Search

School Morning Prayer Activities - 24.01.2020

Thursday 23 January 2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.01.20

திருக்குறள்

அதிகாரம்:அவாவறுத்தல்

திருக்குறள்:362

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

விளக்கம்:

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

பழமொழி

Don't judge a book by its cover.

 புறத்தோற்றம் கண்டு மயங்காதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

இடியிலும் மின்னலிலும் மின்சாரம் என்ற ஆற்றல் கிடைக்கும் என்றால் நம் உழைப்பிலும் முயற்சியிலும் வெற்றியும் கிடைக்கும் ...

------ மெகல்லன்

பொது அறிவு

1.இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் யார்?

சேரன் செங்குட்டுவன்.

2.இந்தியாவின் மிக நீளமான நதி எது?

 கங்கை நதி.

English words & meanings

xylophagous - an insect feeding on wood, மரக் கட்டையை தின்று வாழ்கின்ற பூச்சி.

 Xerophyte - a plant species which grows in desert only. பாலை நிலத் தாவரம்

ஆரோக்ய வாழ்வு

சிவப்பு மற்றும் கருநீலத்தில் இருக்கும் பழங்களில் அந்தோசயனின் என்ற ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோயை தடுக்கும் தன்மை உடையது.

Some important  abbreviations for students

RAF - Royal Airforce.

Prof. - Professor

நீதிக்கதை

வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. இதோ அந்த கதை. “விஜய்ப்பூர்” என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் எல்லோருக்கும் அவர்களுக்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் அனைவருக்கும் உதவி வந்தான். இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் அவனுக்கு திருமணம் செய்தால் இக்குணம் மாறும் எனக்கருதி, சிறந்த அறிவாற்றல் மிக்க “ரமா” என்கிற பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து சில காலம் கழித்து தன் கணவன் ரகுவிடம் அவன் இதற்கு முன்பு உதவி செய்த அனைவருக்கும் அதனால் பயன் கிட்டியதா என்பதை அறிந்து வருமாறு கூறினாள். இதை கேட்டு அவர்கள் அனைவரிடமும் விசாரித்த ரகு அவர்களுக்கு தான் செய்த உதவியினால் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து வந்து ரமாவிடம் கூறினான். அப்போது ரமா, பிறருக்கு நேர்மையாக உதவுவதற்கு மருத்துவத்தொழிலைக் கற்று, அதன் மூலம் உதவுமாறு கூறினாள்.   அதைக் கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்று ரகு கூறிய போது “சந்திரநகர்” என்ற ஊரில் வைத்தியநாதன் என்ற மருத்துவரிடம் ஒரு வருடத்திலேயே மருத்துவத்தொழிலை யாரும் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, ரகுவை அவரிடம் சென்று மருத்துவம் பயிலக்கூறினாள் ரமா. ரகுவும் வைத்தியநாதனிடம் ஒரு வருடம் மாணவனாக இருந்து வைத்தியமுறைகளை கற்று தேர்ந்தான். அப்போது வைத்தியநாதன் ரகு தனது வைத்திய தொழிலை நேர்மையாக செய்யும் பட்சத்தில் தன்னிடமுள்ள அனைத்து வைத்திய குறிப்பு சுவடிகளையும் தருவதாக உறுதியளித்தார்.  பின்பு ஊருக்கு திரும்பிய அவன் தினமும் தனது வீட்டிலேயே மக்கள் அனைவருக்கும் வைத்தியம் பார்க்கத்தொடங்கினான். அப்படி ஒரு முறை ஏழை ஒருவருக்கு ரகு வைத்தியம் பார்க்கும் போது செல்வந்தர் ஒருவர் குறுக்கிட்டு தனக்கு உடனடியாக வைத்தியம் பார்க்குமாறும், அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக கூறினான். ஆனால் ரகு மறுத்துவிட்டான். மற்றொருநாள் அந்த நாட்டு மன்னரின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் அரண்மனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் படி அரசாங்க வீரர்கள் ரகுவை அழைத்தனர். தான் அரண்மனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் இங்கிருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதால் மன்னரின் தாயாரை தனது வீட்டிற்கு அழைத்துவந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி விட்டான்.   இதையெல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்த துறவி ஒருவர் கவனித்து ரகுவை பாராட்டி ஆசிர்வதித்தார். அதோடு சந்திராநகர் சென்று, அவரது குருவிடம் மீதமிருக்கும் மருத்துவ ஓலைகளை வாங்கிவந்து அதன் மூலம் மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ரகுவிடம் அடிக்கடி கூறிவந்தார். ரகுவும் ஒவ்வொருமுறையும் அங்கு செல்ல காலம் தாழ்த்தி வந்தான். ரகுவை அந்த சுவடிகளை வாங்கி வர ஒருநாள் அவன் மனைவி ரமாவே தனக்கு உடல் நலம் சரியில்லாது போலும், அவள் கணவணான ரகு தரும் எம்மருந்துகளை உட்கொண்டாலும் அவள் குணமாகாத மாதிரி நடித்தாள். இதனால் வேறு வழியின்றி ரகு தனது குரு வைத்தியநாதனிடம் சென்று ஓலைகளை வாங்கிவந்து, மருந்து தயாரித்து அதை ரமாவிற்கு கொடுத்தான். அவளும் அதை உண்டு குணமடைந்தது போல் நடித்தாள். இப்போது வேதாளம் “விக்ரமாதித்தியா ரகுவின் சுயநலத்தைப் பார்.

