Search

பிளஸ் 1, 'அட்மிஷன்' பள்ளிகளுக்கு தடை

Sunday 14 June 2020

தற்போதைய சூழலில், பிளஸ் 1 உட்பட எந்த வகுப்புக்கும், மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது' என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


நாடு முழுவதும், கொரோனா தொற்றால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகள் தரப்பில், மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பல தனியார் பள்ளிகள், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளன. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கொள்ள, மாணவர்களுக்கு, பள்ளிகள் பரிந்துரைத்துள்ளன.


இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.கொரோனா பேரிடர் காலத்தில், அரசு அறிவிக்கும் அத்தியாவசிய பணிகளை தவிர, வேறு கற்பித்தல் பணிகள், மாணவர் சேர்க்கை, தேர்வு நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. இந்த உத்தரவை மீறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Read More »

பிளஸ் 1 பாடத் திட்டத்தில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த பிளஸ் 1 பாடத்திட்டம், நிகழ் கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


மாணவா்களின் மன அழுத்தம் மற்றும் உயா்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்பில் புதிய பாடத் திட்ட முறையை 2020-21-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது, பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டுமே மாணவா்கள் தோ்வு செய்து படிக்கலாம்.

இதையடுத்து மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத்தொகுப்பைத் தோ்வு செய்ய பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், தனியாா் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். 


இதற்கிடையே, சில தனியாா் பள்ளிகள் விதிகளை மீறி சோ்க்கை முடித்துவிட்டு புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி கோருவது போன்ற நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் நடைபெற்றன. எனவே, புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் எந்தப் பள்ளியும் மாணவா் சோ்க்கையை நடத்தக்கூடாது. மேலும், தொடா் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கும் புதிய பாடத்தொகுப்புக்கான அனுமதி தர இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தற்போது 10-ஆம் வகுப்பில் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆா்வம் காட்டி வருகின்றன. 

மாணவா் பெற்றோரிடம் இது தொடா்பாக பள்ளி நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக, பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. 10-ஆம் வகுப்புக்கு இன்னும் தோ்ச்சி முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், மாணவா் சோ்க்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக்கல்வித் துறை தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
Read More »

இம்மாத இறுதியில் பிளஸ் 2, 'ரிசல்ட்'

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. அன்றைய தினம், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அந்த நாளில் நடந்த தேர்வுகளில் மட்டும், 36 ஆயிரம் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க முடியவில்லை; அவர்களுக்கு மட்டும், பின்னர் மறு தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. ஜூன், 10ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும், பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தம் முடிந்தது. இதையடுத்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து, பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த பணிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இன்று துவங்குகின்றன. இன்னும் ஒரு வாரத்தில், இப்பணிகள் முடிந்து, இம்மாத இறுதியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஒரு பாடத்திற்கான தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மட்டும் முடிவை நிறுத்தி வைத்து, மற்றவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட, தேர்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
Read More »

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கணித பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, முதுநிலை கணிதம் குறித்து, ஆன்லைனில் இலவச பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை கணித ஆசிரியர்களுக்கு, தனியார் நிறுவனம் வழியாக, ஆன்லைனில், 10 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் என்ற தலைப்பில், இந்த பயிற்சியை, ஆசிரியர்கள் பெறலாம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கணிதத்தில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆசிரியர்கள் கற்பிப்பதற்கு, இந்த பயிற்சி உதவும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தினமும் காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, நேரலை பயிற்சியும், பின், மாலை, 5:00 மணி வரை, ஆன்லைன் வழி பயிற்சியும் வழங்கப்படும். இந்த பயிற்சி பெற விரும்பும் ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம் என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது
Read More »

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதனையடுத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தலா ஒரு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.அதனையடுத்து, மார்ச் 27 ல் துவங்கி ஏப்., 13ம் தேதி வரை நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வும் முழுமையாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 ஒரு பாடத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த 9ம் தேதி அறிவித்தார்.
மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவித்தார். இதனையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிக்க, வருகை பதிவேட்டை, கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் வருகைப் பதிவை, மார்ச் 21 வரை முழுமையாக உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அந்த வருகைப்பதிவேட்டை, ஒவ்வொரு பிரிவு வாரியாக காட்டி, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை, மாவட்ட கல்வி அலுவலகத்தில், கிருமிநாசினி தெளித்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன.

