Search

5-ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் கணக்கு ஆங்கில வழி அனைத்து பாடங்களின் மாதிரி திறனறித்தேர்வு 200 வினாக்கள்

Tuesday 11 February 2020


Click here to download

ஆக்கம்
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
Read More »

தகுதி தேர்வு எழுதாவிட்டால் வேலையைவிட்டு விலகவேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மும்பை ஐகோர்ட் கண்டிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 2009ம் வருடத்திய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வித்துறை இயக்குனர் (ஆரம்ப கல்வி) உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார். அதன்படி, அனைத்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.) எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கிறது.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். பள்ளி நிர்வாகம் இந்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கத்தவறினால் அவர்களுக்கான சம்பள பொறுப்பை அந்த பள்ளிகள்தான் ஏற்க வேண்டும். அரசு எந்தவொரு தொகையையும் அவர்களுக்கு வழங்காது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்து இருந்தனர். இந்த நிலையில் கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பல மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தங்களை வேலையில் இருந்து எடுத்தால் அது கல்வி முறையில் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.


இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.தர்மாதிகாரி மற்றும் ரியாஸ் சாக்ளா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்களுக்கு சலுகை காட்ட மறுத்த நீதிபதிகள், 'தகுதி தேர்வு எழுதுங்கள் அல்லது வேலையை காலி செய்துவிட்டு கூடுதல் தகுதி கொண்டவர்களுக்கு வழிவிடுங்கள்' என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Read More »

புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் நியமனம்

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், நிா்வாக நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே பணியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.



இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளா் தீரஜ் குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தலா ஒரு முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடம் வீதம், ஐந்து முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடம் உள்பட பிற அலுவலா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நிா்வாக நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே பணியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.



பணியிட மாற்றம்: கோயம்புத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா கோயம்புத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநா் குணசேகரன் திருப்பத்தூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். திருவளா்ச்செல்வி தமிழ்நாடு மாநில பெற்றோா்-ஆசிரியா் கழகத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலாளா் வி.வெற்றிச்செல்வி திருவள்ளூா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.



புதிய மாவட்டங்களுக்கு...: இதைத் தொடா்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடங்களில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்புவதற்கு மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அதில், தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். சத்தியமூா்த்தி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், பழனி மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.கருப்பசாமி, தென்காசி முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். அருள்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்படுகின்றனா்.



அதேபோன்று, கோயம்புத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் என். கீதா தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், மத்திய சென்னை மாவட்டக் கல்வி அலுவலா் ஜி.பி.சுந்தரராஜ் தொடக்க கல்வித் துறையில் துணை இயக்குநா் பணியிலும், மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலா் கே. குமரன் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பணியிலும், திருப்பத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் ஜி.பரம தயாளன் ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலா் பணியிலும் நியமனம் செய்யப்படுகின்றனா் என அதில் தெரிவித்துள்ளாா்.
Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.20


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.20

திருக்குறள்

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

விளக்கம்:

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

பழமொழி

Evil begotten evil

 கெடுவான் கேடு நினைப்பான்

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.

2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, பிரச்சனைகள் தோற்கடிக்க அனுமதிக்க கூடாது.

Dr. அப்துல் கலாம்

பொது அறிவு

1.மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் எது?

 நெருப்புக்கோழி

2.சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுவது எது?

 முகுளம்

English words & meanings

 Numismatics – study of coins. நாணயங்கள் குறித்த படிப்பு.

Navigable - water bodies used for transport. கடல் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற

ஆரோக்ய வாழ்வு

இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு .எனவே இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

Some important  abbreviations for students

GC - Game console. 

CO - Co-opted

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்
துறவியின் அன்பு

குறள் :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.

விளக்கம் :
தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.

கதை :
ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார், ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

நீதி :
நமக்கு ஒருவர் தீமையை செய்தாலும் அவர்களுக்கு நாம் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள்

12.02.20

◆கால்நடைத் துறை பணியிடங்களுக்கான தேர்வு சென்னையில் மட்டும் நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

◆பள்ளிகளில் நன்கொடை வசூலிக்கப்பட்டாலோ, ஏப்ரலுக்கு முன்னால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

◆சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு திருச்சூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு மாணவி முழுவதுமாக குணமடைந்து உள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

◆ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்காக ஆலன் பார்டர் விருதை தொடக்க வீரர் டேவிட் வார்னர் வென்றார்.

◆மணிலாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லவும், தரவரிசை புள்ளிகளை ஈட்டவும் இந்திய ஆடவா் அணி தயாராக உள்ளது.

Today's Headlines

🌸 The Veterinary Department exams will be held in Chennai only says Tamil Nadu Public Service Commission.

🌸 If schools took donations or admitted the students before April  serious actions will be taken against them warns School Education Minister Senkottaiyan.

