Search

'குரூப் - 4 முறைகேடு: பின்னணியில் உள்ள கேள்விகள்

Friday 24 January 2020

குரூப் - 4 தேர்வு முறைகேடுகளுக்கு, தேர்வு நடைமுறையில் இருந்த, பல்வேறு ஓட்டைகளே காரணம் என, தெரிய வந்து உள்ளது.

தேர்வுகளில், 'காப்பி' அடித்தல், வினாத்தாள் வெளியாதல் போன்ற முறைகேடுகள் தான், முந்தைய காலங்களில் நடந்தன. விடைத்தாளை மாற்றும் சம்பவங்களும், சில நேரங்களில் நடந்துள்ளன. கணினி வழியாக திருத்தப்படும், ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், ஊட்டியில் இருந்து விடைத்தாள்களை எடுத்து வர தாமதமானது.

இது குறித்து, அதிகாரி கள் விசாரித்த போது, வழியில் யானை வழி மறித்ததால், வாகனம் புறப்பட தாமதமானதாக, சம்பந்தப்பட்ட தாசில்தார் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். பின்னர் நடந்த விசாரணையில், அந்த விடைத்தாள்கள் வழியில் திருத்தப்பட்டது தெரிய வந்தது. அதேபோல, 2012ம் ஆண்டிலும், கடலுார் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது. இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதன் நிலை என்னவென்று தெரியவில்லை.


நடைமுறையில் குளறுபடி

தற்போது நடந்த முறைகேடுகளுக்கு, தேர்வு நடைமுறையில் உள்ள குளறுபடிகள் காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.விடைத்தாள் திருத்தம், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நடந்ததா; ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை மட்டும், தேர்வு செய்தது ஏன்? தேர்வு மையங்களில், கண்காணிப்பாளர்களை நியமித்தது யார்; போலீஸ் கண்காணிப்பு இருந்ததா; பணியில் இருந்தவர்கள் என்ன செய்தனர்?

தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள் கட்டுகள், கருவூலங்களுக்கோ அல்லது தாசில்தார் அலுவலகத்துக்கோ, உரிய நேரத்தில் கொண்டு வரப்பட்டதா; விடைத்தாள் கட்டுகளை, 'சீல்' வைத்தவர்கள் யார்? அதை பார்த்து, சாட்சியாக கையெழுத்திட்டவர்கள் யார் என்ற, கேள்விகள் எழுந்துள்ளன.



பிரித்தது எப்போது?

விடைத்தாள் கட்டுகளை, மீண்டும் பிரித்தது எப்போது; அப்போது, 'சீல்' சரிபார்க்கப்பட்டதா; தாசில்தார் மற்றும் அரசு ஊழியர்கள் கட்டுப்பாட்டில், பல மணி நேரம் விடைத்தாள்கள் இருந்ததை, தேர்வு முடிவுக்கு முன்பே விசாரிக்காதது ஏன்?

விடைத்தாளில் விடையை மாற்ற, அழிக்கக்கூடிய மை எங்கிருந்து வந்தது; முறைகேடுக்காக பணம் கொடுத்த, 99 பேரையும் ஒருங்கிணைத்த இடைத்தரகர்கள் யார்? ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு செய்தது எப்படி; அங்கு, தேர்வு பணிகளுக்கு ஊழியர்களை அமர்த்தும் பொறுப்பில் இருந்தது யார் என்ற, சங்கிலி தொடர் கேள்விகள் எழுந்துஉள்ளன. விடைத்தாள் கட்டுகளை எடுத்து சென்ற, வாகனத்தின் பொறுப்பாளர், டிரைவர் யார் என்பதும், விசாரிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.


பரிந்துரை



இந்த முறைகேடுக்கு சம்மதித்து, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்த தேர்வர்கள், சில பயிற்சி மையங்களின் வழியாக பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளனர். அந்த பயிற்சி மையங்களை நடத்துவோருக்கும், முறைகேடுக்கும் என்ன தொடர்பு; விடைத்தாள் மற்றும் வினாத்தாள் அச்சடிப்பை, குறிப்பிட்ட கான்ட்ராக்டர், பல ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளார்.



அரசியல் தொடர்பு


இந்த கான்ட்ராக்ட் முறை வெளிப்படையாக நடந்ததா; அரசியல் அழுத்தம் காரணமாக நடந்ததா; குரூப் - 4 தேர்வு முறைகேட்டில், அரசியல் கட்சியினர், அமைப்பினர் யாரும் தொடர்பில் உள்ளனரா. அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற, நுாற்றுக்கணக்கான கேள்விகளும், குளறுபடிகளும், குரூப் - 4 தேர்வர்களை, கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.