இதில், 439 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. அதில், 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் என 35,546 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். இந்நிலையில், கடலுார், வடலுார், விருத்தாசலம், சிதம்பரம் கல்வி மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, பள்ளி நிர்வாகங்கள் நேற்று ஒப்படைத்தன. இதனையடுத்து, மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
Read More »

மேல்நிலை வகுப்பில் புதிய பாடத்தொகுப்பு தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்


பள்ளிக் கல்வித்துறை 18.09.2019 ல் வெளியிட்ட  அரசாணை 166 ன்படி  11 ஆம் வகுப்பு சேர்பவர்கள் 2020-21 கல்வி ஆண்டில்,  மொழிப் பாடங்களுடன் மூன்று முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (500 மதிப்பெண்கள்), அல்லது மொழிப்பாடங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது தொலைக்காட்சியில் வரும் " 2020-21 முதல் 500 மதிப்பெண்ணுக்கான புதிய பாடத்தொகுப்பு முறை அமலுக்கு வருகிறது " என்ற செய்தியைக் கேட்டு யாரும் குழம்பிட வேண்டாம்.

   புதிய படத்தொகுப்பு முறையையோ( 3 Main subjects - 500) அல்லது தற்போது நடைமுறையில் உள்ள முறையையோ ( 4 Main subjects - 600) தெரிவு செய்து கொள்ளலாம்.
Read More »

வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு ரூ. 86,300 கொடுத்த முன்னாள் மாணவர்கள் .!

ஆந்திர மாநிலத்தில் வாழைப்பழம் விற்ற ஆசிரியருக்கு 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ரூ. 86,300 கொடுத்து உதவினார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வெங்கட சுப்பையா வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது.

இதனால், வெங்கடசுப்பையா ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெங்கட சுப்பையா மற்றும் அவருடன் வேலை செய்து வந்த 5 பேரையும் காணொலி மூலம் அழைத்த பள்ளி நிர்வாகம்,வேலையில் திருப்திகரமாக இல்லை எனக்கூறி வேலையை விட்டு நீக்கியது.

பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு பாடங்களை எடுப்பதை விட பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதே பெரும் பணியாக எங்களுக்கு கொடுக்கப்பட்டது

புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்க நாங்கள் முயற்சி எடுக்காததால் பள்ளி நிர்வாகம் எங்களை வேலையை விட்டு நீக்கப்பட்டதாக வெங்கட சுப்பையா கூறினார்.

இந்நிலையில், தான் பள்ளியில் வேலை இழந்ததால் வேறு வழி இல்லாமல் வெங்கடசுப்பையா வாழைப்பழம் விற்கத் தொடங்கிவிட்டார். இவரின் நிலைமையை அறிந்த அவரிடம் படித்த 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ரூ. 86,300 -ஐ வழங்கி உதவி செய்தனர்.
Read More »

1 முதல் 12 வரை ஆன்லைன் கல்வி பயில முடியாமல்: அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பு

ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பை உருவாக்குமா? வழக்கம்போல் வெளுத்து வாங்கும் தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் சமூக ஊடகங்கள், இணைய தளம் மூலம் தங்கள் மாணவர்களுக்கு கல்வி சேவையை தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் பல லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த கல்வி சேவை கிடைக்காமல் தவிக்கின்றனர். இதற்கான வாய்ப்பை அரசு உருவாக்க வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த கல்வியாண்டு முழுமையாக நிறைவு பெறாமல் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. பொதுத்தேர்வுகளை கூட முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

