Search

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு | இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

Tuesday 19 July 2022

1. இந்தியாவில் முதன்முதலில் தொடர்ந்து இரண்டு முறை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) வெங்கட்ராமன்
ஈ) ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

2. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

3. இந்தியாவில் முதன்முதலாக தனது பிரதமர் பதவியை பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்தவர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) மொரார்ஜி தேசாய்
ஈ) லால் பகதூர் சாஸ்திரி

4. இந்தியாவில் தனது பிரதமர் பதவிக் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கமுடியாமல் போன முதல் பிரதமர் யார்?
அ) ஐ.கே. குஜ்ரால்
ஆ) சந்திரசேகர்
இ) தேவகௌடா
ஈ) சரண்சிங்

5. சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

6. காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களில், தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த முதல் பிரதமர் யார்?
அ) மொரார்ஜி தேசாய்
ஆ) நரசிம்ம ராவ்
இ)அ.பி. வாஜ்பாய்
ஈ) வி.பி. சிங்

7. சுதந்திர இந்தியாவின் முதல் இளம் பிரதமர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) ராஜீவ் காந்தி
ஈ) வி.பி.சிங்

8. அறுதிப் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் 13 நாட்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிரதமர் யார்?
அ) இந்திராகாந்தி
ஆ) சந்திரசேகர்
இ) ஐ.கே.குஜ்ரால்
ஈ) அ.பி.வாஜ்பாய்

9. இந்தியாவில் முதன்முதலில் துணைப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சரண் சிங்
இ) தேவிலால்
ஈ) லால் கிருஷ்ண அத்வானி

10. இந்தியாவில் அரசமைப்பு 352 விதியின்படி 1975 ஆம் வருட நெருக்கடிநிலை பிரகடனத்தின் போது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வெங்கட்ராமன்
ஆ) ஜாகீர் உசேன்
இ) பக்ருதீன் அலி அகமது
ஈ) ஜெயில் சிங்

11. சுதந்திர இந்தியாவில் இருமுறை இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

12. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

13. இந்தியாவில் முதன் முதலில் இருமுறை தொடர்ந்து துணைக் குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வி.வி.கிரி
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

14. உச்ச நீதிமன்ற தலைமை நீதீபதியாகவும், துணைக்குடியரசுத் தலைவராகவும், தற்காலிக குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியவர் யார்?
அ) ஜாகீர் உசேன்
ஆ) ஜாட்டி
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

15. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சி. ராஜகோபாலாச்சாரி
இ) மவுண்ட் பேட்டன் பிரபு
ஈ) ராஜேந்திர பிரசாத்

Answer 

1. அ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்

2. ஆ. R. K. சண்முகம் செட்டியார்

3. இ. மொரார்ஜி தேசாய்

4. ஈ. சரண் சிங்

5. அ. குல்ஜாரிலால் நந்தா

6. இ. அ.பி. வாஜ்பாய்

7. இ. ராஜீவ் காந்தி

8. ஈ. அ.பி. வாஜ்பாய்

9. அ. சர்தார் வல்லபபாய் படேல்

10. இ. பக்ருதீன் அலி அகமது

11. அ. குல்ஜாரிலால் நந்தா

12. அ. சர்தார் வல்லபபாய் படேல்

13. ஆ. சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்

14. ஈ. முகம்மது இதயத்துல்லா

15. இ. மவுண்ட் பேட்டன் பிரபு

*டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு*

*Topic:Unit 9- TamilNadu*

👉🏻Part 1 :Click here to view  

👉🏻Part 2 : Click here to view 


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One