நல்ல அதிகாரிகள் இருந்துமா?



டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆகியோர், இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். இவர்கள் பதவி ஏற்கும் முன்பே, டி.என்.பி.எஸ்.சி.,யில், நுாற்றுக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர், தேர்வு முறைகேடுகளில் உடந்தையாக இருந்தது, கடந்த ஆண்டுகளில் நடந்த, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ஆனால், இந்த இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நிலைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்ததால், பல தேர்வுகள், வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தலைமையில் உள்ள அதிகாரிகள், நேர்மையானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு கீழ் பணியாற்றுவோர், தேர்வு மையம் வரை, தங்கள் கரங்களை நீட்டியதால், இந்த விவகாரம் எழுந்துள்ளது.

ஆனாலும், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், எழுத்துப்பூர்வ புகார்கள் இல்லாத நிலையிலும், இந்த விவகாரத்தில் அதிரடி விசாரணை நடத்தி, முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளனர்.



அழியும் மையில் ஏற்கனவே முறைகேடு




ext-align: justify;"> ஏற்கனவே, அழியும் மை முறைகேடு, 2018ல் அரங்கேறியுள்ளது. அதாவது, தஞ்சை மாவட்டம், கொள்ளிடத்தில், ஆற்று மணல் வாங்குவதற்கான அனுமதி சீட்டில், அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில், அழியும் மை பயன்படுத்தப்பட்டது. ஒரு அனுமதி சீட்டை வாங்கி விட்டு, அதில் உள்ள எழுத்தை அழித்து, மாற்றி எழுதி, பல முறை பயன்படுத்தி மணல் எடுத்து, முறைகேடு நடந்ததை, போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில், தேர்விலும், இந்த அழியும் மை பேனாவால், இடைத்தரகர்கள் அட்டூழியம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இ-சேவை மையத்தில் அம்பலமான மோசடி

சென்னை:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, அரசு, இ - சேவை மையத்தில் இருந்து தான், முதன்முதலாக அம்பலமாகியுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4 தேர்வு முடிவுகள் வந்தபோது, பலரும் தங்களுக்கு தெரிந்த, 'பிரவுசிங்' மையங்களுக்கு சென்று, தங்களின் பதிவு எண், தேர்ச்சி பட்டியலில் வந்துள்ளதா என்று பார்த்து உள்ளனர்.

அப்போது, சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனுாரைச் சேர்ந்த திருவராஜ் என்பவர், தான் தேர்ச்சி பெற்றுள்ளதை சரிபார்க்க, அங்குள்ள, இ - சேவை மையத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியரிடம், பதிவு எண்ணை காட்டி, கம்ப்யூட்டரில் பார்க்க கூறியுள்ளார்.



சந்தேகம்

அப்போது, அங்கிருந்த தற்காலிக ஊழியர், '46 வயதில், குரூப் - 4 தேர்வு எழுதினீர்களா...' என, ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார். பின், அவரது எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் பார்த்த, அந்த ஊழியர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். ஏனென்றால், திருவராஜ் தான், மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். இதுபற்றி, அவரிடம் விசாரித்து உள்ளார். ஆனால், மழுப்பலாக பதிலளித்து விட்டு, திருவராஜ் சென்று விட்டார்.

அதன் பின், இ - சேவை மைய ஊழியர், அந்த மதிப்பெண் பட்டியலை எடுத்து, குரூப் - 4 தேர்வு எழுதிய நண்பர்களுக்கு அனுப்பி, 'நம் ஊரைச் சேர்ந்தவர் தான், மாநிலத்தில் முதல் இடம் வந்துள்ளார். 'ஆனால், எல்லாருமே நம்ம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது வியப்பாக உள்ளது' என, சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.