🌸 Three people who returned from China is affected with Corona virus. For them treatment is going on at Tirichur Hospital in an isolated ward. Out of the three one student recovered completely and will return home says Kerala Government.

  🌸 Opening player David Warner wins Alan Border Award for best Australian T20 cricketer

 🌸The Indian Badminton Team is getting ready to bag the medal and earn points in the Asian Badminton Teams Championship yet to start on Tuesday in Manila.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

பணியிடை நீக்கம் செய்தாலும் ஜீவனப்படி வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்திற்குரிய  ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தில் உள்ள தனிநபர்  வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை  மீறிய செயல் - சென்னை உயர் நீதிமன்றம்

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றிய இளங்கோ என்பவர், கையாடல் குற்றச்சாட்டு காரணமாக, பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் தனக்கு ஜீவனப்படி வழங்கக் கோரி இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜீவனப்படி வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஜமீன் இளம்பள்ளி கூட்டுறவு வங்கி தலைவர் உள்ளிட்டோர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, கூட்டுறவு சங்கச் செயலாளர் ஊழியர் அந்தஸ்துக்குள் வராததால், அவருக்கு ஜீவனப்படி வழங்க முடியாது என, கூட்டுறவு சங்க விதிகளையும், தமிழக அரசின் ஜீவனப்படி தொடர்பான சட்டப் பிரிவுகளையும் சுட்டிக் காட்டி மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.  பணியிடைநீக்க காலத்தில் வாழ்க்கையை நடத்துவதற்காக வழங்கும் ஜீவனப்படியை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறுவதைப்போன்றது என, செயலாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் சட்டத்தின் கீழும், கூட்டுறவு சங்க விதிகளின் கீழும், செயலாளரை ஊழியராகக் கருத முடியாது என்றபோதும், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனப்படியை முழுமையாக மறுப்பதென்பது, அரசியல் சாசனத்திலுள்ள தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் எனச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், ஜீவனப்படி கோரி இளங்கோ அளித்த மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Read More »

https://southkingprayer.blogspot.com/2020/02/12-02-2020-923.html?m=1
👆👆👆👆👆👆👆👆
காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
12-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 923

அதிகாரம் : கள்ளுண்ணாமை

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
 சான்றோர் முகத்துக் களி.


பொருள்:

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

”தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்”.

 -புத்தர்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

Little drops of water make a mighty ocean.

சிறுதுளி பெருவெள்ளம்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words
(Gems - இரத்தினங்கள்)

1. Carbuncle - மாணிக்கம்
2. Coral - பவளம்
3. Diamond - வைரம்
4. Emerald - மரகதம்,பச்சை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு


 1. விஜயநகர கட்டிடக் கலையின் சான்றாக விளங்குவது எது ?

ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

2. வேலூரில் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம் எங்குள்ளது?

இராணிப்பேட்டை

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. He shut the door with a bang.
2. The kitchen had a bare cupboard.
3. The plumber worked with an iron bar.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

சவுக்கு மரம்

🌲 சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட மரப்பயிராகும். 

🌲 சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய, பசுமை மாறா அழகிய தோற்றம் கொண்ட, ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும்.கடற்கரைப் பகுதிகளில் நன்கு வளரும் இயல்பை உடையது.

🌲சவுக்கு வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளரக் கூடிய மரமாக இருப்பதால் வறட்சியான பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஒரு நல்ல செய்தி

ஒரு ஊரில் யார் ஒருவர் நல்ல செய்தி கூறினாலும் நல்ல செய்தி சொன்னவருக்கு அவ்வூரில் உள்ள மக்கள் அனைவரிடமும் ஒன்றாக சேர்ந்து பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம். முல்லா, அந்த மக்களின் ஒருவிதமான மூடநம்பிக்கைக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்கு சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்கு பரிசு தருவதற்காக, உடனே பணம் வசூலியுங்கள் என்று கூச்சல் போட்டார்.

முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்று நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர்.

அந்த அன்பளிப்பு தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லா ஒரு மகனுக்கு தந்தையாகியிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நீதி :
மூடநம்பிக்கையை வளர்க்கக்கூடாது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் சென்னையை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

🔮வங்காளதேசத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 14 ரோஹிங்யா அகதிகள் பலியாகி உள்ளனர்.

🔮டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

🔮அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது.

🔮தாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

🔮இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

🔮சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.

HEADLINES
🔮U.S. President Donald Trump to visit India on February 24 and 25: White House.

🔮WHO warns of 'very grave' global threat over Coronavirus spread.

🔮China 'commends' Sri Lanka PM Mahinda Rajapaksa's defence of BRI during his India visit.

🔮Sports Ministry set to order inquiry into 'unauthorised' Pakistan trip by kabaddi players.

🔮PM Modi congratulates Arvind Kejriwal for Delhi win.