பிறருக்கு சிகிச்சை அளிக்க தன் குருவிடம் சுவடிகளை வாங்கச் செல்லாதவன், தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் ஓலைகளைப் பெற்றது சரியா? மேலும் நேர்மையாக மருத்துவ தொழிலை நடத்தினால் ஓலைச்சுவடிகளை தருவதாக கூறிய வைத்தியநாதன் எப்படி ரகுவிற்கு உடனே சுவடிகளைக் கொடுத்தார்? “எனக் கேட்டது “ரகு சந்திராநகரில் இருக்கும் தன் குருவிடம் செல்லும் காலத்தில், தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளிப்பதில் தடங்கல் ஏற்படும் என்றே அவரிடம் செல்ல காலம் தாழ்த்திவந்தான். பாதிக்கப்பட்டது மனைவி எனின் எந்த கணவனும் அவளுக்காக எத்தகைய காரியத்தையும் செய்வார்கள். இதில் அவனது சுயநலம் ஏதும் இல்லை. மேலும் ரகுவின் நேர்மையை பிறர் மூலம் அறிந்த அவனது குருவும் அவன் கேட்டவுடன், அவனுக்கு ஓலைச்சுவடிகளை கொடுத்து விட்டார்”. என்ற விக்ரமாதித்தியனின் விடையைக் கேட்டு வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

நீதி : நேர்மையாக வாழ்வது என்றும் நன்மையை தரும்.

இன்றைய செய்திகள்

24.01.20

 ★10, 12-ம் வகுப்புகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பு, ஜனவரி 27-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

★கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரித்திருப்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

★ஒருங்கிணைந்த வைஃபை கருவியை வடிவமைத்த புதுச்சேரியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி பாக்கியலட்சுமி தேசியப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.

★சீனாவை உலுக்கியது மட்டுமல்லாமல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் 17 பேர் பலியாகியுள்ளனர். 550க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

★பிரீமியர் பாட்மிண்டன் லீக்கில் மும்பை ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான மோதலை லக்சயா சென், டாமி சுகிர்தோ மற்றும் துருவ்-ஜெசிகா ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் 3-0 என வென்றது சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்.

★கடந்த வாரம் ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியா மிர்சா, காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

Today's Headlines

🌸It's announced that the questions prepared for 10th and 12th by Parents Teachers Association will be on sale from January 27th.

🌸 For the past 5 years the abuse against children is increased 250 % says the statistics taken by the National Crime Records Centre.

🌸 The government school student Bakkialakshmi from Pudhucherry who designed a Coordinating  WiFi instrument was selected for National level Competition.

🌸 Not only China but shaking the whole world thec virus Carona killed 17 people in China and 550 more people were affected.

🌸 In the Premier Badminton League Chennai Super Stars won due to the awesome play of Lakshya Sen, Tommy Sugirato and Dhruv Jessica. They won by 3-0 set.

🌸 Due to her wound Sania Mirza came out of the Australian Open Competition due to her wound.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

ATSL 2020 சோதனைத் தேர்வு வழிகாட்டுதல்கள்

* ATSL 2020 தேர்வு வினாத்தாளின் புறவயத் தன்மை , தேர்வை மாணவர் அணுகும் முறை ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்காக Pilot தேர்வு கடந்த மாதம் 08 . 12 . 2019 அன்று மாநிலம் முழுவதும் 8 மாவட்டங்களில் 48 பள்ளிகளில் நடத்தப்பட்டது .