விஸ்வரூபம்

அதன் பின், அந்த பட்டியல், 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' என்று பரவி, இறுதியாக, சில பயிற்சி மையங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் பட்டியலை பார்த்து, சந்தேகத்தை உறுதி செய்து, ஊடகங்களுக்கு பிரச்னையை எடுத்து சென்றனர். அதன் பின்னரே, டி.என்.பி.எஸ்.சி.,யின் விசாரணை துவங்கி, விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதில், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடம் பிடித்தவர்களிடம், 'எதற்காக ராமேஸ்வரம் மையத்தை தேர்ந்தெடுத்து, தேர்வு எழுதினீர்கள்' என, கேட்கப்பட்டது. அதற்கு, எல்லாரும், 'தாத்தாவுக்கு திதி, பாட்டிக்கு தர்ப்பணம்' என்று, ஒரே பதிலை கூறியது தான், விசாரணையின் போக்கை மாற்றியது.

முதலிடம் பெற்ற திருவராஜ், நிறைய ஆடுகள் வளர்க்கிறார்.தேர்வு நேரத்தில், ராமேஸ்வரத்தில், ஆட்டுக் கிடை அமைக்கப்பட்டு இருந்ததால், அங்கு எழுதியதாக கூறியிருக்கிறார். அவர் தலைமறைவான பின் தான், பிரச்னை மேலும் சூடுபிடித்துள்ளது.
Read More »

'பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:

ஆசிரியர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 பிளஸ் 2 ஆசிரியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More »

இன்று ( 25.1.2020 ) அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய தேசிய வாக்காளர் தின உறுதிமொழி!

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி 25.1.2020

25.01.2020 அன்று 10வது தேசிய வாக்காளர் தினம்  சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது . இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதிமொழியை வாசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே அனைத்து பள்ளிகளிலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை 25.1.2020 அன்று காலை 11 . 00 மணியளவில் பள்ளி மாணவ மாணவர்களைக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வாக்காளர் உறுதிமொழி 

ஜன நாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம் , நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் , சுதந்திரமான , நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் , மேலும் , ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் , மதம் , இனம் , சாதி , வகுப்பு , மொழி , ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டு தலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் .
Read More »

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையிலான வருகைப்பதிவேடு எப்போது நடைமுறைக்கு வரும்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!


அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையிலான வருகைப்பதிவேடு பரிசீலனையில் உள்ளது. நிதி பற்றாக்குறையின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

 ஆசிரியர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 பிளஸ் 2 ஆசிரியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை 28 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More »

வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுக்கு, ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பம்!

வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுக்கு, ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகளை, வனத்துறை ளியிட்டுள்ளது.

வனத்துறையில், 320வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, விரைவில் நடக்க உள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்வது, இன்று துவங்கி, பிப்., 14 வரை நடைபெற உள்ளது. வனத்துறை இணையதளத்தில், இதற்கான பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள, இ - சேவை மையங்கள் வாயிலாகவும், விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதற்கான நடவடிக்கையையும், வனத்துறை எடுத்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விபரங்களை உள்ளீடு செய்வது, ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைப்பது, கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை, இணையதளத்தில் வனத்துறை வெளியிட்டுள்ளது. தவறான விவரங்கள், போலி சான்றுகள் உள்ளீடு செய்யப்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும், வனத்துறை எச்சரித்துள்ளது.
Read More »

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்!


மதிப்பெண்கள் ஒருபோதும் புத்திசாலித்தனம், திறமைக்கு இணையாக இருப்பதில்லை.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது1880-ம் ஆண்டு வாக்கில்தான் இந்தியாவில் பொதுத் தேர்வு அறிமுகமானது. தங்கள் ஆளுகைக்குக் கீழ் இந்தியர்களை எழுத்தர், கணக்கராகப் பணிபுரிய வைக்க, ஆங்கிலேயர்கள் தேர்வு என்னும் முறையைப் பின்பற்றி வடிகட்டினர். 1970-களின் பிற்பகுதி வரை அந்தத் தேர்வே அமலில் இருந்தது. கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரை +2 தேர்வுக்கு வித்திட்டது. இதனால் பள்ளிப் பருவத்தில் 2 தேர்வுகள் நடைமுறை அறிமுகமானது. தனியார் பள்ளிகள் +1 கற்பிக்காமல் +2 வகுப்பை நேரடியாகக் கற்பித்ததை அடுத்து 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு முறையைப் பரிந்துரைத்தது. இதைப் பின்பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்வு குறித்த அச்சம், அழுத்தம் என எதையுமே அறியாமல் தமிழக ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை விரைவில் எழுத உள்ளனர்.

