Search

TN EMIS Attendance App - Update New Version

Wednesday 5 February 2020

What’s New

* Help content updated.
* Bug fixed and performances improved.

TN EMIS Attendance App Download


Read More »

முதுநிலை ஆசிரியர் நியமனத்துக்கான கவுன்சலிங் 9,10ம் தேதிகளில் நடைபெறுகிறது : கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் கவுன்சலிங் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. அரசு, நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதற்கான பட்டியல்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் கவுன்சலிங் மூலம் வழங்கப்பட இருக்கின்றன. இந்த கவுன்சலிங் 9 மற்றும் 10ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நடக்கும்.


தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை1, ஆகிய பணியிடங்களுக்கு 9ம் தேதியும், கணக்கு, இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் பணியிடங்களுக்கு 10ம் தேதியும் கவுன்சலிங் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். தகுதியான முதுநிலை பட்டதாரிகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடக்க உள்ள கவுன்சலிங்கில் பங்கேற்று பணி நியமன ஆணைகள் பெற உரிய அத்தாட்சி சான்றுகளுடன் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பனம் தெரிவித்துள்ளார்.
Read More »

நிரந்தரப் பணியிடம் - பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!!

Read More »

கிராம சபையில் பேசிய 5-ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று பஸ் விட்ட அதிகாரிகள்

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம்தான் மீனாட்சிபுரம். அங்கு குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதே கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி சஹானா, தனது சக தோழிகள் சிலருடன் கலந்து கொண்டாள். கூட்டத்தில் அவள், “மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க வசதி கிடையாது. என்னுடைய சகோதரிகள் உள்பட எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் மேல்படிப்புக்காக மாயாண்டி கிராமத்துக்கு சென்று படித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு சாலை வசதி செய்து, பஸ் விட வேண்டும்” என்று வலியுறுத்தி பேசினாள்.

5-ம் வகுப்பு படிக்கும் மாணவி சஹானா, கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு துணிச்சலாக பேசிய காட்சிகள் வலைத்தளங்களில் வெளியாகி அவளுக்கு பாராட்டை பெற்றுத்தந்தன. சிறுமியின் கோரிக்கை குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து அதிகாரி சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்து அந்த மாணவி கோரிக்கை வைத்த நேரத்துக்கு பஸ் விட்டனர். இதனால் ஊர்மக்களும், மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தங்களுக்காக கிராமசபை கூட்டத்தில் பேசிய சிறுமி சஹானாவுக்கும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்
Read More »

ஆசிரியர்களே, அரசு ஊழியர்களே, இது உங்களுக்கானது, ஐந்தே நிமிடத்தில் வருமான வரி தயார் செய்வது எப்படி...

ஆசிரியர்களே,
அரசு ஊழியர்களே,

இது உங்களுக்கானது,

ஐந்தே நிமிடத்தில் வருமான வரி தயார் செய்வது எப்படி...

Easy and latest Excel Software...வீடியோ முழுவதும் பாருங்கள்👇👇👇👇👇👇👇👇👇





மேலே உள்ள link ஐ, touch செய்து, உங்களது Income tax ஐந்தே நிமிடத்தில் எவ்வாறு தயார் செய்து, print out எடுப்பது என்பதை பாருங்கள்....

அனைவருக்கும் புரியும் விதத்தில் தெளிவான விளக்கங்களுடன்....

உங்கள் "அனந்தகண்ணன்"

Subscribe and share
Read More »

AUTOMATIC INCOMETAX CALCULATOR 2019-20. VERSION 20.0

CLICK HERE TO DOWNLOAD

Thanks to:

Mr.S MANOHAR M.Sc., M.Phil., B.Ed., PGDCA.,
GRADUATE TEACHER IN MATHEMATICS,
GOVT MODEL HR SEC SCHOOL,
THIYAGARAJAPURAM-626 189
VIRUDHUNAGAR DISTRICT

Mr. S SENTHILKUMAR M.Sc., M.Phil., B.Ed.,
PG ASSISTANT IN MATHEMATICS,
MARUDHUPANDIAR GOVT HR SEC SCHOONARIKUDI-626 607
VIRUDHUNAGAR DISTRICT
Read More »