* Pilot தேர்வில் மாணவர் பங்கேற்பும் , தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் ஈடுபாடும் பாராட்டத் தக்க வகையில் இருந்தது . இதனைத் தொடர்ந்து - Pilot தேர்வில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள கணினி மற்றும் தொழில்நுட்ப வளங்களின் முழு திறனையும் சோதிக்க சோதனைத் தேர்வு 24 . 01 . 2020 ஒரு நாள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

* இதற்காகப் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .

* இதன் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைச் சரிபார்க்கும் வகையிலும் , Log in செய்தல் , Internet Speed மற்றும் இதரத் தொழில்நுட்ப வளங்களைச் சோதிக்கும் வகையிலும் சோதனைத் தேர்வு நடைபெற உள்ளது .

* இந்த சோதனைத் தேர்வு வரும் 24 . 01 . 2020 அன்று தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் . தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் . அனைத்துப் பள்ளிகளிலும் சரியாக 2 மணிக்குக்குத் தேர்வு தொடங்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் .

* அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தும் வகையில் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து இச்சோதனைத் தேர்வை நடத்த வேண்டும் .

* தம் பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி I Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை இச்சோதனைத் தேர்வில் ஈடுபடுத்த வேண்டும் . தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை அச்சோதனைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் .

Read More »

CBSE பள்ளிகளுக்கு தேர்வுத்துறை சுற்றறிக்கை!!

தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாவிட்டால், பள்ளிகளின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்ரவரி, 15 முதல், மார்ச், 30 வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளை, சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுள்ளது.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகளை சுமூகமாக நடத்தவும், விடைத்தாளை மதிப்பிட்டு, உரிய தேதிக்குள் தேர்வு முடிவை அறிவிக்கவும், சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு கட்டுப்பாட்டு துறைக்கு, பள்ளிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவது, சி.பி.எஸ்.இ., உத்தரவுப்படி, தேவையான ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் முதல்வரை தேர்வு பணிக்கு அனுப்பாதது, விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாமல் இருப்பது என, ஒவ்வொன்றும் விதிமீறலாக கணக்கில் கொள்ளப்படும். இந்த விதிமீறலின் கீழ், பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சி.பி.எஸ்.இ.,க்கு அதிகாரம் உள்ளது.

முதலில் எழுத்துப் பூர்வமாக விளக்க அறிக்கை கேட்கப்படும். பின், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சீனியர் செகண்டரி பள்ளியில் இருந்து, செகண்டரி பள்ளியாக தரம் குறைக்கப்படும்.
வகுப்பறைகளில், பிரிவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

 பொது தேர்வுக்கு மாணவர்களை அனுப்புவதற்கான தகுதி, இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும். குறிப்பிட்ட காலத்துக்கு அங்கீகார இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்.

ஐந்து ஆண்டுகள் வரை, அங்கீகாரத்தை நீட்டிக்க முடியாத அளவுக்கு தடை விதிக்கப்படும். சில பாடங்களுக்கு மட்டும் இணைப்பு அந்தஸ்து நிறுத்தப்படும்; நிரந்தரமாக இணைப்பு அங்கீகாரம் ரத்தாகும். இவ்வாறு, சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More »

DGE - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 - தேர்வு மையங்கள் பட்டியல் தயாரித்தல் தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்!




மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வுக்குரிய கல்வி மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் USER ID ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து தங்கள் ஆளுகைக்குட்பட்ட கல்வி மாவட்டங்களுக்கான தேர்வுமையங்கள் / இணைப்புப்பள்ளிகள் உட்பட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் .

திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை கருப்பு மையினால் மட்டுமே உரிய தேர்வு மையத்திற்கு கீழே குறிப்பிட வேண்டும் . திருத்தங்கள் ஏதும் இல்லை எனில் Correction Nil எனக் குறிப்பிட்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பக்கங்களில் மாவட்டக் கல்வி அலுவலரின் கையொப்பம் பெற்று , அப்பக்கங்களை மட்டும் ஸ்கேன் செய்து இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சலில் ( dgeb3sec @ gmail . com ) 27 . 01 . 2020 - க்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

இப்பணி , மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைக்கல்வி பொதுத்தேர்விற்கு மிகவும் அடிப்படையான மிக முக்கியமான பணி என்பதால் இத்திருத்தங்களுக்கு பிறகு எவ்வித மாற்றமும் இல்லாமல் , தாங்கள் தனிப்பட்ட கவனத்துடன் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் / நேர்முக உதவி அலுவலர்கள் / கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் பிரிவுப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும் .

