Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS| TAMIL FREE DOWNLOAD | 8 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்

Saturday 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS|எட்டாம் வகுப்பு - பொதுத்தமிழ்
============================
வாழ்த்து

“முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே”

பெயர் : தாயுமானவர்

பெற்றோர் : கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்

மனைவி : மட்டுவார்குழலி

ஊர் :  திருமறைக்காடு (வேதாரண்யம்) நாகப்பட்டினம் மாவட்டம்

நூல் :தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

பணி  : கருவூலர் ( திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம்)

காலம் : 18 நூற்றாண்டு

பாரபரக்கண்ணி என்னும் தலைப்பு

நூலின் சிறப்பு : தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் மனத்தூய்மை பக்திச்சுவை  கொண்டது.

திருச்சிராப்பள்ளி மலைமீது உள்ள இறைவன்  தாயுமானவர் திருவருளால் பிறந்தவர் .

நினைவு இல்லம் : இலட்சுமிபுரம்  ( இராமநாதபுரம் )
===========================
திருக்குறள்

பெயர் : திருவள்ளுவர்

வேறுபெயர்கள்  : முதற்பாவலர் , செந்நாப்போதார், பொய்யில் புலவர்,  பெருநாவலர்,

காலம் : கி.மு. 31

சிறப்பு : “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே
புகழ் வையகமே” – பாரதிதாசன்

நூல் குறிப்பு : பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. மேன்மை கருதி திரு என்ற அடைமொழிடன் அழைக்கப்படுகிது

நாடு, மொழி, இனம், சமயம் கடந்து எக்காலதிற்கும் பொருந்துவதற்காக அமைந்தமையால்  

உலகப்பொதுமை எனப்போற்றப்படுகிறது

மக்கள் வாழ்வில் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கூறுவதால் முப்பால் என்பர்.

130 – அதிகாரம், 1330 – பாடல்கள்

வேறுபெயர்கள் : வாயுரை வாழ்த்து, உலக பொது மறை, பொய்யா மொழி, தெய்வ நூல்.

வீரமாமுனிவர் – இலத்தீனில் மொழிபெயர்த்தவர்.

ஜி.யு. போப் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தவர்.

திருக்குறளின் பெருமை கூறும் நூல் : திருவள்ளுவ மாலை.

உருசியா நாட்டில் அணுதுளைக்காத கிரெம்ளின் மாளிகை சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளது.

இங்கிலாந்து நாட்டு காட்சிசலையில் திருக்குறள்  விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

பேதையர் நட்பு என்பது தேய்பிறை போன்றது.

அறிவுடையார் நட்பு என்பது வளர்பிறை போன்றது

பண்புடையார் நட்பு என்பது நவில் தோறும் நூல் நயம் போன்றது.

இடுக்கண் களையும் நட்பு என்பது  உடுக்கை இழந்தவர் கைபோன்றது.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு”  - இக்குறள் படிக்கும்போது  உதடுகள் ஒட்டி நிற்கும் குறள் இதன் பொருள் இறைவனைப்பற்றி நிற்கும், 

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்ற வந்த பொருள்” - முப்பாலும் தப்பாமல் உணர்த்த வந்த குறள்.
==========================
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD |10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் - PART-4

TNPSC | TRB | TET STUDY MATERIALS | பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்- PART -4
===========================