புதிய கல்வி ஆண்டிற்காக ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும். ஆனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் நிலையே தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மாணவர்கள் வீடுகளில் முடங்கும் நிலை முதல் முறையாக ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் மன உளைச்சல், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் வரை ஆல் பாஸ் என அரசு அறிவித்துவிட்டது. இதேபோல் 11 ஆம் வகுப்பிற்கு நடத்தப்படாத 3 தேர்வுக்கு மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மட்டும் நடத்தி முடிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் அடுத்தநிலை வகுப்பிற்கு செல்வது உறுதியாகி உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கான களத்தில் இறங்கி விட்டன.

பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தி அடுத்த நிலை வகுப்பிற்குரிய பாடங்களை பகலில் குறிப்பிட்ட நேரங்களில் கற்றுத் தருகின்றனர். மேலும் பல பள்ளிகள் செயலிகளை உருவாக்கி மாணவர்களுக்கு நேரலையாக பாடங்களை கற்றுத் தருகின்றன. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த முயற்சிக்கு ஓரளவு பலன் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீர்த்து போயுள்ளன.
இதனால் 2 மாதமாக வீடுகளில் முடங்கி இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் தற்போது ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நேரடியாக கற்கத் துவங்கியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இதுபோன்ற எந்த கல்விச்சேவையும் கிடைக்கவில்லை. அரசு தற்போதைக்கு தனது ஒரே சேவையாக கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்துகிறது. இது மாணவர்களை ஒருமுகப்படுத்தி பார்க்க வைக்கும் அளவிற்கு அமையவில்லை. சில அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றுத் தருவது போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் வரை இணையதள சேவை மூலம் வகுப்பறை உருவாக்கி பாடங்களை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகள் உள்ளதா என்பது குறித்து கல்வியாளர், பெற்றோர், ஆசிரியர், மாணவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பாண்டுரங்கன் (கல்வி புரவலர் மற்றும் கல்வி ஆர்வலர்): எந்த முறை வகுப்பாக இருந்தாலும் அது பெரும்பான்மை மாணவர்களை மையப்படுத்தி இருப்பது அவசியமாகும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில்தான் அதிக ஏழை மாணவர்கள் பயில்கின்றனர். கிராமப்புற மாணவர்கள் அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பி பயில்கின்றனர். வகுப்பறைக் கல்வியே என்றும் சிறந்ததாக இருக்கிறது. மாணவர்களை வகுப்பறையில் மட்டுமே ஒருமுகப்படுத்தி பாடம் நடத்த முடியும். அவர்கள் பல ஒழுக்கங்களை ஆசிரியர்களிடம் கற்றுக் கொள்கின்றனர். சக மாணவர்களிடமிருந்து உலக நடப்பையும், வாழும் கலையையும் கற்று சமூகத்தில் சிறந்தவர்களாக வளர்கின்றனர். ஆன்லைன் கல்வியில் கவனச்சிதறல் வாய்ப்பு அதிகம் உள்ளது. நேரடி தகவல் பரிமாற்றம் மாணவர்களுக்கு கிடைக்காது. உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இருக்காது. மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு இது முழுமையாக சாத்தியப்படாது. அவர்கள் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். நாமெல்லாம் கல்வி பயிலும் போது ஆசிரியரிடம் அடிவாங்கி தான் பயின்றோம். ஆசிரியரும் எளிமையாக பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு வந்து செல்வார். ஆனால் இன்றைய நிலை அப்படி அல்ல. ஆன்லைன் கல்வியில் மாணவர்கள் ஆசிரியர் உறவு மேலும் தொலைவில் செல்லும் வாய்ப்பு உள்ளது.

