Search

TNPSC, TRB, TET, VAO, GROUP EXAMS-5000 - போட்டித் தேர்விற்கான வினாக்கள்- விடைகள்.

Monday 30 May 2022

5000 - போட்டித் தேர்விற்கான வினாக்கள்- விடைகள்.


 5000 - போட்டித் தேர்விற்கான வினாக்கள்- விடைகள்.-



CLICK HERE TO DOWNLOAD



Read More »

TNPSC, TRB, TET, VAO, Group 4 MATERIALS - 1000 Questions and Answers.

TNPSC, TRB, TET, VAO, Group 4  MATERIALS - 1000 Questions and Answers.


TNPSC, TRB, TET, VAO, Group 4  MATERIALS - 1000 Questions and Answers.-



CLICK HERE TO DOWNLOAD



Read More »

TNPSC -PREVIOUS YEAR QUESTIONS, GROUP-1.

TNPSC -PREVIOUS YEAR QUESTIONS, GROUP-1.

TNPSC -PREVIOUS YEAR QUESTIONS, GROUP-1.-




CLICK HERE



Read More »

TNPSC : EXAM QUESTION & ANSWER-2020- PDF FILE( 428 PAGES)

TNPSC : EXAM QUESTION & ANSWER-2020- PDF FILE( 428 PAGES)



TNPSC : EXAM QUESTION & ANSWER -2020-PDF FILE


TNPSC : EXAM QUESTION & ANSWER -2020- PDF FILE-









Read More »

குரூப் 2, 2ஏ தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

Friday 27 May 2022

குரூப் 2, 2ஏ தேர்வு


தற்காலிக விடைக்குறிப்பு https://t.co/ANfOkqFJtg இணையதளத்தில் வெளியீடு.






உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின், ஒருவார காலத்துக்குள் பதிவு செய்யலாம் என்று TNPSC அறிவிப்பு.


கடந்த 21-ம் தேதி நடைபெற்ற தேர்வை 9.94 லட்சம் பேர் எழுதினர்




Read More »

TNPSC, TRB, TET, VAO GROUP EXAM- நோய்கள் குறித்த உலக,தேசிய தினங்கள்-G/K.

Thursday 26 May 2022

நோய்கள் பற்றிய தினங்கள் சில தகவல்கள்:-

Jan 30... சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம்

Feb 4... உலக புற்றுநோய் தினம்

Feb 10... தேசிய குடல்புழு நீக்க தினம்

Feb 11... உலக நோயாளிகள் தினம்

Mar 2nd thursday... உலக சிறுநீரக தினம்






Mar 12... உலக குளுக்கோமா தினம்

Mar 10 to 16... உலக குளுக்கோமா வாரம்

Mar 24... உலக காசநோய் தினம்

Apr 2... உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

Apr 11... சர்வதேச உடல் தளர்ச்சி நோய் தினம்

Apr 17... உலக ஹீமோஃபீலியா நோய் தினம்

Apr 25... உலக மலேரியா தினம்

May 1st Tuesday... உலக ஆஸ்துமா தினம்

May 9... உலக தாலசீமியா தினம்

May 12... உலக இரத்த அழுத்த தினம்

May 17... உலக உயர் இரத்த அழுத்த தினம்

May 25... உலக தைராய்டு தினம்

June 13... சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்

June 14... உலக இரத்த தான தினம்

June 26... போலியோ தடுப்பு ஊசி மருந்து தினம்

July 6... விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்கள் தினம்

July 15... தேசிய ஒட்டுறுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தினம்

July 28... உலக மஞ்சள் காமாலை தினம்





Aug 1... சர்வதேச தாய்ப்பால் தினம்

Aug 1 to 7... உலக தாய்ப்பால் வாரம்

Sep 8... உலக இயல் மருத்துவ தினம்

Sep 28... உலக ராபிஸ் தினம்

Oct 1... தேசிய தன்னார்வ இரத்த தான தினம்

Oct 10... உலக மனநல தினம்

Oct 13... உலக பார்வை தினம்

Oct 20... சர்வதேச எலும்புரை நோய் தினம்

Oct 24... உலக போலியோ தினம்

Nov 12... உலக நியுமோனியா தினம்

Nov 14... உலக நீரழிவு தினம்

Nov 17... தேசிய வலிப்பு நோய் தினம்

Dec 1... உலக AIDS தினம்.

Read More »

TNPSC,TRB, TET,VAO, GROUP EXAMS-GENERAL KNOWLEDGE Q/A.


1.சேரர்களின் உடைய தலைநகரம் - *வஞ்சி* 

2.சேரர்களின் சின்னம் மற்றும் நதி - *அம்பு ,வில்* *பொய்கை* *நதி* 

3.சேரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *ஈரோடு, திருப்பூர்* , *கோயம்புத்தூர், நீலகிரி,* *கேரளா* 

4.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - *இளங்கோவடிகள்*

5.இமயவர்மன் என்று அழைக்கப்படுபவர் யார் - *செங்குட்டுவன்*

6.கண்ணகிக்கு சிலை வைத்தவர் - *சேரன் செங்குட்டுவன்*

7.சேரர்கள் பற்றி கூறும் சங்க இலக்கிய  நூல் - *பதிற்றுப்பத்து* 


*சோழர்கள்*      

1.ஆரம்ப காலத்திG சோழர்களின் தலைநகரம் - *உறையூர்* 

2.சோழர்கள் பற்றி கூறும் நூல் - *பட்டினப்பாலை* 

3.பட்டினப்பாலை என்ற நூலின் ஆசிரியர் - *கடியலூர்* *உருத்திரங் கண்ணனார்*

4.சோழர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை* , *நாகப்பட்டினம், திருவாரூர்* , *பெரம்பலூர், அரியலூர், கடலூர்* 

5.சோழ அரசர்களில் மிகச் சிறந்தவர் யார் - *கரிகாலச்சோழன்*

6.பொன்னி கரைகண்ட பூபதி என்பவர் யார்  - *கரிகாலச்சோழன்* 

7.------------, ----------- இடத்தை வென்றார் கரிகாலன் - *வென்னிப்போர்,* *வாகைப்பாரந்தழை* 

8.பொன்னி என்பதன் பொருள் *-காவிரி நதி*

9.கல்லணையைக் கட்டியவர் - *கரிகாலச்சோழன்* 

10.சோழர்களின் சின்னம் மற்றும் நதி - *புலி, காவிரி நதி* 

11.காவேரிப்பூம்பட்டினம் என்பதற்கு வேறு பெயர்கள் - *புகார், பூம்பட்டினம்*







12.கல்லணையின் மற்றொரு பெயர் Gr *கிராண்ட் அணைக்கட்டு*

13.கல்லணை கட்டப்பட்ட நூற்றாண்டு - *கி.மு.2ஆம்* *நூற்றாண்டு*


 *பாண்டியர்கள்*   

1.பாண்டியர்களின் துறைமுகம் - *மதுரை* 

2.பாண்டியர்களின் நதி மற்றும் சின்னம் - *வைகை நதி, மீன்* 

3.மூன்று தமிழ் சங்கங்கள் யாருடைய காலத்தில் நடைபெற்றது - *பாண்டியர்கள்*

4.முதல் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் - *தென்மதுரை* 

5.இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் - *கபாடபுரம்*

6.மூன்றாம் தமிழ்சங்கம் நடைபெற்ற இடம் - *மதுரை*  

7.பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *மதுரை, தேனி, திண்டுக்கல்* , *திருநெல்வேலி, *** *விருதுநகர்,* *சிவகங்கை,* ** *ராமநாதபுரம்*** 

8.பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த இருவர் - *தலையாலங்கானத்து சேருவென்ற* *பாண்டிய* *நெடுஞ்செழியன் , பாண்டிய* *நெடுஞ்செழியன்* 

9."யானோ அரசன் யானே கள்வன் " - என்று கூறியவர் - *பாண்டிய நெடுஞ்செழியன்*

10.பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி பெயர் - *கோப்பெருந்தேவி* 