301) கைகேயின் மகன்?
பரதன்
302) இராமன் காடு செல்லவும், தன்மகன் பரதன் நாடாளவும் வேண்டுமெனக் கூறியவள்?
கைகேயி
303) மணிமுடி சூடப் புறப்பட்டு வந்த இராமனிடம், கைகேயி எத்தனை ஆண்டுகள் காடு செல்ல வேண்டும் – என்று கூறினாள்?
பதினான்கு ஆண்டுகள்
304) அன்பே வடிவான வேட்டுவத் தலைவன்?
குகன்
305) போர்க்குணம் மிக்கவன்?
குகன்
306) ஆயிரம் படகுகளுக்கு தலைவன்?
குகன்
307) கங்கையாற்று தோணித்துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்?
குகன்
308) பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்?
குகன்
309) மலைபோன்ற திரண்ட தோள்களை உடையவர்?
குகன்
310) துடியெனும் பறையை உடையவன்?
குகன்
311) வேட்டை நாய்களைக் கொண்டிருப்பவன்?
குகன்
312) தோல் செருப்பணிந்த பெருங்கால்களை உடையவன்?
குகன்
313) இருள் போன்ற கரிய நிறத்தை உடையவன்?
குகன்
314) கரிய மேகக் கூட்டம் திரண்டு வந்தாற்போன்ற மிகுதியான படைபலம் உடையவன்?
குகன்
315) அலைகளையை உடைய நதிக்கரை?
கங்கை நதிக்கரை
316) கங்கைக்கரையோர நகரம்?
சிருங்கிபேரம்
317) சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழும் தலைவன்?
குகன்
318) இராமனைக் காண தேனும்மீனும் கொண்டு சென்றவன்?
குகன்
319) தமிழர் மரபுகளில் எவரை காணச் செல்லும்போது வெறுங்கையோடு செல்லலாகாது?
அரசர், குரு, தெய்வம்
320) நாயினும் அடியவன்?
குகன்
321) கங்கைக்கரையில் நாவாய்களை இயக்குகின்றவன்?
குகன்
322) தாயினும் சிறந்த அன்பினன் என்று இலக்குவனன் குறிப்பிடுவது யாரை?
குகன்
323) இராமனைக் காண குகன் யாருடன் சென்றான்?
உறவினருடன்
324) நெடியவன் என்பது யாரைக் குறிக்கும்?
உயர்ந்தவராகிய இராமன்
325) இராமனைக் கண்ட குகன் எவ்வாறு வணங்கினான்?
நீண்டமுடியுடைய தலை, மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான்
326) பண்ணவன் என்பது யாரைக் குறிக்கும்?
நற்குணங்கள் பல உடைய இலக்குவன்
327) கிடைத்தற்கரியன என்றும் அமுதத்தைவிடச் சிறத்தென இராமன் குறிப்பிடுவது எதனை?
குகன் கொண்டுவந்த தேனும்மீனும்
328) கருமுகில் வண்ணனாகியவன்?
இராமன்
329) கோதண்டம் என்னும் வில்லேந்தியவன்?
இராமன்
330) ஆடவரில் நல்லவனாகியவன்?
இராமன்
331) இவன் நம்மிடத்து நீங்காத அன்பு உடையவன் – என்று உரைத்தவன்?
இராமன் (இலக்குவனிடம்)
332) தாமரைமலர்போன்ற கண்களை உடையவன்?
இராமன்
333) பிறைநிலவு போன்ற நெற்றியை உடையவர்?
சீதை
334) விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனிடம் கட்டளையிட்டவன்?
இராமன்
335) குகன் படகினை விரைவாக செலுத்தியவிதம் எவ்வாறு வருணிக்கப்படுகிறது?
உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவதுபோல
336) கங்கையாற்றில் படகு சென்றதை எவ்வாறு வருணிக்கப்படுகிறது?
இளம் அன்னம் விரைந்து செல்வதைப் போல
337) இராமன், சீதை, இலக்குவன் ஆகியோரின் பிரிவால் அனல்பட்ட மெழுகுபோல துன்புற்று மனமுறுகி நின்றவர்?
அந்தணர்கள்
338) இராமனின் உயிர்போன்றவன்?
குகன்
339) விரிந்த அன்பினால் இனி உன்னோடு ஐவரானோம் – என்று கூறியவன்?
இராமன், குகனிடம்
340) கம்பர் பிறந்த ஊர்?
தேரழுந்தூர்
341) தேரழுந்தூர் எங்கு உள்ளது?
நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில்
342) கம்பரின் தந்தையார் பெயர்?
ஆதித்தன்
343) கம்பர் எந்த மன்னன் காலத்தில் வாழ்ந்தார்?
இரண்டாம் குலோத்துங்கன்
344) கம்பரை ஆதரித்தவர்?
சடையப்ப வள்ளல்
345) சடையப்ப வள்ளல் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
திருவெண்ணை நல்லூர்
346) கம்பர் வாழ்ந்த காலம் யாது?
கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு
347) செய்நன்றி மறவா இயல்பினர்?
கம்பர்
348) கம்பர், தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை எவ்வாறு சிறப்பித்துள்ளார்?
ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்
349) கம்பர் இயற்றிய நூல்கள்?
1) கம்பராமாயணம்
2) சடகோபர் அந்தாதி
3) ஏர் எழுபது
4) சிலை எழுபது
5) சரசுவதி அந்தாதி
6) திருக்கை வழக்கம்
350) கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள்?
1) சயங்கொண்டார்
2) ஒட்டக்கூத்தர்
3) புகழேந்தி
351) கம்பரிண் பெருமையை அறிய உதவும் தொடர்கள்?
1) கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
2) விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
3) கல்வியில் பெரியவர்
352) பாரதியார், கம்பரை எவ்வாறு புகழ்கிறார்?
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
353) வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தை தழுவி தமிழில் இயற்றியவர்?
கம்பர்
354) கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு என்ன பெயரிட்டார்?
இராமாவதாரம்
355) கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?
ஆறு காண்டங்கள்
356) கம்பராமாயணத்தின் பெரும்பிரிவு எவ்வாறு குறிக்கப்பெறுகிறது?
காண்டம்
357) கம்பராமாயண பெரும்பிரிவின் உட்பிரிவு எவ்வாறு குறிக்கப்பெறுகிறது?
படலம்
358) தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி யாருடைய படைப்பினால் உச்சநிலையை அடைந்தது?
கம்பர்
359) கம்பராமாயனத்தின் சிறப்புச் கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் எவ்வாறு அழைப்பர்?
தமிழுக்குக் கதி
360) பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுள்ள நூல்?
கம்பராமாயணம்
361) பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்த நூல்?
கம்பராமாயணம்
362) கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்த நூல்?
கம்பராமாயணம்
363) சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப்பண்பாடும் மிளிர்ந்துள்ள நூல்?
கம்பராமாயணம்
364) கம்பராமாயணத்தில் இரண்டாவது காண்டம்?
அயோத்தியா காண்டம்
365) கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்கள் எத்தனை?
பதின்மூன்று படலங்கள்
366) குகப்படலம் எத்தனையாவது படலம்?
ஏழாவது படலம்
367) குகக்கபடலத்தின் வேறுபெயர்?
கங்கைப் படலம்
368) தொல்காப்பிய நெறி நின்றவர்?
கம்பர்
369) கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எவை?
1) பாலகாண்டம்
2) அயோத்தியா காண்டம்
3) ஆரண்ய காண்டம்
4) கிட்கிந்தா காண்டம்
5) சுந்தர காண்டம்
6) யுத்த காண்டம்
370) தமிழ் வேந்தர் என சிறப்பிக்கப்படுபவர்?
கம்பர்
371) வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர்?
கம்பர்
372) உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனை புதுப்பித்துவிடலாம் – என்று கூறியவர்?
டாக்டர்.கால்டுவெல்
373) விடுதலைக்கும் சமத்துவத்துக்கும் முரசு கொட்டிய கவிஞர்?
பாரதியார்
374) அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஊர்?
அம்பவாடே எனும் சிற்றூர் – கொங்கண் மாவட்டம் – மகாராஷ்ட்ரா
375) சமுதாய மறுமலர்ச்சியின் முன்னோடி, சமத்துவக் காவலர்?
அண்ணல் அம்பேத்கர்
376) உலக சாதனையாளர் வரிசையில் முன்னிற்பவர்?
அண்ணல் அம்பேத்கர்
377) அண்ணல் அம்பேத்கர் ஆரம்பத்தில் படித்த பள்ளி எங்குள்ளது?
தபோலி
378) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்?
ஏப்ரல் 14 - 1891
379) அண்ணல் அம்பேத்கரின் பெற்றோர்?
தந்தை  = இராம்ஜி சக்பால்
தாய்  = பீமாபாய்
380) தம் பெற்றோர்க்கு எத்தனையாவது மகனாக அம்பேத்கர் பிறந்தார்?
பதினான்காவது மகன்
381) அம்பேத்கருக்கு தம் தந்தை இராம்ஜி சக்பால் சூட்டிய பெயர்?
பீம்
382) அம்பேத்கரின் இயற்பெயர்?
பீமாராவ் ராம்ஜி
383) டாக்டர் அம்பேத்கருக்கு பீம் என பெயர் சூட்ட காரணம்?
மகாபாரத பீமனைப்போல் தன்மகனும் அசைக்க முடியாத வீரனாக வரவேண்டுமென
384) ஆசிரியர் என்பர் அறிவுக்கடலாக மட்டுமன்றி அறத்தின் ஆழியாகவும் விளங்க வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் செயல்பட்டவர்?
அம்பேத்கர் (பீமாராவின் ஆசிரியர்)
385) பீமாராவ், தன் பெயரை அம்பேத்கர் என பெயர் மாற்றிக்கொள்ள காரணம்?
தம் ஆசிரியர் அம்பேத்கர் மீது கொண்ட பற்றினாலும், காலத்தினால் செய்த உதவிக்காக
===========================
386) டாக்டர் அம்பேத்கர் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை வரிசைப்படுத்துக.

