Search

EBox NEET Weekly and Daily schedule - School Education Published.

Wednesday 27 May 2020



IMG_20200527_195307

We wish to inform that the Department of School Education in association with Amphisoft Technologies E - box will be offering the Free NEET Online Crash Course to Government and Government Aided Schools students registered for NEET 2020 examination.


EBox NEET Weekly and Daily schedule - Download here...


This course will be offered for both English Medium and Tamil Medium students. Moreover Amphisoft's technology enabled learning platform E - Box is used by all top Higher Education Universities and Colleges in India to drive practice oriented systematic learning. MHRD and AICTE have recently recognized and endorsed E Box as a comprehensive learning and assessment platform. In the reference letter cited it is informed that this Cost - Free NEET Online Crash Course will be a well - structured , activity driven program delivered by the experts in the field. Students enrolled in this Crash Course will solve around 6500+ Questions covering all concepts in Physics , Chemistry , Botany and Zoology.


The course will cover the following activities :
1. 80 Chapter wise Practice Tests
2. 80 Formative Tests
3. 5 Unit Tests
4. 2 Half Portion Tests
5. 10 Full Portion Tests


Moreover it is informed that the training comprises of 4hours of video lectures and 4 hours of practice tests and formative tests as given in the attached detailed schedule . The videos of classes taken by subject matter experts available with us shall be used for this program. Amphisoft shall offer a comprehensive intelligent dashboard to track the progress of individual students during the training program.



Registrations for this Crash Course will start from 27th May , 2020. All the Chief Educational officers are informed that students who have registered for NEET 2020 examination can register for this course in the following link :

http://app.eboxcolleges.com/neetregister

The Crash Course will commence from Monday , 15th June , 2020
IMG_20200527_194610


IMG_20200527_194639
Read More »

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை கட்டாயப்படுத்தி கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் வகுப்பறை நோக்கின் என்ற செயலியை பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன், மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வகுப்பறை நோக்கின் என்ற செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது ஏதும் சொல்வதற்கு இல்லை. தனியார் பள்ளிகள் கட்டாயமாக கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் வேளையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழு த உள்ள மாணவர்களின் உடல் நலம் தொடர்பான விவரங்களை வாங்கியுள்ளோம். தேர்வு எழுதும் மணவர்கள் அனைவருக்கும் முகக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் யாராவது வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் இருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டம் குறைப்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்பவில்லை. அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு பரிந்துரை கொடுத்த பிறகு பாடத்திட்டம் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.


தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. அதற்கான நபரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரங்கள் ஏதும் வரவில்லை. மாணவர்களுக்கு அதுபோல இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக ஆன் லைனில் பாடம் நடத்தக் கூடாது என அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் பின்னர், ஆன்லைனில் வகுப்பு நடத்துவதை யாரும் தடுக்க முடியாது. ஜூம் ஆப்பில் வைத்து நடத்துவது நல்லது என்றார்.
Read More »

பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிக்கிறது: உள்துறை அமைச்சகம் தகவல்

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமாகி வருவதால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதில் சந்தேகம் நிலவுகிறது.

இந்நிலையில், மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. தமிழகத்தில் கூட ஆகஸ்ட்டில் கல்வி நிலையங்களை திறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பதற்கு தடை நீடிக்கிறது,' என்றார்.
Read More »

Phonics All Sounds - Pdf

Read More »

நடப்பு கல்வி ஆண்டில் பாட அளவை குறைக்க திட்டம் - வேலைநாட்கள் எண்ணிக்கையில் சிக்கலை தவிர்க்க நடவடிக்கை

Read More »

மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்பு எடுக்க தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது- அமைச்சர் செங்கோட்டையன்.



*ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை.


*ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

*பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்.



*பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பு

*குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்


Updated News -  தனியார் பள்ளிகள் இணைய வழி வகுப்புகள் எடுக்க தடை இல்லை. ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் எடுக்க கூடாது - அமைச்சர் விளக்கம்..

Read More »

பள்ளி திறக்கும் முன் என்ன செய்ய வேண்டும்?

Read More »

பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக அரசு சார்பில் வல்லுநர் குழு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலிலிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது எனவும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.


மேலும் அவர், பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்புக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Read More »

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்றுதுவக்கம்; ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு ஏற்பாடு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணிகள் இன்று(மே 27) துவங்கும் நிலையில், திருத்தும் மையங்களில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளின் பட்டியலை ஒட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச்சில் முடிந்தன. விடைத்தாள்கள், கட்டுக்காப்பு மையங்களில், இரண்டு மாதங்களாக, போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விடைத்தாள் திருத்த பணிகள், இன்று துவங்க உள்ளன. ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், திருத்தும் பணிகளை திட்டமிட்டபடி துவங்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.திருத்தும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை என்றால், கல்வி துறையின் சார்பில் கார் அனுப்பி, அவர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 44 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.

அனைத்து ஆசிரியர்களுக்கும், திருத்தும் மையங்களில், முகக் கவசம் இலவசமாக வழங்கப்படும். மையங்களில் சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மேலும், ஒவ்வொரு மையங்களிலும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு யார் வாயிலாவது, கொரோனா பரவாமல் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அருகில் உள்ள, கொரோனா வுக்கு சிகிச்சை தரும் மருத்துவமனைகளின் முகவரி, தொலைபேசி எண், சுகாதாரத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட பட்டியலை, பள்ளிகளில் ஒட்டிவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.திருத்தும் மையங்களில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக் கவசம் இன்றி பணியில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிடுக்கிப்பிடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன
Read More »

GPF இறுதி கணக்கு முடித்தல் (Final Closure) முன்னதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்


அரசு ஊழியர்கள் GPF இறுதி கணக்கு முடித்தல் (Final Closure) - ஓய்வு பெறும் 4 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு.

GPF New Instructions - Download here
Read More »

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு : பாட அளவை குறைக்க திட்டம்

கொரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காலதாமதத்தின் காரணமாக வழக்கமாக பாடங்களை நடத்தி முடித்து உரிய காலத்தில் தேர்வுகள் வைக்கும் நடைமுறை வரும் கல்வியாண்டில் சவாலானதாக இருக்கும்.


இத்தகைய சூழலில் தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை கடைபிடிக்கப்பட்டு வரும் முப்பருவ முறையில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள முப்பருவ பாடமுறையில் 1 பருவ பாடத்தை கைவிடுவது என பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.


அதேபோன்று வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கை அதிகம். ஏற்கனவே புதிய பாடத்திட்ட அடிப்படையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடச் சுமை அதிகமாக இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர் குறைக்கவும் கோரிக்கை வைக்கின்றனர்.இந்த சூழலில் குறுகிய நாட்களுக்குள் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டி உள்ளதால் முழுமையாக பாடங்களை நடத்தி முடிப்பது பெரும் சிரமம். இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கொரோனா தாக்கத்தால் தற்போது பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஏற்ப்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Read More »
 

Most Reading

Tags

Sidebar One