11.பாண்டியரைப் பற்றி கூறும் நூல் - *மதுரைக்காஞ்சி* 

12.மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் - *மாங்குடி மருதனார்*

13.பாண்டியர்களின் தலைநகரம் - *கொற்கை* 

14.கொற்கை முத்து பற்றி கூறிய வெளிநாட்டு அறிஞர் - *மார்க்கோபோலோ* 

15.நாளங்காடி அல்லங்காடி பற்றி கூறும் நூல் - *மதுரைக்காஞ்சி*


 *பல்லவர்கள்*  

1.பல்லவர்களின் தலைநகரம் மற்றும் நதி - தொண்டைமண்டலம் (காஞ்சிபுரம்) பாலாறு நதி 

2.முற்காலப் பல்லவர்களை நிறுவியவர்  - *சிவஸ்கந்தவர்ம* *பல்லவர்* 

3.முற்காலப் பல்லவர்களில் சிறந்தவர் - *சிவஸ்கந்தவர்மன்,* *விஷ்ணுகோபன்*

4.பிற்காலப் பல்லவர்களை நிறுவியவர் - *சிம்மவிஷ்ணு* 

5.சிம்ம விஷ்ணுவின் மகன் பெயர் - *மகேந்திரவர்மன்*

6.ஒற்றைக்கல் ரதம் யாருடைய சிறப்பு - *நரசிம்மவர்மன்*  

7.பல்லவர்களின் கொடி  (சின்னம்) - *நந்தி* 

8.மாமல்லன் என  அழைக்கப்பட்டவர் *-


 *நரசிம்மவர்மன்** 

 *குறுநில மன்னர்கள்*

1.கடையெழு வள்ளல்கள் - *பேகன், பாரி* , *நெடுமுடி காரி, ஆய்* , *அதியமான், நல்லி* , *வல்வில் ஓரி* 

2.அரசரை கூறும் பல பெயர்கள் -  *கோ,கோன், வேந்தன்* , *கொற்றவன், இறை*


 *விருந்தோம்பல்*  

1.விருந்தினரின் வருகையை அறிவிக்கும் காகத்தை புகழ்ந்து பாடியவர் - *காக்கை பாடினியார்*

2.விருந்தோம்பல் பற்றி கூறும் நூல் - *புறநானூறு*  

3.வரப்பு -நீர் 

    நீர் - நெல் 

   நெல் -குடி 

   குடி -கோல் 

   கோல் -கோன் உயர்வான் - இது யாருடைய கூற்று - *ஔவையார்* 

4.Bravery - என்பதன் பொருள்- *வீரம்* 

5.அக்காலத்தில் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதை கூறும் நூல் - *புறநானூறு* 


 *விழாக்கள்* 

1.இந்திர விழா பற்றி கூறும் நூல் - *பட்டினப்பாலை* 

2.இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும் - *28 நாட்கள்* 






 *ஐந்திணைகள்* 

1.குறிஞ்சி - *மலையும் மலை* *சார்ந்த இடமும்* 

2.குறிஞ்சியின் கடவுள் - *முருகன் (சேயோன்)*

3.குறிஞ்சி மக்களின் தொழில் - *வேட்டையாடுதல், கிழங்கு* *மற்றும் தேன்* *சேகரித்தல்*  

4.Poruppan - என்பதன் பொருள் - *வீரர்கள்* 

5.Verpan -என்பதன் பொருள் - *இனத் தலைவன்* , *ஆயுதம் ** *ஏந்தியவன்** 

6.Silamban - *வீரதீர கலைகளில்* *வீரர் ,ஆயுதம் ஏந்தியவர்*


7.Kuravar - என்பதன் பொருள்  *வேட்டையாடுபவன், உணவு* *சேகரிப்பவர்*

8.Kanavar - என்பதன் பொருள் - *காடுகளில் வாழ்பவர்*

9.குறிஞ்சியின் காணப்படும் மண் வகை - *செம்மண் ,கருப்பு மண்* 

10.குறிஞ்சிப் பூ பூக்கும் மாதம் - *ஜூலை - செப்டம்பர்*


 *முல்லை*  

1.முல்லைக்கு வேறு பெயர் - *செம்புலம்* 

2.முல்லையின் கடவுள் - *திருமால் (மாயோன்)* 

3.இவர்களின் தொழில் - *கால்நடைகளை மேய்த்தல்,* *திணை விதைத்தல்* 

4.இடையர் என்றால் - *பால் விற்பவர்* 

5.ஆயர் என்றால் - *கால்நடை மேய்ப்பவர்*


 *மருதம்*  

1.மருத நிலத்தின் கடவுள்- *இந்திரன்* 

2. காலநிலை கடவுள் என்பவர் யார் - *இந்திரன்* 

3.தொழில் *-விவசாயம்*

4.Uran என்றால் - *சிறு நிலக்கிழார்*

5.Uzhavan என்றால் - *உழவர்*  

6.Kadaiyar என்றால் - *வணிகர்*  

7.கல்லணையின் நீளம்,அகலம் ,உயரம் - *1.079 அடி, 66அடி, 18அடி* 


 *நெய்தல்* 

1.நெய்தல் மக்களின் கடவுள் - *வருணன்*

2.மழைக் கடவுள் என அழைக்கப்படுபவர் - *வருணன்*  

3.Serppan என்பது - *கடல்* *உணவு வணிகர்*

4.Pulamban என்பது - *தென்னை தொழில் செய்பவர்*

5.Parathavar என்பது - *மீனவர், கடல் போர் வணிகர்*

6.Nulaiyar என்பது - *மீன் தொழில்* *செய்பவர்*   

7.Alavar என்பது - *உப்பு தொழில்* *செய்பவர்* 






 *பாலை* 

1.பாலை மக்களின் கடவுள் - *கொற்றவை* *(தாய் கடவுள்)* 

2.Maravar என்பவர் - *மாபெரும் போர் வீரர்*

3.Eyinar என்பவர் - *சிறியவர்*  


 *Municipality and Corporation*

1.தமிழ்நாட்டின் மொத்த நகராட்சிகள் - *148*

2.சென்னை மாநகராட்சியாக ஆன ஆண்டு - *1687, செப்டம்பர்* *29* 

3.The Father of Lokal Bodies - *ரிப்பன் பிரபு*

4.பல்வந்த்ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - *1957* 

5.அசோக் மேத்தா குழு - *1978* 

6.தமிழ்நாட்டின் மாநகராட்சிகள் - *15* 

7.15 மாநகராட்சிகள் -

1.சென்னை*

2.மதுரை*  *

3.கோயம்புத்தூர் *

4.திருச்சிராப்பள்ளி* 

5.சேலம்* 

6.திருநெல்வேலி* 

7.வேலூர்* 

8.தூத்துக்குடி* 

9.திருப்பூர்*    

10.ஈரோடு* 

11.தஞ்சாவூர்* 

12.திண்டுக்கல்* 

13.ஓசூர்* 

14.நாகர்கோவில்* 

15.ஆவடி* 

8.ஆவடி Corporation - வருடம் - *1990,ஜூன் 13*


1.ஹரப்பா அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு - *1921*

2.மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு - *1922*

3.ஹரப்பாவில் வீடுகள் ------------ ஆனது - *சுட்ட செங்கற்களால்*





4.மேம்படுத்தப்பட்ட கிணறுகள், தானியக்களஞ்சியம், பாதுகாப்பு சுவர்கள் காணப்பட்ட இடம்  - *ஹரப்பா* 

5.முதுமக்கள் தாழிகள், கருப்பு-வெள்ளை மண்பாண்டங்கள், இரும்பிலான குத்துவால்,தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை கண்டெடுக்கப்பட்ட இடம் - 

*ஆதிச்சநல்லூர் (*தூத்துக்குடி)* 



 *அரிக்கமேடு ( *பாண்டிச்சேரி)*

1.அரிக்கமேடு மக்கள் யாருடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர் - *ரோம்* 