1) உயர்நிலைப் பள்ளி படிப்பு - எல்பின்ஸ்டன் பள்ளி - மும்பை - 1908
2) இளங்களைப் பட்டம் - எல்பின்ஸ்டன் கல்லூரி - மும்பை - 1912
3) முதுகலைப் பட்டம் - கொலம்பியா பல்கலை - அமெரிக்கா - 1915
4) பொருளாதர முனைவர் - கேம்பிரிட்ஜ் பல்கலை - லண்டன் - 1916
5) அறிவியல் முதுகலை - கேம்பிரிட்ஜ் பல்கலை - லண்டன்
6) பாரிஸ்டர் பட்டம் - கேம்பிரிட்ஜ் பல்கலை - லண்டன்
===========================
387) டாக்டர் அம்பேத்கர் தன் இளங்கலைப் பட்டபடிப்பு யாருடைய உதவியுடன் படித்து முடித்தார்?
பரோடா மன்னர் - எல்பின்ஸ்டன் கல்லூரி – 1912 – பம்பாய்
388) 1916 இல் இலண்டனில் பொருளாதரத்தில் முனைவர் பட்டம் பெற்றபின் சிறிதுகாலம் எங்கு பணியாற்றினார்?
மும்பையில் (பொருளியல் பேராசிரியராக)
389) அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வாணிகம், கல்வி, சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற அறிஞராகத் திகழ்ந்தவர்?
அண்ணல் அம்பேத்கர்
390) அண்ணல் அம்பேத்கர் ஒருநாளில் கல்வி கற்பதற்காக எத்தனை மணி நேரம் செலவழித்தார்?
பதினெட்டு மணி நேரம்
391) நூலகத்தில், காலையில் முதல் ஆளாக நுழைந்து; மாலையில் இறுதி ஆளாக வெளியேறியவர்?
அண்ணல் அம்பேத்கர்
392) மனிதஉரிமைக்காக முதலில் நடத்தப்பெற்ற போராட்டங்கள்?
1) வைக்கம் போராட்டம்
2) மகாத்து குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம்
393) கேரளாவின் வைக்கத்தில் நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலையநுழைவு முயற்சியான வைக்கம் போராட்டம் யாருடைய தலைமையில் எந்த ஆண்டு நடைபெற்றது?
தந்தை பெரியார் – 1924
394) மனித உரிமைக்காக டாக்டர் அம்பேத்கர் நடத்திய போராட்டம் எது?
மகாத்து குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் – மராட்டிய மாநிலம்
395) மகாத்து குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடைபெற்ற நாள்?
20.03.1927 (மார்ச்சுத் திங்கள் இருபதாம் நாள்)
396) இங்கிலாந்து சொல்வதற்கெல்லாம் இந்தியா தலையசைக்கும் என்பது தவறு; இந்தநிலை எப்போதோ மாறிவிட்டது என வட்டமேசை மாநாட்டில் எடுத்துக்கூறியவர்?
டாக்டர் அம்பேத்கர்
397) இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்ற வேண்டும் – என ஆங்கிலேயரிடம் அச்சமின்றி ஆணித்தரமாகக் கூறியவர்?
டாக்டர் அம்பேத்கர்
398) முழுமையான விடுதலை வழங்குவதற்கு முன் தன்னாட்சித் தகுதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் – என வட்டமேசை மாநாட்டில் முன்மொழிந்தவர்?
டாக்டர் அம்பேத்கர்
399) முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1930
400) அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக பேசியவர்?
டாக்டர் அம்பேத்கர் – 1930 - வட்ட மேசை மாநாட்டில்
==========================
Read More »

TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் - PART -3

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்- PART -3
===========================
201) கொற்கை என்னும் துறைமுகத்தை உடைய மன்னன்?
பாண்டிய மன்னன்
202) வெற்றிதரும் வேலினை தம்பெரிய கையில் ஏந்தியவள்?
கொற்றவை
203) குருதி ஒழுகும் பிடர்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடியாகியவள்?
கொற்றவை
204) கன்னியர் எழுவருள் இளையவள்?
பிடாரி
205) இறைவனை நடனமாடச் செய்தவள்?
பத்ரகாளி
206) அச்சம் தரும் காட்டைத் தாம் விரும்பும் இடமாகக் கொண்டவள்?
காளி
207) தாருகன் என்ற அசுரனின் பரந்த மார்பைப் பிளந்தவள்?
துர்க்கை
208) இளமையான கொடி போன்றவளே! நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்? - என வினவியவன்?
பாண்டிய மன்னன்
209) புறாவின் துன்பத்தை போக்கிய மன்னன்?
சிபி மன்னன்
210) பசுவின் துயரை அறிந்து, தன் ஒப்பற்ற மகனை தேர்ச் சக்கரத்திலிட்டு கொன்ற அரசன்?
மனுநீதிச்சோழன்
211) கண்ணகி பிறந்த ஊர்?
புகார் நகரம்
212) கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று: அதுவே அரச நீதி – என்று கூறியவன்?
பாண்டிய மன்னன்
213) கண்ணகியின் காற்சிலம்பில் உள்ள பரல்கள்?
மாணிக்கப் பரல்
214) கண்ணகி உடைத்த காற்சிலம்பில் வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று அரசன்மேல் எந்த இடத்தில் பட்டுத்தெறித்தது?
மன்னனின் உதட்டில்
215) அறநெறி தவறிய, நானோ அரசன்! நானே கள்வன் – என்பது யாருடைய கூற்று?
பாண்டிய மன்னன்
216) கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது – என்று கூறியவள்?
கோப்பெருந்தேவி
217) இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்?
சேரமரபினர் – சேர நாடு
218) இளங்கோவடிகளின் பெற்றோர்?
தந்தை  =  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
தாய்  =  நற்சோனை
219) இளங்கோவடிகளின் தமையன் (அண்ணன்) பெயர்?
சேரன் செங்குட்டுவன்
220) இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு தங்கியிருந்த இடம்?
குணவாயிற்கோட்டம்
221) அரசியல் வேறுபாடு கருதாதவர்?
இளங்கோவடிகள்
222) சமய வேறுபாடற்ற துறவி?
இளங்கோவடிகள்
223) இளங்கோவடிகள் வாழ்ந்த காலம்?
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
224) இளங்கோவடிகளின் சிறப்பினை உணர்ந்து பாரதியார் பாடிய வரிகள்?
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே கண்டதில்லை…
225) சிலப்பதிகாரத்தின் அமைப்பு?
மூன்று காண்டங்கள், முப்பது காதைகள்
226) சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டங்கள் எவை?
1) புகார்க்காண்டம் - பத்துக் காதைகள்
2) மதுரைக்காண்டம் - பதின்மூன்று தாதைகள்
3) வஞ்சிக்காண்டம் - ஏழு காதைகள்
227)  உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் எனவும் வழங்கப்பெறும் நூல்?
சிலப்பதிகாரம்
228) சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்?
1) முதற் காப்பியம்
2) முத்தமிழ்க் காப்பியம்
3) குடிமக்கள் காப்பியம்
4) ஒற்றுமைக் காப்பியம்
229) நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு – என்றவர்?
பாரதியார்
230) சிலப்பதிகாரத்தில் உள்ள மதுரைக் காண்டத்தின் பத்தாவது காதை எது?
வழக்குரை காதை
231) தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள்?
1) சிலப்பதிகாரம்
2) மணிமேகலை
3) சீவகசிந்தாமணி
4) வளையாபதி
5) குண்டலகேசி
232) ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது?
சிலப்பதிகாரம்
233) இரட்டைக்காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
234) சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்கக் காரணம்/
காலத்தாலும் கதைத்தொடர்பாலும் பாவகையாலும் ஒன்றுபட்டுள்ளதால்
235) சிலப்பதிகாரத்தின் கதை உருவம் என்ன?
இசை நாடகம்
236) சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காண உடன் சென்றவர்?
சேரன் செங்குட்டுவன்
237) கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறியவர்?
சீத்தலைச்சாத்தனார்
238) அடிகள் நீரே அருளுக –என்று கூறியவர்?
சீத்தலைச்சாத்தனார்
239) முப்பெரும் உண்மைகளைக் கூறும் நூல்?
சிலப்பதிகாரம்
240) சிலப்பதிகாரம் உணர்த்தும்  முப்பெரும் உண்மைகள் எவை?
1) அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்
2) உரைசால் பத்தினியை உஅய்ர்ந்தோர் ஏத்துவர்
3) ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
241) யாரையோ நீமடக்கொடி – யார், யாரிடம் கூறியது?
பாண்டிய மன்னன் கூறியது, கண்ணகியிடம்
242) நற்றிறம் படராக் கொற்கை வேந்தே – யார், யாரிடம் கூறியது?
கண்ணகி கூறியது, பாண்டிய மன்னனிடம்
243) எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் – என்று பாடியவர்?
பாரதிதாசன்
244) தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர் – என முழங்கியவர்?
பாரதிதாசன்
245) வறுமையினால் தமிழன் ஒருவன் கல்லாத நிலை ஏற்படுமாயின், இங்குள்ளோர் நாணம் அடைதல் வேண்டும் என கூறியவர்?
பாரதிதாசன்
246) பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர்?
சுப்புரத்தினம்
247) பாரதிதாசனின் பிறந்த நாள்?
29.04.1891
248) பாரதிதாசன் எங்கு பிறந்தார்?
புதுவை
249) பாரதிதாசனின் பெற்றோர்?
கனகசபை, இலக்குமி
250) சுப்புரத்தினம் என்ற பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொள்ள காரணம்?
பாரதியின்மேல் கொண்ட பற்றால்
251) பாரதிதாசனின் சிறப்புப்பெயர்கள் எவை?
பாவேந்தர், புரட்சிக்கவிஞர்
252) பாரதிதாசனின் படைப்புகள் எவை?
குடும்பவிளக்கு
இருண்டவீடு
தமிழிழக்கம்
பாண்டியன் பரிசு
அழகின் சிரிப்பு
253) “பாரதிதாசன் பரம்பரை” என்றொர் கவிஞர் பரம்பரை யாருடைய காலத்தில் உருவானது?
பாரதிதான் காலத்தில்
254) பாவேந்தர் பாரதிதாசனுக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள் யாவை?
1) இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கப்பட்டது
2) ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் பரிசு வழங்கப்படுகிறது
3) திருச்சியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது
255) தமிழ்நாடு தவம் செய்து பெற்றவர் ஒருவர் உண்டென்றால் அவர் யார்?
தந்தை பெரியார்
256) பழந்தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களை மான்புடை மன்னர்கள் எவ்வாறு மதிக்கப் பெற்றார்கள்?
புலவர்களாகவும், பாடினியாகவும், விறலியாகவும் மதிக்கப்பெற்றனர்
257) நாட்டு விடுதலைக்கு போராடிய பெரியார், வேறு எதற்கு போராடினார்?
பெண்களின் சமூக விடுதலைக்கு
258) பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் படப்பிடிப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மணக்குகையில் சிறுத்தை எழும்
259) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் எத்தனை வகை? அவை யாவை?
இரண்டு, அவை:- 1) அடிப்படைத் தேவைகள், 2) அகற்றாப்படவேண்டியவை
260) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அடிப்படை தேவைகள்” எவை?
1) பெண்கல்வி
2) பெண்ணுரிமை
3) சொத்துரிமை
4) அரசுப்பணி
261) பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளில் “அகற்றப்பட வேண்டியவை” எவை?
1) குழந்தைத் திருமணம்
2) மணக்கொடை
3) கைம்மை வாழ்வு
262) நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்கள் கொண்டு வர இயலாது – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
263) பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்கள் வெளியேறவேண்டும் – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
264) பெண்கள் கல்வி பெறுவது சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாதது – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
265) பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது - என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?
தந்தை பெரியார்
266) பெண்களுக்கு எந்தெந்த படிப்புகளை தாராளமாக கொடுக்கவேண்டும் என்று பெரியார் கூறுகிறார்?
உலகப் படிப்பும் ஆராய்ச்சி படிப்பும்
267) “நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு” - எது என்று பெரியார் கூறுகிறார்?
பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை
268) எந்த இழிநிலை ஒழிக்கப்படவேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார்?
பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை
269) பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர்?
தந்தை பெரியார்
270) ஆணுக்குப் பெண் இளைப்பில்லை – என்று சிந்தித்தவர்?
தந்தை பெரியார்
271) பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதச் சமுதாயத்திற்கு தொண்டாற்றும் புகழ்பெற்ற பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்று வலியுரித்தியவர்?
தந்தை பெரியார்
272) பெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தவர்?
தந்தை பெரியார்
273) பெண்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது எதுவென்று பெரியார் கூறுகிறர்?
சொத்துரிமை மறுக்கப்பட்டமையே
274) பெண்கள் எதற்காக போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டும் என பெரியார் கூறுகிறார்?
சொத்துரிமை மறுக்கப்பட்டதற்கு
275) பெரியாரின் சிந்தனைகளில் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது எது?
பெண்களுக்கான சொத்துரிமை
276) பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர்?
தந்தை பெரியார்
277) விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் ஒன்று?
குழந்தை மணம்
278) சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என பெரியார் குறிப்பிடுவது எதனை?
குழந்தைத் திருமணம்
279) குழந்தைத் திருமணத்தை நீக்கப் பாடுபட்டவர்?
தந்தை பெரியார்
280) தமிழர்களிடையே இன்று பரவியுள்ள பெருநோய்?
மணக்கொடை (வரதட்சனை)
281) தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாய் இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாறவேண்டும் – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
282) தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் - என்று நாப்பறை ஆர்த்தவர்?
தந்தை பெரியார்
283) கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை – என்று தெரிவித்தவர்?
தந்தை பெரியார்
284) ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற வள்ளுவர் வாய்மொழியை நன்குணர்ந்தவர்?
தந்தை பெரியார்
285) ஒழுக்கம் என்பதும் கற்பு என்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது – என்பது யாருடைய கருத்து?
தந்தை பெரியார்
286) சமூக முரண்களை எதிர்த்தவர்?
தந்தை பெரியார்
287) பெண்களே சமுகத்தின் கண்கள் – என்று கருதியவர்?
தந்தை பெரியார்
288) பெண்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டவர்?
தந்தை பெரியார்
289) யாருடைய வழிகாட்டுதலால், தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது?
தந்தை பெரியார்
290) மெல்ல மெல்ல மற – என்ற சிறுகதையின் மையக்கரு?
புகைப்பழகத்தை மறக்க வைப்பது
291) மெல்ல மெல்ல மற – என்ற சிறுகதையின் ஆசிரியர்?
இலட்சுமி
292) சொல் என்ற சொல்லின் வேறு பெயர்கள்?
பதம், மொழி, கிளவி
293) முக்கனி என்பது?
தொகைச் சொல்
294) தொகை எனும் சொல்லுக்கு என்ன பொருள்?
தொகுத்தல்
295) கவனிப்பாரற்றுச் சாலையில் திரிபவர்களையும், முதியோர்களையும் அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதில் நாட்டம் கொண்டவர்?
அன்னை தெரேசா
296)  தன்னலம் கருதாது பிறர்க்கு உதவுவதையே சிறந்த தொண்டாகக் கருதி வாழ்ந்த பெண்மணி?
அன்னை தெரேசா
297) அயோத்தி நாட்டு மன்னன் தசரதனுக்கு எத்தனை மக்கள்?
நால்வர்
298) தசரதனின் மனைவி?
கைகேயி
299) கைகேயின் தோழி?
மந்தரை
300) இராமன் முடிசூட்டுவதை விரும்பாததால், கைகேயின் மனத்தை வஞ்சக உரைகளால் மாற்றியவர்?
மந்தரை
===========================
Read More »

