Search

குரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழ் முக்கிய குறிப்புகள்

Thursday 6 September 2018



* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
* மதுரை என்பது - இடப் பெயர்
* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்
* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து
* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்
* நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
* மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
* மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
* பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
* மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
* மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
* மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
* சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
* முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
* இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
* நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் - பம்மல் சம்பந்தனார்
* மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
* தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
* தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
* உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
* உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது - கலீலியோ
* "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
* உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
* ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
* திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
* திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
* உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
* நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.17
* அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
* தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன - புராணக்கதைகள்
* குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
* ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
* மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் - மகோந்திரவர்ம பல்லவன்
* மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் - கி.பி. 7
* நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
* தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
* கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது - அடியார்க்கு நல்லார்
* நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
* மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
* அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
* நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் - 72
* சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
* அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது - முதுமொழிக்காஞ்சி
* முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 100
* மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
* நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் - மோசிக்கீரனார்
* முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
* கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
* மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
* வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
* "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
* "பால் பற்றி செல்லா விடுதலும்" என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
* காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
* சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
* ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
* ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு -இங்கிலாந்து
* ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் - 0
Read More »

செப்டம்பர் முதல் வார நடப்பு நிகழ்வுகள்(sep 1-5)
🙏4வது பிம்ஸ்டெக் மாநாடு_நேபாளம்(காத்மண்ட்).
🙏கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை_2016nov8.
🙏ஸ்டெர்லைட் ஆலை விசாரணைக்குழுவின் தற்போதைய தலைவர்_தருண் அகர்வால்
🙏ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35 (a) பிரிவை குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இணைத்த ஆண்டு 1954.
🙏செப்டம்பர் 1 அஞ்சலக பேமெண்ட் வங்கி தொடக்கம்.
🙏கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி _சுந்தர் பிச்சை.
🙏21 ஆவது சட்ட ஆணையத்தின் தலைவர் _ps சவுகான்.
🙏பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர் _நந்த் கிஷோர் சிங். இந்தக் குழுவின் பரிந்துரை 2020 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது .
🙏2009 _ தேசிய உயிரி எரிபொருள் கொள்கை உருவாக்கப்பட்டது.
🙏பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு- 2002.
🙏ஏழைகள் ரதம் என்னும் ரயில் சேவை சென்னை முதல் டெல்லி வரை தொடங்கப்பட்ட ஆண்டு- 2000.
🙏உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நபர் _ரஞ்சன் கோகாய் (அசாம்).
🙏சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர்- தாமஸ் பார்க்.
🙏வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 71% அதிகரித்துள்ளது.
🙏சைப்ரஸ் அதிபர்- நிகோலஸ் அனஸ்டாசியாசிஸ்
🙏ஸ்பெயின் பிரதமர்- பெற்றோசாசஸ்.
🙏சமீபத்தில் பள்ளிகளில் செல்லிடப்பேசி களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றி உள்ள நாடு- பிரான்ஸ்.
🙏எலி காய்ச்சலை உறுதி செய்ய உதவும் முக்கியமான பரிசோதனை_MAT (மைக்ரோசாப்ட் akulsanation டெஸ்ட்.)
🙏ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயன் அடைந்த முதல் நபர்- கரிஸ்மா (ஹரியானா).
🙏மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த தமிழகம் முழுவதும் 500 பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன அதன் பெயர் -அடல் டிங்கர் லேப்.
🙏தமிழகத்தில் அஞ்சல் கட்டணம் வங்கி சேவையை தொடங்கி வைத்தவர் -நிர்மலா சீதாராமன்.
🙏உயிரி எரிபொருள் தேசிய கொள்கை 2018 மத்திய அரசு ஒப்புதல் அளித்த மாதம் -மே.
🙏Moving on moving forward a fire in office என்ற புத்தகத்தை எழுதியவர் -வெங்கையா நாயுடு.
🙏52 ஆவது உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி தென் கொரியாவில் தொடங்க உள்ளது.
🙏சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் கொண்ட சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படும் என்று புதிய சட்டம் கொண்டு வந்த நாடு- எகிப்து.
🙏நியூ டைமண்ட் என்ற பெயருடைய ஈராக் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல் சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தது.
🙏தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்.
🙏தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி_ துறைமுகம் (1.64லட்சம்.)
🙏புராதான நகரம் மேம்பாட்டு திட்டம் இந்தியாவில் 12 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
🙏சமீபத்தில் எந்த நாட்டில் பள்ளிகளில் காப்பி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது- தென்கொரியா.
🙏ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
🙏ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு 2018 க்கான சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை luukamotric. என்பவருக்கு வழங்கியுள்ளது.
Read More »