2.Dinosaur Eggs எங்கு கண்டெடுக்கப்பட்டது - *Senthurai(அரியலூர் )*








 *கீழடி*  

1.ASI - Abbreviation - *Archaelogical Survey of India*

2.தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் - *கீழடி* 

3.பழங்கால தொல் பொருள் - *கீழடி* 

4.உயிரினம் வாழ முடியாத கடல் பகுதி - *Dead Sea*

5.கங்கை நதியின் நீளம் - *2525* 

6.கங்கையும் - யமுனையும் இணையும் பகுதிக்கு என்ன பெயர் - *அலகாபாத்* 

7.தமிழ்நாட்டின் மிக நீண்ட நதி - *கோதாவரி*

8.கொல்லேறு - *ஆந்திரா* 

9.சாம்பார் ஏரி - *ராஜஸ்தான்*  

10.Gulf of Kuchch - *குஜராத்* 

11.சிலிகா ஏரி - *ஒடிசா (*மகாநதி)* 

12.பக்ராநங்கல் - *பஞ்சாப்* 

13.இந்தியாவையும்- ஸ்ரீ லங்காவையும் பிடிக்கக்கூடியது - *பாக் நீர்* *சந்தி* 

14.குற்றாலம் - *தென்காசி* 

15.கர்நாடகா - *Jock Water* *Falls*

16.லூனி நதி -  *ராஜஸ்தான்* 


 *Asia*

1.பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு எது - *Asia*

2.எவரெஸ்ட் நீளம் - *8848*மீ*

3.ஆசியாவில் பல மில்லியன் வருடங்களுக்கு முன் ------------ என்ற நிலப்பகுதி இருந்தது - *பாஞ்சியா* 


*இந்தியா* 

1.மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை - *28*

2.இவற்றில் 28 ஆவதாக சேர்க்கப்பட்ட மாநிலம் - *லடாக் - ஜம்மு* 

3.ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்ட ஆண்டு - *October 31,2019*

4.எத்தனை யூனியன் பிரதேசம் உள்ளது - *9*

5.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த ஆண்டு - *October 31,1875* 

6.இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா மாற்றப்பட்ட ஆண்டு - *1911*

7.சென்னை ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - *1639*

8. இந்தியாவின் கேட் என்று அழைக்கப்படுவது - *டெல்லி* 

9.Sanchi Stuba - *சென்னை* 

10.கங்கைகொண்ட சோழபுரம் - *சென்னை*

11.உலகிலேயே மிக நீண்ட நதி - *நைல் நதி*

12.உலகிலேயே சகாரா நாட்டில் தங்கம் வைரம் ----------- கிடைக்கிறது  - *50%*   

13.இருண்ட கண்டம் என்று அழைக்கப்படுவது - *சகாரா* 







 *North America* 

1.இங்கு மிகப்பெரிய நன்னீர் ஏரி எங்குள்ளது - *Lake Superior* 

2.உலகின் நான்காவது மிக Largest River - *Mississippi, Missouri* 

3.உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் - *Rockies*

4.கர்நாடகா - *Ottawa*

5.Biggest River - *Amazon*

6.அதிக அளவு ஆக்சிஜன் கிடைக்கும் இடம் - *Amazon*  

7.காபி உற்பத்தி - *பிரேசில்* 

8.மடிப்பு மலை - *Andes*

9.மலைச்சிகரம் - *Aconcagua Highest Peak*


*Antarctica* 

1.வெள்ளை கண்டம் என அழைக்கப்படும் நாடு - *Antarctica* 

2.----------- ,------------- இந்திய ஆராய்ச்சி நிலையம் உள்ளது - *Bharathi, Maitri* 


*Europe* 

1.ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிப்பது - *Caspian Sea*

2.பாலைவனமற்ற கண்டம் எது - *ஐரோப்பா*

3.ஏரிகளின் நிலம் - *Finland (1000 ஏரிகள்)*


 *Australia* 

1.தீவு கண்டம் என அழைக்கப்படுவது - *ஆஸ்திரேலியா* 

2.மிக சிறிய கண்டம் கொண்ட நாடு - *ஆஸ்திரேலியா*


1.சங்ககாலம் என்பது - *கி.மு. 300 - கி.பி. 300 வரை*

*பேகன்*  

1.மயிலுக்கு போர்வை போர்த்தியவர் - *பேகன்* 

2.விலங்குகளின் மீது கருணை காட்டியவர் - *பேகன்* 

3.பேகன் ஆட்சி செய்த பகுதி - *பழனி மலை *(*திண்டுக்கல்)*


 *பாரி* 

1.பாரி ஆட்சி செய்த பகுதி - *பரம்பு நாடு (* *சிவகங்கை பரம்பு மலை* )

2.இயற்கையை பாதுகாத்தவர் - *பாரி* 

3.முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவர் - *பாரி*





 *அதியமான்*  

1.அதியமான் ஆட்சி செய்த பகுதி - *தர்மபுரி தகடூர்*

2.ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தவர் - *அதியமான்*  


 *வல்வில் ஓரி* 

1.வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி - *கொல்லிமலை *(* *நாமக்கல்)** 

2.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி - *கொல்லிமலை* 

3.வல்வில்- என்பதன் பொருள் - *சிறந்த வில்லாளன்*

4. கலைஞர்களுக்கு வெகுமதி அளித்தவர் - *வல்வில் ஓரி*   


 *ஆய்* 

1.ஆய் ஆட்சி செய்த பகுதி - *பொதிகைமலை  *(* *மதுரை)** 







 *நல்லி* 

1.ஆட்சி செய்த பகுதி - *தோட்டி மலை* 

2.தமிழ்நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஏரி - *பழவேற்காடு* 

3.ஆந்திரபிரதேசம் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட ஆண்டு - *1953* 

4.இந்தியாவில் முதன்முறையாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் - *ஆந்திரா* 

5.கேரளா - கர்நாடகா பிரிக்கப்பட்ட ஆண்டு - *1956* 

6.தொட்டபெட்டா உயரம் - *2637 மீ*

7.ஆனைமுடி உயரம் - *2695 மீ*

8.வடக்கு சமவெளி - *பாலாறு, செய்யாறு, பென்னாறு* *,வல்லாறு*

9.உலகின் மிகப்பெரிய நீளமான கடற்கரை கொண்ட நாடு - *குஜராத்*  *1St* 

10.இரண்டாமிடத்தில் மிக  நீளமான கடற்கரை கொண்ட நாடு - *ஆந்திரா*  

11.மூன்றாம் இடத்தில் உள்ள மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு - *தமிழ்நாடு*

12.பாம்பன் பாலம் எங்கு உள்ளது - *ராமேஸ்வரம்*

13.பாம்பன் பாலத்தின் வேறு பெயர் - *இந்திராகாந்தி பாலம், ஆதாம்* *பாலம்*  

14.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பாலம் - *பாம்பன் பாலம் 1914*

15.திருச்சியில் உள்ள மிகப் பழமையான கோவில் - *உச்சிபிள்ளையார் கோவில்*

16.குற்றாலம்  எத்தனை அருவிகளை கொண்டது- *9*  *அருவிகள்* 

17.திருத்தணி மாவட்டத்தில்-------------- அதிக வெப்ப நிலை  காணப்படுகிறது - *48.6°C in may 2003*

18.காடுகள் அதிகம் உள்ள மாவட்டம் - *ஈரோடு* 

19.சாலை போக்குவரத்து வாரம் - *ஜனவரி  முதல் வாரம்*

20.தங்க நாற்கர சாலை - *சென்னை, மும்பை, டெல்லி* , *இந்தியா*  

21.சென்னை - டெல்லி  நீளம் - *1363 கி.மீ*

22.NH7 - *கன்னியாகுமரி* - *வாரணாசி* 

23.மும்பை - தானே - **1853,16 ஏப்ரல் (34 கி.மீ* ) 

24.அரக்கோணம் -  இராயபுரம் - *1856* 

25.முதல் மெட்ரோ ரயில்வே - *கொல்கத்தா*

26.மெட்ரோ ரயில் சென்னை - *2015* 

27.1St india Airport - *(அலகாபாத் - நைனி)* *1914* 

28.தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் - *எண்ணூர், சென்னை,* *தூத்துக்குடி* 

29.சென்னிமலை - *ஈரோடு* 

30.Wild malai - *முதுமலை (நீலகிரி) 1966*

Read More »

TNPSC, TRB, TET, VAO, GROUP EXAM: பல்வேறு துறைகளின், தந்தை யார்? வினாக்களும், விடைகளும்.