ஆயினும் தற்காலிக தீர்வாக ஆன்லைன் கல்வியை தனியார் பள்ளிகள் வழங்குவது போல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய அரசு உடனடியாக தனி குழு அமைக்க வேண்டும். உரிய ஆய்வு செய்து விரைவில் அதை அமல்படுத்துவது அரசுப்பள்ளி ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும். 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்ப கல்வி வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.வெங்கடாசலம் (பெற்றோர், காரியாண்டி): கொேரானா வேகமாக பரவுவதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் பயம் அனைத்து பெற்றோருக்கும் அதிகமாக உள்ளது. கொரோனா முழுமையாக அழிந்தாலும் இந்த அச்சம் விலகுமா எனத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளில் இப்போது ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் பாடம் கற்றுத் தருகின்றனர். இந்த வாய்ப்பு அரசு பள்ளிகளில் இல்லை. நாங்கள் காலையிலேயே விவசாய பணிக்கு சென்று விடுவோம். மாலையில்தான் வீடு திரும்புவோம். மாணவர்களின் எதிர்காலம் கருதி படிப்புக்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தாலும், அதை அவர்கள் கல்விக்கு தான் பயன்படுத்துகிறார்களா என்பதை எங்களால் கண்காணிக்க முடியாது. சிறிய கிராமங்களில் செல்போன் சேவை கூட முழுமையாக கிடைக்காத நிலைதான் உள்ளது. நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் தொழில்நுட்ப கல்வி வசதி எங்களை போன்ற சிறு கிராம மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் பெற்றோர் மத்தியில் உள்ளது.

அரசுதான் இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் செல்ல மேலும் சில மாதம் ஆகும் என்ற நிலை ஏற்பட்டால் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க ஏதாவது திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்றார். மாரிமுத்து (மாணவர், ராமகிருஷ்ணா புரம், நெல்லை மா வட்டம்): ஆன்லைன் வகுப்பில் பாடம் பயின்ற முன் அனுபவம் என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இல்லை. நான் இப்போது ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பிற்கு சென்றுள்ளேன். பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் அமல் படுத்தி இருக்கிறார்கள். வகுப்பே தொடங்காத நிலையில் பத்தாம் வகுப்பிற்கு உரிய பாடங்களை பயில வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.
தனியார் பள்ளிகளைப் போல் நாங்களும் ஆன்லைனில் கற்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் ஆசிரியர்கள் தனது மொபைல் போன் அல்லது வசதியுள்ள கம்ப்யூட்டர் ஸ்கிரீன் வீடியோ வகுப்பு போன்றவற்றை நடத்தியிருக்கின்றனர். எங்கள் வீட்டில் எல்லாம் ஸ்மார்ட்போன் வசதியும் இல்லை. ஸ்மார்ட்போன் வசதி உள்ள பெற்றோர் வேலைக்கு செல்கையில் அதை கையில் எடுத்துச் சென்றால் வீட்டிலிருக்கும் மாணவர்கள் பகல் நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் பயில முடியாது. எனவே பள்ளி திறக்கும் வரை தனியார் பள்ளி மாணவர்கள் போல் நாங்களும் வீட்டிலிருந்தே பாடம் கற்க அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தால் ஆர்வமுடன் படிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