''எனக்கு பயமா இருக்கு..!'' என்றுதான் மஹா ஸ்வேதா பேச ஆரம்பிக்கிறாள். ஈரோடு, காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி அவர். ''கிராமத்துல இருந்து படிக்க வர்றேங்க. வீட்டு வேலையும் செஞ்சிட்டுதான் ஸ்கூல் வரமுடியும். 3 டெர்மும் சேர்த்துப் படிக்கணுமாம்'' என்கிறாள்.

சக மாணவி இலக்கியா கூறும்போது, ''கட்டிட வேலைக்குப் போற அப்பா, அம்மா, நீ பாஸ் ஆயிடுவியா?ன்னு கேக்கறாங்க. ஸ்கூல் வரவே யோசனையா இருக்கு'' என்று தயங்குகிறாள்.

பொதுத் தேர்வால் நாங்கள் கற்பிக்கும் முறைகளே மாறிவிட்டது' என்று வேதனைப்படுகிறார் அப்பள்ளி ஆங்கில ஆசிரியர் மாலதி. ''முன்புபோல செயல்வழிக் கற்றல், காணொலி, நடனம், விளையாட்டு என்று கற்பிப்பதற்குப் பதிலாக கேள்வி- பதில்களை திரும்பப் படிக்கச் சொல்வது, பாடத் திட்டத்தில் இருந்து எப்படிக் கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்வது ஆகிய முறையில் கற்பிக்கிறோம்'' என்கிறார்.

அம்மாதான் ரொம்ப பயப்படறாங்க!

''ஃபெயில் ஆகிடுவேனோன்னு தோணிக்கிட்டே இருக்கு டீச்சர்'' என்று மழலை மாறாத குரலில் சொல்கிறான் அஸ்தினாபுரம் தொடக்கப்பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ். ''வீட்ல 400-க்கும் மேல மார்க் வாங்கச் சொல்றாங்க; முடியுமான்னு தெரியல டீச்சர். அம்மாதான் ரொம்ப பயப்படறாங்க'' என்கிறார் பாலாஜி.

பேனாவைப் பிடித்து சரளமாகக் கூட எழுதிப் பழகாத பிஞ்சு விரல்கள் இப்போது பொதுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றன. இத்தகைய மாணவர்கள் தைரியத்துடன் தேர்வெழுத ஆலோசனை சொல்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.



''அம்மாவும் சிறு குழந்தையும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பாம்பொன்று அங்கே வருகிறது. குழந்தை சிரித்துக் கொண்டே கையை நீட்டுகிறது. திடீரென விழிக்கும் தாய், அலறியடித்து குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார். பாம்புக்கும் பொம்மைக்கும் வித்தியாசம் தெரியாமல்தான் குழந்தைகள் இருக்கின்றனர். வளர வளரத்தான் அவர்கள் அனுபவம் பெறுகின்றனர்.

தேர்வு என்பது ஒருவித வடிகட்டல் முறை. அதைவிட விளையாட்டு, பாட்டு, நடனம், தற்காப்புக் கலைகள் என திறன் சார்ந்தவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வயதில், மனப்பாடக் கல்வி, தேர்வு முறை என்பது குழந்தைகளின் மனதில் பயத்தே ஏற்படுத்தும். இத்தகைய சிறுவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பதைக் கவனத்துடன் அணுக வேண்டும்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்? * பெற்றோர் முதலில் தங்களின் தேர்வு பயத்தைப் போக்க வேண்டும். அவர்களின் பயமே குழந்தைகளுக்கும் கடத்தப்படுகிறது. * உங்களின் குழந்தைகளை தயவுசெய்து மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். வேண்டுமெனில் கடந்த காலத்தோடு சுய ஒப்பீடு செய்து கொள்ளலாம். * அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மரபணு மற்றும் வளர்ப்பில்தான் குழந்தை உருவாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். * 5 வயதுக் குழந்தையால் 15 வயதுக் குழந்தைக்கான கற்றலைப் பின்பற்ற முடியாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.


* குறைகளைத் தனியாக இருக்கும்போது சொல்லுங்கள். நிறைகளை எல்லோரின் முன்னாலும் பாராட்டிச் சொல்லுங்கள். * குழந்தைகளைக் குறைகூறும் போக்கு வேண்டாம். குறைகளைப் புரிந்துகொண்டு நீக்க முயலுங்கள். * பள்ளி முடித்து மகன்/மகள் வந்ததும் சாப்பிட்டாயா என்று கேளுங்கள். எத்தனை முறை சிரித்தாய் என்று விசாரியுங்கள். * குழந்தைகளின் நிறைவான தூக்கத்தை உறுதி செய்யுங்கள்; விளையாடுவதை ஊக்குவியுங்கள். * எந்த சூழலில் இருந்தும் மீண்டெழும் மன உறுதியை குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.