COMMUNICATIVE APPROACH - ENGLISH MATERIAL

மாணவர்களின் ஆங்கில மொழி அறிவினை வளர்க்க, மொழியாற்றலை பெருக்க, சரளமாக பேச சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தைச் சார்ந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு சிவக்குமார் பழனிச்சாமி அவர்களால் தயாரிக்கப்பட்ட வினாவிடைத்தொகுப்பு. இதனை தினமும் பத்து வினாக்கள் என்று தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சேர்த்து கற்றுக்கொடுத்தால் குறைந்தது 5மாதங்களில் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தொடங்குவர். அவரின் முழுத்தொகுப்பு விரைவில் பதிவிடப்படும். இது முதல் பகுதி. இதன் மூலம் மாணவர்கள் அடைந்த மொழித்திறமையை அவரது முகநூல் பக்கத்தில் காணலாம். மிக்க நன்றி சார்.
https://www.facebook.com/sivakumarsana

Click Here to Download - Communicative English pdf

Read More »

பிப்ரவரி-2020 மாத வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்-3

08.02.2020- சனிக்கிழமை தைப்பூசம்
21.02.2020-வெள்ளி-மகா சிவராத்திரி
26.02.2020- புதன் கிழமை- சாம்பல் புதன்
Read More »

School Morning Prayer Activities - 06.02.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.02.20

திருக்குறள்

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

விளக்கம்:

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

பழமொழி

Discretion is better than valour

விவேகம் வீரத்தினும் சிறப்பு.

இரண்டொழுக்க பண்புகள்

1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.

2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.

பொன்மொழி

காலங்கள் சொல்லும் பாடம் ஒரு நாளும் பொய்யாவதில்லை. கற்றுக்கொண்டோர் ஒருநாளும் வீணாவதில்லை.

பொது அறிவு

1.வேதியியல் நவீன ஆவர்தன அட்டவனையில் (The modern periodic table) இடம் பெறாத ஒரே ஆங்கில எழுத்து எது?

 J

2.தக்காளி பழம் சிவப்பு நிறத்தில் இருக்கக் காரணமான நிறமி எது?

 லைக்கோப்பீன்.

English words & meanings

Jacinth - a reddish-orange gem. செவ்வந்தி கல்.

Jaguar - a large wild cat with black spots that comes from Central and South America.மத்திய மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த, கரும்புள்ளிகளுடைய பெரிய பூனையினக் காட்டு விலங்கு வகை.

ஆரோக்ய வாழ்வு

கொய்யாவில் நிறைந்துள்ள நார்சத்து காரணமாகவும் மற்றும் குறைந்த கிளைசிமிக் குறியீட்டின் காரணமாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது.

Some important  abbreviations for students

govt. - government. 

ea. - each

நீதிக்கதை

சிங்கத்தை ஏமாற்றிய முயல்

குறள் :
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.

விளக்கம் :
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும் கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

கதை :
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடிவிடும். காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்தது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேச வேண்டும் என தீர்மானம் போட்டது.

சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன. நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது. எனவே நாங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையாடக் கூடாது, நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் எனக் கூறியதும், சிங்கமும் சரி என்றது.

தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திற்கு உணவாக சென்றது. அன்று முயலின் முறை, அது உணவாக சிங்கத்திடம் செல்ல வேண்டும். மிகுந்த கவலையுடன் சென்ற போது ஒரு கிணற்றை பார்த்தது. ஒரு முடிவுக்கு வந்த முயல் பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜாவிடம் சென்றது. சிங்கராஜாவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது.

சிங்கமும் காரணம் கேட்டது, அதற்கு முயல், சிங்கராஜவே நான் வரும் வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன். அது என்னை எங்கு செல்கிறாய் என் கேட்டது. நான் சொன்னேன் எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று. அதற்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை, இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என கூறியது.

இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது. முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது. முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது. முயலின் உட்பகையை அறிந்து கொள்ளாமல் அழிந்தது.

நீதி :
உரிய இடத்தில் தந்திரத்தோடு செயல் பட வேண்டும்

இன்றைய செய்திகள்

06.02.20

★போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழகத்தில் முதல்முறையாக தென்காசி மாவட்ட போலீஸாருக்கு புதிய செல்போன் செயலி அறிமுகமாகிறது.

★கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான மத்திய அரசுத் துறைகளில் பணிபுரிந்த 320 அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்துக்கு முன்பாகவே ஓய்வு அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர் என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

★அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள பியூர்டோ ரிகோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

★தென் ஆப்பிரிக்காவில் நடந்துவரும் 19 வயதுக்குப்பட்டோருக்கான 50 ஓவர்கள் உலகக்கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 172 ரன்களில் சுருண்டது.

★இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸 Tenkasi district police  introduced a new mobile app for first time in Tamil Nadu to take action against traffic violators

 🌸 The Union Minister of Labourers,Mr. Jitendra Singh has said that 320 officers in the central government departments who have been accused of corruption in the past five years have been sent by compulsory retirement before their retirement.

 🌸 A powerful earthquake  hit Puerto Rico in the US region.

 🌸 In the semifinals of the 50-over World Cup tournament  for 19 years old in South Africa,  The Pakistan team was unable to cope with the Indian bowling and lost their battle by 172 runs.

🌸 Newzealand had a tremendous victory by 4 wickets in the first one day match against India.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

Breaking News: முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

Read More »

முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு வேலை!!

Naval Physical and Oceanographic Laboratory ( NPOL )
காலிப்பணியிடங்கள் - 20.
ஆரம்ப தேதி 29 - 01 - 2020.
கடைசி தேதி 20 - 02 - 2020.
கல்வித்தகுதி
MBA
Any PG Degree
வயது வரம்பு வயது வரம்பு 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக


http://www.tnscb.org/

என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்,
Superintending Engineer,
Chennai Circle-lI,
Tamil Nadu Slum Clearance Board,
No.5, Kamarajar Salai, Chennai.
Read More »

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்


5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தோ்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் என அமைச்சர் பதிலளித்தார்
Read More »

தமிழக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் பிடித்தம் - பிடித்தம் செய்த தொகை - வருமான வரி பிரிவு 80CCD ( 1 ) , 80CCD ( 2 ) , 80CCD ( IB ) - இன்கீழ் காண்பிப்பது குறித்து தெளிவுரை



பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது , 80CCD - இல் எந்த பிரிவின்கீழ் காண்பிப்பது என்பது குறித்து கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது .

1 . பிரிவு 80CCD ( 1 ) - இல் 10 % ( Basic Pay + DA ) மட்டுமே கழிவு செய்து கொள்ளலாம் . மேலும் பிரிவு 80C , 80CCC + 80CCD ( 1 ) கீழான கழிவுகளுக்கான தொகை சேர்த்து அதிகபட்சமாக ரூ . 1 , 50 , 000 / - கழித்துக் கொள்ளலாம் .

 2 . பிரிவு 80CCD ( IB ) - இன் கீழ் ரூ . 50 , 000 / - வரை கழித்துக் கொள்ளலாம் . மேற்சொன்ன மூன்று பிரிவுகளிலும் சேராது அனுமதிக்கப்படும் ஒரு கூடுதல் கழிவு ஆகும் . இது மத்திய அரசு ஓய்வூதியத் திட்டங்களுக்கு பொருந்தும் .

3. உட்பிரிவு 80CCD ( 1 ) மற்றும் உட்பிரிவு 80CCD ( IB ) ஆகிய இரண்டின் கீழும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டப் பிடித்தம் செலுத்திய தொகைகளைக் கழித்து கொள்ளலாம் . எனினும் ஒரே தொகையை உட்பிரிவு 80CCD ( 1 ) மற்றும் உட்பிரிவு 80CCD ( IB ) ஆகிய இரண்டிலும் கழித்து கொள்ள முடியாது .

4 . பிரிவு 80CCD ( 2 ) - இல் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் அரசால் செலுத்தப்படும் தொகையைக் கழிவில் கூட்டக்கூடாது . அப்படி கழிவில் கூட்ட வேண்டுமென்றால் வருவாய் கணக்கில் சேர்த்து காண்பித்து , பின்னர் கழிவில் சேர்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்படுகிறது .
Read More »
 

Most Reading

Tags

Sidebar One