சுந்தரகுமார் (ஆங்கில ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி):
நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழக அரசும் கல்வி பாடத்திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளாகவே தயார்படுத்தி வருகிறது. தற்போது மாற்றம் செய்யப்படும் அனைத்து பாடப் புத்தகங்களிலும் 'கியூ ஆர் கோடு' என்ற வசதி உள்ளது.
டிக்க்ஷா என்ற செயலி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிகளையும் அதற்கான தொழில்நுட்ப ஒளிபரப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு கணினி முறையில் கையாண்டு பாடம் கற்பிக்க ஐசிடி பயிற்சி உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப வசதி வைத்து பல ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்கனவே பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறோம். தொலைக்காட்சி வசதி ஏற்படுத்திய பள்ளிகளில் கல்வி சேனல் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும் வீடியோ படக் காட்சிகள் மூலமும் அரசு பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்பட்ட முன்னோட்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. முதுகலை ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல் பிளஸ்-1 பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் அரசு வழங்கியிருக்கிறது. இவை எல்லாமே வகுப்பறையில் வைத்து மாணவர்களுக்கு நேரடியாக கற்றுத் தந்திருக்கிறோம். இப்போதுள்ள கொரோனா சூழல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க அரசு அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி திட்டங்களை வழங்குவது போல் 'டேப்லட் பிசி' வழங்கும் வாய்ப்பை உருவாக்கினால் மாணவர்கள் வீட்டிலிருந்து ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கல்வி கற்க முடியும். சில கிராமப்புறங்களில் நெட்வொர்க் சேவை சரியாக கிடைப்பதில்லை. எனவே அதற்கான வசதிகளையும் முன்னதாக ஏற்படுத்துவது அவசியம். 'டேப்லெட் பிசி' கொடுக்கும்போது மாணவர்கள் கல்வி கற்பதற்கு மட்டும் பயன்படும் வகையில் அதற்கான வசதிகளை தொழில்நுட்ப முறையில் ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதனால் அதை மாணவர்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படாது என்றார்.
Read More »

EMIS - Udise+ HM Declaration எளிய முறையில் செய்வது எப்படி? - Video



Read More »

Teachers Wanted!

VENUS GLOBAL CAMPUS
(CBSEI Affiliated to CBSE, Delhi.
Affiliation No: 1930980 [A.P. Nagar, Erode Main Road], Punnamchathiram, Karur.

Email: venusglobalcampus@gmail.com

 Walk-In-Interview! VGC requires dedicated, qualified and hardworking candidates having excellent communication skills with pleasing personality and a minimum 2 years of experience in CBSE syllabus.

WE LOOK FOR NTTC / Montessori trained Kindergarten teachers and Co-ordinator (Preferably Female)

TGT (English, Tamil, Maths, Science, Social, Hindi and Computer Science)

 Walk-In-Interview will be held in the school campus, on all working days between 10.00 a.m. and 12.30 noon.

Salary is not a constraint for the deserving candidates. .... 73588 78818 99444 79430 Send your resume to: Contact @ careersvgc@gmail.com
******************************************
WANTED TEACHERS
OUTSTANDING WALK IN

We require experienced Teachers - PG Teachers with B.Ed (FOR ALL SUBJECTS) - Primary & Middle School (FOR ALL SUBJECTS) - Montessori Trained - PET BEST SALARY FOR BEST CANDIDATE APPEAR WITH ORIGINAL DOCUMENTS

Date : 14 & 15/6/20 Time 10 am to 2 pm Email ID : jkrgroups5@gmail.com Mary Ann Mat.Hr.Sec.School No:20, D.R.O Colony Road, K. Pudur, Madurai - 625 007 www.maryannschool.in
******************************************
KAMMA MAHAJANA TRUST GIRLS HIGHER SECONDARY SCHOOL, VENKATACHALAPURAM, SATTUR - 626 203.

87549 30971

LADY TEACHERS WANTED
1. ENGLISH M.A., B.Ed.,
2. PHYSICS M.Sc., B.Ed.,
3. ZOOLOGY M.Sc., B.Ed.,
4. COMMERCE - M.Com., B.Ed.,
5. HISTORY M.A., B.Ed.,

** HOSTEL FACILITY AVAILABLE ** Apply to the Secretary on or before 30.6.2020.
******************************************
WANTED FOR B.Ed. COLLEGE

1. PRINCIPAL
2. ASST. LECTURERS (All Subjects & Prespective Education)
3. MUSIC TEACHER
4. MASTER OF FINE ARTS (M.F.A.)

Eligibility: As per NCTE & TNTE University norms M Ed.,with NET / Phd completed candidates preferable.