மார்ச் ஏப்ரல் 2020 - ல் நடைபெறவுள்ள இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வுக்கு தங்கள் மாவட்டத்தில் எழுதவுள்ள எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் ( துவக்க அனுமதி பெற்று முதன் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் புதிய பள்ளிகள் உட்பட ) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதையும் ( Cancellation Centre தவிர ) இடைநிலைக்கல்வி பொதுத் தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தேர்வின் சமயம் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் . இதில் தவறு ஏதும் ஏற்படின் தாங்களே முழுபொறுப்பேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் . இத்துடன் இணைத்து அனுப்பப்படும் சான்றினை கையொப்பமிட்டு ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் .

இவ்வலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கல்வி மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் பள்ளிகள் பட்டியலில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் ' மாற்றம் ஏதுமில்லை என்ற அறிக்கையினை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

மேலும் 27 . 01 . 2020 தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்தவொரு திருத்தமும் ( பள்ளியின் பெயர் , இணைப்பு பள்ளி மாற்றம் ) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் தேர்வு மைய பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் பின்னர் கண்டறியப்படின் அதற்கு மாவட்டக் கல்வி அலுவலரே முழுபொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
Read More »

DGE - 5th Public Exam Model Question Papers Download


இந்த ஆண்டுமுதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வருமௌ ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.அதற்கான மாதிரி வினாத்தாள்கள் தற்போது தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

5th Public Exam Model Question Papers 

Tamil - 5th Public Exam Model Question Papers - Download here

English -  5th Public Exam Model Question Papers - Download here

Maths  - 5th Public Exam Model Question Papers - Download here
Read More »

தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு அறிவிப்பு

தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமா தேர்வுதேதி அறிவிக்கப் பட்டுள்ளது.தேர்வு துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு எழுத உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 3 முதல் ஜூன் 19 வரை நடத்தப்படும்.முதலாம் ஆண்டு தேர்வு ஜூன் 4 முதல் 22 வரை நடத்தப்படும்.

 பாட வாரியான தேர்வு நாள் அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

5 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு - ஆசிரியர்கள் பெற்றோர் அதிர்ச்சி! ஏன்?


5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது.

தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட 3 பாடங்களுக்குபொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பருவம் மற்றும் 2ஆம் பருவத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

மாதிரி வினாத்தாளில் 1 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களும் உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read More »

தொழில் வரி எவ்வளவு கட்ட வேண்டும்- புதிய உத்தரவு...

அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் தொழில் வரி செலுத்துபவர்கள் இரண்டு அரையாண்டு க்கு சேர்த்து ரூபாய் 2500/- க்கு மேல் கட்ட வேண்டாம்...அதற்கான உத்தரவு நகல்

Read More »

ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?-10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் மாணவர்


உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

1. கதிரவனைப் போல்...
காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள்.

மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

2. புன்னகை அவசியம்
முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

4. பாடம் வேண்டாம்...
ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.



5. கேள்வி கேளுங்கள்..!
பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

6 . கடைசி ஐந்து நிமிடங்கள்..!
புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி ஐந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்
மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

8. பாடப்புத்தகத்தை தாண்டி..!
வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

9. உங்கள் பிள்ளை அவர்கள்..!
மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

10. நம்பிக்கையைக் கொடுங்கள்..!
உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.




நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!

- மணிகண்டன்,
லயோலா கல்லூரி மாணவர்.
Read More »

வரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஜனவரி மாத நாட்காட்டியின் படி வரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் ஆகும்.மேலும் அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 9 வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், தொடக்க நிலையிலுள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதுமுள்ள பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், மாணவர் ஆசிரியர் விகிதாசாரத்திற்கு தொடர்பில்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதும் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை தற்போது வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை,  மொத்தமாக 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியரின்றி உபரியாக இருப்பதால் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த பணியிடங்கள் பொதுத்தொகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவற்றை காலிப்பணியிடங்களாக கருத முடியாது. மேலும் புதிதாக ஆசிரியர்களையும் நியமிக்க முடியாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Read More »

75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்


10, 11, 12 பொதுத்தேர்வு எழுத உள்ளோரில் 75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி.31-க்குள் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி கூறியுள்ளார்.
Read More »

ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தொடக்கநிலை ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பாலிடெக்னிக் ஆசிரியர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

கீழ்க்கண்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு.