பல்வேறு துறைகளின், தந்தை யார்? வினாக்களும், விடைகளும்

1.நவீன இத்தாலியின் தந்தை யார் ? கரிபால்டி .

2.அரசியல் தந்தை யார் ?அரிஸ்டாட்டில்

3.இந்தியாவில் நவீன ஓவிய தந்தை யார் ? ரவிவர்மா.

4.ராக்கெட்டின் தந்தை யார் ? டிஸோல்வ்ஸ்கி

5.பொருளாதாரத்தின் தந்தை யார் ?ஆடம் ஸ்மித்

6.பரிணாமக் கொள்கையின் தந்தை யார் ? சார்லஸ் டார்வின் .

7.தாவரவியலின் தந்தை யார் ? தியோபரேடஸ்

8.வேதியியலின் தந்தை யார் ? லவாய்ச்சியர்

9.புதிய அறிவியலின் தந்தை யார் ? தாமஸ் ஆல்வா எடிசன்

10.நவீன உடலியலின் தந்தை யார் ?வெசாலியஸ்





11.ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி யார் ?புலா சௌத்ரி ( மேற்கு வங்காளம் )

12.ஆங்கிலக் கவிதைகளின் தந்தை யார் ? ஜியோபேரி சாகர்

13.இந்திய புள்ளியியல் துறையின் தந்தை யார் ? பி . சி . மகளநோபிஸ்

14.குடித்தொகைக் கல்வியின் தந்தை யார் ? ஜோன் கிராண்ட்

15.சிவில் சர்வீஸின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?காரன் வாலிஸ்

16.நவீன ஓவியத்தின் தந்தை யார் ? பாப்லோ பிக்காசோ

17.கேத்திர கணிதத்தின் தந்தை யார் ? யூக்கிளிட்

18ஹரிகதை கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர்

19.இந்தியாவின் எஃகு தொழிலின் தந்தை யார் ? ஜே . ஆர் . டி டாட்டா

20.மருத்துவத்தின் தந்தை யார் ? ஹிப்போகிரட்டிஸ்

21.மரபியலின் தந்தை யார் ?கிரிகர் மெண்டல்

22.உடல் உறுப்புகளின் அமைப்பியல் தந்தை யார் ?அண்டிரியஸ் வெலாலியஸ் (பெல்ஜியம்)

23.நவீன அணுக் கொள்கையின் தந்தை யார் ? நீல்ஸ்போர்

24.சிவில் எஞ்சினியரிங் தந்தை எனப் போற்றப்பட்டவர் யார் ?தாமஸ் டெல்போர்டு







25.இரசாயனவியலின் தந்தை யார் ?ராபர்ட் பாயில்

26.ஆங்கிலக் கவிதையின் தந்தை யார் ? ஜியோஃபெரி சௌார்

27.நூலகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் ?எஸ் . ஆர் . ரங்கநாதன் -சீர்காழி

28.கணக்கியலின் தந்தை யார் ?லூக்கா பெசி யொவு

29.அமெரிக்காவின் தந்தை யார் ?ஜார்ஜ் வாஷிங்டன்

30.பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார் ?சி . சுப்ரமணியம்

31.நன்னெறித் தத்துவத்தின் தந்தை யார் ? புனித தாமஸ் அக்யூனஸ்

32.தம் எட்டு வயதிலேயே வெண்பாவினை வேகமாகப் பாடி அசத்தியவர் யார் ? வண்ணச்சரம் தண்டபாணி அடிகள்

33.பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது பெற்ற இந்திய நடிகையர் யாவர் ? ஐஸ்வர்யா ராய் , நந்திதா தாஸ்

34.திரிகடுகத்தை இயற்றியவர் யார் ? நல்லாதனார்

35.நாலடியார் நூலை எழுதியவர் யார் ? சமண முனிவர்கள்

36.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் ? இளங்கோவடிகள்

37.பெரியபுராணத்தை இயற்றியவர் யார் ? சேக்கிழார்

38.திருப்புகழ் எழுதியவர் யார் ? அருணகிரிநாதர்








39.திருப்பாவை நூலை எழுதியவர் யார் ? ஆண்டாள்

40.திருவாசகத்தை இயற்றியவர் யார் ? மாணிக்கவாசகர்

41.இராமாயணத்தை இயற்றியவர் யார் ? வால்மீகி

42.கம்பராமாயணத்தை எழுதியவர் யார் ? கம்பர்

43.சீறாப்புராணத்தை எழுதியவர் யார் ? உமறுப்புலவர்

44.கண்ணன் பாட்டு நூலை எழுதியவர் யார் ? பாரதியார்

45.கலிங்கத்துப் பரணி எழுதியவர் யார் ? ஜெயங்கொண்டான்

46.பிள்ளைத் தமிழ் நூலை எழுதியவர் யார் ? ஓட்டக்கூத்தர்

47.ஆத்திச்சூடி எழுதியவர் யார் ? ஔவையார்

48.கடிகாரத்தைக் கண்டறிந்தவர் யார் ? பீட்டர்ஹெரல்

49.கூட்டுறவு இயக்கத்தின் தந்தை யார் ? ராபர்ட் ஓவர்

50.இந்திய அரசியலமைப்பின் தந்தை யார் ? டாக்டர் அம்பேத்கர்

51.கிண்டர்கார்டன் என்ற கருத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ? புரோபல்





52.ஹைட்ரஜன் குண்டின் தந்தை என அழைக்கப்படுபவ யார் ? ஸ்வெர்க்கின்

53.சார்புக் கொள்கையின் தந்தை யார் ? ஐன்ஸ்டீ ன்

54.இரசாயனத்தின் தந்தை யார் ?பரைட்சிக் ஓவர்

55.நவீன பத்திரிகையின் தந்தை யார் ? பனியல் டெஃபோ

56.பூமி தான இயக்கத்தின் தந்தை யார் ? வினோபா பாவே

57.இந்தியப் புவி அமைப்பின் தந்தை யார் ? டி . என் . ஹடியா

58.வரலாற்றின் தந்தை யார் ? ஹெரடோடஸ்

59.பௌதீகத்தின் தந்தை யார் ?ஐசக் நியூட்டன்

60.சமூகவியலின் தந்தை யார் ?மாக்ஸ் வேப்பர்

61.கணிதத்தின் தந்தை யார் ? ஆர்க்கிமிடிஸ்

62.நாணயக் கூட்டுறவுச் சங்கத்தின் தந்தை யார் ? நிக்கல்சன்

63துருக்கியின் தந்தை யார் ?முஸ்தபா கமால் பாட்சா

Read More »

TNPSC,TRB,VAO,GROUP EXAM-இந்திய அரசியலமைப்பு Indian Polity Important Notes

இந்திய அரசியலமைப்பு-Indian Polity Important Notes

*  இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது. 

*   தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார். 

*  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். 

*   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. 

*   இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.

*   இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும். 

*  பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன. 

*  இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள். 

*  தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள். 

*   இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.





*   இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது. 

*   மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன. 

*  அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன. 

*   நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன. 

*  இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசாக விளங்குகிறது. அரசு மதத் தலையீட்டிலிருந்து விடுபட்டது. எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை, வழிபாட்டுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. 

