Search

பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வங்கியில் 2,000 அதிகாரி காலி பணியிடங்கள் கடைசி நாள்: 22.04.2019

Saturday 13 April 2019



வங்கி என்றவுடனே நினைவுக்கு வருவது பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ.,தான். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத ஸ்டேட் வங்கி இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே இம்பீரியல் வங்கி என்ற பெயரில் இயங்கி வந்தது.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயர் மாற்றம் கண்டு இந்தியாவின் முன்னோடி வங்கியாக இது செயல்படத்துவங்கி இன்று வரை சிறப்புடன் இயங்கி வருகிறது.
முற்றிலும் நவீனமய வங்கிச் சேவைகள், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளைகள் என்று இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 2000 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 2019 ஏப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 1989 ஏப்., 2க்குப் பின்னரும், 1998 ஏப்., 1க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது பட்டப் படிப்பின் இறுதி செமஸ்டரை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: அப்ஜெக்டிவ் வகையிலான பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல், மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ஸ்டேட் வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.750/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2019 ஏப்., 22

விபரங்களுக்கு: www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf
Read More »

பி.எஸ்சி., படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை


நேஷனல் கவுன்சில் பார் எஜூகேஷனல் ரிசர்ச் அண்டு டிரெய்னிங் எனப்படும் என்.சி.இ.ஆர்.டி., 1961ல் இந்திய அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி அமைப்பு பள்ளிப்படிப்பு தொடர்புடைய கல்வி சார்ந்த நிறுவனமாகும். பள்ளிப்படிப்பில் தேவைப்படும் மாற்றங்களை அவ்வப்போது நடைமுறைப்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த கல்வி அமைப்பில் லேப் அசிஸ்டென்டில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் லேப் அசிஸ்டென்ட் காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.எஸ்சி., பட்டப் படிப்பை இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணிதத்தில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : ஸ்கில் டெஸ்ட் வாயிலாக தேர்ச்சி இருக்கும். ஸ்கில் டெஸ்டிற்கு செல்லும் போது ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் செல்ல வேண்டும்.

தேர்வு மையம் : Board Room, 1st Floor, Janaki Ammal Khand, NCERT, New Delhi.

தேர்வு நாள் : இயற்பியலுக்கு 25.4.2019, வேதியியலுக்கு 24.4.2019, உயிரியலுக்கு 23.4.2019 மற்றும் கணிதத்துக்கு 22.4.2019

விபரங்களுக்கு: www.ncert.nic.in/announcements/vacancies/pdf_files/desm_1april.pdf
Read More »

ஏழாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வாய்ப்பு


தமிழகத்தின் நாமக்கல் முக்கியமான மாவட்டங்களுள் ஒன்று. கைத்தறி மற்றும் இதர தொழில் துறை நகரான நாமக்கல்லில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. பெருமைக்குரிய இந்த நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 57 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 4, சீனியர் பெய்லியில் 1, ஜூனியர் பெய்லியில் 10, டிரைவரில் 1, ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டரில் 7, ஆபிஸ் அசிஸ்டென்டில் 11, மசால்சியில் 6, நைட் வாட்ச்மேனில் 10, ஸ்வீப்பரில் 4, சானிட்டரி ஒர்க்கரில் 3ம் சேர்த்து மொத்தம் 57 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பதவிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். சீனியர் பெய்லி, ஜூனியர் பெய்லி பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். டிரைவர் பிரிவுக்கு ஏழாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டருக்கு பத்தாம் வகுப்பும், ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏழாம் வகுப்பும், மசால்சி, நைட் வாட்ச்மேன், ஸ்வீப்பர், சானிட்டரி ஒர்க்கர் ஆகிய பிரிவுகளுக்கு தமிழில் எழுதப் படிக்கும் திறமையும் தேவை. முழுமையான தேவைகளை இணையதளத்தில் அறிந்து அதன்படி விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை இணையதளத்தில் கேட்டபடி இணைத்து விண்ணப்பிக்கவும்.

The Principal District Judge, Principal District Court, Namakkal 637 003

கடைசி நாள்: 2019 ஏப்., 29.

விபரங்களுக்கு: https://districts.ecourts.gov.in/india/tn/namakkal/recruit
Read More »
 

Most Reading

Tags

Sidebar One