*Tamil
*English
*Maths
*Science
*Social Science
*Computer Science
*KG Teachers

*Tamil
*English
*Maths
*Chemistry
*Physics
*Zoology
*Botany
*History
*Computer Science
*PET






Read More »

DEE - 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு.

* 26.01.2020 ஞாயிறு அன்று குடியரசு தினவிழாவினை மகிழ்ச்சியும் , எழுச்சியும் மிக்க விழாவாகக் கொண்டாடுதல் வேண்டும் .

* பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்களாலும் , மலர்களாலும் நன்கு அலங்கரித்தல் வேண்டும் .

* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் .

* கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் , பள்ளி புரவலர்கள் , சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்தல் வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

* மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Flag Code of India 2002 - ன்படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* மேற்கண்ட விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி குடியரசு தினவிழாவினை அனைத்துப் பள்ளிகளிலும் தவறாமல் சிறப்பாகக் கொண்டாடிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

             - தொடக்கக் கல்வி இயக்குநர்

Read More »

Income Tax Easy Calculator 2019 - 20 ( Various Collections )

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  2020 பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யக்கூடிய வருமானவரியினை கீழ் உள்ள படிவத்தினை பதிவிறக்கம் செய்து கணினி மூலமாக சில நொடிகளில் உங்களது தகவல்களை கொடுத்து உங்களுக்கான வருமானவரி படிவத்தை தயார்செய்யலாம்.

வழிமுறைகள்  : 


1. ஒரு நொடியில் INCOME TAX CALCULATION கணக்கிடப்படும்.

2. DA ARREAR - AUTOMATIC CALCULATION - 100 %  - TRUE

IT Calculator  ( 2019 - 2020 ) 

# IT Calculator  ( 2019 - 2020 ) - Mr Manimaran - Download here

# IT Calculator  ( 2019 - 2020 ) - Mr Tamilarasan - Download here ( updated )

# IT Calculator  ( 2019 - 2020 ) - Mr Baskar - Download here ( Password 123 )
Read More »

SBI - அரசு ஊழியர்கள் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள்



நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (savings account)என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும் அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை.

SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம் எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம் அடுத்ததாக தனிநபர் கடன் வீட்டுக் கடன் கார் கடன் கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களை காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்கவேண்டும் .

SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பேர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால்SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு.எனவே அனைத்து ஆசிரியர்களும் அனைத்து அரசு ஊழியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றிவிடுங்கள். இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை

1. கவரிங் லெட்டர்
2. பேங்க் புக் ஜெராக்ஸ்
3. ஆதார் அட்டை நகல்
4. பான் கார்டு நகல்
5. ஆன்லைன் பேஸ்லிப்

இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள் ...

SGSP Details - Download here...

Request Letter - Download here ...
Read More »

TRB - இடைநிலை , பட்டதாரி , முதுநிலை ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.

*.டெட் தேர்வு மற்றும் ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஆர்பி வெளி யிட்டுள்ளது.

*.தமிழக கல்வித் துறையில் ஏற் படும் காலி பணியிடங்கள், ஆசிரி யர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் டிஆர்பி சார்பில் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணை வெளியிடப்படும்.

*.ஆனால், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு தேர்வுக்கால அட்டவணை வெளியாகவில்லை.

*.இதனால் அதிருப்தியான பட்டதாரிகள் நடப்பு ஆண்டு கால அட்டவணையை வெளியிட கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில்2020-21-ம் கல்வி ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ww.trb.in.nic.in) நேற்று வெளி யானது.

*.அதில் பல்வேறு பதவி களுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

*.அதன்படி 97 வட்டாரக் கல்வி அதிகாரி பதவிக்கான தேர்வுபிப். 15, 16-ம் தேதிகளிலும், 2017-ல் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மே 2, 3-ல் நடைபெறவுள்ளது.

*.இதுதவிர ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஜூன் 27, 28-ம் தேதி களில் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மே 4-ல் வெளியிடப் படும்.

*.இதேபோல், 497 முதுநிலை ஆசிரியர், 730 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 572 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகும்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One