Search

ஏப். 26ல் ஆசிரியர்கள் தொடர்முழக்க போராட்டம்: ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தகவல்

Sunday 23 February 2020

சென்னையில் ஏப்., 26ல் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழக அரசு 5, 8 ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்பை திரும்ப பெற்றதை வரவேற்கிறோம். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி 2018 நவ., 26 ல், மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக 1,500 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.


உயர்நீதிமன்றம் இதை ரத்து செய்தது. போலீஸ் எப்.ஐ.ஆர்., பேரில் கல்வி துறையால் வழங்கப்பட்ட 17 பி நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான 17 பி நடவடிக்கை, குற்ற நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் 7,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியவில்லை. பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பலன்களை பெற முடியவில்லை.


ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெறக் கோரி உயர் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி ஏப்.,26 சென்னையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம் நடக்கவிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Read More »

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப்.26ல் செய்முறை தேர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி 26ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, 26.02.2020 முதல் 28.02.2020 வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.


மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சியுறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுத அறிவிக்கப்படுகிறார்கள். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள், இந்த அறிவிப்பின் மூலம், அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்வதற்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.


அதே போல் நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 25.02.2020 பிற்பகல் முதல் www.tndge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று ஹால்டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தை அழுத்த வேண்டும்.அப்போது தோன்றும் பக்கத்தில் எஸ்எஸ்எல்சி எக்சாம் மார்ச் 2020 - பிரைவேட் கேன்டிட்டேட்- ஹால்டிக்கெட் பிரின்ட் அவுட் என்ற வாசகத்தை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதியை அளித்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


அறிவியல் பாட செய்முறை தேர்வு குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். மார்ச் 2020 பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை www.tndge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read More »

24.02.2020 இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுதல் மற்றும் இறைவணக்க கூட்டத்தின்போது உறுதிமொழி எடுக்க கோருதல்

Read More »

MHRD to Visit Tamilnadu schools programme Feb 24 to 26

Read More »

HOW TO PREPARE GPF ADVANCE BILL IN IFHRMS

HOW TO PREPARE GPF ADVANCE BILL IN IFHRMS

Read More »

School Morning Prayer Activities - 24.02.2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.02.20

திருக்குறள்

அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம்:

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

பழமொழி

Love thy neighbours  as thyself

 உன்னைப்போல் பிறரையும் நேசி.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

மனிதன் எப்பொழுதும் தான் வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது இல்லை .ஆனால் அவனது கீழ்தர செயல்கள் தொடங்கிய இடத்திற்கே இட்டுச்செல்கிறது........

                  - சாரதா தேவி்

பொது அறிவு

1.மத்திய கலால் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 பிப்ரவரி 24

2.கலால் வரி என்றால் என்ன?

நம் நாட்டிற்குள் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி மீது விதிக்கப்படும் வரி.

English words & meanings

Zoopathology – study of animal diseases. விலங்குகள் நோய் குறித்த படிப்பு.

 Zebra-Wood - lined wooden pieces, பட்டைக் கோடுகள்  உடைய மரக் கட்டைகள்

ஆரோக்ய வாழ்வு

செவ்வாழையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன .மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பலவித சத்துக்களும் நிறைந்துள்ளன.

Some important  abbreviations for students

OMW -- On my way

OMC --  On my cash

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

முயற்சியே வெற்றியைத் தேடி தரும்

குறள் :
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விளக்கம் :
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

கதை :
ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது.

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

நீதி :
தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும்.

இன்றைய செய்திகள்

22.02.20

◆நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

◆விக்கிப்பீடியா அமைப்பினால் நடத்தப்பட்ட வேங்கை கட்டுரைப் போட்டியில் இந்திய அளவில் 331 பயனர்கள் பங்கேற்று 16 மொழிகளில் 13,490 கட்டுரைகள் எழுதினர். அதில் தமிழ் மொழி 62 பயனர்கள் எழுதிய 2959 கட்டுரைகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

◆நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் இணையவழியில் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று  தில்லியில் நடைபெற்ற சா்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

◆ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமாா் தாஹியா தங்கம் வென்றாா். மேலும் பஜ்ரங் புனியா, கௌரவ் பாலியான், சத்யவிரத் கடியன் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

◆ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் 15.43 மீட்டர் நீளம் தாண்டி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines

🌸For the student Abinaya from Namakkal who is going to the NASA International research centre the government will give 2,00,000 rupees says CM Palanisamy.

🌸 In The Tiger Project Essay Competition from India 331 Participants wrote in 16 languages and wrote 13,490 essays.  In this 62 Tamil language participants took part and wrote 2959 essays and bagged first prize.

🌸 PM  Narendra Modi said in international Judiciary Meet that all courts throughout  India will be united through online and the central government is taking the steps for this.

🌸 In Asian Wrestling Championship India's Ravikumar Thahiya won gold medal. And also Pajrang Puniya, Gourav Paliyaan, Sathyavirath Kadiyan won silver medals.