குரூப்-2 தேர்விற்காக தமிழில் சில புணர்ச்சி விதிகள்



புணர்ச்சி : உயிரீறு, உடும்படுமெய், மெய்யீறு

உயிரீற்றுப் புணர்ச்சி :

பல, பலா, கனி, தீ இச்சொற்களைப் ஒலித்துப் பாருங்கள்.இச்சொற்களில் கடைசி எழுத்து உயிர்மெய் எனினும் உயிர் ஈறாகக்
கொள்ளுதல் வேண்டும்.‘பல’ இச்சொல்லில் (ல் + அ = ல) ‘அ’ உயிர் ஈறு.உயிர் ஈற்றுச் சொல்முன் வல்லின எழுத்துக்கள் வந்தால், அதன்
மெய்யெழுத்து மிகும்.

(எ.கா.)

பலா + சுளை = பலாச்சுளைபனி + போர் = பனிப்போர்தினை + துணை = தினைத்துணை

உடம்படுமெய் :  (உயிர் முன் உயிர்)

அணில், ஏணி, ஏற்றம். ஐவர், ஒளவை, இரும்பு, உண்டு, உயிர்,
ஊர்வலம், ஓடு.‘மணி’ + அடி . இங்கு மணி என்பது நிலைமொழி .இதன் ஈறு (ண் + இ) உயிர். அடி என்பது வருமொழி. அதன் முதல்
எழுத்து அ – உயிர். இவ்விரண்டும் ஒன்றாகச் சேரும்போது                  மணி + அடி = மணி + ய் + அடி = மணியடி இடையில் ‘ய்’ என்னும் மெய் தோன்றி, மணியடி என்னும் சொல்லாகிறது.பூவழகு என்னும் சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்?பூ + அழகு – ‘பூவழகு’ என வரும்.ஆனால், பூவழகு என்னும் சொல், பூ + அழகு = பூ + வ் + அழகு =
பூவழகு. இடையில் இங்கு ‘வ்’ என்னும் மெய் எழுத்துத் தோன்றுகிறது.சேவடி என்பது எவ்வாறு பிரியும்?சே + வ் + அடி – ‘சேவடி’ என வரும். இங்கே ‘வ்’ என்னும் மெய்
வந்துள்ளது.சே + அடி = சே + வ் + அடி = சேவடி, மேலும், சே + ய் + அடி =
சேயடி எனவும் வரும்.

இ, ஈ, ஐ ஆகியனமுன் உயிர்வரின் ‘ய்’ தோன்றும் :

கிளி + அலகு = கிளி + ய் + அலகு = கிளியலகு.தீ + எரிகிறது = தீ + ய் + எரிகிறது = தீயெறிகிறது.பனை + ஓலை = பனை + ய் + ஓலை = பனையோலை

அ, ஆ, உ, ஊ, ஓ முன் ‘வ்’ தோன்றும் :

குண + அழகி = குண + வ் + அழகி = குணவழகிபலா + இலை = பலா + வ் + இலை + பலாவிலைதிரு + ஆரூர் = திரு + வ் + ஆரூர் = திருவாரூர்பூ + அழகி = பூ + வ் + அழகி = பூவழகிகோ + இல் = கோ + வ் + இல் = கோவில்

