Search

பொதுத்தேர்வுகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அறிவுரைகள் - தேர்வுத்துறை வெளியீடு..

Sunday 22 March 2020




மார்ச் 2020 , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் , தேர்வர்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .

1 . பார்வையில் காணும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகளில் அறிவுறுத்தியவாறு தேர்வர்களின் பாதுகாப்பு நலன் கருதி , ஒவ்வொரு நாளும் தேர்வு துவங்குவதற்கு முன்பு , தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள் மற்றும் தேர்வுப் பணி நடைபெறும் அறைகள் ஆகியவற்றில் உள்ள மேசை , நாற்காலி , இருக்கைகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் . அதன் பின் , இருக்கையில் எழுதப்பட்டிருக்கும் தேர்வெண்கள் ஏதேனும் அழிந்திருந்தால் தேர்வெண்களை மீண்டும் எழுதி தேர்வர்கள் சரியான இருக்கையில் அமர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

2 . தேர்வெழுதுவதற்கு முன்னதாக , தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள பள்ளிக்கல்விதுறை இயக்குநர் அறிவுறுத்தியவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

3 . தேர்வு முடிவுற்ற பின்பும் தேர்வர்கள் கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் .

4 . தேர்வர்கள் தங்களுடன் Hand Sanitizers எடுத்து வந்திருந்தால் , அதனை தேர்வறைக்குள் எடுத்துவர அனுமதிக்கலாம் .

5 . சளி , இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் எவரேனும் முகக்கவசம் அணிந்து வந்தால் , முகக்கவசத்துடன் தேர்வெழுத அனுமதிக்கலாம் . 6 . தேர்வறையில் தேர்வர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வைக்கவேண்டும்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One