • 1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.
  • 1829 – உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1846 – யாங் பகதூர் ராணாவும் அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.
  • 1847 – மெக்சிக்கோ நகரத்தை “வின்ஃபீல்ட் ஸ்கொட்” தலைமையிலான அமெரிக்கப் படைகள் கைப்பற்றினர்.
  • 1886 – தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1901 – அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி செப் 6இல் இடம்பெற்ற கொலைமுயற்சியின் பின்னர் இறந்தார்.
  • 1917 – உருசியா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்ட முதலாவது டச்சு நகரம் ஆனது.
  • 1954 – சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
  • 1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.
  • 1960 – எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.
  • 1962 – கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு பிரதமர் பத்திரிசு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்.
  • 1979 – ஹஃபிசுல்லா அமீனின் கட்டளைப் படி ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.
  • 1982 – லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1984 – ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1999 – கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகியன ஐநா அவையில் இணைந்தன.
  • 2000 – எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.
  • 2000 – விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.
  • 2003 – சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
  • 2003 – ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • 2005 – நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
  • 2008 – உருசியாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் கரை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அனைத்துப் 88 பயணிகளும் கொல்லப்பட்டனர்.


பிறப்புக்கள்

  •   1853 – சேர் பொன் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர். (இ. 1924)
  •     1939 – சோ. பத்மநாதன், ஈழத்து எழுத்தாளர்
  • 1965 – திமித்ரி மெட்வெடெவ், ரஷ்யாவின் மூன்றாவது அதிபர்
  • 1973 – நாஸ், அமெரிக்க ராப் இசைக் கலைஞர்


இறப்புகள்


  • 407 – யோவான் கிறிசோஸ்தோம், பைசாந்தியப் பேராயர் (பி. 347)
  • 1852 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1769)
  • 1965 – ஜே. டப்ளியு. ஹர்ண், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (பி. 1891)
  • 2015 – கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)
  • 2015 – இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)


சிறப்பு நாள்


  • அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 14.09.2018


இந்திய நிகழ்வுகள் 

சுகாதாரம், வேளாண்மை மற்றும் திறன்சார் போக்குவரத்து ஆகிய துறையில் ஏற்படும் சவால்களை தீர்க்கும் நோக்கில், NITI ஆயோக், இன்டெல் (Intel) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) ஆகியவை இணைந்து அமைத்துள்ள சர்வதேச செயற்கை நுண்ணறிவு உருமாற்றி மாதிரி மையம் (Model International Center for Transformative Artificial Intelligence) பெங்களுரில் அமைய உள்ளது.


போக்குவரத்து துறையின் நாட்டின் முதலாது பல்கலைக் கழகமானது வதோதராவில் செப்டம்பர் 11ல் தேசிய இரயில் போக்குவரத்து நிறுவனம் (NRTI – National Rail and Transportation Institute) தொடங்கியுள்ளது.


கடலோர காவற்படையை நவீனப்படுத்தும் நோக்கில், கடந்த 2015ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் L & Tகப்பல் கட்டுமான நிறுவனம் 7 ரோந்து கப்பல்களை வடிவமைத்து கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றது.
அதன்படி, “விஜயா” என்னும் இரண்டாவது அதிநவீன ரோந்து கப்பல் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
குறிப்பு:
முதலாவது அதிநவீன ரோந்து கப்பல் “விக்ரம்” ஏப்ரல் மாதம் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உலக நிகழ்வுகள்


தற்போது நடைமுறையில் இருக்கும் இரயில்வே பிரிவின் மின் இணைப்பை புனரமைப்பது தொடர்பான 3 திட்டங்களை இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டாக தொடங்கி உள்ளன.
வங்கதேச இரயில்வேயின் குலரா – ஷாபஸ்பூர் பிரிவின் புனரமைப்பு
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு 500 மெகாவாட் திறன் கூடுதல் மின் இணைப்பு
அகாரா – அகர்தலா இரயில்வே இணைப்பு


புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் வட பகுதியான கரோலரை விர்ஜீனியா போன்ற பகுதியில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கியுள்ளது.
இந்த புயலின் வேகம் மணிக்கு 225 கி.மீ. அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 விளையாட்டு நிகழ்வுகள்


தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்;று வரும் 52வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் உதய்வீர் சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் இந்திய அணி (உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கியது) தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


நோவாசார் – எஸ் – செயற்கை கோள்:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் அதன் வணிக கிளையுமான ஆண்டிரிக்ஸ் (Antrix) நிறுவனமும் இணைந்து இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான “நோவாசார் – எஸ் (NovaSAR-S) மற்றும் எஸ்.எஸ்.டி.எல்.எஸ் 1-4 (SSTL S 1-4) உள்ளிட்ட செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (PSLV – C42 ) மூலம் செப்படம்பர் 16 அன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
 குறிப்பு:
NovaSAR-S – செயற்கைகோள், வெள்ள கண்காணிப்பு, விவசாய பயிர் மதிப்பீடு, காடுகள் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, கடல் பயன்பாடுகள் உள்ளிட்ட புவி கண்காணிப்புக்காக 430 கிலோ எடை கொண்ட நேவாசார் – எஸ் செயற்கைகோள் செலுத்தப்பட உள்ளது. SSTL – Survey Satelite Technology Ltd.


