Search

10ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்குவதில்‌ சிக்கல்‌ - தலைமை ஆசிரியர்கள்‌ தவிப்பு

Wednesday 17 June 2020

பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ கணக்‌கிட காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்‌ ஏற்‌ கனவே மாணவர்களிடம்‌ ஓப்படைக்கப்பட்டதால்‌ அதை சிஇஓ அலுவலகத்‌ துக்கு அனுப்ப முடியாமல்‌ பல பள்ளிகளின்‌ தலை மையாசிரியர்கள்‌ குழப்‌ பத்தில்‌ உள்ளனர்‌.

கொரோனா தொற்று பரவுவதை அடுத்து கடந்த மார்ச்‌ மாதம்‌ முதல்‌ ஊர டங்கு அமல்படுத்தப்‌ பட்டதால்‌, தமிழகத்தில்‌ அனைத்து பள்ளிகளும்‌ மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, ஒத்தி வைக்கப்பட்ட 10 மற்‌ அம்‌ பிளஸ்‌ 1 வகுப்புக ளுக்கான தேர்வுகளை முற்றிலும்‌ ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.

இந்த இரண்டு தேர்‌ வுகளிலும்‌ மாணவர்கள்‌ தேர்ச்சி பெற்றதாக அறி விக்கப்படும்போது அந்த மாணவர்கள்‌ காலாண்டு, அரையாண்டு தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்‌ களில்‌ 80 சதவீதம்‌, வருகைப்‌ பதி வுக்கு 20 சதவீதம்‌ என்று கணக்கிட்டு மொத்தம்‌ 100 மதிப்பெண்கள்‌ வழங்கப்‌படும்‌ என்று அரசு அறி வித்தது.

இந்நிலையில்‌ மாணவர்‌ களின்‌ வருகைபதிவு மற்றும்‌ காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ பட்டியல்‌ (ரேங்க்‌ அட்டை) ஆகிய வற்றை வரும்‌ 27ம்‌ தேதிக்‌ குள்‌ அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலு வலகத்துக்கு அனுப்பி வைக்கும்‌ படி அந்தந்த பள்ளி தலைமையாசிரி யர்களுக்கு உத்தரவிடப்‌ பட்டுள்ளது.

இந்நிலையில்‌ காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள்‌, அந்தந்த காலத்தில்‌ மாணவர்களி டமேஒப்படைக்கப்பட்ட தால்‌ விடைத்தாள்களை சேகரிப்பது கடினம்‌. இதனால்‌ பல பள்ளிகளின்‌ தலைமையாசிரியர்‌ கள்‌ என்ன செய்வது என்று தெரியாமல்‌ குழப்பத்தில்‌ உள்ளனர்‌. எனவே ரேங்க்‌ அட்‌ டையில்‌ உள்ள மதிப்‌ பெண்‌ பட்டியல்‌ படி கணக்கிட வேண்டும்‌ என வலியுறுத்தியுள்ளனர்‌.
Read More »

LKG முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் பாடங்களுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது: ஈரோடு CEO எச்சரிக்கை

Read More »

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்

Read More »

ரத்தான 10ம் வகுப்பு தேர்வுக்கு மதிப்பெண் வழங்கும் பணி துவக்கம்

தேர்வு ரத்து செய்யப்பட்ட, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, மதிப்பெண் வழங்கும் பணி,நேற்று துவங்கியது. வரும், 22ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 15ல் நடப்பதாக இருந்து, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 1ல், ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான பாடங்களில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.இதற்கான பணிகள், நேற்று அனைத்து பள்ளிகளிலும் துவங்கின.ரத்தான தேர்வை எழுதவிருந்த, அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களையும், அதனுடன் மாணவர்களுக்கான பள்ளி தேர்ச்சி அறிக்கையையும் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிலுள்ள மதிப்பெண்களை ஒப்பிட்டு, பள்ளி வாரியாக, வகுப்பு வாரியாக மாணவர்களின்மதிப்பெண் களை பட்டியலிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இப்பணிகள், நேற்று துவங்கின. ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரும், 22ம்தேதிக்குள், இந்த பணிகளை முடித்து, பட்டியலை தாக்கல் செய்ய, அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தேர்ச்சி அறிக்கைக்கு என்ன செய்வது?மாணவரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களுடன், அந்தந்த மாணவரின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் முன்னேற்ற அறிக்கையை இணைக்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்வுக்கும், தேர்ச்சி அறிக்கையை, பெற்றோரிடம் காண்பித்து, அதில் கையெழுத்து பெறுவர். ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில், இந்த நடைமுறை இல்லை; விடைத்தாள்களை பாதுகாப்பதும் இல்லை. தேர்ச்சி மற்றும் முன்னேற்ற அறிக்கையான, 'பிராக்ரஸ் கார்டு' வழங்கப்படுவதும் இல்லை.அதனால், இந்த உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என, அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