🔮High-flying Kiwis inflict first ODI series whitewash on India in 31 years.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
Read More »

https://southkingprayer.blogspot.com/2020/02/12-02-2020-923.html?m=1
👆👆👆👆👆👆👆👆
காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
12-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 923

அதிகாரம் : கள்ளுண்ணாமை

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
 சான்றோர் முகத்துக் களி.


பொருள்:

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

”தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்”.

 -புத்தர்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

Little drops of water make a mighty ocean.

சிறுதுளி பெருவெள்ளம்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words
(Gems - இரத்தினங்கள்)

1. Carbuncle - மாணிக்கம்
2. Coral - பவளம்
3. Diamond - வைரம்
4. Emerald - மரகதம்,பச்சை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு


 1. விஜயநகர கட்டிடக் கலையின் சான்றாக விளங்குவது எது ?

ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

2. வேலூரில் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம் எங்குள்ளது?

இராணிப்பேட்டை

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. He shut the door with a bang.
2. The kitchen had a bare cupboard.
3. The plumber worked with an iron bar.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

சவுக்கு மரம்

🌲 சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட மரப்பயிராகும். 

🌲 சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய, பசுமை மாறா அழகிய தோற்றம் கொண்ட, ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும்.கடற்கரைப் பகுதிகளில் நன்கு வளரும் இயல்பை உடையது.

🌲சவுக்கு வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளரக் கூடிய மரமாக இருப்பதால் வறட்சியான பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

ஒரு நல்ல செய்தி

ஒரு ஊரில் யார் ஒருவர் நல்ல செய்தி கூறினாலும் நல்ல செய்தி சொன்னவருக்கு அவ்வூரில் உள்ள மக்கள் அனைவரிடமும் ஒன்றாக சேர்ந்து பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம். முல்லா, அந்த மக்களின் ஒருவிதமான மூடநம்பிக்கைக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்கு சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்கு பரிசு தருவதற்காக, உடனே பணம் வசூலியுங்கள் என்று கூச்சல் போட்டார்.

முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்று நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர்.

அந்த அன்பளிப்பு தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லா ஒரு மகனுக்கு தந்தையாகியிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நீதி :
மூடநம்பிக்கையை வளர்க்கக்கூடாது.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:

T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் சென்னையை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

🔮வங்காளதேசத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 14 ரோஹிங்யா அகதிகள் பலியாகி உள்ளனர்.

🔮டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

🔮அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

🔮சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது.

🔮தாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

🔮இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

🔮சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.

HEADLINES
🔮U.S. President Donald Trump to visit India on February 24 and 25: White House.

🔮WHO warns of 'very grave' global threat over Coronavirus spread.

🔮China 'commends' Sri Lanka PM Mahinda Rajapaksa's defence of BRI during his India visit.

🔮Sports Ministry set to order inquiry into 'unauthorised' Pakistan trip by kabaddi players.

🔮PM Modi congratulates Arvind Kejriwal for Delhi win.

🔮High-flying Kiwis inflict first ODI series whitewash on India in 31 years.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
Read More »

முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை - 11-02-2020

Read More »

மாணவர் சேர்க்கைக்காக வரம்புக்கு மீறி நன்கொடையை பெறுவோர் மீது, 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் !

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக வரம்புக்கு மீறி நன்கொடையை பெறுவோர் மீது, 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பள்ளி குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறுந்தகடு மற்றும் புத்தக வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார். 

மத்திய அரசு வெளியிட்டுள்ள மாணவர்கள் இடைநிற்றல் குறித்த புள்ளி விவரங்களை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து வருகிறார்கள், என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்ட பாடங்களை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சி கையேடு தயாரிக்கும் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகிறது, என்றும் தெரிவித்தார். 

மேலும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு, வரம்பு மீறி நன்கொடை வசூலித்தால், 48 மணி நேரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஏப்ரல் மாதத்தில் தான் நடத்தவேண்டும் என்றும், செங்கோட்டையன் தெரிவித்தார்
Read More »

ஊதிய முரண்பாடு - கருத்துரு அளிக்க ஆசிரியர் சங்கத்துக்கு இன்று அழைப்பு!

I am to invite your attention to the references cited and inform that the Pay Grievance Redressal Committee has proposed to hold personal hearing with your Association on 11 . 02 . 2020 at 2 . 30 PM in the premises of Government Data Centre , Chennai - 25 .


2 . I am also lo inform that only three office bearers of your Association will be permitted to make submissions during the personal hearing convened by the Chairman , Pay Grievance Redressal Committee .
 
