Search

வரும் புதன்கிழமை ( 05.02.2020) இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

Monday 3 February 2020

நாகப்பட்டினம்

நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலத்தை ஒட்டி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 5ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிசேகம் நடைபெறுவதையொட்டி வரும் பிப்.5ந்தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்படும் என ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். 5ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 22ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One