நிலைமையை சரிக்கட்ட, அவசரமாக புதிய அட்டைகள் அச்சடித்து, அதில் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதில், பல மாணவர்களுக்கு கூடுதல், குறைவு என, மதிப்பெண் வழங்கவும்வாய்ப்புள்ளதாக, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
Read More »

10th , 11 th Public Exam 2020 - விடைத்தாள் சேகரிப்பு மற்றும் ஒப்படைப்பு தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

மார்ச் / ஏப்ரல் -2020 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான இரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்குரிய காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாட்களை பெறுதல் தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது.

10 மற்றும் 11 ம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்குறிய விடைத்தாட்கள் சேகரிப்பு தொடர்பாக மாணவர்களையோ அல்லது மாணவர்களது பெற்றோர்களையோ எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது.

மேலும் விடைத்தாள் சேகரிப்பு பணிகளுக்கோ ஒப்படைக்கும் பணிகளுக்கோ மாணவர்களையோ , அவர்களது பெற்றோர்களையோ பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Read More »

ரத்தான 10ம் வகுப்பு தேர்வுக்கு மதிப்பெண் வழங்கும் பணி துவக்கம்

தேர்வு ரத்து செய்யப்பட்ட, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, மதிப்பெண் வழங்கும் பணி,நேற்று துவங்கியது. வரும், 22ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 15ல் நடப்பதாக இருந்து, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 1ல், ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான பாடங்களில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.இதற்கான பணிகள், நேற்று அனைத்து பள்ளிகளிலும் துவங்கின.ரத்தான தேர்வை எழுதவிருந்த, அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களையும், அதனுடன் மாணவர்களுக்கான பள்ளி தேர்ச்சி அறிக்கையையும் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிலுள்ள மதிப்பெண்களை ஒப்பிட்டு, பள்ளி வாரியாக, வகுப்பு வாரியாக மாணவர்களின்மதிப்பெண் களை பட்டியலிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இப்பணிகள், நேற்று துவங்கின. ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரும், 22ம்தேதிக்குள், இந்த பணிகளை முடித்து, பட்டியலை தாக்கல் செய்ய, அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தேர்ச்சி அறிக்கைக்கு என்ன செய்வது?மாணவரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களுடன், அந்தந்த மாணவரின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண் முன்னேற்ற அறிக்கையை இணைக்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்வுக்கும், தேர்ச்சி அறிக்கையை, பெற்றோரிடம் காண்பித்து, அதில் கையெழுத்து பெறுவர். ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில், இந்த நடைமுறை இல்லை; விடைத்தாள்களை பாதுகாப்பதும் இல்லை. தேர்ச்சி மற்றும் முன்னேற்ற அறிக்கையான, 'பிராக்ரஸ் கார்டு' வழங்கப்படுவதும் இல்லை.அதனால், இந்த உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என, அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

நிலைமையை சரிக்கட்ட, அவசரமாக புதிய அட்டைகள் அச்சடித்து, அதில் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதில், பல மாணவர்களுக்கு கூடுதல், குறைவு என, மதிப்பெண் வழங்கவும்வாய்ப்புள்ளதாக, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
Read More »

Covid-19 தொடர்பாக 25.3.2020 முதல் பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்களின் பணிக் காலத்தை பணிக்காலமாக கருதவும் விடுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அரசாணை வெளியீடு!



Public Services - Covid 19 Pandemic - Regulation of Period of Absence of Government Employees during lockdown period - Orders Used.