*  இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).

* அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன. 

*  அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.

*   இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை). 

*   நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.

*  நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன. 

*  ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர். 

*   அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.

*  இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது. 

*  பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். 

இந்திய அரசியலமைப்புமுறை பெறப்பட்ட நாடுகள் மற்றும் கொள்கைகள்

*  இங்கிலாந்து:

1. சட்டமியற்றும் முறை:

2. சட்டத்தின் பணி

3. ஒற்றைக் குடியுரிமை

4. பாராளுமன்ற முறை அரசாங்கம்

5. கேபினட் முறை அரசாங்கம்

6. வெஸ்ட் மினிஸ்டர் முறை அரசாங்கம்

7. சட்டத்தில் இருந்து பாதுகாப்பு

8. மேல் சபையை விட கீழ் சபைக்கு அதிக அதிகாரம்

9. பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச் சர்கள்

*  அமெரிக்கா:

1. சுதந்திரமான நீதித்துறை

2. நீதிப்புனராய்வு

3. அடிப்படை உரிமைகள்

4. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்

5. நீதிபதிகளை நீக்கும் முறை






*   குடியரசு முறை அரசாங்கம்

அரசியலமைப்பின் முன்னுரை

துணை ஜனாதிபதியின் பொறுப்புகள்

அரசியலமைப்பைத் திருத்தும் முறைகள்

உச்சநீதிமன்றத்தின் அமைப்பும் இயக்கமும்

அயர்லாந்து அரசின் வழிநெறிக் கோட்பாடுகள்

ஜனாதிபதி முறை தேர்வு (தேர்தல்)

ஜனாதிபதியால், ராஜ்யசபைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள்

பலமான மத்திய அரசாங்கம்

எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் வருவது

*  ஜெர்மனி: 

நெருக்கடிநிலையின் போது அடிப்படை உரிமைகள் நீக்கப்படுவது

*   ஆஸ்திரேலியா: பொதுபட்டியல் முறை

*  ரஷ்யா: அடிப்படைக் கடமை கள்

*  கனடா: மாநிலங்களுக்கு இடை யேயான இலவச வர்த்தக முறை

*   தென் ஆப்பிரிக்கா: பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத் திருத்த முறை

அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள்

*  முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1951-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. 

*  இந்திய அரசியலமைப்பு "கூட்டாட்சி முறை' என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. 


*  அரசியலமைப்பு சட்டம் என்பது அரசிய லமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும். 


*  சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் ஆகும்.

*  அரசியலமைப்புச் சட்டம் சாதாரணச் சட்டத்தினின்றும் வேறுபட்டது. 

இந்திய அரசியலமைப்பு முகவுரை

*  இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது. 

*  அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர். 

*  இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.

*  இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.

*  இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது. 

*  1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.

இந்திய அரசும் அதன் எல்லைகளும்

*  இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.

*  இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.

*  புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2

*  புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3 

*  புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4 

* இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

*  இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்கண்ட்.

அடிப்படை உரிமைகள்

*  இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.

*  1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன. 

*   1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):

*   2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)

*  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):


* 4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):

*  5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):

*  6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):







ஐந்து வகையான நீதிப் பேராணைகள்:

1. ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) :

தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

2. கட்டளை நீதிப்பேராணை (Writ of Mandamus):

ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.

3. தடை நீதிப்பேராணை (Writ of Prohibition): 

நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலைச் செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்ப தாகும்.

4. உரிமைவினா நீதிப் பேராணை (Writ of Quo warranto):

பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக் கையின் அடிப்படையில், அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தக் கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.

5. தடைமாற்று நீதிப்பேராணை (Writ of Certiorary):

நீதிமன்றம் தனது கீழ்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து, குறிப்பிட்ட நீதிமன்றச் செயல்முறைகளையும் ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச் செய்வதாகும்.

*  டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

*  அடிப்படை உரிமையை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும். 

அடிப்படைக் கடமைகள்

*  அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. 

*  42-வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி ஒய லி ஆ (அங்கம் 51 ஆ)லி ல் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன. 

*  ரஷ்யாவின் அரசியலமைப்பிலிருந்து இவை பெறப்பட்டன.

மாநிலங்கள் அவை (Rajya Sabha)

*  இந்திய நாடாளுமன்றம், இந்திய குடியரசுத் தலைவரையும், மாநிலங்கள் அவை, மக்கள் அவை எனப்படும் இரண்டு அவைகளையும் கொண்டுள்ளது. 

*  மாநிலங்கள் அவை 250-க்கு மிகாத உறுப் பினர்களைக் கொண்டது. இதில் பன்னிருவரை (12) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனு பவமும் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர் உறுப்பினர்களாக நியமிப்பார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், மத்திய ஆட்சிப் பகுதி களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 

*  உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

*  மாநிலங்கள் அவைக்கான தேர்தல் மறைமுகமானது. 

*  மாநிலங்கள் சார்பாக உறுப்பினர்கள் மாநிலங் களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 

*  மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண் டாண்டுகளுக்கு ஒரு முறை விலக காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். 

*  இதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.

*  இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் தன்னு டைய பதவியின் அடிப்படையில் மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார். 

*  ஒரு துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். 

*  துணைக் குடியரசுத் தலைவர் இல்லாத காலங்களில் துணைத் தலைவர் மாநிலங்கள் அவைக்குத் தலைமை தாங்குவார்.

மக்கள் அவை (Lok Sabha):

*  மக்கள் அவை 565-க்கு மிகாத உறுப்பினர் களைக் கொண்டது. 

*  525 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும், 18 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

*  ஆங்கிலோ - இந்திய சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் இருவரை நியமன உறுப்பினர்களாக நியமிப்பார்.

*  மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும். 

*  நெருக்கடி நிலைமை (Emergency) பிரகடனப் படுத்தும் காலங்களில் மக்கள் அவையின் காலத்தை ஓர் ஆண்டுக்கு மேற்படாமலும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஆறு மாதத்திற்கு மேற்படாமலும் சட்டத்தினால் நீட்டிக்கலாம். 

*  தற்போது மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர்.

*  மக்கள் அவையின் தலைவர் (Speaker) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். 

*  மக்கள் அவை ஒரு துணைத்தலைவரையும் (Deputy Speaker) தேர்ந்தெடுக்கும். 

நாடாளுமன்றத்தின் பணிகள்(Functions of Parliament):

*  சட்டம் இயற்றுதல், நிர்வாக மேற்பார்வை, வரவு - செலவு அறிக்கை நிறைவேற்றுதல், பொது மக்களின் குறைகளைப் போக்குதல், முன்னேற்றத் திட்டங்களை உருவாக்குதல், பன்னாட்டு உறவுகளைப் பராமரித்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.

*  சட்டமியற்ற மசோதா நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். 

*  நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது. 

*  நிதி மசோதாக்கள் மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தலாம். 

*  சட்டங்கள் இயற்றும் அதிகாரங்களோடு நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரும் அதிகாரமும் வழங்கப்பட் டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் (Sessions of Parliament) :

*  அரசியலமைப்பின்படி நாடாளுமன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறை கூட்டப்பட வேண்டும். 

*  இரண்டு கூட்டங்களுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கும் வகையில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஆணையிடுவார். 

*  நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது. 

கூட்டத் தொடர்கள் பின்வருமாறு:

*  1. வரவு - செலவு அறிக்கை கூட்டத் தொடர் - பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கூடும்.

*  2. பருவக்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும்.

*  3. குளிர்காலக் கூட்டத்தொடர் - பொதுவாக நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

குடியரசுத் தலைவர்

*  இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ஆவார். 