மாணவர்கள் எப்படிப் படிக்க வேண்டும்? * இரவு உறக்கத்துக்குப் பிறகு மூளை சுறுசுறுப்புடன் செயல்படும் என்பதால் புதிய பாடங்களைக் காலை நேரத்தில் படிக்க வேண்டும். * ஏற்கெனவே படித்தவற்றை மீண்டும் படிக்க மதிய நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். * இரவில் நன்கு படித்தவற்றை சொல்லிப் பார்க்கலாம்; எழுதிப் பார்க்கலாம்.



தேர்வு நாளில் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? * குளியலுக்குப் பிறகு மிதமான உணவை சாப்பிடக் கொடுங்கள். * தேர்வு நாளில்காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். * மாணவர்களுக்குத் தேவையான பென்சில், பேனா, அழிப்பான் உள்ளிட்ட அடிப்படையான பொருட்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள். * துண்டு, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றைக் கொடுத்தனுப்புங்கள். * இது உலகப் போர் தினமல்ல; இது இன்னொரு நாளே என்று உற்சாகப்படுத்துங்கள். * முக்கியமாகக் கிளம்பும்போது பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்; திட்டாதீர்கள்'' என்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.

பிஞ்சுகளின் நெஞ்சுக்கு அறிவுரை என்றால் என்னவென்றே தெரியாது. எதையுமே புத்திமதியாகச் சொல்லாமல், விளையாட்டாக எடுத்துச் சொல்லுங்கள். தேர்வும் மதிப்பெண்களும் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிடாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Read More »

37 ஆயிரம் விண்ணப்பத்தில் தவறு : சிபிஐ விசாரணை கோருவோம் என ஆசிரியர்கள் டிஆர்பிக்கு எச்சரிக்கை!


உதவி பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்களில் 95 சதவீதம் பிழை உள்ளது என்று டிஆர்பி அறிவித்துள்ளதற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான விண்ணங்கள் அனைத்தும் இணைய தளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து 39 ஆயிரம் பேர் தங்கள் விண்ணப்பங்களை இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பங்களில் 2  ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாக இருப்பதாகவும், மற்ற 37  ஆயிரம் விண்ணப்பங்கள் பிழையாக இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கணக்கின்படி 5 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாக உள்ளது என்று தெரிவித்தால், அது ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் விண்ணப்பம் பெறும் முறையில் உள்ள குறைபாடு என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்று தெரிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பித்த ஆசிரியர்களை ஏமாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது. வந்துள்ள அனைத்து விண்ணப்பங்களையும் அட்டவணையிட்டு (Tubular Format) இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இல்லை என்றால் விண்ணப்பித்த அனைவரும் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும்,  ஆசிரியர் தேர்வு வாரியமே முரண்பாடாக ஒரு செய்தியை வெளியிட்டுவிட்டு இந்த  பணி நியமனத்தில் முறைகேடுகள் நடக்க வழி ஏற்படுத்த முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுத்துகிறது. அதனால் நீதிமன்றம் செல்லும் போது சிபிஐ விசாரணை கேட்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Read More »

EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்களை சரிபார்த்து கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


All the Chief Educational Officers are informed to instruct the DEOS , ADPCS , APOS , BEOS , UDISE Co - ordinators , EMIS coordinator of CEO office and the programmers of Samagra Shiksha to monitor and check the schools that are updating all the details in EMIS .

The following subjects are to be followed and strictly monitored : 

1 . Marking of Staff Attendance
2 . Marking of Student Attendance
3 . Partlally marked attendance in schools should be made as fully marked ( All sections attendance to be marked ) .
4 . Aadhar of students and teachers to be validated and updated .
5 . Phone Number of Teachers & Students to be validated and updated .
6 . Updation of Master Time Table to be completed
7 . Tagging of students with special schemes for CWSNTRTET Oosc , etc . , to be completed .
8 . Enrollment of students for Noon - meal to be mapped ,
9 . Updation of Staff profile ( teaching & non - teaching ) to be taken up
10 . Monitoring of Aadhar Enabled Blometric Attendance for teachers , Staffs & Officials to be done.
Read More »

2004-06 தொகுப்பூதிய வழக்கு - 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு ( Judgement Copy Attached )

PRAYER : Writ Petition filed under Article 226 of the Constitution of India for issuance of Writ of Mandamus , to direct the first respondent herein to regularize the services of the petitioners from their initial dates of appointments till 01 . 06 . 2006 with all consequential monetary and service benefits of Teachers in the light of the Judgment of this Court in W . P . ( MD ) . No . 4991 / 2015 dated 03 . 07 . 2019 , within the time period stipulated by this Court .