விருதுகள்


இந்தியா – ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கிடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல் மற்றும் புரிதல் ஆகியவற்றிற்காக பாடுபட்டவர்களுக்கு “ரஷியா நாடு” வழங்கும் உயரிய விருதான “நட்புறவு விருது (ழசனநச ழக கசநைனௌhip) இந்திய செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் என்பவர் இந்த “நட்புறவு விருதினை” சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் நடைபெற்ற 40வது ஆசியா – பசுபிக் டென்டல் ஃபெடரேஷன் மாநாட்டில் இந்திய மருத்துவ பேராசிரியர் பாலாஜி என்பவருக்கு பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் மிக உயரிய மனிதநேய விருது வழங்கி கௌரவித்துள்ளது.
குறிப்பு:
இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் பேராசிரியர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 13.09.2018

தமிழக நிகழ்வுகள்


தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகத்தில் கையெழுத்தானது.
குறிப்பு:
மத்திய அரசின் திட்டத்துடன், தமிழக திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம் சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு புள்ளி விவரம் பட்டியல் படி தமிழகத்தில் சுமார் 2.85 கோடி பேர் இனி ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை காப்பீட்டின் கீழ் தகுந்த மருத்துவமனைகளில் பெற முடியும்.


இந்திய நிகழ்வுகள்


மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு “தூய்மையே உண்மையான சேவை” இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
குறிப்பு:
2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு “தூய்மை இந்தியா” (சுவச் பாரத்) திட்டத்தை தொடங்கினார். அசுத்தம், குப்பைகள் இல்லாத தூய்மையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் “தூய்மையே உண்மையான சேவை” இயக்கம் தொடங்கப்பட உள்ளது.


பிம்ஸ்டெக் அமைப்பின் முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி (BIMSTEC Joint Military Exercise – 2018) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் தொடங்கியுள்ளது. இந்த இராணுவ போர் பயிற்சியில் பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குறிப்பு : BIMSTEC (Bay of Bengal Initiative For Multi Sectoral Technical and Economic Cooperation)
பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய ஏழு நாடுகள் இணைந்து பொருளாதார ஒத்துழைப்பிற்காக BIMSTEC அமைப்பு 1997ல் தொடங்கப்பட்டது.
இதன் தலைமையகம் – வங்காள தேசத்தின் டாக்காவில் உள்ளது.


நாமடிக் எலிபண்ட் – 2018 (Exercise Nomatic Elephant – 2018)
“நாடோடி யானை” எனப் பொருள்படும் “நாமடிக் எலிபெண்ட் – 2018” என்னும் கூட்டு இராணுவப் பயிற்சி இந்தியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கிடையே, மங்கோலியா நாட்டின் உல்லன்பட்டார் நகரில் டைவ் ஹில்ஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்திய இராணுவத்தின் “17வது பஞ்சாப் படைப்பிரிவு” மற்றும் “மங்கோலியா ராணுவத்தின் 84வது படைப்பிரிவு” ஆகியவை இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன
குறிப்பு:
Nomatic Elephant – பயிற்சி 2006ம் ஆண்டு முதல் இந்தியா – மங்கோலியா நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.


உலக நிகழ்வுகள்


பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கும் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டின் மாநிலமான சென்டர் வால்டி லோரியுடன், தமிழ்நாடு அரசின் பண்பாட்டுத்துறை இணைந்து பண்பாட்டு பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.


விளையாட்டு நிகழ்வுகள்


செக் குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவர் நகரில் நடைபெற்ற 3-வது கண்டங்களுக்கு இடையிலான (கான்டினென்டல் கோப்பை) தடகளப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் “ஆர்பிந்தர் சிங்” வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் தங்க பதக்கமும், பர்கினோ பாசோ நாட்டைச் சேர்ந்த ஹெக்ஸ் பேப்ரிஸ் ஜாங்கோ வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.


