Search

பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வங்கியில் 2,000 அதிகாரி காலி பணியிடங்கள் கடைசி நாள்: 22.04.2019

Saturday 13 April 2019



வங்கி என்றவுடனே நினைவுக்கு வருவது பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ.,தான். இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத ஸ்டேட் வங்கி இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே இம்பீரியல் வங்கி என்ற பெயரில் இயங்கி வந்தது.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயர் மாற்றம் கண்டு இந்தியாவின் முன்னோடி வங்கியாக இது செயல்படத்துவங்கி இன்று வரை சிறப்புடன் இயங்கி வருகிறது.
முற்றிலும் நவீனமய வங்கிச் சேவைகள், நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளைகள் என்று இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 2000 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 2019 ஏப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 1989 ஏப்., 2க்குப் பின்னரும், 1998 ஏப்., 1க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது பட்டப் படிப்பின் இறுதி செமஸ்டரை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: அப்ஜெக்டிவ் வகையிலான பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல், மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ஸ்டேட் வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.750/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2019 ஏப்., 22

விபரங்களுக்கு: www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf
Read More »

பி.எஸ்சி., படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை


நேஷனல் கவுன்சில் பார் எஜூகேஷனல் ரிசர்ச் அண்டு டிரெய்னிங் எனப்படும் என்.சி.இ.ஆர்.டி., 1961ல் இந்திய அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி அமைப்பு பள்ளிப்படிப்பு தொடர்புடைய கல்வி சார்ந்த நிறுவனமாகும். பள்ளிப்படிப்பில் தேவைப்படும் மாற்றங்களை அவ்வப்போது நடைமுறைப்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த கல்வி அமைப்பில் லேப் அசிஸ்டென்டில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் லேப் அசிஸ்டென்ட் காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.எஸ்சி., பட்டப் படிப்பை இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணிதத்தில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : ஸ்கில் டெஸ்ட் வாயிலாக தேர்ச்சி இருக்கும். ஸ்கில் டெஸ்டிற்கு செல்லும் போது ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் செல்ல வேண்டும்.

தேர்வு மையம் : Board Room, 1st Floor, Janaki Ammal Khand, NCERT, New Delhi.

தேர்வு நாள் : இயற்பியலுக்கு 25.4.2019, வேதியியலுக்கு 24.4.2019, உயிரியலுக்கு 23.4.2019 மற்றும் கணிதத்துக்கு 22.4.2019

விபரங்களுக்கு: www.ncert.nic.in/announcements/vacancies/pdf_files/desm_1april.pdf
Read More »

ஏழாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வாய்ப்பு


தமிழகத்தின் நாமக்கல் முக்கியமான மாவட்டங்களுள் ஒன்று. கைத்தறி மற்றும் இதர தொழில் துறை நகரான நாமக்கல்லில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. பெருமைக்குரிய இந்த நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 57 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 4, சீனியர் பெய்லியில் 1, ஜூனியர் பெய்லியில் 10, டிரைவரில் 1, ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டரில் 7, ஆபிஸ் அசிஸ்டென்டில் 11, மசால்சியில் 6, நைட் வாட்ச்மேனில் 10, ஸ்வீப்பரில் 4, சானிட்டரி ஒர்க்கரில் 3ம் சேர்த்து மொத்தம் 57 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பதவிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். சீனியர் பெய்லி, ஜூனியர் பெய்லி பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். டிரைவர் பிரிவுக்கு ஏழாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டருக்கு பத்தாம் வகுப்பும், ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏழாம் வகுப்பும், மசால்சி, நைட் வாட்ச்மேன், ஸ்வீப்பர், சானிட்டரி ஒர்க்கர் ஆகிய பிரிவுகளுக்கு தமிழில் எழுதப் படிக்கும் திறமையும் தேவை. முழுமையான தேவைகளை இணையதளத்தில் அறிந்து அதன்படி விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை இணையதளத்தில் கேட்டபடி இணைத்து விண்ணப்பிக்கவும்.

The Principal District Judge, Principal District Court, Namakkal 637 003

கடைசி நாள்: 2019 ஏப்., 29.

விபரங்களுக்கு: https://districts.ecourts.gov.in/india/tn/namakkal/recruit
Read More »

டிகிரி படித்தவர்களுக்கு கரூர் வைசியா வங்கியில் வேலை வேண்டுமா..? விண்ணப்பங்கள் வரவேற்பு

Monday 8 April 2019


கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: CHIEF FINANCIAL OFFICER - GENERAL MANAGER (Scale VII)
தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28.02.2019 தேதியின்படி 50 - 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: CHIEF TECHNOLOGY OFFICER
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


பணி அனுபவம்: குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.kvbsmart.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/Norms_20190312.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019
Read More »

ரூ.65,500 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை..!

Thursday 4 April 2019


நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 57 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
பணி மற்றும் காலியிடங்கள் விபரம்: 
பணி: கணினி இயக்குபவர் - 04 
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500

பணி: இரவு நேரக் காப்பாளர் - 10 
பணி: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 07 
பணி: ஓட்டுநர் - 01 
பணி: சமையலர் - 06 
பணி: துப்புரவுப் பணியாளர் - 04 
பணி: சுகாதார பணியாளர் - 03 
பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10 
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 62,00
தகுதி: கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை:https://districts.ecourts.gov.in/india/tn/namakkal என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாமக்கல் - 637003 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.04.2019 
மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment_Civil%20-%20Notification%20-%20Tamil_01-04-2019 pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
Read More »

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், சிறப்பு அதிகாரி உள்ளிட்ட 496 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 496 

நிர்வாகம்: மத்திய ஆயுத காவல் படை (சிஆர்பிஎஃப்) 
பணி: மருத்துவ அதிகாரி - 317 
பணி: ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி - 175 
பணி: சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி - 04 
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், எம்எஸ், எம்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
பணி அனுபவம்: 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை:www.crpf.gov.in அல்லது www.recrultment.ltbpolice.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2019 
Read More »

இது புதிய அறிவிப்பு... எஸ்பிஐ வங்கியில் 2000 அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

வங்கி சேவைகளில் முதன்மை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 2000 புரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்தும் மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியே தனது இலக்காக கொண்டுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறவும்.

பணியிடம்: நாடு முழுவதும்

பணி: Probationary Officer


காலியிடங்கள்: 2000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ. 23700-980/7-30560-1145/2-32850-1310/7-42020

வயது வரம்பு: 01.04.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers  என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் தகவல் அளிப்பு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.04.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One