Search

ஜே.இ.இ., - நீட்' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகள் - யு.ஜி.சி வெளியீடு

Wednesday 8 July 2020

ஜே.இ.இ., - நீட்' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகளை, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகளிலும், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., தேர்வு; மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

செப்டம்பரில் இவை நடக்கும்.இந்த தேர்வுகளை நடத்தும் அனைத்து தேர்வு அமைப்புகளும், உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும்அடையாள அட்டைகளை, 'இ - பாஸ்' ஆக பயன்படுத்தி கொள்ளலாம். தேர்வு மையத்தின் அனைத்து இடங்களையும், கிருமி நாசினி தெளித்து, நோய் பரவலை தடுக்க வேண்டும். மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர், உரிய தரமான முக கவசம் அணிய வேண்டும்.

தேர்வு மைய வளாகம், தேர்வு அறை போன்றவற்றில், கிருமி நாசினி பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும்.கழிப்பறைகளில், கை கழுவ சோப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கான தேர்வு முடிந்ததும், இருக்கைகள் மற்றும் மேஜைகளை, கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன
Read More »

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக கல்வி இயக்குநர் மாற்றம்


கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.

பள்ளி கல்வித் துறையின் பாடத்திட்டங்களை கவனிக்கும் துறையான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உமா, மூன்று மாதங்களுக்கு மருத்துவ விடுப்பில் சென்றார்.

மார்ச், 2 முதல் ஜூன், 30 வரையிலான, அவரது விடுப்பு முடிந்து, பணியில் சேர்ந்தார். அவரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக மாற்றம் செய்து, பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்
Read More »

CBSE - பாடங்கள் குறைப்பு இந்த கல்வி ஆண்டு மட்டுமே பொருந்தும்



*நடப்பு கல்வியாண்டுக்கு ( 2020-2021) மட்டுமே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 190 பாடங்களில் 30% பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது.

*குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படாது.

*அடுத்த கல்வியாண்டு ( 2021-22) முதல் முந்தைய நடைமுறையே தொடரும் - CBSE
Read More »

ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு.

கல்வி அலுவலகங்களில் மட்டும், கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட, அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:காமராஜர் பிறந்த நாளான, ஜூலை, 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக, அரசால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றால், பள்ளிகள் செயல்படாததால், கல்வி வளர்ச்சி நாளை, கல்வி அலுவலகங்களில் கொண்டாட வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில், காமராஜரின் உருவ படத்தை அலங்கரித்து, கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் - 5 சேனல்களில் ஒளிபரப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
ஆன்லைன் வகுப்புகள்..இந்த
5 சேனல்களில் ஒளிபரப்பசெய்யப்படும்..

பொதிகை, கல்வித் தொலைக்காட்சி, பாலிமர், புதிய தலைமுறை, தந்தி என்று 5 அரசு & தனியார் டிவி சேனல்கள் மூலம், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே கற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன், "கல்வியாளா்களின் கோாிக்கை ஏற்று பழைய பாடத்திட்டமே கொண்டுவந்து நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்வுள்ளது. தனியாா் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு சேனல் என 5 தொலைக்காட்சிகளில் ஔிப்பரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடப்புதங்களை மாணவா்களுக்கு வழங்கியவுடன் இத்திட்டம் செயல்படத்தொடங்கும். பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிக்களுக்கு வந்துள்ளது. மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதிகை, கல்வித் தொலைக்காட்சி, பாலிமர், புதிய தலைமுறை, தந்தி என்று 5 அரசு & தனியார் டிவி சேனல்கள் மூலம், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிப் பாடங்கள் ஒளிபரப்பப்படும். மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே கற்றுக் கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு தோவு முடிவுகள் அறிவிப்பதில் ஒரு சில சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் 34,482 மாணவா்கள் கடைசி தோவை எழுதவில்லை. அதில் 718 மாணவா்கள் தோவெழுத ஒப்புதல் அளித்துள்ளனா். அவர்களுக்கான தோவு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். நீட்தோவு ஒத்திவைக்கப்ட்டுள்ள நிலையிலும் 7200 மாணவா்களுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது" எனக் கூறினார்.
Read More »

EMIS Online TC - Identification Mark List Details ( Tamil & English )

EMIS Online TC - Identification Mark List :


( உங்கள் தேவைக்கேற்ப EDIT செய்து பயன்படுத்திக் கொள்ளவும் )

1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் A mole on the left palm

2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead

3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் A mole on the index finger

4.இடது முட்டியில் ஒரு தழும்பு A scar on the left knee

5.வலது கணுக்காலில் ஒரு வடு A scar in the right ankle

6.வலது முழங்கையில் ஒரு வடு A scar in the right elbow

7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம் A mole on the left thumb

8.வலது தொடையில் ஒரு தழும்பு A scar on the right thigh

9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் A mole On the right cheek

10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் A mole on the left shoulder

11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு A scar on the right eyebrow

12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear

குறிப்பு : உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்
Read More »

சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு


சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத் தில் 30 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற் பட்டுள்ளது. தற்போதைய அசா தாரண சூழலில் செப்டம்பர் இறுதியில் பள்ளிகளை திறக்கவும், புதிய கல்வியாண்டு தாமதத்தை சரிகட்ட பாடத்திட்டத்தை குறைக் கவும் மத்திய அரசு திட் டமிட்டுள்ளது. அந்தவகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தற் போது 30 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘உலகளவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க அறி வுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கல்வியாளர்கள், ஆசிரியர்களின் பரிந்துரைகள் அடிப்படையில் பாடத்திட்டம் தற்போது 30 சத வீதம் குறைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) இயக்கு நர் ஜோசப் இமானுவேல், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப் பிய சுற்றறிக்கையில், ‘2020-21 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்ட குறைப்பு தொடர்பான விவரம் சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

குறைக்கப்பட்ட 30 சதவீத பாடத்திட்டப் பகுதிகளில் இருந்து ஆண்டு இறுதித்தேர்வு உட்பட எந்த தேர்வுகளுக்கும் கேள்விகள் கேட்கப்படாது.

மேலும், 1 முதல் 8-ம் வகுப்பு களுக்கு என்சிஆர்டிஇ வெளி யிட்ட கல்வியாண்டு அட்ட வணையை பள்ளிகள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
Read More »

Breaking News: தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி!


12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன்  வரும்
13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

#BREAKING

பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும்; கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்
Read More »

மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல் சார்ந்து சில புதிய அறிவுரைகள் வழங்கி - சமூக நல ஆணையர் -செயல்முறைகள்



கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மே 2020 கோடை விடுமுறை நாட்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உலர் உணவாக வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது . துவக்கப் பள்ளி பயனாளிகளுக்கு மே மாதத்திற்கு 3100 கிராம் அரிசியும் , 1200 கிராம் பருப்பும் , உயர் துவக்கப் பள்ளி பயனாளிகளுக்கு 4650 கிராம் அரிசியும் 1250 கிராம் பருப்பும் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே , மேற்காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்த மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . இது தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

1. சத்துணவு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான அரிசி மற்றும் பருப்பு ஆகியவை மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் அதனடிப்படையில் உரிய அட்டவணை தயார் செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் . அரிசி மட்டும் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு பருப்பு இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தேவைப்பட்டியல் அளித்து , உடன் பெற்று பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . கூடுதல் பருப்புக்கான செலவினம் உணவூட்டுச் செலவினத்திலிருந்து வழங்கப்படவேண்டும் .

2. உணவூட்டுச் செலவினத் தொகையிலிருந்து கூடுதல் பருப்புக்கான தொகைக்கு உரிய ஒதுக்கீடு பெறப்பட்டால் மட்டுமே பட்டியல் வாயிலாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு பெற்று வழங்க இயலும் . எனவே , உணவூட்டுச் செலவினத்திலிருந்து கூடுதல் பருப்புக்கான தொகைக்கு மறுமதிப்பீடு செய்யக் கோரி அரசுக்கு முன்மொழி அனுப்ப ஏதுவாக கொள்முதல் செய்யப்படும் கூடுதல் பருப்புக்கான தொகை துல்லியமாக கணக்கிடப்பட்டு கணக்குத் தலைப்பு வாரியான விவரங்களை உடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் .

3. உலர் உணவுப் பொருட்கள் வழங்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் உதவியுடன் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது .

4. அரசாணையின் இணைப்பில் கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக செயல்திட்டம் வகுத்து , நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

5. ஒவ்வொரு சத்துணவு மையம் வாயிலாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் விபரம் , கையொப்பம் பெற்ற ஒப்புகை பதிவேடுகளின் நகல்கள் , புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து மாவட்ட அளவில் வைக்கவேண்டும் . அரசால் கோரப்படும்போது உடனடியாக வழங்கப்பட வேண்டும் .

6. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( சஉதி ) மற்றும் கூடுதல் கல்வி அலுவலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும்போது பார்வையிடுதல் வேண்டும் . பெற்றோர் மற்றும் பயனாளிகளின் கருத்துக்களை கேட்டறிதல் வேண்டும் .

7. கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றி , முகக்கவசம் அணிந்து அவ்வப்போது சோப்பினால் கைகளை கழுவிக் கொண்டு சரியான அளவுகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் .

8. பயனாளிகள் அல்லது பெற்றோர்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

Full Proceedings - Download here.
Read More »

ஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - இயக்குநரின் செயல்முறைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


 இந்நிலையில் குறுந்தொடர் காரணமாக பெற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தினால் 15.07.2020 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள் கல்வி அலுவலகங்களில் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி 
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 8 ) மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 08.07.2020 ) இன்று 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,22,350 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,261   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 379

செங்கல்பட்டு - 273

திருவள்ளூர் - 300

மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3051

இன்றைய உயிரிழப்பு : 64
Read More »

Flash News : Plus Two Re-Exam Date Announced! பிளஸ்டூ இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு'!


பிளஸ்-2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு நடத்த அரசு முடிவு என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

* 13 முதல் 17ஆம் தேதி வரை பள்ளிகளில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்

* தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது

* மாணவர்கள் தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள்
Read More »

INSPIRE AWARD - அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...



2020-21ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான INSPIRE AWARD விருதிற்கு அனைத்து பள்ளிகளும் கீழ்க்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்யத் தெரிவிக்கப்படுகிறது.

www.inspireawards-dst.gov.in
Read More »
 

Most Reading

Tags

Sidebar One