TNPSC |TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் -PART -2

TNPSC | TRB | TET STUDY MATERIALS |பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ் | PART -2
===========================
101) இயற்கையோடு இயைந்த நூல்கள்?
சங்க இலக்கியங்கள்
102) உலகத்தார் ஏற்கும் பொதுக் கருத்துக்கள் உடைய நூல்கள்?
சங்க இலக்கியங்கள்
103) மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை?
சங்க இலக்கியங்கள்
104) சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் பண்பாட்டு நெறிமுறைகள் ஏஆஈ?
1) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
2) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
3) பிறன்மனை நோக்காப் பேராண்மை
105) உலக மக்களை ஒன்றிணைத்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்க நூல்?
புறநானூறு
106) உரிமைக்கு உறவுகோல் ஊன்றும் புறநானூற்று பாடல் வரி?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
107) மக்கட் பண்பில்லாதவரை மரம் எனப் பழிக்கும் நூல் எது?
திருக்குறள்
108) குடிமக்கள் காப்பியம் என போற்றப்படுவது?
சிலப்பதிகாரம்
109) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் – என்னும் அறநெறியை உலகாள்வோருக்கு உணர்த்தும் நூல் எது?
சிலப்பதிகாரம்
110) தமிழர்களின் கலைநுட்பச் செய்திகள், சங்ககாலத் தமிழர்களின் கலை, இலக்கியத் தனித்தன்மைகளுக்குச் சான்றுகளாகத் திகழும் நூல்?
சிலப்பதிகாரம்
111) மொழி நூலாரையே வியப்பில் ஆழ்த்தும் தொல்காப்பியர் கூறும் முறை யாது?
எழுத்து பிறப்புமுறைகள்
112) இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றன – என கூறியவர்?
முனைவர் எமினோ
113) ஒரு மொழிக்கு எத்தனை ஒலிகள் இருந்தால் போதுமானது?
முப்பத்துமூன்று ஒலிகள்
114) தமிழ்மொழி மொத்தம் எத்தனை ஒலிகளை கொண்டுள்ளது?
ஐந்நூறு
115) ஒரு மொழியில் மனித உணர்வுகள் அனைத்தையும் எண்ணியவாறு வெளிப்படுத்தப் போதுமானது?
ஐந்நூறு ஒலிகள்
116) நடுவணரசு எந்த ஆண்டு தமிழை செம்மொழியாக ஏற்பளித்தது?
2004 அக்டோபர் மாதம்
117) தமிழ்மொழி இக்காலத்திற்கேற்ப எவ்வாறு அமைந்துள்ளது?
1) காலப்புதுமையைப் பெறத்தக்க வல்லது
2) கணினி பயன்பாட்டிற்கு ஏற்றது
118) தமிழை செம்மொழி என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி என்று தொடங்கி என்று முடிந்தது?
1901 இல் தொடங்கி 2004 வரை
119) மதுரை தமிழ்ச் சங்கத்தின் இதழ்?
செந்தமிழ்
120) பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளிவந்த இதழ்?
செந்தமிழ் – வெளிவந்த ஆண்டு 1901
121) தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி 1918 இல் தீர்மானம் நிறைவேற்றியவை?
1) மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை
2) சைவ சித்தாந்த மாநாடு
122) தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றி, அதை இந்திய அரசுக்கும், இந்திய பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வற்புறுத்தியது எது?
மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை
123) தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டி 1919 இல் தீர்மானம் நிறைவேற்றியது எது?
கரந்தைத் தமிழ்ச்சங்கம்
124) உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூலை எழுதியவர்?
தேவநேயப்பாவாணர்
125) உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் வெளிவந்த ஆண்டு?
1966
126) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்கு தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்?
பரிதிமாற்கலைஞர்
127) தன்பெயரை பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்?
சூரியநாராயண சாஸ்திரி
128) பரிதிமாற்கலைஞர் பிறந்த ஊர்?
விளாச்சேரி எனும் சிற்றூர் (மதுரை அருகில்)
129) பரிதிமாற்கலைஞரின் பெற்றோர்?
கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள்
130) பரிதிமாற்கலைஞர் தம் பெற்றோருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார்?
மூன்றாவது மகன்
131) பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு?
1870 ஆம் ஆண்டு சூலை மாதம் ஆறாம் நாள்
132) பரிதிமாற்கலைஞருக்கு வடமொழியை கற்பித்தவர்?
தந்தை கோவிந்தசிவனார்
133) பரிதிமாற்கலைஞர் யாரிடம் தமிழ்மொழி கற்றார்?
மகாவித்துவான் சபாபதி முதலியார்
134) பரிதிமாற்கலைஞர் இளங்கலை (பி.ஏ) பயின்ற கல்லூரி?
சென்னை கிறித்தவக் கல்லூரி
135) தாம் பயின்ற கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியர் பணி வழங்கியதை ஏற்காது, தமிழ்த்துறை ஆசிரியர் பணி விரும்பிக்கேட்டு ஏற்றவர்?
பரிதிமாற்கலைஞர்
136) தாம் கற்பிக்கும் பாடங்களைச் செந்தமிழ் நடையில் சுவைபட விவரிக்கும் ஆற்றல் பெற்றிருந்தவர்?
பரிதிமாற்கலைஞர்
137) ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இவருக்கு பேராசிரியர் பணி வழங்க முன்வந்த நிலையில், அதனை ஏற்க மறுத்தவர்?
பரிதிமாற்கலைஞர்
138) தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் பரிதிமாற்கலைஞர் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை எந்த பெயரிட்டு அழைத்தார்?
இயற்றமிழ் மாணவர்
139) பரிதிமாற்கலைஞரின் ஒவ்வொரு செயலும் எதனை நோக்கியே அமைந்திருந்தது?
தமிழ் வளர்ச்சி
140) மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் யாருடைய தலைமையில் நிறுவப்பட்டது?
பாசுகரசேதுபதி
141) மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் யாருடைய மேற்பார்வையில் நிறுவப்பட்டது?
பாண்டித்துரை
142) மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் எவருடைய துணையுடன் நிறுவப்பட்டது?
பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாத ஐயர், இராகவனார்
143) தமிழின் மேன்மையைத் தாம் உணர்ந்ததோடு, உலகிற்கு உணர்த்துவதிலும் தலைசிறந்து விளங்கியவர்?
பரிதிமாற்கலைஞர்
144) திராவிட சாஸ்திரி என்னும் சிறப்புப் பட்டத்தை பெற்றவர்?
பரிதிமாற்கலைஞர்
145) தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு பரிதிமாற்கலைஞருக்கு திராவிட சாஸ்திரி என்னும் சிறப்புப்பட்டத்தை வழங்கியவர்?
யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார்
146) தனிப்பாசுரத்தொகை என்னும் நூலை எழுதியவர்?
பரிதிமாற்கலைஞர்
147) தாம் இயற்றிய எந்த நூலில் தன் பெயரை சூரியநாராயண சாஸ்திரி என்னும் வடமொழிப் பெயரை பரிதிமாற்கலைஞர் என தனித்தமிழ்ப் பெயரை சூட்டிக்கொண்டார்?