🌸 In Spain's Madrid City there is inner stadium athletic competition for ladies is going on. In this in triple jump Yulimer Rojas from Venisula jumped 15.43 mts and form a new world record.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம் - SPD PROCEEDINGS

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கட்டடப் பணிகள் - நிலையான பராமரிப்பு விதிமுறைகள்- (Standard Operating Procedures - SOP) - பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம் - அனைத்து பள்ளிகளுக்கு நடவடிக்கைகாக அனுப்பி வைத்திட மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்தல் - நடவடிக்கை - சார்பு

Read More »

அரசு பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சசார விவரம் அனுப்ப உத்தரவு

திருவள்ளூர் , சேலம் உள் பட 19 மாவட்டங்களில் , ஆசிரியர் - மாணவர் விகி தாச்சார , விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது . தமிழக பள்ளிக்கல் வித்துறை சார்பில் , அர சுப்பள்ளி ஆசிரியர்க ளுக்கான இடமாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத் தப்பட்டு வருகிறது . ஒவ் வொரு வருடமும் , அந்த கல்வியாண்டின் ஆகஸ்ட் மாதத்தை அடிப்படை யாக கொண்டு , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு , உபரி ஆசிரியர் மற்றும் தேவை பட்டியல் தயார் செய்யப் படுகிறது



Read More »

IAS, IPS, IRS - UPSC - முதன்மை தேர்விற்கு விண்ணப்பிக்க முழு விபரங்கள்!


1. Indian Administrative Service
2. Indian Foreign Service
3. Indian Police Service
4. Indian P&T Accounts & Finance Service, Group 'A'
5. Indian Audit and Accounts Service, Group 'A'
6. Indian Revenue Service (Customs and Central Excise), Group 'A’



7. Indian Defence Accounts Service, Group 'A'
8. Indian Revenue Service (I.T.), Group 'A
9. Indian Ordnance Factories Service, Group 'A' (Assistant Works Manager, Administration)
10. Indian Postal Service, Group 'A'
11. Indian Civil Accounts Service, Group 'A'
12. Indian Railway Traffic Service, Group 'A'
13. Indian Railway Accounts Service, Group A'
14. Indian Railway Personnel Service, Group 'A'
15. Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group 'A'
16. Indian Defence Estates Service, Group 'A'



17. Indian Information Service (Junior Grade), Group 'A’
18. Indian Trade Service, Group `A'
19. Indian Corporate Law Service, Group 'A'
20. Armed Forces Headquarters Civil Service, Group 'B' (Section Officer's Grade).
21. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group `B'
22. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group 'B'
23. Pondicherry Civil Service, Group 'B'
24. Pondicherry Police Service, Group 'B'
இந்திய அரசின் உயர்நிலைப் பணிகளான இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இந்திய அரசின் உயர்நிலைப் பணிகளான இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய்ப் பணி (IAS, IPS, IRS) உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 (Civil Services (Preliminary) Examination 2020) அறிவிப்பை மத்திய தேர்வாணையக் குழு (Union Public Service Commission) வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இடம்பெற்றிருக்கும் 24 வகையான பணிகளில், தற்போதைய நிலையில் 796 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 24 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



தேர்வுக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் குறைந்தது ஒரு இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர்களுக்கு 21 வயது ஆகியிருக்க வேண்டும். 1-8-2020 அன்று 32 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் – 5, ஓபிசி – 3 ஆண்டுகள் என்று வயதுத் தளர்வு உண்டு. பிற வயதுத் தளர்வு குறித்த தகவல்களுக்கும், உடற்தகுதி தகவல்களுக்கும் தகவல் குறிப்பேட்டைப் பார்க்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் இத்தேர்வை 6 முறைகளுக்கு மேல் எழுத இயலாது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இந்தக் கட்டுப்பாடு எதுவுமில்லை.



இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் http://upsconline.nic.in எனும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 (Civil Services (Preliminary) Examination, 2020) விண்ணப்பப் படிவத்தை, இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம், பகுதி 1 மற்றும் பகுதி 2 என்று இரு பகுதிகளாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

பகுதி 1 விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100/- செலுத்திவிட்டு, பிறகு பகுதி 2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3-3-2020.



தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஏதாவதொரு சூழலில் விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக்கொள்ள விரும்பினால், 12-3-2020 முதல் 18-3-2020 வரை பெற்றுக்கொள்ள முடியும். திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் தகவல் குறிப்பேட்டில் தனி இணைப்பாகக் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் உட்பட, இந்தியா முழுவதும் 72 நகரங்களில் தேர்வு நடத்தப்பெறும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அனுமதி அட்டையை (E-Admit Card) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து தேர்வு நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.



இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (Civil Services (Preliminary) Examination, 2020) தாள் 1 - கொள்குறி வகைத் தேர்வு (Paper I - Objective Type) – 200 மதிப்பெண்கள், தாள் 2 பொதுக்கல்வித் தேர்வு (Paper II - General Studies) – 200 மதிப்பெண்கள் என்று இரு தாள்களுக்கான தேர்வுகளாக நடைபெறும். இத்தேர்வு ஒவ்வொன்றுக்கும் இரண்டு மணி நேரம் கால அளவாக இருக்கிறது. இத்தேர்வில், தாள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 33% மதிப்பெண் பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.



இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் http://upsconline.nic.in இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் இந்தியக் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2020 தகவல் குறிப்பேட்டில் தெரிந்துகொள்ளலாம். அல்லது, டெல்லியிலுள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தின் ‘C’ Gate அமைந்திருக்கும் உதவி மையத்தில் நேரடியாகப் பெறலாம். அல்லது தேர்வாணைய அலுவலகத்தின் அலுவலக வேலை நேரத்தில் 011 - 23385271, 23381125, 23098543 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பெறலாம்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One