*  இவர் இந்திய அரசின் தலைவரும் ஆவார். "பெயரளவிலான தலைவர்' (Nominal Chief), "சட்டப்படியான தலைவர்' (Legal Chief), "நாட்டின் தலைவர்' (ஐங்ஹக் ர்ச் ற்ட்ங் ள்ற்ஹற்ங்), "நடைமுறைத் தலைவர்' (எர்ழ்ம்ஹப் ஈட்ண்ங்ச்), "முப்படைகளின் தலைவர்' என்ற சிறப்புப் பெயர்களும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

*  இந்தியக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் 

*  இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்வுக் குழுமம் (Electoral College) மூலம் தேர்ந்தெடுக்கப்படு கிறார். 

*  மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுப்பார்கள். ஒற்றை மாற்று வாக்கு எனப்படும் ரகசியத் தேர்வு முறையில் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். 

*  குடியரசுத் தலைவர் தேர்வு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது உச்சநீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்படும்

*  ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். 

*  குடியரசுத் தலைவர் தனது ராஜினாமாவை துணைக் குடியரசுத் தலைவரிடம்தான் அளிக்க வேண்டும்.

*  குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய குற்ற விசாரணை முறை மூலம் இதைச் செய்யலாம். 

*  குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணைக் கான முன்னறிவிப்பு கால அவகாசம் 14 நாட்களாகும். 

*  குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்யக் கோரும் குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப் பட்டு குற்ற விசாரணை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

1. நிர்வாக அதிகாரங்கள்

*  மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் உள்ளது. 

*  மத்திய அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங் களுக்கு குடியரசுத்தலைவரின் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன. 

*  பிரதமரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவரும் அவரே, பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். 

*  இந்தியத் தலைமை வழக்கறிஞர், இந்திய தலைமை கணக்காய்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தூதுவர்கள், மாநில ஆளுநர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய தேர்வாணையத்தின் தலை வர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் போன்ற முக்கியமான பதவிகளில் உரிய நபர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். 




2. சட்டமன்ற அதிகாரங்கள் :

*   பாராளுமன்றத்தைக் கூட்டும் உரிமை பெற்றவர் குடியரசுத் தலைவர் ஆவார். 

*  பாராளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையையோ ஒத்திப்போடவோ அல்லது கூட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவோ அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர். 

*  மாநிலங்களவை 12 உறுப்பினர்களை நியமனம் செய்யவும், மக்களவையில் 2 ஆங்கிலோ - இந்திய இனத்தினரை நியமனம் செய்யவும் அதிகாரம் அவருக்கு உண்டு. 

*   பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 

*  இவரது அங்கீகாரம் இல்லாது எந்த மசோதாவும் சட்டமாகாது. 

*  பாராளுமன்றம் கூடாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுள்ளது.

3. நிதி தொடர்பான அதிகாரங்கள்

*  நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் முன் அனுமதியின்றி தாக்கல் செய்ய இயலாது. 

*  இந்திய அரசின் எதிர்பாராத செலவு (Contingency FUND) நிதிக்குப் பொறுப்பானவர் குடியரசுத் தலைவர். 

*  இந்தியாவின் நிதி ஆணையகத்தை (Finance Commission) அமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.

4. நீதி தொடர்பான அதிகாரங்கள் :

*  குற்றவாளிகள் எவரையும் மன்னிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக் கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு, மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றவர் குடியரசுத் தலைவர். 

*   அரசியலமைப்பு சட்டங்கள் பற்றிய சந்தேகம் குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்டால் அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெற இயலும்.

5. நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள்:

*  போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

*  மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்குமுறை செயலற்றுப் போகும் போது மாநில நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

*  நிதி நிலை மிகவும் மோசமாகும் போது குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்கலாம்.

துணைக் குடியரசுத் தலைவர்

*  துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். 

*  ராஜ்யசபாவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தமது பதவியின் வாயிலாகவே ராஜ்யசபாவின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். 

*  குடியரசுத் தலைவர் இறக்க நேரிட்டாலோ, பதவி காலியாகும் போதோ, நீக்கப்பட்டாலோ, அப் பதவி காலியாக இருக்கும் போதோ அப் பதவியை ஏற்பவர் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார்.

*   பாராளுமன்றத்தின் இரண்டு அவை உறுப்பினர் களைக் கொண்ட வாக்காளர் குழுமம் (Electoral College) மூலமாக, விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை வாக்குமுறை மூலமாக, துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார். இதில் இரகசிய வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது.

*  துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டி இடலாம். 

*துணைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவி வகிப்பார். துணைக் குடியரசுத் தலைவர்மீது குற்ற விசாரணை ஒன்றை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம். 

*  துணைக் குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும். 

*  மாநிலங்களவையில் ஒட்டெடுப்பின் போது சமநிலை ஏற்படும் போது மட்டும், ஒட்டுப் போடும் உரிமை பெற்றவர் துணைக் குடியரசுத் தலைவர்.

பிரதமர்

*  பிரதமர் அரசாங்கத்தின் செயல்பாட்டுத் தலைவர், நிர்வாகத் துறையின் தலைவருமாவார். 

*  குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவரை அழைத்து பிரதமராக நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு கேட்டுக் கொள்வார்.

அமைச்சரவை

*  அமைச்சர்கள், மக்கள் அவைக்கு தனித்தனி யாகவும், கூட்டமாகவும் பொறுப்புடையவர்கள்.

*  அமைச்சர்கள் மூன்று வகையாக பிரிக்கப்படு கிறார்கள். அவை,

1. காபினெட் அமைச்சர்கள் 2. மாநில அமைச் சர்கள் 3. துணை அமைச்சர்கள்

*   காபினெட் என்பது சிறிய குழுவாயினும் அது அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க உறுப்பாகும். 

*  மாநில அமைச்சர்களில் சிலர் சில துறைகளில் தனித்துப் பொறுப்பு வகிக்கிறார்கள். 

*  மாநில அமைச்சர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் துணை அமைச்சர்கள் எனப் படுவர்.

மாநிலச் சட்ட மேலவை

*  மாநிலச் சட்டமன்றம் ஓரவை அல்லது ஈரவை யைக் கொண்டிருக்கலாம். அவை சட்டப் பேரவை அல்லது விதான் சபா என்றும் சட்டமேலவை அல்லது விதான் பரிஷத் என்றும் அழைக்கப்படுகின்றன. 

*  ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை உருவாக்க அல்லது நீக்க அரசியலமைப்பின் அங்கம் 169-ன் கீழ் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தைச் சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும். 

மாநிலச் சட்டப் பேரவை

*  சட்டப் பேரவை ஓர் உண்மையான மக்கள் அவையாகும். 

*  சட்டப் பேரவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மக்கள் தொகையைச் சார்ந்து வேறுபடுகின்றது. 

*  சட்டப் பேரவையின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அது முன்கூட்டியே கலைக்கப்படலாம். நாட்டில் நெருக்கடி நிலை நிலவும் பட்சத்தில் அதன் ஆயுட்காலம், நாடாளுமன்றச் சட்டத்தினால் நீட்டிக்கப் படலாம்.

*  வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில், சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப் பினர்களை அது கொண்டுள்ளது. 

*  ஆங்கிலோ - இந்தியர் சமூகத்தினர் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவம் பெறத்தவறினால் ஆங்கிலோ இந்தியர் சட்டப் பேரவையில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுகின்றார். 

*  சட்டப்பேரவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 500-க்கு மிகையின்றியும் குறைந்த பட்ச உறுப்பினர் எண்ணிக்கை 60-க்குக் குறைவின்றியும் இருத்தல் வேண்டும். 

*  இதில் சிக்கிம் மாநிலச் சட்டப்பேரவை ஒரு விதிவிலக்காகும். அங்கு 30 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது.

*  சட்டப் பேரவையின் ஓர் உறுப்பினராக இருக்க குறைந்தது 25 வயதடைந்தவராயிருத்தல் வேண்டும். 