தனிப்பாசுரத்தொகை
148) தனிப்பாசுரத்தொகை என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
ஜி.யூ.போப்
149) ஆர்த்தரின் இறுதி என்னும் நூலினை இயற்றியவர்?
டென்னிசன்
150) பரிதிமாற்கலைஞர், சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தபோது அக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர்?
வில்லியம் மில்லர்
151) சென்னை கிறித்தவக் கல்லூரியின் முதல்வராக இருந்த வில்லியம் மில்லர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
ஸ்காட்லாந்து
152) படகின் துடுப்பு அழகிய அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்ட ஆங்கில நூல்?
ஆர்த்தரின் இறுதி
153) விடுநனி கடிது என்னும் பாடல் அமைந்துள்ள நூல்?
கம்பராமாயணம்
154) கம்பராமாயணத்தில் விடுநனி கடிது என்னும் வரிகள் இடம்பெறும் படலம்?
குகப்படலம்
155) கம்பராமாயணம் இயற்றப்பட்ட காலம்?
பன்னிரனண்டாம் நூற்றாண்டு
156) தமிழ்ச்சொற்களோடு வடமொழிச்சொற்களைக் கலந்து எழுதுதல் என்பது தமிழின் அருமை உணர்ந்தோர் எவ்வாறு கூறினர்?
மணியும் பவளமும் கலந்து கோத்த மாலைபோலாகும்
157) தமிழ்ச்சொற்களோடு வடமொழிச்சொற்களைக் கலந்து எழுதுதல் என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து யாது?
தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பழம் கலந்தது போன்ற பயனையே தந்தது
158) தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடம்பிற்கு எரிச்சலைத் தருவது எது?
மணிபிரவாள நடை
159) தமிழ்மொழியோடு பிறமொழிச்சொற்களை சேர்த்து எழுதுவதும் பேசுவதும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மணிபிரவாள நடை
160) தமிழ்மொழியில் வடசொற்கலப்பைக் கண்டித்தவர்?
பரிதிமாற்கலைஞர்
161) பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், தமிழை விலக்கி, வடமொழியை கொண்டுவர முடிவெடுக்கப்பட்ட ஆண்டு?
1902
162) 1902 இல் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், தமிழை விலக்கி, வடமொழியை கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதற்கு யாருடைய எதிர்ப்பால் கைவிடப்பட்டது?
பரிதிமாற்கலைஞர்
163) பரிதிமாற்கலைஞரின் நற்றமிழ் நாடகங்கள் எவை?
ரூபவதி, கலாவதி
164) ரூபவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களை புனைந்து நடித்து நாடக்ககலை வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கு துணைபுரிந்தவர்?
பரிதிமாற்கலைஞர்
165) சித்திரக்கவி எழுதும் ஆற்றலை பெற்றவர்?
பரிதிமாற்கலைஞர்
166) சித்திரக்கவி என்னும் நூலை எழுதியவர்?
பரிதிமாற்கலைஞர்
167) நீதிநெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்?
குமரகுருபரர்
168) நீதிநெறி விளக்கத்தில் உள்ள எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதியுள்ளார்?
ஐம்பத்தொரு பாடல்கள் (51 பாடல்கள்)
169) ஞானபோதினி என்னும் இதழை தொடங்கிவைத்தவர்?
மு.சி.பூர்ணலிங்கம்
170) ஞானபோதினி என்னும் இதழை தொடந்து நடத்தியவர்?
பரிதிமாற்கலைஞர்
171) பரிதிமாற்கலைஞர் எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்?
தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம்
172) மாணவப் பருவத்திலேயே ஆங்கிலப் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்தவர்?
பரிதிமாற்கலைஞர்
173) தமிழ்மொழி “உயர்தனிச்செம்மொழி” என முதன்முதலாக நிலைநாட்டியவர்?
பரிதிமாற்கலைஞர்
174) பரிதிமாற்கலைஞர் தமது எத்தனையாவது வயதில் இயற்கை எய்தினார்?
முப்பத்து மூன்றாம் அகவை (02.11.1903)
175) நடுவணரசு பரிதிமாற்கலைஞருக்கு எவ்வாறு சிறப்புச் சேர்த்துள்ளது?
அஞ்சல்தலை வெளியிட்டது
176) பரிதிமாற்கலைஞரின் சொல்லாக்கங்கள் எவை?
1) Aesthetic  –  இயற்கை வனப்பு
2) Biology  –  உயிர்நூல்
3) Classical Language  –  உயர்தனிச்செம்மொழி
4) Green Rooms  –  பாசறை
5) Instinct –  இயற்கை அறிவு
6) Order of Nature –  இயற்கை ஒழுங்கு
7) Snacks –  சிற்றுணா
177) பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக இருந்தால் அவற்றை எவ்வாறு கூறவேண்டும்?
உணர்ச்சித் தொடர்கள்
178) ஒரு தனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது?
கலவைத்தொடர்
179) எழுவாய், செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்?
செய்வினைத் தொடர்
180) வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை – என்று பாடியவர்?
வள்ளலார்
181) ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப்பற்றே – என்று கூறியவர்?
தந்தை பெரியார்
182) மொழிப்பற்று இல்லாதாரிடத்தில் இது இராது என்பது உறுதி?
தேசப்பற்று
183) தேசம் என்பது எதனை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது?
மொழி
184) தமிழர்களுக்கு தாய்மொழிப்பற்று பெருக வேண்டும் என்பது யாருடைய பிரார்த்தனை?
தந்தை பெரியார்
185) காவிரிபூம்பட்டினத்துப் பெருவணிகர்கள்?
மாசாத்துவன், மாநாய்கன்
186) கோவலனனின் தந்தை?
மாசாத்துவன்
187) கண்ணகியின் தந்தை?
மாநாய்கன்
188) திருமகள் போன்ற அழகு மிக்கவள் யார்?
கண்ணகி
189) பெண்கள் போற்றும் பெருங்குணச் சிறப்பு மிக்கவள்?
கண்ணகி
190) கற்புத்திறம் மிக்கவள்?
கண்ணகி
191) ஆடலரசி என இளங்கோவடிகள் குறிப்பிடுவது யாரை?
மாதவி
192) ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தவன்?
கோவலன்
193) மாதவி இந்திரவிழாவில் பாடிய பாடல்?
கானல்வரிப் பாடல்
194) கோவலன் மாதவியை விட்டு பிரிய காரணம்?
கானல்வரிப் பாடலின் பொருளை தவறாக புரிந்துகொண்டதால்
195) வாணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் கோவலன் சென்ற ஊர்?
மதுரை
196) மதுரைக்குச் சென்ற கண்ணகி மற்றும் கோவலனுக்கும் வழித்துணையாக சென்றவர்?
கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி
197) கவுந்தியடிகள், கண்ணகியையும் கோவலனையும் யாரிடம் அடைக்கலப்படுத்தினார்?
மாதரி என்னும் இடைக்குல மூதாட்டி
198) பொய்யான பழியை கோவலன்மேல் சுமத்தியவன்?
பாண்டிய மன்னனின் பொற்கொல்லன்
199) பாண்டிமாதேவியின் காற்சிலம்பு களவுபோனதை ஆராய்ந்து பாராத மன்னன் எவ்வாறு ஆணையிட்டான்?
அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க
200) கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை கண்ணகி யார் மூலம் அறிந்தாள்?
மாதரி
===========================
Read More »