விருதுகள்


2019ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா’வாக (Miss America – 2019) “நியா இமானி பிராங்க்ளின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியா இமானி பிராங்க்ளின் (Nia Franklin) நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்


சாதாரண ஸ்மார்ட் போனை “சோனார்” சாதனமாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்பவருக்கு 2018ம் ஆண்டிற்குரிய அமெரிக்காவின் புகழ்பெற்ற “மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது” வழங்கப்பட்டுள்ளது.
இவரது கண்டுபிடிப்பு மூலம் உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை அவரது உடலை தொடாமலேயே சோனார் சாதனம் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
குறிப்பு : [SONAR – Sound Navigation And Ranging] சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில் நுட்பம் ஆகும்.


புத்தகங்கள்


“தி ரூல் பிரேக்கர்ஸ்” (The Rule Breakers) புத்தகம் – பீரித்தி ஷெனாய் எழுதியுள்ள இப்புத்தகம் செப்டம்பர் 17 அன்று வெளியிடப்படவுள்ளது.
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 12.09.2018

தமிழக நிகழ்வுகள்


ஊரகத் துறையில் சிறந்த செயல்பாடு: தமிழகத்துக்கு 3 தேசிய விருதுகள்.
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் மூன்று தேசிய விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்டங்களில், தமிழகத்தின் தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.



இந்திய நிகழ்வுகள்


தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.



முக்கிய தினங்கள்


உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10
Theme: Working Together to Prevent Suicide



உலக நிகழ்வுகள்


இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான விஸ்டோக்-2018 போர் ஒத்திகையை ரஷியா தொடங்கி உள்ளது.
சீனா மற்றும் மங்கோலியாவுடன் இணைந்து நடத்தப்படும். இந்தப் போர் ஒத்திகையில் 1000 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்; 3 லட்சம் வீரர்கள் 36000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் நிகழ்வுகள்


நாகாலந்து மாநில அரசனது சிங்பன் வனவிலங்கு சரணாலயத்தை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது.
இது நாட்டில் 30 வது யானைகள் காப்பகம் ஆகும்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த விண்வெளி ஆடையை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது.
பெங்களுர் விண்வெளிக் கண்காட்சியின் 6-வது பதிப்பின்போது அந்நிறுவனம் இந்த விண்வெளி ஆடையை காட்சிப்படுத்தியது. ஆரஞ்சு நிற முன்வடிவம் கொண்ட இந்த விண்வெளி ஆடையை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை வடிவமைத்து வந்தது.



விளையாட்டு நிகழ்வுகள்

தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் சமீபத்தில் 5-வது கேரம் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கே. சகாயபாரதி அணிகள் பிரவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 11.09.2018

தமிழக நிகழ்வுகள்


திறந்த வெளிச் சிறைச்சாலை – திருமலைசமுத்திரம்


தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலைசமுத்திரம் கிராமத்தில் 4 வது திறந்த வெளி சிறைச்சாலை விரைவில் தொடங்கப்படவிருக்கிறது
தமிழ்நாட்டு சிறைச்சாலை கையெட்டின்படி திறந்த வெளி சிறைச்சாலை என்பது தற்பொழுது உள்ள சிறைசாலையில் கூட்டத்தைக் குறைப்பது சிறையில் உள்ளவர்களின் எதிர்கால மறுவாழ்விற்க்கான சரியான விவசாய முறையை கற்றுத் தருவது மற்றும் விவசாய உற்பத்தியில் சிறைச்சாலைகள் தன்னிறைவடைவதாகும். மேலும் இதன் நோக்கம் சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறிதளவு சுதந்திரத்தை அளிப்பதாகும்.




தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் வேலைவாய்ப்பைப் பெருக்கக் கூடிய வகையிலும் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் கொள்கை 2018 என்ற தகவல் தொழில் நுட்பக் கொள்கையை துவங்கியுள்ளது.




இந்திய நிகழ்வுகள்


மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு உலகளாவிய சுகாதார மாநாடு
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையில் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் உலகளாவிய துப்புரவு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இது ஸ்வச் பாரத் மிஷன் துவக்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை கொண்டாடும்.


மத்திய அரசாங்கம் மின் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளால் இயங்கும் தானூர்திகளை இயக்குவதற்கான அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. நாட்டில் மாசுபாடுகளை குறைப்பதற்கு இந்த வகையான வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது
புதுதில்லியில் நடைபெற்ற இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்க உச்சி மாநாட்டின் (SIAM –Society of Indian Automobile Manufacturers) போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் உரிமம் உட்பட இனி வீட்டுக்கே வந்துவிடும் அரசின் 40 சேவைகள் டெல்லியில் முதல்வர் அரிவந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார்.



விளையாட்டு நிகழ்வுகள்


தமிழ்நாட்டின் திண்டுகல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2017-18 ஆம் ஆண்டிற்கான துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய புளு அணி நடப்பு சாம்பியனான இந்திய ரெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது
Read More »
 

Most Reading

Tags

Sidebar One