ஏ முன் உயிர்வரின் ‘வ்’, ‘ய்’ இரண்டும் வரும் :

தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம்அவனே + அரசன் = அவனே + ய் + அரசன் = அவனேயரசன்ய், வ், வருவதற்குப் புணர்ச்சியில் ஏதேனும் பெயர் உண்டா?
நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழிமுதல் உயிரும்
இணையும்போது வ் அல்லது ய் இடையில் தோன்றும். இதற்கு
உடம்படுமெய் என்பது பெயர்.

இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்

– நன்னூல், 162

மெய்யீற்றுப் புணர்ச்சி :

‘நூல் + ஆடை’ என்பதனில் நூல் என்பது நிலைமொழி. ஆடை
என்பது, வருமொழி. நூல் என்னும் நிலைமொழியின் ஈறு என்ன? மெய் எழுத்து உள்ளது. அதனால் மெய்யீறு..மெய்யீற்று நிலைமொழிமுன், உயிர்முதல் வருமொழிச் சொற்கள்
வந்தால், எவ்வாறு புணரும் என்பதனைப் பாருங்கள்.அணில், ஆடை, இலை… என வரும் சொற்கள்தாமே உயிர்முதல்
மொழிகள்.பால் + ஆடை என்பதனில், பால் மெய்யீற்று நிலைமொழி முன்
ஆடை உயிர்முதல் வருமொழி சேரும்போது, மெய் (ல்) உயிரோடு
(ஆ) சேர்ந்து பாலாடை என்றாகிறது. ஏனெனில், மெய் தனித்து
இயங்காது, உயிருடன் சேர்ந்துதான் இயங்கும், இதுவே இயல்பு.

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – நன்னூல், 204

(உடல் – மெய்) இங்கு உடல் என்பது மெய்யெழுத்தைக் குறித்தது.
இதுபோல் சிலவற்றைக் கூறுங்கள்.மலர் + அடி = மலரடி. கனல் + எரி = கனலெரி. கடல் + ஓரம் =
கடலோரம்.கண், கல், பொன், மண், என்பனவும் மெய்யீற்று நிலைமொழிகளே.முன்பு சொன்ன மெய்யீறுகள் நெடிலெடுத்தும், இரண்டு முதலாகப் பல எழுத்துக்கள் சார்ந்தும் வந்தவை. குறிலடுத்து வந்த மெய்யீறுகள், இவற்றின்முன் உயிர்முதல் வருமொழி வந்தால்கண் + அழகு = கண் + ண் + அழகு = கண்ணழகு என்னுமாறு
இணையும்.

தனிக்குறில் முன்னொற் றுயிர்வரி விரட்டும் – நன்னூல், 205

கல் + அணை = கல்லணை. கண் + ஆடி = கண்ணாடி.பல் + அழகு = பல்லழகு. விண் + அரசு = விண்ணரசு.
Read More »

குரூப்-2 தேர்வுக்காக வேதியியலில் சில முக்கிய குறிப்புகள்



இரும்பின் தாது - மாக்னடைட்

பதங்கமாகும் பொருள் - கற்பூரம்

அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்

அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை

நீரில் கரையாத பொருள் - கந்தகம்

நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு

நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்

பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்

நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி

வெப்ப கடத்தாப் பொருள் - மரம்

திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்

ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு

இலேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்

ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்

கலவைப் பொருள் என்பது - பால்

கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்

கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்

தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்

கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்

மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்

கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்

மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்

அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்

பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.

சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்

ஒரு எரிபொருள் எரியத் தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை

எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்

பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா

இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

தூய்மையான நீரின் PH மதிப்பு - 7

அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு

இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான்  (ஃபோம்மைட்)

ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

வெள்ளைத் துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4

உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
Read More »
 

Most Reading

Tags

Sidebar One