TNPSC|TRB|TET TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD||10ஆம் வகுப்பு பொதுத்தமிழ் |PART -1

TNPSC|TRB|TET STUDY MATERIALS|10ஆம் வகுப்பு தமிழ்
1) அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்?
மாணிக்கவாசகர்
2) மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர்?
மாணிக்கவாசகர்
3) மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம்?
ஒன்பதாம் நூற்றாண்டு
4) மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார்கோயில் எந்த ஊரில் உள்ளது?
திருப்பெருந்துறை – புதுக்கோட்டை மாவட்டம்
5) மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
திருவாதவூர்
6) அரிமர்த்தன பாண்டியனுக்கு குதிரைகள் வாங்கச் சென்றவர்?
மாணிக்கவாசகர்
7) திருவாதவூர் எந்த மாவட்டம்?
மதுரை மாவட்டம்
8) மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார் கோயில் எந்த மாவட்டம்?
புதுக்கோட்டை மாவட்டம்
9) சைவத்திருமுறைகளுள் எட்டாம் திருமுறை எவை?
திருவாசகமும் திருக்கோவையாரும்
10) திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?
658 பாடல்கள்
11) கல் நெஞ்சையும் கசிந்துருகச் செய்யும் பாடல்கள் அமைந்துள்ள நூல்?
திருவாசகம்
12) திருவாசகத்தின் சிறப்பை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
ஜி.யூ.போப்
13) நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் சொல்?
சதகம்
14) திருவாசகத்தில் உள்ள திருச்சதகத்தின் முதல் பாடல்?
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
15) திருவாசகத்தில் உள்ள திரு என்பது?
நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி
16) உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப்பொறுத்தல், இடையறாநிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை – என்று கூறியவர்?
ஜி.யூ.போப்
17) எம்முறையில் ஆராய்ந்து பார்த்தாலும் நல்ல துணையாக அமைவது ஒழுக்கமே என கூறும் நூல்?
திருக்குறள்
18) ஒருவர்க்கு அனைத்து சிறப்பையும் தருவது?
ஒழுக்கம்
19) ஒழுக்கம் உடையவர் மேன்மை அடைவர், ஒழுக்கம் இல்லாதவர் எதை அடைவர்?
அடையக்கூடாத பழியை அடைவர்
20) உலகம் முழுவதும் ஆளக் கருதுபவர் எதனை எதிர்பார்த்து காத்திருப்பர்?
அதற்குறிய காலத்தை எதிர்பார்த்து “கலங்காது” காத்திருப்பர்
21) செறுநர் என்பதன் பொருள்?
பகைவர்
22) தமிழுலகம் எவரை முதற்பாவலர் என போற்றுகிறது?
திருவள்ளுவர்
23) திருவள்ளுவரின் வேறு பெயர் எழுதுக.
தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர்
24) “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என பொதுநெறி காட்டிய புலவர்?
திருவள்ளுவர்
25) அறிஞர்களால் உறுதி செய்யப்பட்ட திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது?
கி.மு.31
26) தமிழக அரசு திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடிவரும் நாள்?
தைத் திங்கள் இரண்டாம் நாள்
27) திருக்குறள் என பெயர் பெற காரணம்?
மேன்மையான கருத்துக்களைக் குறள் வெண்பாக்களால் கூறுவதால்
28) இரண்டே அடிகளில் எழுதப்பட்டிருந்தாலும் விரிவான பொருளை தரும் நூல்?
திருக்குறள்
29) நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியவற்றை கடந்து நிற்கும் நூல்?
திருக்குறள்
30) உலகப்பொதுமறை என போற்றப்படும் நூல்?
திருக்குறள்
31) திருக்குறள் எத்தனை இயல்களை கொண்டுள்ளது?
ஒன்பது இயல்கள்
32) திருக்குறளின் பெருமைகளை போற்றிப் புகழும் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்ட நூல்?
திருவள்ளுவமாலை
33) வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே – என வள்ளுவரை போற்றிப் புகழ்ந்தவர்?
பாரதிதாசன்
34) இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே – என திருக்குறளை போற்றிப் புகந்தவர்?
பாரதிதாசன்
35) திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்?
ஞானப்பிரகாசம் (மலையத்துவசன் மகன்)
36) திருக்குறள் முதன் முதலில் பதிப்பித்து எங்கு வெளியிடப்பட்டது? ஆண்டு?
தஞ்சை – 1812
37) ஏலாதியை இயற்றியவர்?
கணிமேதாவியார்
38) கணிமேதாவியாரின் மற்றொரு பெயர்?
கணிமேதையர்
39) கணிமேதாவியார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?
சமண சமயம்
40) சமண சமயத்திற்கே உரிய உயரிய அறக்கருத்து என்ன?
கொல்லாமை
41) கொல்லாமையை வலியுறுத்திக் கூறும் நூல்?
ஏலாதி
42) கணிமேதாவியார் வாழ்ந்த காலம்?
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
43) கணிமேதாவியார் இயற்றியுள்ள நூல்கள்?
ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது
44) சிறப்புப் பாயிரம் தற்சிறப்புப் பாயிரம் உள்பட 81 வெண்பாக்களை கொண்டுள்ள நூல்?
ஏலாதி
45) நான்கடிகளில் ஆறு அருங்கருத்துக்களை நவில்கின்ற நூல்?
ஏலாதி
46) தமிழருக்கு அருமருந்தைப் போன்றதாகக் கருதப்படும் நூல்?
ஏலாதி
47) ஏலாதி எனும் மருந்துப்பொருள் எவற்றால் ஆனது?
ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி
48) உண்ணுபவரின் உடற்பிணியைப் போகும் மருந்தாக கருதப்படுவது?
ஏலாதி
49) கற்போரின் அறியாமையை அகற்றும் நற்கருத்துக்களைக் கொண்டுள்ள நூல்?
ஏலாதி
50) ஏலாதி நூலில் இடம்பெறும் “வணங்கி வழியொழிகி மாண்டார்சொல்” – எனத்தொடங்கும் பாடல் எத்தனையாவது பாடல்?
ஐம்பதொன்பதாவது பாடல் (59வது பாடல்)
51) வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி – என தமிழின் பெருமையை பறைசாற்றுபவர்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