2004-'06 தொகுப்பூதிய வழக்கு !!!.8 வார காலத்தில் பணப் பலனுடன் பணிக் காலமாக கருதவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More »

G.O.(Rt.).No.25 Dt: January 20, 2020 DEDUCTION OF TAX AT SOURCE

G.O.(Rt.).No.25 Dt: January 20, 2020 DEDUCTION OF TAX AT SOURCE – Income-Tax Deduction from Salaries, during the Financial Year 2019-2020, under Section 192 of the Income-Tax Act, 1961 – Copy of the Government of India Circular - Communicated
Read More »

வாக்காளர் உறுதிமொழி

Read More »

2004-06 தொகுப்பூதிய வழக்கு - 8 வார காலத்தில் பணப்பலனுடன் பணிக்காலமாக கருதவும் தீர்ப்பு ( Judgement Copy Attached )

PRAYER : Writ Petition filed under Article 226 of the Constitution of India for issuance of Writ of Mandamus , to direct the first respondent herein to regularize the services of the petitioners from their initial dates of appointments till 01 . 06 . 2006 with all consequential monetary and service benefits of Teachers in the light of the Judgment of this Court in W . P . ( MD ) . No . 4991 / 2015 dated 03 . 07 . 2019 , within the time period stipulated by this Court .

2004-'06 தொகுப்பூதிய வழக்கு !!!.8 வார காலத்தில் பணப் பலனுடன் பணிக் காலமாக கருதவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

judgement copy - Download here...
Read More »

ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) வெளியீடு.

01.08.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் , பாடவாரியாக ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட பணியிடங்களை ( Surplus Post Without person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது .

அதனடிப்படையில் ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) பார்வை - 2ல் காணும் கடிதங்களின் வாயிலாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்திட விவரங்கள் பெறப்பட்டுள்ளது .

இப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டள்ளதால் அதனை ஏற்பளித்து ஆணை வழங்கப்படுகிறது . மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ( ஆசிரியரின்றி உள்ள உபரிப் பணியிடங்களை ) பணியிடங்களை வருங்காலங்களில் காலிப்பணியிடங்களாகவோ , அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

இது குறித்து சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தந்த பள்ளிகளில் பராமரிக்கப்படும் அளவைப் பதிவேட்டில் ( Scale Register ) உரிய பதிவுகள் ( பள்ளிக் கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டது என்ற பதிவினை ) மேற்கொள்ளும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளமாறும் , அதனை அடுத்து வரும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .

இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்த உபரி பணியிடங்களின் பட்டியல் ( மாவட்ட வாரியாக) - Download here
Read More »

5 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு - ஆசிரியர்கள் பெற்றோர் அதிர்ச்சி

5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது.

தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட 3 பாடங்களுக்குபொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. முதல் பருவம் மற்றும் 2ஆம் பருவத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

மாதிரி வினாத்தாளில் 1 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களும் உள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read More »

EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்களை சரிபார்த்து கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

All the Chief Educational Officers are informed to instruct the DEOS , ADPCS , APOS , BEOS , UDISE Co - ordinators , EMIS coordinator of CEO office and the programmers of Samagra Shiksha to monitor and check the schools that are updating all the details in EMIS .

The following subjects are to be followed and strictly monitored : 

1 . Marking of Staff Attendance
2 . Marking of Student Attendance
3 . Partlally marked attendance in schools should be made as fully marked ( All sections attendance to be marked ) .
4 . Aadhar of students and teachers to be validated and updated .
5 . Phone Number of Teachers & Students to be validated and updated .
6 . Updation of Master Time Table to be completed
7 . Tagging of students with special schemes for CWSNTRTET Oosc , etc . , to be completed .
8 . Enrollment of students for Noon - meal to be mapped ,
9 . Updation of Staff profile ( teaching & non - teaching ) to be taken up
10 . Monitoring of Aadhar Enabled Blometric Attendance for teachers , Staffs & Officials to be done.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One