 
Read More »

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அரசு அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஊதிய மாற்றங்களின்போது அளிக்கப்பட வேண்டிய 21 மாத நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி களப்பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள், பல்வேறு அரசு துறைகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் என்று நிரந்தர ஊதியம் இல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு அவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் மற்றும் பணி நிரந்தரம் செய்யப் படவேண்டும். தமிழ்நாட்டில் 3 லட்சம் மத்திய, மாநில பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுகிறது. நிர்வாக சிக்கல்கள் எழுகின்றன. இந்த சிக்கல்களால் அனைத்து அரசுத்துறை பணியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

தமிழக அரசு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வருகிற 14ம் தேதி சட்டமன்ற கூட்டத்தை நடத்தவிருக்கிறது. இந்தநிலையில் எங்களுடைய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு நினைவூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் வருகிற 14ம் தேதி விழுப்புரம் நகராட்சி திடலில், மாநில அளவில் அரசு பணியாளர் சங்கத்தினுடைய மாநில நிர்வாகிகள், மாநில மாவட்ட நிர்வாகிகள், இணைப்பு சகோதர சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னணி பணியாளர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More »

5th Std Public Exam 2020 - Official Question Paper, Exam TimeTable, Syllabus, Guides, Notes Of Lesson Study Materials Download Here

Read More »

கட்ட பஞ்சாயத்து ஆசிரியர்கள் யார் யார்? - பட்டியல் தயாரிக்கிறது பள்ளிக்கல்வித்துறை

வகுப்பு எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை பட்டியல் சேகரித்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்துக்கும், முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களின் பெயர்களை கெடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை தவிர, மற்ற சர்ச்சைக்குரிய வேலைகளில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

குற்றச்சாட்டுசில முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களிடம், அதிக கட்டணம் பெற்றுக்கொண்டு, தங்கள் வீடுகளிலும், தனியார் மையங்களிலும் டியூஷன் எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால், தாங்கள் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பாட திட்டத்தின்படி முழு பாடங்களையும் நடத்தாமல், அரைகுறையாக விட்டு விடுகின்றனர். அதேபோல, சில ஆசிரியர்கள் ஏதாவது ஒரு சங்கம் துவக்கி அல்லது சங்க நிர்வாகிகளாக பதவி வகித்து, கட்டப்பஞ்சாயத்து செய்வதையே முழு நேர பணியாக மேற்கொள்வதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆசிரியர்கள் பணி நியமனம், ஆசிரியர்கள் பணியிட மாாறுதல், தங்கள் குடும்ப மற்றும் உறவினர்களாக உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற்று தருவது, தரநிலை ஊதியம் வாங்கி கொடுப்பது போன்ற பணிகளுக்கு, இடைத்தரகராக செயல்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பள்ளி வேலையை விட்டு விட்டு, அந்த நேரத்தில், கல்வி அலுவலகங்களுக்கு சென்று, இடைத்தரகர் பணிகளை மேற்கொள்வதும், தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் நடந்து கொள்வதும், அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற ஆசிரியர்கள், தங்களது காரியங்களுக்காக, அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்தும், பிற ஆசிரியர்கள் குறித்தும், புகார் கடிதம் எழுதுவது, வேறு நபர்கள் துணையுடன் வழக்கு போடுவது, 'வாட்ஸ் ஆப்' இல் வதந்திகளை பரப்பி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற, தில்லுமுல்லு வேலைகளிலும் ஈடுபடுவதாக, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் சில மாவட்ட அதிகாரிகள், பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பட்டியலை, பள்ளி கல்வி துறையும், உளவு துறையும் திரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒழுங்கு நடவடிக்கை

இதில், மதுரை, விருது நகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில், பல கட்டப்பஞ்சாயத்து ஆசிரியர்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

அவர்கள் மீது, விரைவில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More »

BEO தேர்வர்களுக்கு TRB புதிய அறிவிப்பு - ஹால்டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?


ஆசிரியர் தேர்வு வாரியம் ,
சென்னை - 600 006

பத்திரிக்கைச் செய்தி

 2018 - 2019ம் ஆண்டிற்கு வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது .
இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www . trb . tn . nic . in - ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து 07 . 02 . 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது .

இதில் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம் / நகரம் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது . தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது . எனவே தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியினை பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள Admit card - ஐ கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நாளன்று தேர்வு எழுதும் மையத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது .
தேர்வு தேதி - அனுமதி சீட்டு வெளியிடும் நாள் 14 . 02 . 2020 - 10 . 02 . 2020 15 . 02 . 2020 - 11 . 02 . 2020 16 . 02 . 2020 - 12 . 02 . 2020 நாள் : 10 . 02 . 2020 .
Read More »

PGTRB ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு முன் பின்பற்ற வேண்டியது குறித்த செயல்முறைகள்!!

PGTRB ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு முன் பின்பற்ற வேண்டியது குறித்த செயல்முறைகள்!!



Read More »
 

Most Reading

Tags

Sidebar One