Search

நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்டம்பரில் நேர்காணல் தேர்வு

Thursday 22 August 2019

நூலகர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பரில் நேர்காணல் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பல்வேறு துறைகள், பணிகளில் அடங்கிய நூலகர் பதவிக்கு 64 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி நேர்காணல் தேர்வு நடத்தப்படும்.

சுரங்கத் துறைக்கான நிலவியலாளர் பணியிடத்துக்கு 5 பேரும், அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் பணியிடத்துக்கு 5 பேரும், மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாளர் பதவிக்கு 108 பேரும், கால்நடை பராமரிப்புக்கான ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 52 பேரும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சான்றிதழ்களை வரும் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள்ளாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One