*  சட்டப் பேரவையின் அனுமதியின்றி அதன் கூட்டங்களில் அறுபது நாட்களுக்குப் பங்கேற் காத ஓர் உறுப்பினரின் பதவியைப் பேரவை பறிக்கலாம். 

சபாநாயகர்

*  சட்டப் பேரவை தனது உறுப்பினர்களுள் இருவரை முறையே சபாநாயகராகவும், துணைச் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கின்றது. 

*  மாநிலச் சட்டப்பேரவைச் சபாநாயகரின் கடமைகள், அதிகாரங்கள், சலுகைகள் யாவும் மக்களவைச் சபாநாயகர் பெற்றுள்ளவை களுக்குப் பெருவாரியாக ஒத்துள்ளன. 






ஆளுநர்

*  ஆளுநராக நியமனம் செய்யப்படுவதற்கு முன் னர் மாநில முதலமைச்சர் கலந்தாலோசிக்கப் படுகின்றார்.

*  மாநில ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் அவர் குடியரசுத் தலைவர் மனநிறைவைப் பெற்றுள்ள காலம் வரை பதவி வகிக்கின்றார். 

*  ஆளுநருக்குரிய தகுதிகள், பதவிக்காலம், தனிச் சலுகைகள் மற்றும் பலவற்றை அரசியலமைப்பு விவரிக்கின்றது. 

*  மாநில அரசாங்கத்தின் செயலாட்சி அதிகாரங் கள் அனைத்தும் ஆளுநரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. 

*  முதலமைச்சரை ஆளுநர் பதவியில் அமர்த்து கின்றார். முதலமைச்சரின் அறிவுரையின்படி ஏனைய அமைச்சர்கள் அவரால் நியமனம் செய்யப்படுகின்றனர். 

*  மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட நீதி பதிகள், தலைமை வழக்குரைஞர் ஆகியோரையும் ஆளுநரே நியமனம் செய்கின்றார். 

*  ஆளுநரின் கலந்தாலோசிப்புடன் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். 

*  சட்ட மேலவை உறுப்பினர்களுள் ஆறில் ஒரு பங்கினரையும் சட்டப் பேரவையில் ஆங்கிலோ இந்தியச் சமுதாயத்தைச் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கிறார். 

*  மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் அவர் நியமனம் செய்கின்றார். 

*  சட்டமன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம் பெற்றுள்ள அதே சக்தியை ஆளுநரால் பிறப் பிக்கப்படும் அவசரச் சட்டமும் பெற்றுள்ளது.

*  ஒரு நபரின் தண்டனையைக் குறைக்கவும் அல் லது அதை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும் அல்லது குற்ற மன்னிப்புகள் வழங்க வும் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனையை மன்னிக்கும் அதிகாரத்தை அவர் பெற்றிருக்கவில்லை.

முதலமைச்சர்

*  அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சராவார். 

*  மாநிலத்தின் பெயரளவிலான ஒரு தலைவராக ஆளுநர் உள்ளார். உண்மை செயலாக்க அதிகாரங்கள் யாவும் முதலமைச்சரின் தலைமையிலான ஓர் அமைச்சர் குழுவினால் செயல்படுத்தப்படுகின்றன. 

*  அரசியலமைப்பின் 164-ம் அங்கத்தின் கீழ் முதலமைச்சரையும் முதலமைச்சரின் பரிந்துரை மீது அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் நியமனம் செய்கின்றார். 

*  முதலமைச்சரின் தலையாய பணி தனது அமைச் சரவையை அமைப்பதாகும். 

*  முதலமைச்சரின் நம்பிக்கையை ஓர் அமைச்சர் இழப்பாராயின், அவர் பதவி விலக வேண்டும்.

*  அமைச்சகத்திலிருந்து ஆளுநருக்குச் செல்லும் ஒவ்வொரு தகவலும் முதலமைச்சரின் வாயிலாகவே செல்ல வேண்டும். 

*  முதலமைச்சர் கட்சித் கொறடாக்களையும் நியமனம் செய்கின்றார். 

அமைச்சர்குழு

*  சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவரும் அமைச் சராக நியமிக்கப்படலாம். ஆனால் அவர் ஆறுமாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம்

*  இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டிருக்கும். 

*  தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். 

*  உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது நிறைவுபெறும் வரை பதவி வகிப் பார்கள். 

*  உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு (Jurisdiction of supreme court) அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்புக்கு உட்பட்டது. உச்சநீதிமன்றம் இந்த உரிமைகள் தொடர்பாக பணிப்புரைகள் (உண்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்) ஆணைகள் (ஞழ்க்ங்ழ்ள்) அல்லது நீதிப்பேராணைகள் (ரழ்ண்ற்ள்) பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கொண் டுள்ளது.





உள்ளாட்சி அல்லது பஞ்சாயத்துராஜ்

*  பஞ்சாயத்து இராஜ்யம் 1959-ம் ஆண்டு அக் டோபர் திங்கள் 2-ம் நாளன்று பண்டித ஜவ ஹர்லால் நேருவினால் துவக்க செய்த முதல் மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசமும் ராஜஸ் தானும் ஆகும். 

*   அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன. 1993-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 

*  73-வது திருத்தத்தின்கீழ் 11-வது இணைப்புப் பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின்மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன. 

*  12-வது இணைப்புப் பட்டியல் 18 வகை அதி காரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களைக் கொண்டுள்ளன. 

*  ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் இடைப்பட்ட மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துக்கள் அமையப்பெறவும் 73-வது திருத்தம் வகை செய்கின்றது. 

அவசர நிலைகள்

*  இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

*  தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து - Art 352

*  தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி

*  தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

*  தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

*   6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

*  ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து - Art 356

*  முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

*  முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் -பஞ்சாப்

*  இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

*  இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம்- பஞ்சாப்

*  இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர்- இந்திராகாந்தி

*  நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து- Art 360

*  நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

*  நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

*  நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

*  1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

*  2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

*  நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21

நிதி ஆணையகம்

*  நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி

*   நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

*  நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்

*  நிதி ஆணையகத்தின் தலைவர் - ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்

*  நிதி ஆணையகம் என்பது - இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

*  முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

*  முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்

*  பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்

*  பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - ஏ.எம். குஸ்ரோ

*  நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது

தேர்தல் ஆணையம்

*  தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

*  தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் Art  A 324

*  தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

*  தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

*  தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து Art A 324 (5)

*   தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை







*  தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

*   ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

*   தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

*  புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.

*   முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையகம்.

*   கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையகம் ஆகும்.

திட்டக்குழு

*  திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்

*  திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்

*  திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு

*  தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

*  தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

*   ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு

*  தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்

*  ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள

*  தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும். 

*  அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான். 

*  1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன. 

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது






பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

(அ) மத்தியப் பட்டியல்

இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(ஆ) மாநிலப்பட்டியல்

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

(இ) பொதுப்பட்டியல்

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.






பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

இந்திய மொழிகள்

*  இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

*  ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

*  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

*  இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

*  இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

*  இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.



Read More »

TNPSC INDIAN HISTORY QUESTION AND ANSWERS (TAMIL & ENGLISH),

TNPSC INDIAN HISTORY QUESTION AND ANSWERS (TAMIL & ENGLISH)

முதல் சுதந்திரப் போருக்கான இந்திய வரலாறு குறிப்புகள் PDF – Download here

இந்திய தேசிய இயக்கத்திற்கான இந்திய வரலாறு குறிப்புகள் PDF – Download here

முக்கியமான சமூக, சமய சீர்திருதத இயக்கங்கள் முழுமையான குறிப்புகள் PDF –





 Download here



 / 9ஆம் நூற்றாணடில் சமூக, சமய சீர்திருதத இயக்கங்கள்.

