Search

அனைத்து வகை பள்ளிகளிலும் UDISE+ இணையதளத்தில் உள்ளீடு செய்த விவரங்களை சரிபார்தல் முகாம்

Sunday 1 March 2020

Read More »

5 th std March 1st week Lesson plan All subjects

Click here download 5th std Lesson plan
Read More »

TIME TABLE - 10,11,12th Public Exam March 2020 ( Single Page )

நடைபெறவுள்ள 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் தேதிவாரியான அட்டவணை ஒரே பக்கத்தில்...
Read More »

தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் 16 வகையான புதிய தண்டனைகள் அறிவிப்பு.

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 வகுப்புகளுக்கான  தேர்வுகளில் 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு சில விதிகளை தேர்வுத்துறை  அனுப்பியுள்ளது. அதில் 16 வகையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உதவியுடன் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ள நிலையில், புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை இயக்கங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

16 வகையான தண்டனைகள்

தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு சில விதிகளை தேர்வுத்துறை  அனுப்பியுள்ளது. அதில் 16 வகையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு எழுதும்போது துண்டுச் சீட்டுகள் வைத்திருத்தல், புத்தகங்கள் வைத்திருப்பது கண்டுபிடித்தால் அவர்கள் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அடுத்த மாணவரை பார்த்து  எழுதினாலோ, வெளியில் இருந்து  யாராவது உதவி செய்தாலோ அந்த மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி வாங்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அந்த தேர்வு எழுத முடியாது. மேலும் ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாது.
Read More »

G.O.NO:37 - துய்க்காத பணியேற்பிடை காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அரசாணை!


Read More »

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் பள்ளிகள் பட்டியல் ( மாவட்ட வாரியாக ....)



நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகள் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

இப்பட்டியலில் தங்களது மாவட்டத்தைச் சார்ந்த நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள விவரங்கள் ஏதும் விடுபடாமல் பூர்த்தி செய்தும் ( எந்த ஒரு பள்ளியின் விவரங்களும் விடுபடாமலும் ) 02.03.2020 பிற்பகலுக்குள் சி1 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு தவறாது அனுப்பி வைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள்

இணைப்பு

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் நடுநிலைப் பள்ளிகள் பட்டியல்

Middle School To High School Upgrade School List - Download here...
Read More »

ஊதியமீட்பு போராட்ட ஆசிரியர்கள் மீதான 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து - CEO செயல்முறைகள்!

இடைநிலை ஆசிரியர் ஊதியமீட்பு அரசாணை எரிப்பு 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து...
மதிப்புமிகு. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..

மேற்காண் பொருள் தொடர்பில் பார்வை 1 - ல் காணும் செயல்முறைகளின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 26 . 11 . 2018 அன்று நடத்தப்பட்ட அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட 121 ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( b ) ன் கீழ் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீதான வழக்கு மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக பார்வை 4 - ன் படியும் , மேற்படி வழக்கு சார்பான முதல் தகவல் அறிக்கை இரத்து செய்யப்பட்டதாக பார்வை 5 - ன் படியும் தகவல் பெறப்பட்டுள்ளது . இத்தகவல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிடப்படுகிறது . இணைப்பு - பார்வை 4 , 5 - ன் நகல்கள்
Read More »

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட் டிருந்தால் அந்த ஆசிரியர் களை 5ஆண்டுகாலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்கு நர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் தொடக்க கல்வி , ஊராட்சி ஒன்றிய , நகராட்சி , அரசு பள்ளி ஆசிரியர்கள்  1 . 1 . 2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழக தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது - அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்குஒருவட்டார கல்வி அலுவ லர் , ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்டதலைமை இடத் தில் முகாம் அமைத்து சரி பார்த்து மாவட்ட கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும் .அதனை வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெறவேண்டும் .

தமிழ்நாடு குடிமுறைப் பணி ஒழுங்கு முறையும் மேல் முறையீடும் விதிகளின் கீழ ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது நடவடிக்கையில் கண்டனம் தண் டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப் பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக்கூடாது .அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந் தோர் பட்டியல் தயார் செய்யும்போது பதவி உயர் வுக்கு தேவையான கல் வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெ டுவிற்குள் பெற்றுள்ளார் களா என்பதை உறுதி செய்து கொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரி விக்கப்படுகிறது .

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One