52) தமிழ் எத்தனை ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளமிக்க மொழியாக திகழ்கிறது?
மூவாயிரம் (3000)
53) காலத்தால் மூத்த தமிழ்மொழி, தனித்தன்மையால் மிடுக்குற்று எவ்வாறு திகழ்கிறது?
செம்மொழியாகத் திகழ்கிறது
54) திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் – என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்?
பரிதிமாற்கலைஞர்
55) செம்மொழி என்பது எத்தனை செவ்வியல் தன்மைகளைக்கொண்டது?
பதினாறு செவ்வியல் தன்மைகள்
56) பதினாறு செவ்வியல் தன்மைகளைக்கொண்டது செம்மொழி, அதுவே நம்மொழி – என்றவர்?
தேவநேயபாவணார்
57) உலகில் எத்தனை மொழிகள் உள்ளன?
ஆறாயிரத்திற்கும் மேல்
58) உலகில் உள்ள மொழிகளுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் எத்தனை?
மூவாயிரம் (3000)
59) உலக மொழிகளுள் ஈராயிரமாண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள்?
தமிழ், சீனம், சமற்கிருதம், இலத்தின், ஈப்ரு, கிரேக்கம்
60) வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகளில் வழக்கிழந்து போன மொழிகள் எவை?
இலத்தின், ஈப்ரு
61) ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அம்மொழிக்கு வேண்டப்படும் அங்கீகாரங்கள் எவை?
1) பேச்சுமொழி
2) எழுத்துமொழி
3) ஆட்சிமொழி
4) நீதிமன்றமொழி
5) பயிற்றுமொழி
62) கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டத்தின் வேறுபெயர்?
இலெமூரியாக் கண்டம்
63) செம்மொழிக்கான தகுதிப்பாடுகள் பதினொன்று என கூறும் அறிஞர்?
முஸ்தபா (அறிவியல் தமிழறிஞர்)
64) முதல் மாந்தன் (மனிதன்) தோன்றிய இடம்?
குமரிக்கண்டம்
65) பழந்தமிழ்க் குமரிக்கண்டத்தில் அமைந்திருந்த தமிழ்ச்சங்கம்?
முதற்தமிழ்ச்சங்கம் மற்றும் இரண்டாம் தமிழ்ச்சங்கம்
66) மூன்றாவது தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்ட இடம்?
இன்றைய மதுரை (வட மதுரை)
67) உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, அதன் தொன்மை கருதி கம்பர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
என்றுமுள தென்தமிழ்
68) மொழிக்கலப்பு ஏற்படக் காரணம்?
காலச்சூழல்
69) எண்ணற்ற பிறமொழிச்சொற்கள் கலந்துள்ள மொழி?
ஆங்கிலம்
70) வடமொழியில் கலந்துள்ள பிறமொழிச்சொற்கள்?
தமிழ், பிராகிருதம், பாலிமொழி
71) பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது?
தமிழ் மொழி
72) மிகுதியான வேர்ச்சொற்களை கொண்டுள்ள மொழி?
தமிழ் மொழி
73) எதைக்கொண்டு தமிழ்மொழியில் புத்தம்புது கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ள இயலும்?
வேர்ச் சொற்க்களைக்கொண்டு
74) திராவிட மொழிகள் எவை?
தமிழ், தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம்
75) திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாயாக விலங்கும் மொழி?
தமிழ்மொழி
76) எந்த வடபுல மொழிக்கு தாயாக தமிழ்மொழி விளங்குகிறது?
பிராகுயி
77) பிராகுயி போன்ற வடபுல மொழிகளுக்கும் தாயாக விளங்குவது தமிழ் – என்று கூறியவர்?
டாக்டர்.கால்டுவெல்
78) தமிழ்மொழி எத்தனை மொழிகளுக்கு வேர்ச்சொற்களைத் தந்துள்ளது?
ஆயிரத்தெண்ணூறு (1800)
79) தமிழ்மொழி எத்தனை மொழிகளுக்கு உறவுப்பெயர்களைத் தந்துள்ளது?
நூற்றெண்பது (180)
80) தமிழில் உள்ள முப்பெரும் பிரிவுகள்?
இயல், இசை, நாடகம்
81) வாழ்வியலுக்கு தமிழர் எவ்வாறு இலக்கணம் வகுத்தனர்?
அகம், புறம்
82) மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ள நூல்?
திருக்குறள்
83) உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை?
சங்க இலக்கியங்கள்
84) இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கெனத் தனிநோக்கும் போக்கும் கொண்டுள்ள மொழி?
தமிழ்மொழி
85) சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் எத்தனை?
26,350 அடிகள்
86) சங்க இலக்கியங்களில் 26,350 அடிகளைக் கொண்டு அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை – என்பது யாருடைய கூற்று?
கமிலசுவலபில்
87) செக் நாட்டின் மொழியியல் பேரறிஞர்?
கமிலசுவலபில்
88) தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்று கூறிய மொழி நூலறிஞர்?
மாக்ஸ்முல்லர்
89) தமிழ்மொழி தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களை பெற்றிருக்கும் மொழி – என்று கூறியவர்?
மாக்ஸ்முல்லர்
90) மக்கள் இலக்கியம் என்றும் அழைக்கப்படுவது?
சங்க இலக்கியங்கள்
91) தமிழ்மொழியின் இலக்கண அமைப்பு எப்படிப்பட்டது?
தனிச்சிறப்பு உடையது, நுண்ணிய அறிவை உண்டாக்கவல்லது
92) தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது – என்றவர்?
கெல்லட்
93) நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழைமையனது?
தொல்காப்பியம்
94) தொல்காப்பியம் எவற்றிற்கு இலக்கணம் கூறுகிறது?
எழுத்து, சொல், பொருள்
95) தொல்காப்பியத்தின் ஆசிரியர்?
தொல்காப்பியர்
96) தொல்காப்பியரின் ஆசிரியர்?
அகத்தியர்
97) அகத்தியர் எழுதிய ஐந்து இலக்கணங்கள் எவை?
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
98) அகத்தியர் எழுதிய ஐந்திலக்கண நூலின் பெயர்?
அகத்தியம்
99) தமிழ் இலக்கியங்கள் கூறும் பொதுமை அறங்கள் எவை?
  1) ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  2) தீதும் நன்றும் விளைவது அவரவர் செயலால்
  3) செம்புலப் பெயல்நீர்போல் அன்புள்ளம்
100) இனம், மொழி, மதம் கடந்த நூல்கள் எவை?
சங்க இலக்கியங்கள்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One