இந்திய சாம்ராஜ்யத்திற்கு எதிரான முக்கியமான பிரிட்டிஷ் போர் PDF – Download here

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக –அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி – தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்.- download here

For the Evolution of 19th and 20th-century socio-political movements in Tamil Nadu PDF, Check the link for English – socio-political Movements in Tamil Nadu.- download here

காலனியத்துக்கு எதிரான இயக்கஙகளும் தேசியத்தின் தோற்றமும் – Download here

For Early Uprising Against British Rule PDF in English, Click here – 





Download here





Early Uprising Against British Rule TNPSC PDF in Tamil, Click here – Download here

இந்திய தேசிய இயக்கத்தின் காந்திய கட்டம் – Download here

The Gandhian phase of Indian national movement PDF in English, Check the link – Download here

The Gandhian phase of Indian national movement PDF in Tamil, Check the link –





 Download here






சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – Download here

The complete Study material for History(New) Tamil PDF – Download here

Complied Indian History (NEW) Tamil PDF Group 1 and Group 2 Exam – இந்திய வரலாறு 


Indian History – Ancient India Notes PDF – Download here

Indian History – Medival India Notes PDF – Download here

Modern India Notes PDF – Download here

Social and Religious Reform Movements in the 19th Century PDF  – Social and Religious Reform Movements in India- 





download here




Role of Tamil Nadu in Freedom Struggle – Download here

Tamil Nadu History Notes PDF – Download here


TNPSC INDIAN HISTORY QUESTION AND ANSWERS

Indian History Question and Answers Part 1 – Download here

Indian History Question and Answers Part 2 – Download here

Model Question papers History Part 3 –





 Download here





Model Question papers History Part 4 – Download here




Read More »

TNPSC MATERIAL:இந்திய வரலாறு, புவியியல், குடிமையியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் - வினாக்களும், விடைகளும்!

இந்திய வரலாறு, புவியியல், குடிமையியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் - வினாக்களும், விடைகளும்!



இந்திய வரலாறு, புவியியல், குடிமையியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம் - வினாக்களும், விடைகளும்!-














Read More »

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIAL

Wednesday 25 May 2022

1. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப்படும் வளங்கள் - *உள்ளூர் வளங்கள்(எ.கா -கனிமங்கள் )*


2. வெப்ப மண்டல மழை காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது  - *உலகின் பெரும் மருந்தகம்*

3. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலி மலையில் உள்ள சரணாலயம்- *மயில்களுக்கான சரணாலயம்*

4.முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் - *இமாம்பசந்த்*

5. இந்த கங்கை நதி புறத்து கோதுமை பண்டம் என்று பாடியவர் *பாரதியார்*


6. ஆலமரம் தேசிய மரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1950*

7. மயில் தேசியப் பறவையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1963*



8. கங்கையாறு தேசிய ஆறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *2008*

9. தாமரை மலர் தேசிய மலராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு- *1950*

10. புலி தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *1973*

11. மாம்பழம் தேசிய பழமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு- *1950*

12. தமிழகத்தின் மாநில விலங்கு - *வரையாடு*

13. தமிழகத்தின் மாநிலப் பறவை - *மரகத புறா*

14. தமிழகத்தின் மாநில மலர்- *செங்காந்தள் மலர்*

15. தமிழகத்தின் மாநில மரம் - *பனை மரம்*






16. தேசியக் கொடியின் நீள அகல விகிதம் *3:2*


17. இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர்- *பிங்காலி வெங்கையா(ஆந்திரா )*

18.விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி தமிழ்நாட்டில் எங்கு நெய்யப்பட்டது  - *குடியாத்தம் (வேலூர் மாவட்டம்)* 


19. இந்தியாவின் தேசிய இலச்சினையாக  நான்முக சிங்கம்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - *ஜனவரி 26  1950* 


20. தேசிய கீதம் முதன்முதலாக பாடப்பட்ட ஆண்டு  - *1911,  டிசம்பர் 27*



Read More »

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIAL

1. ஒரு நிலப்பகுதியை அரசனும் வல்லது அரசு ஆள்வது *முடியாட்சி*

2. மகதத்தை ஆண்ட அரச வம்சங்கள் ஆரியங்கா வம்சம் இக்ஷ்வாகு வம்சம் நத்தம் வம்சம்  மகதத்தை ஆண்ட அரச வம்சங்கள்- *ஆரியங்கா வம்சம்,  சிசுநாக வம்சம், நத்த வம்சம், மௌரிய வம்சம்*

3. மௌரிய பேரரசின் தலைநகரம்- *பாடலிபுத்திரம்(பாட்னா தற்போதைய )*

4. மௌரியப் பேரரசின் தலைவருமான பாடலிபுத்திர நகரத்திற்கு -    *64 நுழைவாயிலும்,  570 கண்காணிப்பு கோபுரங்களும் இருந்தன.* 

5. தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர்  - *அசோகர்* 

6. தேவனாம் பிரியர் என்பதன் பொருள் - *கடவுளுக்கு பிரியமானவன்*

7. அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார் என்று கூறியவர்- *H.G. வெல்ஸ்* 








8. அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர் ஆல் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம்  - *பேராணை*

9.ராஜ கிரகத்தின் தற்போதைய பெயர் - *ராஜகீர்* 


10. பாடலிபுத்திரத்தின் தற்போதைய பெயர் - *பாட்னா* 

11. கலிங்காவின்  தற்போதைய பெயர்- *ஒடிசா*

12. நீர்வளம்,  மரங்கள் காடுகள்,  காட்டு சூழல்,  ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள்-  *யக்சன்*
Read More »

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIALS

Tuesday 24 May 2022

1.புத்தரின் போதனைகள் இவ்வாறு குறிப்பிடப் படுகின்றன - *தம்மா*  

2. பௌத்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்  - *பிட்சுக்கள்*

3. பௌத்தக் கோயில் அல்லது தியானம் கூடம் எவ்வாறு அழைக்கப்பட்டது -- *சைத்தியம்* 

4. மடாலயங்கள் அல்லது துறவிகள் வாழ்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது  - *விகாரைகள்*

5. புத்தருடைய உடலுறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம் - *ஸ்தூபி*

6. முதல்  பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்- *ராஜகிருகம்*










7. இரண்டாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் - *வைசாலி*

8. மூன்றாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் - *பாடலிபுத்திரம்*

9. நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் - *காஷ்மீர்*

10. ஹீனயானம் இவ்வாறு அழைக்கப்படுகிறது - *தேரவாதம்*





Read More »

2074 காலியிடங்களுக்கான SSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

Monday 23 May 2022

ssc.jpg?w=360&dpr=3


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். Phase-X/2022/Section Posts

தேர்வு பெயர்: SSC Selection Post Exam- 2022

மொத்த காலிடங்கள்: 2074

பணி: MTS

பணி: Fieldman

பணி: Junior Scientific Officer

பணி: Fertilizer Inspector

பணி: Junior Geological Assistant

பணி: Data Entry Operation

பணி: Chargeman

பணி: Technical Officer

பணி: Pharmacist

பணி: Nursing Assistant

பணி: Account Clerks

பணி: Farm Assistant

பணி: Cleaner

பணி: Radio Technician

பணி: Canteen Assistant

பணி: Mechanic

பணி: Electrician

பணி: Welder

பணி: Medical Assistant

பணி: Library Assistant

பணி: Seed Analyst

பணி: Sub Editor

பணி: Staff Car Driver

பணி: Head Clerk

பணி: Caretaker

சம்பளம்: 7 ஆவது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவாரியான தகுதி குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும் 

வயதுவரம்பு: பத்தாம் வகுப்பு அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 25க்குள்ளும், பிளஸ் 2 அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 27க்குள்ளும், பட்டபடிப்பு தகுதியலான பணிகளுக்கு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: 2022 ஆகஸ்ட்

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக, விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2022

 


Read More »
 

Most Reading

Tags

Sidebar One