Apply To: THE SECRETARY
AL AMIR COLLEGE OF EDUCATION T.Vairavanpatty, Sivagangai Road THIRUPPATHUR (T.K.)-630 210
Ph: 94892 78391
E-Mail: alamir bededu12@gmail.com
******************************************
PSYCHE MATRIC SCHOOL
(Recongnised by the Govt. of Tamilnadu) 36 Sivasakthi Nagar, Aathikulam, Reserveline Lost Stop, Madurai -7

0452 2563655 98421 36666

WANTED TEACHERS for all Subjects UG/ PG with B.Ed., to handle from KG. to X th std Mini. 3 Years experience with rich in communicative skill is required.

Send your Handwritten resume with all certificates within 15 days. 
Read More »

மேல்நிலைக் கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்புடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பான CEO அறிக்கை


அரசாணையின்படி மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டிற்கு தற்போது நடைமுறையிலுள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த அனுமதி அளித்து கீழ்கண்டவாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Download GO here...

 1. மாணாக்கர்கள் பார்வை 1 - இல் காணும் அரசாணையின் பிற்சேர்க்கை 1 - இல் குறிப்பிட்டுள்ளவாறு பகுதி -1 மொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் தவிர , பகுதி- III இல் புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ ( 500 மதிப்பெண்கள் ) அல்லது தற்போது நடைமுறையிலுள்ள பார்வை 1 - இல் காணும் அரசாணையின் பிற்சேர்க்கை II- இல் குறிப்பிட்டுள்ளவாறு நான்கு முதன்மை பாடத் தொகுப்பினையோ ( 600 மதிப்பெண்கள் ) தெரிவு செய்து கொள்ளலாம்.

2. மாணாக்கர்கள் தெரிவு செய்யும் பாடத்தொகுப்பில் உள்ள பகுதி -1 மொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் உட்பட பகுதி- III இல் உள்ள அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

3. புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே திருவள்ளூர் மாவட்டம் , அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் பார்வை 1 - இல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் , வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பாடத்தொகுப்புகளை தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் , மேற்படி அரசாணையில் தெவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புகளை 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் பள்ளியில் நடைமுறைப்படுத்தி செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் பள்ளிகளில் ஏற்கனவே உள்ள பாடத்தொகுப்புகளுடன் கூடுதலாக பிற்சேர்க்கை -1 ன்படி புதிய பாடத்தொகுப்புகளுக்கான அனுமதியினை பெற விரும்பும் தனியார் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்பு தொடங்குவதற்கான உரிய கருத்துருக்களை முதன்மை கல்வி அலுவலருக்கு சமர்ப்பித்து அதற்குரிய அனுமதியினை பெற்ற பின்னரே சேர்க்கையினை துவக்குதல் வேண்டும் . மேலும் எக்காரணத்தை முன்னிட்டும் தொடர் அங்கீகாரம் காலாவதியான தனியார் பள்ளிகளுக்கு புதிய பாடத்தொகுப்பிற்கான அனுமதி வழங்க இயலாது.

மேலும் எந்த ஒரு தனியார் பள்ளிகளும் மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கும் பாடத்தொகுப்பிற்கான அனுமதி கட்டாயம் பெறப்பட்டிருக்க வேண்டும் , சில தனியார் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி மே மாதம் மற்றும் ஜுன் மாதங்களில் மாணவர் சேர்க்கையினை முடித்து விட்டு அக்டோபர் , செப்டம்பர் திங்களில் புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி கோருவதும் , புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமலே பள்ளியை நடத்துவதும் , மாணவர்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடாக உள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. எனவே எந்த வகை மேல்நிலைப் பள்ளியாக இருப்பினும் புதிய பாடத்தொகுப்பு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கையினை ( New Admission ) நடத்துதல் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் இப்பொருள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More »

புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அறிமுகப்படுத்திய புதிய பாட தொகுப்பிற்கு அனுமதி பெற்ற பிறகே சேர்க்கை நடத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 14 ) மேலும் 1,974பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 14.06.2020 ) இன்று 1,974 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1445   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 178

திருவள்ளூர் - 81

மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,342
Read More »
 

Most Reading

Tags

Sidebar One