GO NO : 304 , Date : 17.06.2020 Download Go...

Covid-19 தொடர்பாக 25.3.2020 முதல் பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்களின் பணிக் காலத்தை பணிக்காலமாக கருதவும் விடுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அரசாணை வெளியீடு.
Read More »

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு-மாவட்ட வாரியான விவரம் (17.06.2020)





சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1276 பேர் பாதிப்பு..!

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை 842 பேர் ..மொத்த எண்ணிக்கை       27,624 ஆக உயர்வு

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48... மொத்த எண்ணிக்கை 576 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  50,193 ஆக அதிகரிப்பு.

சுகாதாரத்துறை அறிவிப்பு
Read More »

தேசிய திறனாய்வு தேர்வு முடிவு வெளியீடு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு

தேசிய திறனாய்வு தேர்வு முடிவு வெளியீடு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு



Read More »

முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் பகுதியில் உள்ள பள்ளிகள் ஊரடங்கு முடிந்தவுடன் காலாண்டு அரையாண்டு விடைத்தாட்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர்






Read More »

நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் முதல்வர்


நீட் ஆன்லைன் பயிற்சி வகுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ  படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக  பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் பயற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன. வார இறுதி நாட்கள், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மட்டும் நீட் பயற்சி  வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மொத்தம் 27 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கியதையடுத்து கடந்த ஜனவரி  மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தப்பின்னும், நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையதள பயிற்சி  வகுப்பை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு Amphisoft Technologies நிறுவன இணையதளம் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாள்தோறும் 4 மணிநேர பயிற்சி, 4 மணிநேர பயிற்சித் தேர்வர்கள் நடத்தப்படவுள்ளன. 12-ம் வகுப்பு மாணவர்கள் 7,420 பேர் நீட் இணைய பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளனர். இலவச நீட் பயற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களில் கடந்த 2017 -  2018ம் கல்வி ஆண்டில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை. 2018 - 2019ம் ஆண்டில் 5 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »

Teachers Wanted.

TAMIL - 05
🎯MATHS - 05
🎯COMMERCE - 05

Prasanthi Vidhya Bhavan
Matric School
Chinnyampalayam
Erode.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை prasanthimhss@gmail.com , prasanthivbmhss2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9442353780 , 7904201469 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
******************************************

அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் ஆசிரியர் தேவை .

மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7708064252 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .

Aachi International School
Thoddappanaickanur
Usilampatti.
******************************************
WANTED For a Reputed CBSE School marching towards Golden Jubilee in Thooththukkudi Dist.

VICE PRINCIPAL Qualification: •5 to 10 years' experience as Vice Principal or
Co-coordinator or the Head in CBSE schools. *Age : 40 to 45 years.

•PG (Physics preferred) with B.Ed., •Experience in organizing JEE/NEET Expert program for XI & XII. • Efficient, Dynamic, Dedicated and Creative qualified candidates who may be elevated to next career level based on performance in near future, may apply with recent passport size photo & salary expectation through email.

Attach self-attested scan copies of testimonials.

PG with B.Ed.,Teachers / Wanted Sanskrit teacher having relevant qualification min 3 years teaching experience in CBSE School.

Wanted expert faculty for Mathematics, Physics, Chemistry & Biology subjects. Qualified candidates with a minimum of 5 plus years' experience in CBSE Teaching (Sr.Secondary) and NEET-IIT/JEE.

Attractive pay & perks. Email latest CV to principal@khsse.com on or before 24.06.2020.
******************************************

ASSISTANT PROFESSORS

P.G with M.Ed, 55% marks, Ph.0, desirable)

• LIBRARIAN : M.Lis.,

• Hostel Warden : Degree

• Accountant/Computer staff/clerk : Degree with experience.

• Farmers Club, Youth Club Organizer for FPO: +2 and above with Experience.

 Contact

Chairman St. Joseph College of Education Kalakad Road, Via-Nanguneri,
Tirunelveli Dist - 627108

E-mail : stjosephcedu@gmail.com Mobile : 8012111099, 9487150426
Website : stjosephcedu.org
Read More »
 

Most Reading

Tags

Sidebar One